மதுவின்
"வேந்தா...." என்ற அழைப்பில் திகைத்துப் போய் நின்றான் அருள்.
"தன்னை வெறுத்து ஒதுக்க நினைக்கும் மது தன் பெயரை சொன்னாலா? அதுவும் யாரும் தன்னை இது வரை அழைத்திராத பெயரில்.." என ஆச்சரியமாக மதுவை பார்த்து கொண்டிருந்தான் அருள்.
ஸ்ரீதர் உள்ளே வரவும் சட்டென்று தன் கைகளை எடுத்து கொண்டவன்
"நான் வரேன் ஸ்ரீதர்.." என்று நிமிர்ந்தும் பாராமல் கூறி விட்டு வெளியேறி சென்றான்.
அருளின் மனதில் பல்வேறு விதமான குழப்பங்கள் சூழ்ந்து கொள்ள தலையை பிடித்து கொண்டு கீழே அமர்ந்து கொண்டான்.
அவசரமாக அவனருகில் ஓடி வந்த வினித்
"என்னடா அருள் இது இப்படி உட்கார்ந்துட்ட? எழும்புடா வா வீட்டுக்கு போகலாம்" என்று அவனை எழுப்பி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
ஸ்ரீதர் தன் போனை எடுத்து அருணாவிடம் மதுவை ஹாஸ்பிடலில் வைத்திருக்கும் விடயத்தை கூற அடித்துப் பிடித்து கொண்டு ஓடி வந்தார்.
மதுவின் அருகில் இருந்து கொண்டு அருணா கண்ணீர் விட அவர் கைகளை பிடித்து கொண்டு மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீதர்
"மதுவுக்கு ஒண்ணும் ஆகாதுமா. நீங்க வீணா கவலைப்பட வேண்டாம்" என்று கூறி கொண்டே அவர் கண்களைத் துடைத்து விட்டான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஸ்ரீதர்
"அம்மா நான் ஒரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" என்று கேட்கவும்
"அப்படி எல்லாம் எதுவும் நினைக்க மாட்டேன். என்ன விஷயம் சொல்லு ஸ்ரீதர்?" என்று கூறினார் அருணா.
"இரண்டு வருஷத்துக்குள்ள நிறைய மாறிடுச்சு. மது கொஞ்சம் கொஞ்சமாக அவளோட பழைய நிலைமைக்கு வந்துட்டா இல்லைமா?" என்று ஸ்ரீதர் கேட்கவும்
அவனைப் பார்த்து சிரித்த அருணா
"இப்போ எதுக்கு நீ இவ்வளவு பீடிகை போடுற ஸ்ரீதர்? சொல்ல வந்ததை முழுசா சொல்லு" என்று கூற
"மது மால்ல ஒரு பையனைப் பார்த்தாலே. அந்த பையன் இப்போ வந்து மதுவை கல்யாணம் பண்ணிக்க கேட்டா என்ன பண்ணுவீங்கமா?" என்று கேட்கவும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தார் அருணா.
"என்ன ஸ்ரீதர் விளையாடுறியா? அந்த பையனுக்கு உண்மையாகவே என் பொண்ண கல்யாணம் பண்ணணும்னு எண்ணம் இருந்திருந்தா அத்தனை பேர் முன்னாடி அப்படி நடந்துருக்க மாட்டானே. அவனுக்கு அப்படி எந்த நோக்கமும் இருந்த மாதிரி தெரியலையே. இல்லேனா இந்த இரண்டு வருஷமா மது கஷ்டப்படும் போது அவளை தேடி வந்துருப்பானே. அப்படி எதுவும் நடக்கலையே" என்று இடை நிறுத்திய அருணா
"ஆனா என் பொண்ணு ஆசைப்பட்டா அந்த பையனுக்கே அவளை கட்டி வைக்க நான் தயங்க மாட்டேன்" என்று கூறவும் அவரை ஆச்சரியமாக பார்த்தான் ஸ்ரீதர்.
பின்னர் மீண்டும் அதை பற்றி பேசாமல் ஸ்ரீதர் வேறு விடயங்கள் பற்றி பேச அருணாவும் அந்த விடயம் பற்றி மறந்து போனார்.
முழுதாக மூன்று நாட்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்த மது மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.
ஹாஸ்பிடலில் இருந்த மூன்று நாட்களும் மது பெரிதாக யாரிடமும் பேசி கொள்ளவில்லை.
