Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் ப்ரிண்ட்ஸ்,
இதோ இன்றைக்கான உங்க பதிவு... படிச்சிட்டு... நீங்க வீராவை திட்டினாலும் சரி.. சாராவை வாரினாலும் சரி... அதெல்லாம் உங்க இஷ்டம்... உங்க கஷ்டம்... என்னை ஏன்யா இதுக்குள்ள இழுகிறீங்க... மீ பாவம்... உங்களுக்குள்ள என்ன களேபரம் வேணா பண்ணிகோங்க... நான் எப்பவும் போல அள்ள அள்ள குறையாம வாரி கமெண்ட் தரும் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவிச்சிட்டு எஸ்ஸாகிட்றேன்... என்னை எங்கயும் தேடாதீங்க... கிடைக்க மாட்டேன்... மீண்டும் நன்றி தோழமைகளே... பை பை
**************************************************************************************
சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்? இப்படியாக வரிசையாய் அவன் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, எதற்கும் அவனுக்குப் பதில் கிடைத்தபாடில்லை.
அம்மு நதியாவை அழைத்துக் கொண்டு மாலை வீடு வந்து சேர்ந்த போது... வீரா செய்த களேபரங்களும் அதற்குப் பின் அவள் தன்னை இழிவாய் பேசியதுவறையே அவன் மூளைக்குள் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. அதற்குப் பிறகு கோபத்தில் பாட்டில் பாட்டிலாய் மதுவை உள்ளிறக்கியது அவனுக்கு நினைவிருக்க , அதற்குப் பின் சுத்தமாய் துடைத்துவிட்டது போல இரவு நடந்த சம்பவங்களை குறித்த எந்தவொரு தடயமும் அவன் மூளையில் பதிவாகவில்லை.
‘இடியட்... ஒரு ப்ரேன்டா அடிச்சிருந்தாஇப்படியெல்லாம் நடந்திருகாதில்ல... ஒய் யூ க்ராஸ்ட் யுவர் லிமிட்ஸ்’ தலையிலடித்து மனதிற்குள்ளேயே தன்னைச் சாடி கொண்டபடி வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
‘அந்த பேச்சி பேசிட்டு... எதுவுமே நடக்காத மாறி நம்ம ரூம்ல... அதுவும் நம்ம பக்கத்தில தூங்கிட்டிருக்கா... இவளை’ என்று பொருமியவன், “ஏ வீரா... வீரா” என்று அவள் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முற்பட்டான்.
அவள் சிணுங்கியபடி, “இப்பதானே தூங்கினே... அதுக்குள்ள என்ன?” என்று தூக்க கலக்கத்தில் புலம்பி கொண்டு அவன் கரத்தை தன் கரத்தில் இறுக்கிக் கொண்டு வசதியாய் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
புது இரத்தம் பாய்ச்சியது போல் அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் புது உணர்வை அனுபவித்தான். பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. சரச லீலைகளும் புதிதல்ல. ஆனால் இந்த உணர்வு சற்றே புதிது.
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
அவள் பிடி அத்தனை அழுத்தமாக இல்லையென்ற போதும் தன்னை விடுவித்துக் கொள்ள மனமில்லாமல் அவளின் அந்த நெருக்கத்தையும் தொடுகையையும் வெகுவாய் ரசிக்கத் தொடங்கியிருந்தான். காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
அப்படியே அவள் பிடிக்குள் இருந்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு! ஆனால் அந்த உணர்வை முழுவதுமாய் அவனை அனுபவிக்க விடாமல் மீண்டும் அவன் செல்பேசி அழைக்க, அவள் விழித்துக் கொள்வாளோ என்ற பதட்டத்தோடு எட்டி அதனை அணைத்து விடலாம் என்று பார்த்தான். விழித்துக் கொண்டாள் அவள் தன்னை விட்டு விலகி விடுவாளே என்ற தவிப்பு அவனுக்கு !
அவன் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வீரா அந்தச் சத்தத்தில் விழிப்படைந்து விட்டாள். மெல்ல மெல்ல என்றல்லாது தடலடியாய் எழுந்து கொண்டாள். முன்னமே சாரதி அருகில் இருப்பதை உணர்ந்தே, அப்படி அதிர்ச்சியாய் விழித்துக் கொண்டாள் போலும்.
