மோனிஷா, நீங்களே இந்த எபிசோட்ல குறிப்பிட்டிருக்கீங்க, மது என்பது பல கலாச்சாரங்களில் உள்ளதுதான்...
நம் சங்க இலக்கியந்தொட்டே அனைவரும் ‘கள்’ அருந்துவர் என்ற குறிப்பு உள்ளது...
உண்மையில், கள் (பனை போன்ற மரத்திலிருந்து இறக்குவது), தேறல் (நொதித்தப் பழச்சாறு - வைன்), அடுநறா (தானியங்களின் சாற்றை கொதிக்கவைத்து கஞ்சி எடுத்து நொதிக்கவிடுவது - விஸ்கி, பீர், ரம் எல்லாம் இவ்வகை) ஆகிய அனைத்துமே உடலுக்கும் நல்லதுதான்.
குறிப்பாக குளிர் அதிகம் நிறைந்த பகுதிகளில் தேறலும், நறாவும், நம்மூர் போன்று வெயில் அதிகம் உள்ள பகுதிகளில் கள் போன்ற பானங்களும் உடலுக்கு வலு சேர்ப்பவை... தட்பவெட்ப நிலையை சமாளிக்க உதவுபவை...
பழமை முறையில் இவை சுற்றுச்சூழலுக்கும் மாசு விளைவிக்காதவை!
ஆனால், புகை அப்படி அல்ல! அது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி (ஆக்டிவி ஸ்மோக்கர்) உடன் இருப்போரையும், சில சமயம் எங்கோ இருப்போரையும் கூட (பாஸிவ் ஸ்மோக்கர்ஸ் - நாம் எல்லோருமே பாஸிவ் ஸ்மோக்கர்ஸ்தான்!) பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும் கேடு!
எனவே புகைப்பிடிப்பதை கதைகளில் தவிர்க்கலாம்.
ஆனால், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் காட்டக்கூடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்!
(இதே போன்ற இன்னொரு விஷயம் ‘கெட்ட வார்த்தை’ பேசுதல், ஆண்கள்தான் பேச வேண்டுமா என இன்று பல பெண்களும் பேசத் தொடங்கிவிட்டனர்! யார் செய்தாலும் அது தவறுதான்! டாட்!)
ஆனால், ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளர் என்று நான் உங்களை நம்புகிறேன், எனவே, நீங்கள் ஒரு பெண் புகைப்பிடிக்கிறாள் என்று வைத்தால் அதில் ஒரு பொருள் இருக்கும் என்றே நம்புகிறேன், அதனால் ஒரு வாசகனாக நான் உங்கள் கதைமாந்தர் படைப்பில் கேள்வி கேட்கமாட்டேன்...
கேள்வி கேட்பவர்களை முறைப்பேன்