சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி
காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட மது குளித்து தயாராகி விட்டு ஹாலுக்கு சென்றாள்.
கரு நீல நிற சேலை அணிந்து, நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு இட்டு நடந்து வந்த மதுவை பார்த்து மனதினுள் சிறு சந்தோஷம் கொண்டார் அருணா.
வெகு நாட்களுக்குப் பிறகு சேலை அணிந்து வரும் தன் மகளை பார்த்து சந்தோஷம் அடைந்தவர் பூஜையறையில் நின்று கொண்டிருந்த மதுவின் அருகில் சென்றார்.
சாமி படத்தின் முன்பு இருந்த மல்லிகை பூவில் சிறிது எடுத்து மதுவின் தலையில் அருணா வைத்து விடவும் கண் திறந்து பார்த்த மது அருணாவின் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.
"அம்மா இன்னைக்கு ரொம்ப பெரிய இடத்துல நான் என் திறமையை காட்டி என் வேலையை பண்ணிருக்கேன். அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுனு நீயும் சாமிக்கிட்ட வேண்டிக்கோமா" என்று மது கூறவும்
"கண்டிப்பாக பண்ணுறேன் மது. நீ பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்கோ" என்று அருணா கூற சரியென்று தலையாட்டி கொண்டாள் மது.
"ம்மா....நான் வர லேட் நைட் ஆகும். ஸ்ரீயோட தான் வருவேன். நீ ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்காம தூங்கிடுமா" என்று கூறி கொண்டே மது வீட்டில் இருந்து வெளியேறவும் ஸ்ரீதரின் கார் வரவும் சரியாக இருந்தது.
ஸ்ரீதரோடு லோகநாதனின் வீட்டை நோக்கி சென்ற மது மீதமிருந்த சிறு வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தாள்.
ஒவ்வொரு பகுதியாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டு வந்த மது எதிரில் வந்த நபரின் மேல் முட்டி கொள்ள
"அம்மா....." என்று தலையை தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.
சராசரியாக அவள் உயரத்தை ஒத்த முழுவதும் பார்லர் கை வண்ணத்தில் ஜொலித்து கொண்டிருந்த ஷோபாவை மது குழப்பமாக பார்க்கவும்
அவளைப் பார்த்து புன்னகத்த ஷோபா
"ஸாரி ஸாரி நான் சரியா பார்க்காம வந்து இடிச்சுக்கிட்டேன். ரொம்ப வலிக்குதா??" என்று கேட்கவும்
"இல்லை மேடம் வலிக்கல" என்று மது கூற
"மேடமா???" என்று வியப்பாக அவளை பார்த்தாள் ஷோபா.
"என்னைப் பார்த்தா அவ்வளவு வயசானவங்க மாதிரியா இருக்கு? மேடம்னு சொல்ற. என் பேரு ஷோபனா ஸார்ட்டா ஷோபானு சொல்லுவாங்க. நீயும் அப்படியே சொல்லு" என்று ஷோபா கூறவும்
"இல்லை மேடம் நான் இந்த அரேன்ஜ்மெண்ட் ஆர்கனைஸர் தான். ஷோ அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கனும்லே" என்று மது கூற
அவளை பாராட்டுவது போல பார்த்தாள் ஷோபா.
"எனி வே எனக்கு சின்ன வயசுல இருந்து லோ அன்ட் மிடில் கிளாஸ் பீபுளை பிடிக்காது. பட் உன்னை ஏனோ எனக்கு பிடிச்சிருக்கு" என்று மதுவின் கன்னத்தை தட்டிய ஷோபா
"லெட்ஸ் பீ பிரண்ட்ஸ்..." என்று மதுவின் புறம் கையை நீட்ட சிறிது யோசித்து விட்டு ஷோபாவின் கை பற்றி குலுக்கினாள் மது.
"உன் பேர் நீ சொல்லவே இல்லையே?" என்று ஷோபா கேட்கவும்
தன் தலையில் தட்டி கொண்டவள்
"ஸாரி மறந்துட்டேன். ஐ யம் மதுமிதா" என்று கூற
"ஸ்வீட் நேம் உன்னை மாதிரியே!!!" எனவும் சிறிது புன்னகத்து கொண்டாள்.
"ஐயோ!!! அம்மா வராங்க. நான் அப்புறம் வரேன் மது..." என்று விட்டு ஷோபா சென்று விட திரும்பி பார்த்த மது சுலோச்சனா வருவதைப் பார்த்து திகைத்துப் போனாள்.