மதுவின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஸ்ரீதர் மதுவிடம் இதை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
மதுவை வீட்டிற்கு கொண்டு வந்த பின்பு அருணா வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி செல்லவும் ஸ்ரீதரும் அவரிடம் கேள்வி எதுவும் கேட்காமல் அவரை அனுப்பி வைத்தான்.
"மது கிட்ட கண்டிப்பாக பேசியே ஆகணும்" என்று வீட்டினுள் ஸ்ரீதர் நுழைய
"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது ஸ்ரீ???" என்ற மதுவின் கேள்வியில் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.
"எ...என்ன கேட்ட மது??" என்று ஸ்ரீதர் கேட்கவும்
அவனைக் கூர்மையாக பார்த்த மது
"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதுனு கேட்டேன்?" என்று கேட்டாள்.
"நான் இவகிட்ட பேசணும்னு வந்தது இவ என்னை கேள்வி கேட்குறாளே!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஸ்ரீதர்
"அது...அது வந்து...அரு...அது...நான் தான் மது அட்மிட் பண்ணேன். ஏன் இப்படி கேட்குற?" என்று திக்கித் திணறி கேட்டான்.
"உண்மையாகவே நீ தான் அட்மிட் பண்ணியா?" என்று மது கேட்கவும்
"நீ ஆபீஸ்ல இருக்கும் போது நான் தானே உன் ரூமுக்குள்ள வந்தேன். அப்போ தானே நீ மயங்கி விழுந்த. அப்போ நான் தானே அட்மிட் பண்ணி இருப்பேன்" என்று ஸ்ரீதர் கூற அவனை நம்பாமல் பார்த்தாள் மது.
"ஏன் இப்படி சந்தேகமாகவே பார்க்குற மது? நான் இதற்கு முதல் உன் கிட்ட எதையாவது மறைச்சிருக்கேனா? ஏன் இப்படி நம்பாமல் கேட்டுட்டே இருக்க?" என்று ஸ்ரீதர் கேட்கவும்
"அப்போ அருள் எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்தான்?" என்ற மதுவின் கேள்வியில் திக்குமுக்காடி போய் நின்றான் ஸ்ரீதர்.
"அரு...அருள்..அருளா??..அப்படி...."
"அருள்னு யாரையும் தெரியாதுனு சொல்லப் போறியா ஸ்ரீ??" என்று மது கேட்கவும் கையை பிசைந்து கொண்டு நின்றான் ஸ்ரீதர்.
"நான் பார்த்தேன் ஸ்ரீ. அவனைப் பார்த்தேன். என் கை மேல அவன் கையை வைச்சு அவன் பேசும் போது நான் பார்த்தேன் ஸ்ரீ. இல்லேனு மட்டும் பொய் சொல்லாத. அவன் முகத்தை நான் மறக்கல. அவன் பேசுனது ஒண்ணுமே எனக்கு
கேட்கல. ஆனா அவன் முகம் அவ்வளவு வேதனையாக இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு ஸ்ரீ" என்று மது அதட்டலாக கேட்க அமைதியாக நின்றான் ஸ்ரீதர்.
"சொல்லு ஸ்ரீ..." என்று ஸ்ரீதரின் தோளைப் பிடித்து அவள் உலுக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் அருளை அடித்தது முதல் மதுவின் கடந்த காலம் பற்றி கூறியது வரை சொல்லி முடித்தான்.
"அப்போ என் கடந்த காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டு தான் அவன் திருந்துனானா? இல்லேனா இப்படி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிக்குறதா இருந்தானாம் அவன்?" என்று மது கோபமாக கேட்கவும்
அவள் கைகளை பிடித்து கொண்ட ஸ்ரீதர்
"தப்பா பேசாதே மது! அருள் அப்படிபட்டவன் இல்ல. இரண்டு வருஷமா உன்னையே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான். அவன் ஏமாத்துரவனா இருந்தா இரண்டு வருஷமா உனக்காக ஏன் காத்துட்டு இருக்கப் போறான். வேற பொண்ண பார்த்துட்டு போய் இருப்பான்லே?" என்று கூற
ஸ்ரீதரின் கைகளில் இருந்து தன் கையை எடுத்து கொண்ட மது
"சபாஷ்...சபாஷ்...." என்று கைகளை தட்டினாள்.