அவன் கரத்தை தான் பிடித்திருக்கிறோம் என்ற அறிந்த மறுகணமே விருட்டென தன் கரத்தை பிரித்துக் கொண்டு எழுந்தவள், அவன் இருப்பதைக் கண்டும் காணாதவளாய் எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.
“ஏ நில்லுறி” என்று அழைத்தபடி சாரதி அவளை வழி மறித்து நிற்க அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். அவனை எதிர்கொள்ள முடியாத படபடப்போடு!
“எப்போடி நீ என் ரூம்க்குள்ள வந்த...?” அவன் குழப்பமுற கேட்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள் வீரா!
“அப்போ நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகத்தில இல்லையா?!”
“என்னடி நடந்துச்சு? நீ எப்படிறி என் பக்கத்தில வந்து தூங்கின”
“அப்போ உண்மையிலேயே உனக்கு எதுவும் ஞாபகத்தில இல்லையா?!” என்று அதே கேள்வியை அதே அதிர்ச்சியோடு மீண்டும் அவனிடம் அவள் வினவ... கடுப்பானவன்,
“அப்படி என்னடி நடந்துச்சு?” என்று கோபத்தோடு சற்றே அழுத்தமாய் கேட்டான்.
“அப்போ நீ குடி போதையிலதான் உளறினியா... நினைச்சேன்... நீ வேற மாறி நடந்துக்கும் போதே... சும்மாவா சொல்லி இருக்காங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு” என்று அவள் பாட்டுக்கு ஒருபக்கம் புலம்ப தொடங்க, சாரதிக்கு என்ன நிகழ்ந்ததென்று இம்மியளவு கூட யூகிக்க முடியவில்லை.
“அப்படி என்னடி ஆச்சு... என்னதாண்டி பேசினேன்?” பொறுமையாகவே அவன் வினவ, அவளோ எரிச்சலோடு. “அந்த கர்மத்தை இன்னாத்துக்கு குடிக்கனும்... அப்புறம் எல்லாத்தையும் மறந்து தொலைக்கனும்” என்று கேட்டு நொடித்துக் கொண்டாள்.
“உன் கதாகலாச்சபத்தை நிறுத்திட்டு நடந்ததை சொல்லிறியா?”
“மறந்துட்ட இல்ல... அத்தோட வுடு... நான் போய் தங்கசிங்களை வேற எழுப்பி கிளப்பனும்” என்று அவள் அவசரமாய் அந்த அறைவிவிட்டு வெளியேற பார்க்க சாரதி அவளைப் போகவிடாமல் அவள் கரத்தை பற்றி அருகில் இழுத்து, “ஒழுங்க சொல்லிட்டு போ... எப்போ நீ என் ரூமுக்கு வந்த... நைட் என்ன நடந்துச்சு” என்று கேட்டான்.
“போயா... முதல போய் குளிச்சிட்டு வா... நைட்டு அடிச்சது நாருது” என்றபடி அவனை விட்டு அவள் விலக, “இவ்வளவு நேரம் என் பக்கத்திலேயே சாஞ்சி தூங்கினியே... அப்போ நாரலயா டி” என்றவன் இன்னும் இறுக்கமாய் அவளை நெருக்கி அணைத்தான்.
அவள் அவஸ்தைப்பட்டு அவனை தள்ள அவனோ சினத்தோடு, “நேத்து நைட் என்னை அந்த கேவளப்படுத்திட்டு... எந்த தைரியத்தில என் ரூம்க்குள்ள... வந்து என் பக்கத்திலேயே தூங்கின” என்று கேட்க,
“யாரு... நான்... உன் பக்கத்தில தூங்கினேனா ... நீதான் என் தோள் மேல சாஞ்சி தூங்கினே... நேத்து நைட் அய்யோ பாவம் மாறி எனக்கிட்ட பேசிட்டு... இப்ப இன்னாடன்னா அடப்பாவி மாறி நடந்திருக்க... விடுய்யா என்னை” என்று அவன் கரத்திலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்னை பேசினே... ஒழுங்கா நீ இப்போ சொல்ற... இல்லன்னா அன்னைக்கு மாறி ஒரே லிப் டு லிப் தான்” என்றவள் இதழை அவன் நெருங்க அவள் வேகமாய் தன உதட்டை மூடிக் கொண்டு, “உஹும் உஹும்.... நான் சொல்றேன்” என்று அவள் தத்தளிக்க அவன் தள்ளி வந்தது, “அப்படி வா வழிக்கு... சொல்லு டி” என்றான் அழுத்தமாக!
