“விலகிடுவேனோ இதயமே ?”- ஆர்த்தி ரவி
“பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்
நீ அருகில் இருந்து சண்டைபோடு போதும் “
உண்மையாக நேசிக்கும் நெஞ்சத்துக்கு தான்
புரியும் பிரிவால் வரும் வலி என்னவென்று ..
என்று ஏங்குவது யார் ..?
நான் உன்னை விட்டு பிரிந்து போனாலும்
என் கண்ணீர் தடங்கள் காட்டிகொடுக்கும்
நான் சென்ற இடத்தை
உனக்குள்ளும் காதல் வந்தால் ..
அதை பின்தொடர்ந்து வா ...
காத்திருப்பேன் ...
காத்து இருந்தது யார் ..? கண்ணீர் விட்டது யார் ..?
யாரை பிரிந்த பின் உன்னால்
எப்போதும் போல் இயல்பாக இருக்கமுடியவில்லையோ
அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்து கொள்..
புரிந்து கொண்டதா இதயம் ..?புரிந்து இணைந்ததா ..? இல்லை விலகியதா ..?
என அனைத்து கேள்விகளுக்கும் விடையாக ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனோ இதயமே ?” என்னும் கதையில் விடை காணுங்கள் ..
அருமையாக குடும்பம் ,காதல் ,பிரிவு ,கோபம் , என்று நம் மண்ணின் நேசத்தையும் ,அயல்நாட்டு வாசத்தையும் சின்னச்சின்ன வாழ்வியல் நெறிமுறைகளோடு அழகாக நாவலாக படைத்துள்ளார் தோழி ஆர்த்தி ..
வாழ்த்துக்கள் தோழியே .