ஸ்ரீதர் குழப்பமாக பார்க்கவும் அவனை முறைத்து பார்த்தவள்
"எப்போ இருந்து ஸ்ரீ நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச? இவ்வளவு நாள் உனக்கு தப்பா தெரிஞ்சவன் இப்போ திடீர்னு நல்லவனா தெரியுறானா?" என்று கேட்க
என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தான் ஸ்ரீதர்.
"அப்படி இல்லை மது. நானும் அவனைக் கொன்னு போட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு கோபமாக தான் இருந்தேன். உன்னை ஏமாத்தணும்னு நினைச்சு இருந்தா எப்போவோ வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பானே. இரண்டு வருஷமா உன் பேர், நீ இருக்குற இடம் தெரியாமல் அலைஞ்சு திரிஞ்சுருக்கான்.
சின்ன வயசுல இருந்து உன்னையே சுற்றி சுற்றி வந்த கார்த்திக் அவங்க அம்மா பேச்சை கேட்டு உன்னை விட்டுட்டு போயிட்டான் தானே. அவனுக்கு உண்மையா உன் மேல காதல் இருந்திருந்தா இந்த இரண்டு வருஷத்துல ஒரு நாளாச்சும் உன்ன தேடி வந்துருக்கனுமே. அதற்காக அருள் பண்ணது சரினு நான் நியாயப்படுத்தல.
நீ அவனுக்கு வாழ்க்கை பூரா துணையா வரவேணும்ங்கிற எண்ணத்தில் அப்படி நடந்துருப்பான். நடந்ததையே நினைச்சு வீணா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம பொறுமையாக இருந்து எல்லாத்தையும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும். உன் மனசுல கார்த்தி இருக்கானா? இல்ல...... அருள் இருக்கானானு" என்று விட்டு ஸ்ரீதர் வெளியேறி சென்று விட விழித்து கொண்டு நின்றாள் மது.
"என் மனசுல அருளா???? நோ....அவன் என் வாழ்க்கையை அழிச்சவன். அவனை போய் நான் நினைச்சுட்டு இருப்பேனா?" என்று மது பேசிக் கொண்டிருக்க
அவள் ஆழ் மனதோ
"அவனை இந்த இரண்டு வருடத்தில் ஒரு நாள் கூட நீ நினைத்து பார்க்கவில்லையா?" என்று கேள்வி எழுப்ப திகைத்துப் போனாள் மது.
"இந்த இரண்டு வருடத்தில் நான் கார்த்திக்கை ஒரு தடவை கூட நினைத்து பார்க்கவில்லையே! ஆனால் அருளை நான் திட்டுவதற்காக என்றாலும் நினைக்காத நாள் இல்லையே!" என்று எண்ணிய மது முற்றிலும் குழம்பி போனாள்.
தலையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருக்கவும் மது அவள் மன அமைதியை நாடும் பூஜையறையை நோக்கி சென்றாள்.
கடவுள் படங்களுக்கு நடுவில் நடு நாயகமாக வீற்றிருந்த அருணாசலத்தின் படத்தின் அருகே சென்று மது நின்றாள்.
கண்கள் கலங்க அவரை பார்த்து கொண்டு நின்ற மது
"அப்பா எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்குபா. ஸ்ரீ என்னனென்னமோ சொல்லுறான். நான் அந்த அருளைப் பற்றி யோசித்து பார்த்துருக்கேன். ஆனா கார்த்தி இருந்த இடத்தில் அருளை ஒரு நாளும் நினைக்கலையே! அப்பா நீங்க எனக்கு எப்போதும் துணையாக இருக்கனும்பா" என்று கண் மூடி வேண்டிக் கொண்ட மது அவர் படத்தை தொட்டு வணங்கும் போது அவர் படத்தின் கீழ் ஒரு பேப்பர் இருக்கவும் அதை கையில் எடுத்தாள் மது.
காரில் சென்று கொண்டிருந்த ஸ்ரீதர் பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தான்.
"அருள் பண்ணது தப்பு தான் இருந்தும் நான் ஏன் அவனை நியாயப்படுத்தனும்? மதுவுக்கு ஒரு கஷ்டம்னு சொன்னதும் அவன் அப்படி துடிச்சுப்போயிட்டானே! அவன் மேல என்னால கோபம் கொள்ள முடியலையே ஏன்??" என்றவாறு யோசித்துக் கொண்ட ஸ்ரீதர் எதிரில் நடந்து வந்தவர்களைப் பார்த்து சட்டென்று காரை நிறுத்தினான்.