“இப்ப வேணாம் யா ... தங்கச்சிங்க ஸ்கூலுக்கு கிளம்பனும்... நீயும் ஆபீஸ் கிளம்பனும்ல... நைட்டு சொல்றேனே” என்று தயக்கமாய் கேட்டவளை ஏற இறங்க பார்த்தவன், “நைட்டு சொல்ற... சொல்லல” என்றவன் இன்னும் நெருக்கமாய் அவள் இடையை பிடித்து இழுத்து கொஞ்சம் கிறக்கமாய் அவள் கழுத்துபுரத்தில் இறங்கி உரசினான்.
“ம்ம்ம்ம்மா” என்று அவள் சத்தமாய் கத்திவிட பதறி கொண்டு அவளை விடுவித்தவன், “ஒண்ணுமே பன்னல... அதுக்குள்ள ஓவரா ரியாக்ட் பன்ற... சீ போடி” என்றான். அவள் பெருமூச்செறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.
‘அப்படி என்னத்த பேசி தொலைச்சிருபோம்’ என்று சாரதி புலம்பிக் கொண்டே அலுவலகம் புறப்படுவதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கியவன் கிளம்புவதற்கு முன்னதாக, “வந்ததும் ஒழுங்கா சொல்ற” என்று அவளை எச்சரித்துவிட்டே சென்றான்.
அலுவலகத்தை அடைந்ததும் கணேஷ் அன்றைக்கான வேலைளை பட்டியலிட்டு பின் சற்று தயங்கி, “சார்... ஒரு விஷயம்” என்க,
“என்ன கணேஷ்?” என்று சிரத்தையேயின்றி கேட்டான் சாரதி!
“ஒரு ரேடியோ நிகழ்ச்சில உங்கள கெஸ்டா வர சொல்லி கேட்டிருக்காங்க... ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு” என்று இழுத்தான்.
“ஏன் ஒத்துக்க மாட்டேன்?” என்று சாரதி அவனை நிமிர்ந்து பார்க்க,
“உங்களுக்கு லாபமில்லாத வேலையதான்... நீங்க செய்ய மாட்டீங்களே...அதான்”
“யார் சொன்ன லாபமில்லன்னு... அந்த நிகழச்சில என்னை சாரதி ஷாப்போட ஓனர்தானே அறிமுக படுத்துவாங்க... காசே இல்லாம ஓசி ல நம்ம கடைக்கு வர விளம்பரத்தை வேண்டான்னு ஏன் சொல்லன்னும் ... பேசாம அச்செப்ட் பண்ணிட்டு... டைம் கேட்டு வை... அன்.... அது என்ன நிகழ்ச்சி... என்ன மாதிரி கேள்வி கேட்ப்பாங்கன்னு லிஸ்ட் வாங்கிடு” என்று சொல்லி முடிக்க, நாம இப்படி ஒரு பார்வையில் யோசிக்கவே இல்லையே என்று கணேஷ் வியப்புற்றான்.
எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் அவனும் ஏதாவது ஒரு இடத்தில தவறு செய்து சிக்குவான். அப்படி சாரதி செய்த ஒரு தவற்றைத்தான் இப்போது சரத் அவனை அழிக்கும் ஆயுதமாக மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தான்.
சரத் தன் வக்கீலிடம் சில விஷயங்களை விவாதித்து அவர் கருத்தை கேட்டுக் கொண்டிருக்க அப்போது அரவிந்த் சரத்திடம்,
“திரும்பியும் இந்த மேட்டரை கிளறனுமா?” என்று கேட்டான் .
“வேற வழியில்லை” என்று சரத் தீர்க்கமாக தெரிவிக்க அரவிந்திற்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. சாரதி விதைத்த வினை அவனுக்கே எதிராக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தது.
