• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
“ஹாட் அன் ஸ்பைஸீயா ஒரு கிஸ் கொடு... நான் போயிட்டே இருக்கேன்” என்றவன் அவள் உதடுகளை நெருங்கவும் தன் கரத்தில் ஒட்டியிருந்த மைதா மாவை அவன் முகத்தில் பூசி தள்ளிவிட்டாள்.

அவன் முகத்தைத் துடைத்து கொண்டிருக்கும் போதே, “இன்னும் கொஞ்சம் நேரம் இங்க நின்ன... மிளகா தூளை தடவிடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டியவளை படுகோபமாய் முறைத்தவன்,

என்ன செய்திருப்பான் என்று சொல்லவா வேண்டும். கிட்டத்தட்டக் கால் கிலோ மைதா மாவு அவள் தலையில் கொட்டப்பட்டது.

“த்தூ... ம்ம்கும் ம்ம்கும்” என்றவள் அதனைத் துடைத்து கொண்டே, “உன் கூட ஒரே ரப்சாரா போச்சு... தங்கச்சிங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில ஸ்கூல்ல இருந்து வந்திருவாங்க... நாம ரெண்டு பேரையும் இந்த கோலத்தில பாத்தா” என்று அழமாட்டாத குறையாய் அவள் சொல்லவும், “அந்த அறிவு என் மூஞ்சில மைதா மாவை பூசிரத்துக்கு முன்னாடி இருந்திருக்கணும் டார்லிங்!” என்றான் வெகுஇயல்பாக!

“நான் இப்போ என்ன பண்றது?”

“நான் ஒன்னு சொல்றேன் கேட்ப்பியா?” என்றவன் அவள் முகத்தை அக்கறையோடு துடைத்துவிட, “சொல்லி தொலை” என்றாள்.

“நாம ரெண்டு பேரும் ஒண்ணா குளிச்சிட்டு... நதியா அம்முவும் வந்த பிறகு ஜாலியா ஹோட்டல் போய் டின்னர் சாப்பிடலாம்... ஓகே வா” என்றவன் சொல்லி அவளை அவன் அணைத்துக் கொள்ள, “ஆணிய புடுங்க வேணாம்... போயிரு” என்றவனைத் தள்ளிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ஆனால் அவனா விடுவான். அவன்தான் விடாகொண்டனாயிற்றே!

அவன் விஷமமாக புன்னகயித்து கொண்டே மாடியேற போனவளை தன் கரத்தில் அலேக்காக தூக்கிக் கொள்ள, அவள் பதிறினாள். ஹம்ம்! அதற்குப் பிறகு அரங்கேறியவை எல்லாம் சமையல் கலைக்குச் சம்பந்தமற்ற வேறொரு கலை என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

அதன் பின் இருவரும் தங்கைகள் வருவதற்கு முன் குளித்து முடித்து அம்மு நதியாவையும் தயாராக்கி அழைத்துக்கொண்டு பெரிய நட்சித்திர ஹோட்டலுக்கு வந்துசேர்ந்தனர். அந்த சகோதரிகள் முவரும் அந்த இடத்தின் பிரமாண்டத்தை பார்த்துப் பிரமித்தனர். சாரதி அவர்களுக்கு பல்வேறு வகையான உணவுகளை ஆர்டர் செய்ய, அவர்கள் மூவரும் அதனைப் பார்த்தே திக்குமுக்காடிப் போயினர்.

அம்முவும் நதியாவும் ஒவ்வொரு உணவையும் ருசித்து அவர்கள் கருத்தை பிரஸ்தாபம் செய்து கொண்டிருக்க, அப்போது சாரதி தன் பேசியில் வந்த அழைப்பைப் பார்த்துவிட்டு, அவர்களிடம் வந்துவிடுவதாக சம்ஞ்சை செய்துவிட்டு எழுந்து சென்றான்.

“பேசாம... சாப்பிட்டு கிளம்புங்கடி... நேரமாவுது” என்று வீரா உணவை முடித்து தங்கைகளுக்கு அறிவுரை வழங்கியபடி டிஸுவால் தன் கரத்தை துடைத்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று அவள் எதையோ கண்டு கோபம் கொப்பளிக்க அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருக்க, அம்முவும் நதியாவும் கூட அவள் பார்த்த திசையில் கவனித்தனர்.

“இவன் அவன் இல்ல” என்று அம்மு அரவிந்தை பார்த்து உரைக்க , “அவனேதான்” என்று உறுதிப்படுத்தினாள் நதியா!

வீரா உடனடியாய் எழுந்து நின்று கொண்டு, “நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க... நான் வந்திடிறேன்” என்றவள் சொல்ல,

“அவன் கிட்ட போய் பேச போறியா க்கா?!” என்று நதியா அதிர்ச்சியாக,

“பேச போறதில்ல.. செவுலையே ஒன்னு விட போறேன்” என்று சொல்லிவிட்டு தாமதிக்காமல் விரைந்து அரவிந்தை நோக்கி நடந்தாள்.


Moni vera level ??????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top