"இவங்களோட பொண்ணா ஷோபனா?? இவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணியே பழகணும். இல்லேனா அந்த அம்மா வந்து கத்துவாங்க" என்று எண்ணிக் கொண்டவள் தன் வேலைகளைக் கவனிக்க சென்றாள்.
அதிகாலையில் எழுந்து தயாராகி நின்ற அருள் மேலே தன் அறையில் நின்று கொண்டு மதுவை ரசிக்கும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
முதல் தடவையாக மதுவை சேலையில் அருள் பார்த்ததும் அவள் அழகை மெய் மறந்து ரசித்தான்.
இரண்டு வருடங்களில் அவள் சற்று முதிர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த குழந்தை தனமான முகம் மாறாமலே இருந்தது.
ஸ்ரீதர் அருளை கண்டு கொண்ட பின்பும் மதுவிடம் அவனை பற்றி எதுவும் கூறாமலே இருந்தான்.
தன் அறையில் இருந்து வெளியேறி வந்த வத்சலா மற்றும் லோகநாதன் வீட்டு அலங்காரங்களைப் பார்த்து மெய் மறந்து நின்றனர்.
வாயிலில் இருந்து வீட்டுக்கு நுழையும் வழி முழுவதும் இருபுறமும் பூக்களினால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ஹாலின் நடுப்பகுதியில் விஜி மற்றும் வினித் அமர்ந்திருப்பதற்காக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அலங்காரங்களை மெச்சும் பார்வையோடு சுற்றி பார்த்த வத்சலா சற்று தள்ளி மது ஸ்ரீதருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளருகில் சென்றாள்.
"மது....." என்ற வத்சலாவின் அழைப்பில் திரும்பிய மது அவரைப் பார்த்து புன்னகக்க மதுவின் கை பற்றி குலுக்கிய வத்சலா
"அலங்காரம் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கு மது. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. எவ்வளவு சிரமப்பட்டு நீங்க செய்திருப்பீங்கனு புரியுது. ஆனாலும் இவ்வளவு திறமையை நான் உன் கிட்ட எதிர்பார்க்கல. ரொம்ப நல்லா பண்ணிட்ட மது" என்று கூறவும்
சிறிது வெட்கத்தோடு புன்னகத்தவள்
"எங்க வேலையை தான் நாங்க பண்ணோம் ஆ...மேடம். உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி.
நான் மற்ற வேலையெல்லாம் போய் கவனிக்குறேன்" என்று கூற
சரியென்று விட்டு சென்றார் வத்சலா.
உறவினர்கள், நண்பர்கள் என லோகநாதனின் வீட்டில் அனைவரும் ஒன்று கூட மதுவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
"இவ்வளவு பேர் வர்றாங்க!! என்னால் சரியாக சமாளிக்க முடியுமா? கடவுளே!! எந்த குறையும், பிரச்சினையும் இல்லாமல் இந்த பங்க்ஸன் முடிஞ்சுடணும். நீ தான் எனக்கு கூட எப்போதும் துணையாக இருக்கணும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள் எல்லா வேலைகளையும் மேற்பார்வை செய்து கொண்டு நின்றாள்.
நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்காக வினித் மற்றும் விஜி மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஷோபா விஜியை அழைத்து வர அருள் வினித்தை அழைத்து வந்தான்.
"இரண்டு ஜோடியும் ரொம்ப அழகாக இருக்காங்க இல்லையா?" என்று மதுவை கடந்து சென்ற இருவர் பேசி கொண்டு செல்ல திரும்பிப் பார்த்தாள் மது.
சற்று தள்ளி நின்றதால் மதுவிற்கு அவர்களின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும்
"யார் அந்த ஜோடினு பார்த்துடுவோம்!" என்று ஆவல் ஏற்பட அவர்கள் அருகில் நடந்து சென்றாள்.
மதுவின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தூரத்தில் நின்று பார்த்து கொண்டு நின்ற ஸ்ரீதர்
மது அருள் இருந்த பகுதிக்கு செல்வதைப் பார்த்து விட்டு விரைந்து அவளருகில் சென்றான்.
அதற்கிடையில் மது அவர்களை நெருங்கி விட ஸ்ரீதரால் எதுவும் செய்ய முடியாமல் மதுவையும், அருளையும் பார்த்து கொண்டு நின்றான்.