******
இதோ இன்றைக்கான உங்க பதிவு... படிச்சிட்டு... நீங்க வீராவை திட்டினாலும் சரி.. சாராவை வாரினாலும் சரி... அதெல்லாம் உங்க இஷ்டம்... உங்க கஷ்டம்... என்னை ஏன்யா இதுக்குள்ள இழுகிறீங்க... மீ பாவம்... உங்களுக்குள்ள என்ன களேபரம் வேணா பண்ணிகோங்க... நான் எப்பவும் போல அள்ள அள்ள குறையாம வாரி கமெண்ட் தரும் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவிச்சிட்டு எஸ்ஸாகிட்றேன்... என்னை எங்கயும் தேடாதீங்க... கிடைக்க மாட்டேன்... மீண்டும் நன்றி தோழமைகளே... பை பை
**************************************************************************************
இடம்மாறியது
சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்? இப்படியாக வரிசையாய் அவன் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, எதற்கும் அவனுக்குப் பதில் கிடைத்தபாடில்லை.
அம்மு நதியாவை அழைத்துக் கொண்டு மாலை வீடு வந்து சேர்ந்த போது... வீரா செய்த களேபரங்களும் அதற்குப் பின் அவள் தன்னை இழிவாய் பேசியதுவறையே அவன் மூளைக்குள் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. அதற்குப் பிறகு கோபத்தில் பாட்டில் பாட்டிலாய் மதுவை உள்ளிறக்கியது அவனுக்கு நினைவிருக்க , அதற்குப் பின் சுத்தமாய் துடைத்துவிட்டது போல இரவு நடந்த சம்பவங்களை குறித்த எந்தவொரு தடயமும் அவன் மூளையில் பதிவாகவில்லை.
‘இடியட்... ஒரு ப்ரேன்டா அடிச்சிருந்தாஇப்படியெல்லாம் நடந்திருகாதில்ல... ஒய் யூ க்ராஸ்ட் யுவர் லிமிட்ஸ்’ தலையிலடித்து மனதிற்குள்ளேயே தன்னைச் சாடி கொண்டபடி வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
‘அந்த பேச்சி பேசிட்டு... எதுவுமே நடக்காத மாறி நம்ம ரூம்ல... அதுவும் நம்ம பக்கத்தில தூங்கிட்டிருக்கா... இவளை’ என்று பொருமியவன், “ஏ வீரா... வீரா” என்று அவள் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முற்பட்டான்.
அவள் சிணுங்கியபடி, “இப்பதானே தூங்கினே... அதுக்குள்ள என்ன?” என்று தூக்க கலக்கத்தில் புலம்பி கொண்டு அவன் கரத்தை தன் கரத்தில் இறுக்கிக் கொண்டு வசதியாய் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
புது இரத்தம் பாய்ச்சியது போல் அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் புது உணர்வை அனுபவித்தான். பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. சரச லீலைகளும் புதிதல்ல. ஆனால் இந்த உணர்வு சற்றே புதிது.
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
அவள் பிடி அத்தனை அழுத்தமாக இல்லையென்ற போதும் தன்னை விடுவித்துக் கொள்ள மனமில்லாமல் அவளின் அந்த நெருக்கத்தையும் தொடுகையையும் வெகுவாய் ரசிக்கத் தொடங்கியிருந்தான். காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
அப்படியே அவள் பிடிக்குள் இருந்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு! ஆனால் அந்த உணர்வை முழுவதுமாய் அவனை அனுபவிக்க விடாமல் மீண்டும் அவன் செல்பேசி அழைக்க, அவள் விழித்துக் கொள்வாளோ என்ற பதட்டத்தோடு எட்டி அதனை அணைத்து விடலாம் என்று பார்த்தான். விழித்துக் கொண்டாள் அவள் தன்னை விட்டு விலகி விடுவாளே என்ற தவிப்பு அவனுக்கு !
அவன் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வீரா அந்தச் சத்தத்தில் விழிப்படைந்து விட்டாள். மெல்ல மெல்ல என்றல்லாது தடலடியாய் எழுந்து கொண்டாள். முன்னமே சாரதி அருகில் இருப்பதை உணர்ந்தே, அப்படி அதிர்ச்சியாய் விழித்துக் கொண்டாள் போலும்.