"வேந்தா...." என்ற அழைப்பில் திகைத்துப் போய் நின்றான் அருள்.
"தன்னை வெறுத்து ஒதுக்க நினைக்கும் மது தன் பெயரை சொன்னாலா? அதுவும் யாரும் தன்னை இது வரை அழைத்திராத பெயரில்.." என ஆச்சரியமாக மதுவை பார்த்து கொண்டிருந்தான் அருள்.
ஸ்ரீதர் உள்ளே வரவும் சட்டென்று தன் கைகளை எடுத்து கொண்டவன்
"நான் வரேன் ஸ்ரீதர்.." என்று நிமிர்ந்தும் பாராமல் கூறி விட்டு வெளியேறி சென்றான்.
அருளின் மனதில் பல்வேறு விதமான குழப்பங்கள் சூழ்ந்து கொள்ள தலையை பிடித்து கொண்டு கீழே அமர்ந்து கொண்டான்.
அவசரமாக அவனருகில் ஓடி வந்த வினித்
"என்னடா அருள் இது இப்படி உட்கார்ந்துட்ட? எழும்புடா வா வீட்டுக்கு போகலாம்" என்று அவனை எழுப்பி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
ஸ்ரீதர் தன் போனை எடுத்து அருணாவிடம் மதுவை ஹாஸ்பிடலில் வைத்திருக்கும் விடயத்தை கூற அடித்துப் பிடித்து கொண்டு ஓடி வந்தார்.
மதுவின் அருகில் இருந்து கொண்டு அருணா கண்ணீர் விட அவர் கைகளை பிடித்து கொண்டு மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீதர்
"மதுவுக்கு ஒண்ணும் ஆகாதுமா. நீங்க வீணா கவலைப்பட வேண்டாம்" என்று கூறி கொண்டே அவர் கண்களைத் துடைத்து விட்டான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஸ்ரீதர்
"அம்மா நான் ஒரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" என்று கேட்கவும்
"அப்படி எல்லாம் எதுவும் நினைக்க மாட்டேன். என்ன விஷயம் சொல்லு ஸ்ரீதர்?" என்று கூறினார் அருணா.
"இரண்டு வருஷத்துக்குள்ள நிறைய மாறிடுச்சு. மது கொஞ்சம் கொஞ்சமாக அவளோட பழைய நிலைமைக்கு வந்துட்டா இல்லைமா?" என்று ஸ்ரீதர் கேட்கவும்
அவனைப் பார்த்து சிரித்த அருணா
"இப்போ எதுக்கு நீ இவ்வளவு பீடிகை போடுற ஸ்ரீதர்? சொல்ல வந்ததை முழுசா சொல்லு" என்று கூற
"மது மால்ல ஒரு பையனைப் பார்த்தாலே. அந்த பையன் இப்போ வந்து மதுவை கல்யாணம் பண்ணிக்க கேட்டா என்ன பண்ணுவீங்கமா?" என்று கேட்கவும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தார் அருணா.
"என்ன ஸ்ரீதர் விளையாடுறியா? அந்த பையனுக்கு உண்மையாகவே என் பொண்ண கல்யாணம் பண்ணணும்னு எண்ணம் இருந்திருந்தா அத்தனை பேர் முன்னாடி அப்படி நடந்துருக்க மாட்டானே. அவனுக்கு அப்படி எந்த நோக்கமும் இருந்த மாதிரி தெரியலையே. இல்லேனா இந்த இரண்டு வருஷமா மது கஷ்டப்படும் போது அவளை தேடி வந்துருப்பானே. அப்படி எதுவும் நடக்கலையே" என்று இடை நிறுத்திய அருணா
"ஆனா என் பொண்ணு ஆசைப்பட்டா அந்த பையனுக்கே அவளை கட்டி வைக்க நான் தயங்க மாட்டேன்" என்று கூறவும் அவரை ஆச்சரியமாக பார்த்தான் ஸ்ரீதர்.
பின்னர் மீண்டும் அதை பற்றி பேசாமல் ஸ்ரீதர் வேறு விடயங்கள் பற்றி பேச அருணாவும் அந்த விடயம் பற்றி மறந்து போனார்.
முழுதாக மூன்று நாட்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்த மது மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.
ஹாஸ்பிடலில் இருந்த மூன்று நாட்களும் மது பெரிதாக யாரிடமும் பேசி கொள்ளவில்லை.
மதுவின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஸ்ரீதர் மதுவிடம் இதை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
மதுவை வீட்டிற்கு கொண்டு வந்த பின்பு அருணா வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி செல்லவும் ஸ்ரீதரும் அவரிடம் கேள்வி எதுவும் கேட்காமல் அவரை அனுப்பி வைத்தான்.
"மது கிட்ட கண்டிப்பாக பேசியே ஆகணும்" என்று வீட்டினுள் ஸ்ரீதர் நுழைய
"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது ஸ்ரீ???" என்ற மதுவின் கேள்வியில் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.
"எ...என்ன கேட்ட மது??" என்று ஸ்ரீதர் கேட்கவும்
அவனைக் கூர்மையாக பார்த்த மது
"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதுனு கேட்டேன்?" என்று கேட்டாள்.
"நான் இவகிட்ட பேசணும்னு வந்தது இவ என்னை கேள்வி கேட்குறாளே!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஸ்ரீதர்
"அது...அது வந்து...அரு...அது...நான் தான் மது அட்மிட் பண்ணேன். ஏன் இப்படி கேட்குற?" என்று திக்கித் திணறி கேட்டான்.
"உண்மையாகவே நீ தான் அட்மிட் பண்ணியா?" என்று மது கேட்கவும்
"நீ ஆபீஸ்ல இருக்கும் போது நான் தானே உன் ரூமுக்குள்ள வந்தேன். அப்போ தானே நீ மயங்கி விழுந்த. அப்போ நான் தானே அட்மிட் பண்ணி இருப்பேன்" என்று ஸ்ரீதர் கூற அவனை நம்பாமல் பார்த்தாள் மது.
"ஏன் இப்படி சந்தேகமாகவே பார்க்குற மது? நான் இதற்கு முதல் உன் கிட்ட எதையாவது மறைச்சிருக்கேனா? ஏன் இப்படி நம்பாமல் கேட்டுட்டே இருக்க?" என்று ஸ்ரீதர் கேட்கவும்
"அப்போ அருள் எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்தான்?" என்ற மதுவின் கேள்வியில் திக்குமுக்காடி போய் நின்றான் ஸ்ரீதர்.
"அரு...அருள்..அருளா??..அப்படி...."
"அருள்னு யாரையும் தெரியாதுனு சொல்லப் போறியா ஸ்ரீ??" என்று மது கேட்கவும் கையை பிசைந்து கொண்டு நின்றான் ஸ்ரீதர்.
"நான் பார்த்தேன் ஸ்ரீ. அவனைப் பார்த்தேன். என் கை மேல அவன் கையை வைச்சு அவன் பேசும் போது நான் பார்த்தேன் ஸ்ரீ. இல்லேனு மட்டும் பொய் சொல்லாத. அவன் முகத்தை நான் மறக்கல. அவன் பேசுனது ஒண்ணுமே எனக்கு
கேட்கல. ஆனா அவன் முகம் அவ்வளவு வேதனையாக இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு ஸ்ரீ" என்று மது அதட்டலாக கேட்க அமைதியாக நின்றான் ஸ்ரீதர்.
"சொல்லு ஸ்ரீ..." என்று ஸ்ரீதரின் தோளைப் பிடித்து அவள் உலுக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் அருளை அடித்தது முதல் மதுவின் கடந்த காலம் பற்றி கூறியது வரை சொல்லி முடித்தான்.
"அப்போ என் கடந்த காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டு தான் அவன் திருந்துனானா? இல்லேனா இப்படி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிக்குறதா இருந்தானாம் அவன்?" என்று மது கோபமாக கேட்கவும்
அவள் கைகளை பிடித்து கொண்ட ஸ்ரீதர்
"தப்பா பேசாதே மது! அருள் அப்படிபட்டவன் இல்ல. இரண்டு வருஷமா உன்னையே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான். அவன் ஏமாத்துரவனா இருந்தா இரண்டு வருஷமா உனக்காக ஏன் காத்துட்டு இருக்கப் போறான். வேற பொண்ண பார்த்துட்டு போய் இருப்பான்லே?" என்று கூற
ஸ்ரீதரின் கைகளில் இருந்து தன் கையை எடுத்து கொண்ட மது
"சபாஷ்...சபாஷ்...." என்று கைகளை தட்டினாள்.
ஸ்ரீதர் குழப்பமாக பார்க்கவும் அவனை முறைத்து பார்த்தவள்
"எப்போ இருந்து ஸ்ரீ நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச? இவ்வளவு நாள் உனக்கு தப்பா தெரிஞ்சவன் இப்போ திடீர்னு நல்லவனா தெரியுறானா?" என்று கேட்க
என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தான் ஸ்ரீதர்.
"அப்படி இல்லை மது. நானும் அவனைக் கொன்னு போட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு கோபமாக தான் இருந்தேன். உன்னை ஏமாத்தணும்னு நினைச்சு இருந்தா எப்போவோ வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பானே. இரண்டு வருஷமா உன் பேர், நீ இருக்குற இடம் தெரியாமல் அலைஞ்சு திரிஞ்சுருக்கான்.
சின்ன வயசுல இருந்து உன்னையே சுற்றி சுற்றி வந்த கார்த்திக் அவங்க அம்மா பேச்சை கேட்டு உன்னை விட்டுட்டு போயிட்டான் தானே. அவனுக்கு உண்மையா உன் மேல காதல் இருந்திருந்தா இந்த இரண்டு வருஷத்துல ஒரு நாளாச்சும் உன்ன தேடி வந்துருக்கனுமே. அதற்காக அருள் பண்ணது சரினு நான் நியாயப்படுத்தல.
நீ அவனுக்கு வாழ்க்கை பூரா துணையா வரவேணும்ங்கிற எண்ணத்தில் அப்படி நடந்துருப்பான். நடந்ததையே நினைச்சு வீணா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம பொறுமையாக இருந்து எல்லாத்தையும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும். உன் மனசுல கார்த்தி இருக்கானா? இல்ல...... அருள் இருக்கானானு" என்று விட்டு ஸ்ரீதர் வெளியேறி சென்று விட விழித்து கொண்டு நின்றாள் மது.
"என் மனசுல அருளா???? நோ....அவன் என் வாழ்க்கையை அழிச்சவன். அவனை போய் நான் நினைச்சுட்டு இருப்பேனா?" என்று மது பேசிக் கொண்டிருக்க
அவள் ஆழ் மனதோ
"அவனை இந்த இரண்டு வருடத்தில் ஒரு நாள் கூட நீ நினைத்து பார்க்கவில்லையா?" என்று கேள்வி எழுப்ப திகைத்துப் போனாள் மது.
"இந்த இரண்டு வருடத்தில் நான் கார்த்திக்கை ஒரு தடவை கூட நினைத்து பார்க்கவில்லையே! ஆனால் அருளை நான் திட்டுவதற்காக என்றாலும் நினைக்காத நாள் இல்லையே!" என்று எண்ணிய மது முற்றிலும் குழம்பி போனாள்.
தலையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருக்கவும் மது அவள் மன அமைதியை நாடும் பூஜையறையை நோக்கி சென்றாள்.
கடவுள் படங்களுக்கு நடுவில் நடு நாயகமாக வீற்றிருந்த அருணாசலத்தின் படத்தின் அருகே சென்று மது நின்றாள்.
கண்கள் கலங்க அவரை பார்த்து கொண்டு நின்ற மது
"அப்பா எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்குபா. ஸ்ரீ என்னனென்னமோ சொல்லுறான். நான் அந்த அருளைப் பற்றி யோசித்து பார்த்துருக்கேன். ஆனா கார்த்தி இருந்த இடத்தில் அருளை ஒரு நாளும் நினைக்கலையே! அப்பா நீங்க எனக்கு எப்போதும் துணையாக இருக்கனும்பா" என்று கண் மூடி வேண்டிக் கொண்ட மது அவர் படத்தை தொட்டு வணங்கும் போது அவர் படத்தின் கீழ் ஒரு பேப்பர் இருக்கவும் அதை கையில் எடுத்தாள் மது.
காரில் சென்று கொண்டிருந்த ஸ்ரீதர் பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தான்.
"அருள் பண்ணது தப்பு தான் இருந்தும் நான் ஏன் அவனை நியாயப்படுத்தனும்? மதுவுக்கு ஒரு கஷ்டம்னு சொன்னதும் அவன் அப்படி துடிச்சுப்போயிட்டானே! அவன் மேல என்னால கோபம் கொள்ள முடியலையே ஏன்??" என்றவாறு யோசித்துக் கொண்ட ஸ்ரீதர் எதிரில் நடந்து வந்தவர்களைப் பார்த்து சட்டென்று காரை நிறுத்தினான்.