"மது இவனைப் பார்த்தா என்னென்ன களேபரம் நடக்குமோ தெரியலையே!! இவ எதுக்கு இங்க வந்தா? அருள் உன்னை இனி அந்த கடவுளால கூட காப்பாற்ற முடியாது" என்று ஸ்ரீதர் புலம்பிக் கொண்டு நிற்க
அருளோ மறுபுறம் திரும்பி நின்று வினித்துடன் பேசிக் கொண்டு நின்றதால் மது அவனைப் பார்க்கவில்லை.
அப்போது மதுவின் அருகில் வந்த
அஜய்
"மேம் இந்த கேட்டரிங் சர்வீஸ்ல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணலாமா?" என்று கேட்கவும்
அவனுடன் திரும்பி மது பேசிக் கொண்டிருக்க அருளும் வினித்துடன் பேசி முடித்து விட்டு திரும்பி நின்றான்.
ஸ்ரீதருக்கோ இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக் கொண்டு இருந்தது.
"இவன் பார்க்கும் போது அவ திரும்புறா...அவள் பார்க்கும் போது இவன் திரும்புறான்...இதுங்க ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் எப்போ பார்த்தாலும் பிரச்சினை ஆரம்பிச்சுடுமே!!!" என்று உச்சக்கட்ட புலம்பலில் தவித்துக் கொண்டு நின்றான் ஸ்ரீதர்.
அஜயோடு பேசிக் கொண்டே மது வேறு புறம் செல்லப் போக ஸ்ரீதர் தன் நெஞ்சில் கை வைத்து
"யப்பா சாமி!!! ஒரு மூன்றாம் உலகப்போர்ல இருந்து இந்த வீட்டை காப்பாத்திட்ட. உனக்கு கோடி நன்றி!!!" என்று கூறி கொண்டவன் அருளின் புறம் பார்க்க அருள் அவனது தந்தையுடன் ஏதோ பேசிக் கொண்டு நின்றான்.
"ப்ராப்ளம் இப்போதைக்கு சால்வ்ட்...." என்று ஸ்ரீதர் கூறி கொள்ளவும் அருளின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.
காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட மது குளித்து தயாராகி விட்டு ஹாலுக்கு சென்றாள்.
கரு நீல நிற சேலை அணிந்து, நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு இட்டு நடந்து வந்த மதுவை பார்த்து மனதினுள் சிறு சந்தோஷம் கொண்டார் அருணா.
வெகு நாட்களுக்குப் பிறகு சேலை அணிந்து வரும் தன் மகளை பார்த்து சந்தோஷம் அடைந்தவர் பூஜையறையில் நின்று கொண்டிருந்த மதுவின் அருகில் சென்றார்.
சாமி படத்தின் முன்பு இருந்த மல்லிகை பூவில் சிறிது எடுத்து மதுவின் தலையில் அருணா வைத்து விடவும் கண் திறந்து பார்த்த மது அருணாவின் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.
"அம்மா இன்னைக்கு ரொம்ப பெரிய இடத்துல நான் என் திறமையை காட்டி என் வேலையை பண்ணிருக்கேன். அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுனு நீயும் சாமிக்கிட்ட வேண்டிக்கோமா" என்று மது கூறவும்
"கண்டிப்பாக பண்ணுறேன் மது. நீ பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்கோ" என்று அருணா கூற சரியென்று தலையாட்டி கொண்டாள் மது.
"ம்மா....நான் வர லேட் நைட் ஆகும். ஸ்ரீயோட தான் வருவேன். நீ ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்காம தூங்கிடுமா" என்று கூறி கொண்டே மது வீட்டில் இருந்து வெளியேறவும் ஸ்ரீதரின் கார் வரவும் சரியாக இருந்தது.
ஸ்ரீதரோடு லோகநாதனின் வீட்டை நோக்கி சென்ற மது மீதமிருந்த சிறு வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தாள்.
ஒவ்வொரு பகுதியாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டு வந்த மது எதிரில் வந்த நபரின் மேல் முட்டி கொள்ள
"அம்மா....." என்று தலையை தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.
சராசரியாக அவள் உயரத்தை ஒத்த முழுவதும் பார்லர் கை வண்ணத்தில் ஜொலித்து கொண்டிருந்த ஷோபாவை மது குழப்பமாக பார்க்கவும்
அவளைப் பார்த்து புன்னகத்த ஷோபா
"ஸாரி ஸாரி நான் சரியா பார்க்காம வந்து இடிச்சுக்கிட்டேன். ரொம்ப வலிக்குதா??" என்று கேட்கவும்
"இல்லை மேடம் வலிக்கல" என்று மது கூற
"மேடமா???" என்று வியப்பாக அவளை பார்த்தாள் ஷோபா.
"என்னைப் பார்த்தா அவ்வளவு வயசானவங்க மாதிரியா இருக்கு? மேடம்னு சொல்ற. என் பேரு ஷோபனா ஸார்ட்டா ஷோபானு சொல்லுவாங்க. நீயும் அப்படியே சொல்லு" என்று ஷோபா கூறவும்
"இல்லை மேடம் நான் இந்த அரேன்ஜ்மெண்ட் ஆர்கனைஸர் தான். ஷோ அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கனும்லே" என்று மது கூற
அவளை பாராட்டுவது போல பார்த்தாள் ஷோபா.
"எனி வே எனக்கு சின்ன வயசுல இருந்து லோ அன்ட் மிடில் கிளாஸ் பீபுளை பிடிக்காது. பட் உன்னை ஏனோ எனக்கு பிடிச்சிருக்கு" என்று மதுவின் கன்னத்தை தட்டிய ஷோபா
"லெட்ஸ் பீ பிரண்ட்ஸ்..." என்று மதுவின் புறம் கையை நீட்ட சிறிது யோசித்து விட்டு ஷோபாவின் கை பற்றி குலுக்கினாள் மது.
"உன் பேர் நீ சொல்லவே இல்லையே?" என்று ஷோபா கேட்கவும்
தன் தலையில் தட்டி கொண்டவள்
"ஸாரி மறந்துட்டேன். ஐ யம் மதுமிதா" என்று கூற
"ஸ்வீட் நேம் உன்னை மாதிரியே!!!" எனவும் சிறிது புன்னகத்து கொண்டாள்.
"ஐயோ!!! அம்மா வராங்க. நான் அப்புறம் வரேன் மது..." என்று விட்டு ஷோபா சென்று விட திரும்பி பார்த்த மது சுலோச்சனா வருவதைப் பார்த்து திகைத்துப் போனாள்.
"இவங்களோட பொண்ணா ஷோபனா?? இவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணியே பழகணும். இல்லேனா அந்த அம்மா வந்து கத்துவாங்க" என்று எண்ணிக் கொண்டவள் தன் வேலைகளைக் கவனிக்க சென்றாள்.
அதிகாலையில் எழுந்து தயாராகி நின்ற அருள் மேலே தன் அறையில் நின்று கொண்டு மதுவை ரசிக்கும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
முதல் தடவையாக மதுவை சேலையில் அருள் பார்த்ததும் அவள் அழகை மெய் மறந்து ரசித்தான்.
இரண்டு வருடங்களில் அவள் சற்று முதிர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த குழந்தை தனமான முகம் மாறாமலே இருந்தது.
ஸ்ரீதர் அருளை கண்டு கொண்ட பின்பும் மதுவிடம் அவனை பற்றி எதுவும் கூறாமலே இருந்தான்.
தன் அறையில் இருந்து வெளியேறி வந்த வத்சலா மற்றும் லோகநாதன் வீட்டு அலங்காரங்களைப் பார்த்து மெய் மறந்து நின்றனர்.
வாயிலில் இருந்து வீட்டுக்கு நுழையும் வழி முழுவதும் இருபுறமும் பூக்களினால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ஹாலின் நடுப்பகுதியில் விஜி மற்றும் வினித் அமர்ந்திருப்பதற்காக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அலங்காரங்களை மெச்சும் பார்வையோடு சுற்றி பார்த்த வத்சலா சற்று தள்ளி மது ஸ்ரீதருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளருகில் சென்றாள்.
"மது....." என்ற வத்சலாவின் அழைப்பில் திரும்பிய மது அவரைப் பார்த்து புன்னகக்க மதுவின் கை பற்றி குலுக்கிய வத்சலா
"அலங்காரம் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கு மது. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. எவ்வளவு சிரமப்பட்டு நீங்க செய்திருப்பீங்கனு புரியுது. ஆனாலும் இவ்வளவு திறமையை நான் உன் கிட்ட எதிர்பார்க்கல. ரொம்ப நல்லா பண்ணிட்ட மது" என்று கூறவும்
சிறிது வெட்கத்தோடு புன்னகத்தவள்
"எங்க வேலையை தான் நாங்க பண்ணோம் ஆ...மேடம். உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி.
நான் மற்ற வேலையெல்லாம் போய் கவனிக்குறேன்" என்று கூற
சரியென்று விட்டு சென்றார் வத்சலா.
உறவினர்கள், நண்பர்கள் என லோகநாதனின் வீட்டில் அனைவரும் ஒன்று கூட மதுவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
"இவ்வளவு பேர் வர்றாங்க!! என்னால் சரியாக சமாளிக்க முடியுமா? கடவுளே!! எந்த குறையும், பிரச்சினையும் இல்லாமல் இந்த பங்க்ஸன் முடிஞ்சுடணும். நீ தான் எனக்கு கூட எப்போதும் துணையாக இருக்கணும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள் எல்லா வேலைகளையும் மேற்பார்வை செய்து கொண்டு நின்றாள்.
நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்காக வினித் மற்றும் விஜி மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஷோபா விஜியை அழைத்து வர அருள் வினித்தை அழைத்து வந்தான்.
"இரண்டு ஜோடியும் ரொம்ப அழகாக இருக்காங்க இல்லையா?" என்று மதுவை கடந்து சென்ற இருவர் பேசி கொண்டு செல்ல திரும்பிப் பார்த்தாள் மது.
சற்று தள்ளி நின்றதால் மதுவிற்கு அவர்களின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும்
"யார் அந்த ஜோடினு பார்த்துடுவோம்!" என்று ஆவல் ஏற்பட அவர்கள் அருகில் நடந்து சென்றாள்.
மதுவின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தூரத்தில் நின்று பார்த்து கொண்டு நின்ற ஸ்ரீதர்
மது அருள் இருந்த பகுதிக்கு செல்வதைப் பார்த்து விட்டு விரைந்து அவளருகில் சென்றான்.
அதற்கிடையில் மது அவர்களை நெருங்கி விட ஸ்ரீதரால் எதுவும் செய்ய முடியாமல் மதுவையும், அருளையும் பார்த்து கொண்டு நின்றான்.
"மது இவனைப் பார்த்தா என்னென்ன களேபரம் நடக்குமோ தெரியலையே!! இவ எதுக்கு இங்க வந்தா? அருள் உன்னை இனி அந்த கடவுளால கூட காப்பாற்ற முடியாது" என்று ஸ்ரீதர் புலம்பிக் கொண்டு நிற்க
அருளோ மறுபுறம் திரும்பி நின்று வினித்துடன் பேசிக் கொண்டு நின்றதால் மது அவனைப் பார்க்கவில்லை.
அப்போது மதுவின் அருகில் வந்த
அஜய்
"மேம் இந்த கேட்டரிங் சர்வீஸ்ல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணலாமா?" என்று கேட்கவும்
அவனுடன் திரும்பி மது பேசிக் கொண்டிருக்க அருளும் வினித்துடன் பேசி முடித்து விட்டு திரும்பி நின்றான்.
ஸ்ரீதருக்கோ இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக் கொண்டு இருந்தது.
"இவன் பார்க்கும் போது அவ திரும்புறா...அவள் பார்க்கும் போது இவன் திரும்புறான்...இதுங்க ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் எப்போ பார்த்தாலும் பிரச்சினை ஆரம்பிச்சுடுமே!!!" என்று உச்சக்கட்ட புலம்பலில் தவித்துக் கொண்டு நின்றான் ஸ்ரீதர்.
அஜயோடு பேசிக் கொண்டே மது வேறு புறம் செல்லப் போக ஸ்ரீதர் தன் நெஞ்சில் கை வைத்து
"யப்பா சாமி!!! ஒரு மூன்றாம் உலகப்போர்ல இருந்து இந்த வீட்டை காப்பாத்திட்ட. உனக்கு கோடி நன்றி!!!" என்று கூறி கொண்டவன் அருளின் புறம் பார்க்க அருள் அவனது தந்தையுடன் ஏதோ பேசிக் கொண்டு நின்றான்.
"ப்ராப்ளம் இப்போதைக்கு சால்வ்ட்...." என்று ஸ்ரீதர் கூறி கொள்ளவும் அருளின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.