அவன் கரத்தை தான் பிடித்திருக்கிறோம் என்ற அறிந்த மறுகணமே விருட்டென தன் கரத்தை பிரித்துக் கொண்டு எழுந்தவள், அவன் இருப்பதைக் கண்டும் காணாதவளாய் எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.
“ஏ நில்லுறி” என்று அழைத்தபடி சாரதி அவளை வழி மறித்து நிற்க அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். அவனை எதிர்கொள்ள முடியாத படபடப்போடு!
“எப்போடி நீ என் ரூம்க்குள்ள வந்த...?” அவன் குழப்பமுற கேட்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள் வீரா!
“அப்போ நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகத்தில இல்லையா?!”
“என்னடி நடந்துச்சு? நீ எப்படிறி என் பக்கத்தில வந்து தூங்கின”
“அப்போ உண்மையிலேயே உனக்கு எதுவும் ஞாபகத்தில இல்லையா?!” என்று அதே கேள்வியை அதே அதிர்ச்சியோடு மீண்டும் அவனிடம் அவள் வினவ... கடுப்பானவன்,
“அப்படி என்னடி நடந்துச்சு?” என்று கோபத்தோடு சற்றே அழுத்தமாய் கேட்டான்.
“அப்போ நீ குடி போதையிலதான் உளறினியா... நினைச்சேன்... நீ வேற மாறி நடந்துக்கும் போதே... சும்மாவா சொல்லி இருக்காங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு” என்று அவள் பாட்டுக்கு ஒருபக்கம் புலம்ப தொடங்க, சாரதிக்கு என்ன நிகழ்ந்ததென்று இம்மியளவு கூட யூகிக்க முடியவில்லை.
“அப்படி என்னடி ஆச்சு... என்னதாண்டி பேசினேன்?” பொறுமையாகவே அவன் வினவ, அவளோ எரிச்சலோடு. “அந்த கர்மத்தை இன்னாத்துக்கு குடிக்கனும்... அப்புறம் எல்லாத்தையும் மறந்து தொலைக்கனும்” என்று கேட்டு நொடித்துக் கொண்டாள்.
“உன் கதாகலாச்சபத்தை நிறுத்திட்டு நடந்ததை சொல்லிறியா?”
“மறந்துட்ட இல்ல... அத்தோட வுடு... நான் போய் தங்கசிங்களை வேற எழுப்பி கிளப்பனும்” என்று அவள் அவசரமாய் அந்த அறைவிவிட்டு வெளியேற பார்க்க சாரதி அவளைப் போகவிடாமல் அவள் கரத்தை பற்றி அருகில் இழுத்து, “ஒழுங்க சொல்லிட்டு போ... எப்போ நீ என் ரூமுக்கு வந்த... நைட் என்ன நடந்துச்சு” என்று கேட்டான்.
“போயா... முதல போய் குளிச்சிட்டு வா... நைட்டு அடிச்சது நாருது” என்றபடி அவனை விட்டு அவள் விலக, “இவ்வளவு நேரம் என் பக்கத்திலேயே சாஞ்சி தூங்கினியே... அப்போ நாரலயா டி” என்றவன் இன்னும் இறுக்கமாய் அவளை நெருக்கி அணைத்தான்.
அவள் அவஸ்தைப்பட்டு அவனை தள்ள அவனோ சினத்தோடு, “நேத்து நைட் என்னை அந்த கேவளப்படுத்திட்டு... எந்த தைரியத்தில என் ரூம்க்குள்ள... வந்து என் பக்கத்திலேயே தூங்கின” என்று கேட்க,
“யாரு... நான்... உன் பக்கத்தில தூங்கினேனா ... நீதான் என் தோள் மேல சாஞ்சி தூங்கினே... நேத்து நைட் அய்யோ பாவம் மாறி எனக்கிட்ட பேசிட்டு... இப்ப இன்னாடன்னா அடப்பாவி மாறி நடந்திருக்க... விடுய்யா என்னை” என்று அவன் கரத்திலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்னை பேசினே... ஒழுங்கா நீ இப்போ சொல்ற... இல்லன்னா அன்னைக்கு மாறி ஒரே லிப் டு லிப் தான்” என்றவள் இதழை அவன் நெருங்க அவள் வேகமாய் தன உதட்டை மூடிக் கொண்டு, “உஹும் உஹும்.... நான் சொல்றேன்” என்று அவள் தத்தளிக்க அவன் தள்ளி வந்தது, “அப்படி வா வழிக்கு... சொல்லு டி” என்றான் அழுத்தமாக!
“இப்ப வேணாம் யா ... தங்கச்சிங்க ஸ்கூலுக்கு கிளம்பனும்... நீயும் ஆபீஸ் கிளம்பனும்ல... நைட்டு சொல்றேனே” என்று தயக்கமாய் கேட்டவளை ஏற இறங்க பார்த்தவன், “நைட்டு சொல்ற... சொல்லல” என்றவன் இன்னும் நெருக்கமாய் அவள் இடையை பிடித்து இழுத்து கொஞ்சம் கிறக்கமாய் அவள் கழுத்துபுரத்தில் இறங்கி உரசினான்.
“ம்ம்ம்ம்மா” என்று அவள் சத்தமாய் கத்திவிட பதறி கொண்டு அவளை விடுவித்தவன், “ஒண்ணுமே பன்னல... அதுக்குள்ள ஓவரா ரியாக்ட் பன்ற... சீ போடி” என்றான். அவள் பெருமூச்செறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.
‘அப்படி என்னத்த பேசி தொலைச்சிருபோம்’ என்று சாரதி புலம்பிக் கொண்டே அலுவலகம் புறப்படுவதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கியவன் கிளம்புவதற்கு முன்னதாக, “வந்ததும் ஒழுங்கா சொல்ற” என்று அவளை எச்சரித்துவிட்டே சென்றான்.
அலுவலகத்தை அடைந்ததும் கணேஷ் அன்றைக்கான வேலைளை பட்டியலிட்டு பின் சற்று தயங்கி, “சார்... ஒரு விஷயம்” என்க,
“என்ன கணேஷ்?” என்று சிரத்தையேயின்றி கேட்டான் சாரதி!
“ஒரு ரேடியோ நிகழ்ச்சில உங்கள கெஸ்டா வர சொல்லி கேட்டிருக்காங்க... ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு” என்று இழுத்தான்.
“ஏன் ஒத்துக்க மாட்டேன்?” என்று சாரதி அவனை நிமிர்ந்து பார்க்க,
“உங்களுக்கு லாபமில்லாத வேலையதான்... நீங்க செய்ய மாட்டீங்களே...அதான்”
“யார் சொன்ன லாபமில்லன்னு... அந்த நிகழச்சில என்னை சாரதி ஷாப்போட ஓனர்தானே அறிமுக படுத்துவாங்க... காசே இல்லாம ஓசி ல நம்ம கடைக்கு வர விளம்பரத்தை வேண்டான்னு ஏன் சொல்லன்னும் ... பேசாம அச்செப்ட் பண்ணிட்டு... டைம் கேட்டு வை... அன்.... அது என்ன நிகழ்ச்சி... என்ன மாதிரி கேள்வி கேட்ப்பாங்கன்னு லிஸ்ட் வாங்கிடு” என்று சொல்லி முடிக்க, நாம இப்படி ஒரு பார்வையில் யோசிக்கவே இல்லையே என்று கணேஷ் வியப்புற்றான்.
எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் அவனும் ஏதாவது ஒரு இடத்தில தவறு செய்து சிக்குவான். அப்படி சாரதி செய்த ஒரு தவற்றைத்தான் இப்போது சரத் அவனை அழிக்கும் ஆயுதமாக மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தான்.
சரத் தன் வக்கீலிடம் சில விஷயங்களை விவாதித்து அவர் கருத்தை கேட்டுக் கொண்டிருக்க அப்போது அரவிந்த் சரத்திடம்,
“திரும்பியும் இந்த மேட்டரை கிளறனுமா?” என்று கேட்டான் .
“வேற வழியில்லை” என்று சரத் தீர்க்கமாக தெரிவிக்க அரவிந்திற்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. சாரதி விதைத்த வினை அவனுக்கே எதிராக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தது.
******
Last edited: