மக்களே, அழகியின் காதல் தவம் 2 வது அத்தியாயம் பதிவு செஞ்சுட்டாங்க உமா தீபக். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.
தவம் – 2
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
காவிரிபூம்பட்டினத்தில் தன் தோழிகளுடன், உலா வந்த மதியழகி அங்கு நடப்பவற்றை எல்லாம் மனதில் குறித்துக் கொண்டாள். சில இடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூட, தனக்குள் திட்டமிட்டுக் கொண்டாள்.
“மதி! நாம் இங்கு வந்ததன் நோக்கம் என்ன? நாம் எல்லோரும் பல நாட்கள் கழித்து ஒன்றாக இருக்கிறோம், சேர்ந்து அரட்டை அடித்து, விளையாடி நம் மகிழ்ச்சியை கொண்டாட தானே!”.
“இப்பொழுது கூட, நீ எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ மதி?” என்று வினவினாள் அவளின் தோழி பாமினி.
“பாமினி! அவள் சற்று நேரம் இங்கு உள்ள நடப்புகளை எல்லாம் கவனித்துவிட்டு, அதன் பிறகு தானே நம்மோடு சேர்ந்து அரட்டை அடிக்கவும், விளையாடவும் வருகிறேன் என்றாள்”.
“அது உனக்கு மறந்து விட்டதா, பாமினி?” என்று அவளை பார்த்து கேட்டாள் கங்கா.
அவள் அப்படி கூறிய பிறகு தான், மதியுடைய பதவி அவளுக்கு உரைத்தது.
“மன்னிக்க வேண்டும் இளவரசி! தாங்கள் எங்களுடைய தோழி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கேட்டுவிட்டேன். நீங்கள் ஒரு நாட்டின் இளவரசி, என்பதை சற்று மறந்து விட்டேன்”.
“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி! இனி ஒரு முறை இப்படி தவறு நேராது” என்று தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் பாமினி.
மதியழகிக்கு அப்பொழுது தான், தோழிகளோடு எதற்காக வந்து இருக்கிறோம் என்று புரிந்தது. ஒரு இளவரசியாக, நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவள் அங்கு நடப்பவற்றை ஆராய்ந்தாளே தவிர தோழிகளை கவனிக்க மறந்தாள்.
அதுவும் தன் தோழி, தன்னிடத்தில் மன்னிப்பு கேட்டது அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னையே கடிந்து கொண்டு, தோழிகளை மகிழ்விக்க அவள் தன் குறும்புத்தனத்தை வெளியே கொண்டு வந்தாள்.
“பாமினி, உன்னை நான் மன்னிக்க வேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே” என்று அவளின் முகத்தை இளவரசிக்கே உறிய கம்பீரத்துடன் கேட்டாள்.
“கண்டிப்பாக செய்கிறேன் இளவரசி, தாங்கள் உத்தரவிடுங்கள்” என்று பணிவுடன் கேட்டாள் பாமினி.
“ அதோ தெரிகிறேதே நதிக்கரை, அங்கு நான் இப்பொழுது செல்ல போகிறேன் ஒரே ஓட்டமாக, நீ என்னை பிடிக்க ஓடி வா” என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே ஓடினாள் மதியழகி.
முதலில் அதிர்ச்சி அடைந்த பாமினி, அதன் பின் தோழி தன்னை கேலி செய்து இருக்கிறாள் என்று புரிய அவளை துரத்திக் கொண்டு ஓடினாள்.
“ஏய் மதி! ஓடாதே! சற்று நில். ஓட்டத்தில் உன்னை வெல்ல, என்னால் முடியாது. கங்கா! நீயாவது அவளுக்கு எடுத்து கூறு” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் பாமினி.
“நதிக்கரைக்கு நடந்து சென்றாலே, நமக்கு இரண்டு நிமிடம் கூட ஆகாது பாமினி. ஓடுவதற்கு, ஏன் நீ இவ்வளவு பயப்படுகிறாய்?” என்று வினவினாள் மற்றொரு தோழி காமாட்சி.
“ஓடுவதற்கு ஒன்றும் எனக்கு பயமில்லை, காமாட்சி. மதியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், தான் பயமே வருகிறது எனக்கு” என்று கூறியவளை கண்டு, அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த மற்ற தோழிகள் சிரித்தனர்.
பாமினி பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது, மதியழகி ஓட தொடங்கினால் அவள் எங்கே தன் ஓட்டத்தை நிறுத்துவாள் என்று யாராலும் கணிக்க முடியாது. அதற்கு தான் அவள் ஓட தொடங்கவும், பாமினி பயத்தில் அவள் பின்னே ஓடிக் கொண்டே, தன் தோழிகளிடம் உதவி கோரினாள்.
“பாமினி நீ பயப்படுவது அனாவசியம், அங்கே பார் மதி நதிக்கரை அருகே தான் நிற்கிறாள்” என்று அவள் அருகில் ஓடிக் கொண்டு இருந்த நீலா கூறினாள்.
மதி அங்கே நதிக்கரை அருகில் நின்று, அந்த நதியின் அழகை ரசித்துக் கொண்டும், தன் தோழிகள் ஓடி வருவதை பார்த்து சிரித்துக் கொண்டும் இருந்தாள்.
அவள் அருகில் வந்த அவளின் தோழிகள், மூச்சு வாங்கிக் கொண்டு நின்றனர்.
“மதி! நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்?” என்று கேட்டாள் நீலா.
“அது அவள் குதிரையேற்றம், வாள் பயிற்சி என்று போருக்கு செல்ல தேவையான அத்தனை பயிற்சியையும் கற்றுக் கொண்ட பொழுது, இந்த ஓட்டத்தையும் கற்றுக் கொண்டாள்” என்று கூறினாள் கங்கா.
“அதில் இருந்து, தப்பிச் செல்ல எடுத்த ஓட்டமா?” என்று வினவினாள் காமாட்சி.
“இல்லை! அதை எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பு, எனக்கு ஓட்டப்பயிற்சி தான் முதலில் கற்று கொடுத்தார்கள்” என்று கூறினாள் மதியழகி.
“ஒ! இப்பொழுது புரிகிறது! உன் அதிவேக ஓட்டத்திற்க்கான ரகசியம்” என்று கூறி சிரித்தனர்.
அதன் பின் தாங்கள் இதற்க்கு முன்பு, அவர்கள் ஆடிய ஆட்டமும், பாட்டமும் பற்றி பேசி சிரித்துக் கொண்டு பொழுதை கழித்தனர். நதியில் சற்று நேரம், கால்களை மட்டும் நனைத்துவிட்டு பின்பு பேசிக் கொண்டே ரதம் இருந்த பகுதிக்கு சென்றனர்.
முதல் ரதத்தில் கங்காவும், மதியும் ஏறி அமர்ந்தனர். அவர்கள் பின்னே உள்ள ரதத்தில், அவளின் மற்ற தோழிகள் ஏறினர். ரதத்தை, காவிரிபூம்பட்டனத்தில் உள்ள அரண்மனை நோக்கி செலுத்த கூறினாள் தேரோட்டியிடம்.
“நாம் இப்பொழுது, நம் மிடார நாட்டிற்கு அல்லவா செல்ல வேண்டும் மதி! ஏன், இப்பொழுது அங்கே செல்ல கூறுகிறாய்?” என்று வினவினாள் கங்கா.
“ஒரு இளவரசியாக, நான் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன் கங்கா. அரண்மனைக்கு சென்று, அங்கே என்ன நடக்கிறது என்று காண வேண்டும் முதலில்”.
“அதன் பிறகு தான் மிடார நாட்டிற்கு சென்று, என் தந்தையிடம் இதை பற்றி கூற வேண்டும்” என்று கூறினாள் மதி.
அவள் கூறியதை கேட்ட கங்காவும், ஒப்புக் கொண்டாள். அவளும் இங்கு வந்ததில் இருந்து, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இங்கு மக்கள் படும் பாட்டையும், அவர்களின் பயத்தையும்.
ஆகையால், தோழியின் யோசனைக்கு சரி என்று கூறியதோடு மட்டுமில்லாமல், மற்ற தோழிகளுக்கும் விஷயத்தை கூறினாள்.
அரண்மனை முன்பு வந்து நின்ற ரதத்தில் இருந்து, இறங்க தொடங்கினர் எல்லோரும். ஏனோ அங்கு உள்ள சூழ்நிலை, சரி இல்லாதது போல் தோன்றியது மதிக்கு.
ஆகையால் அவள் தன் தோழி கங்காவிடம், கண்களால் செய்தி அனுப்பினாள். அவளும் அதை புரிந்து கொண்டு, அதை செயலாற்ற மற்ற தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.
தவம் – 2
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
காவிரிபூம்பட்டினத்தில் தன் தோழிகளுடன், உலா வந்த மதியழகி அங்கு நடப்பவற்றை எல்லாம் மனதில் குறித்துக் கொண்டாள். சில இடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூட, தனக்குள் திட்டமிட்டுக் கொண்டாள்.
“மதி! நாம் இங்கு வந்ததன் நோக்கம் என்ன? நாம் எல்லோரும் பல நாட்கள் கழித்து ஒன்றாக இருக்கிறோம், சேர்ந்து அரட்டை அடித்து, விளையாடி நம் மகிழ்ச்சியை கொண்டாட தானே!”.
“இப்பொழுது கூட, நீ எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ மதி?” என்று வினவினாள் அவளின் தோழி பாமினி.
“பாமினி! அவள் சற்று நேரம் இங்கு உள்ள நடப்புகளை எல்லாம் கவனித்துவிட்டு, அதன் பிறகு தானே நம்மோடு சேர்ந்து அரட்டை அடிக்கவும், விளையாடவும் வருகிறேன் என்றாள்”.
“அது உனக்கு மறந்து விட்டதா, பாமினி?” என்று அவளை பார்த்து கேட்டாள் கங்கா.
அவள் அப்படி கூறிய பிறகு தான், மதியுடைய பதவி அவளுக்கு உரைத்தது.
“மன்னிக்க வேண்டும் இளவரசி! தாங்கள் எங்களுடைய தோழி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கேட்டுவிட்டேன். நீங்கள் ஒரு நாட்டின் இளவரசி, என்பதை சற்று மறந்து விட்டேன்”.
“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி! இனி ஒரு முறை இப்படி தவறு நேராது” என்று தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் பாமினி.
மதியழகிக்கு அப்பொழுது தான், தோழிகளோடு எதற்காக வந்து இருக்கிறோம் என்று புரிந்தது. ஒரு இளவரசியாக, நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவள் அங்கு நடப்பவற்றை ஆராய்ந்தாளே தவிர தோழிகளை கவனிக்க மறந்தாள்.
அதுவும் தன் தோழி, தன்னிடத்தில் மன்னிப்பு கேட்டது அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னையே கடிந்து கொண்டு, தோழிகளை மகிழ்விக்க அவள் தன் குறும்புத்தனத்தை வெளியே கொண்டு வந்தாள்.
“பாமினி, உன்னை நான் மன்னிக்க வேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே” என்று அவளின் முகத்தை இளவரசிக்கே உறிய கம்பீரத்துடன் கேட்டாள்.
“கண்டிப்பாக செய்கிறேன் இளவரசி, தாங்கள் உத்தரவிடுங்கள்” என்று பணிவுடன் கேட்டாள் பாமினி.
“ அதோ தெரிகிறேதே நதிக்கரை, அங்கு நான் இப்பொழுது செல்ல போகிறேன் ஒரே ஓட்டமாக, நீ என்னை பிடிக்க ஓடி வா” என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே ஓடினாள் மதியழகி.
முதலில் அதிர்ச்சி அடைந்த பாமினி, அதன் பின் தோழி தன்னை கேலி செய்து இருக்கிறாள் என்று புரிய அவளை துரத்திக் கொண்டு ஓடினாள்.
“ஏய் மதி! ஓடாதே! சற்று நில். ஓட்டத்தில் உன்னை வெல்ல, என்னால் முடியாது. கங்கா! நீயாவது அவளுக்கு எடுத்து கூறு” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் பாமினி.
“நதிக்கரைக்கு நடந்து சென்றாலே, நமக்கு இரண்டு நிமிடம் கூட ஆகாது பாமினி. ஓடுவதற்கு, ஏன் நீ இவ்வளவு பயப்படுகிறாய்?” என்று வினவினாள் மற்றொரு தோழி காமாட்சி.
“ஓடுவதற்கு ஒன்றும் எனக்கு பயமில்லை, காமாட்சி. மதியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், தான் பயமே வருகிறது எனக்கு” என்று கூறியவளை கண்டு, அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த மற்ற தோழிகள் சிரித்தனர்.
பாமினி பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது, மதியழகி ஓட தொடங்கினால் அவள் எங்கே தன் ஓட்டத்தை நிறுத்துவாள் என்று யாராலும் கணிக்க முடியாது. அதற்கு தான் அவள் ஓட தொடங்கவும், பாமினி பயத்தில் அவள் பின்னே ஓடிக் கொண்டே, தன் தோழிகளிடம் உதவி கோரினாள்.
“பாமினி நீ பயப்படுவது அனாவசியம், அங்கே பார் மதி நதிக்கரை அருகே தான் நிற்கிறாள்” என்று அவள் அருகில் ஓடிக் கொண்டு இருந்த நீலா கூறினாள்.
மதி அங்கே நதிக்கரை அருகில் நின்று, அந்த நதியின் அழகை ரசித்துக் கொண்டும், தன் தோழிகள் ஓடி வருவதை பார்த்து சிரித்துக் கொண்டும் இருந்தாள்.
அவள் அருகில் வந்த அவளின் தோழிகள், மூச்சு வாங்கிக் கொண்டு நின்றனர்.
“மதி! நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்?” என்று கேட்டாள் நீலா.
“அது அவள் குதிரையேற்றம், வாள் பயிற்சி என்று போருக்கு செல்ல தேவையான அத்தனை பயிற்சியையும் கற்றுக் கொண்ட பொழுது, இந்த ஓட்டத்தையும் கற்றுக் கொண்டாள்” என்று கூறினாள் கங்கா.
“அதில் இருந்து, தப்பிச் செல்ல எடுத்த ஓட்டமா?” என்று வினவினாள் காமாட்சி.
“இல்லை! அதை எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பு, எனக்கு ஓட்டப்பயிற்சி தான் முதலில் கற்று கொடுத்தார்கள்” என்று கூறினாள் மதியழகி.
“ஒ! இப்பொழுது புரிகிறது! உன் அதிவேக ஓட்டத்திற்க்கான ரகசியம்” என்று கூறி சிரித்தனர்.
அதன் பின் தாங்கள் இதற்க்கு முன்பு, அவர்கள் ஆடிய ஆட்டமும், பாட்டமும் பற்றி பேசி சிரித்துக் கொண்டு பொழுதை கழித்தனர். நதியில் சற்று நேரம், கால்களை மட்டும் நனைத்துவிட்டு பின்பு பேசிக் கொண்டே ரதம் இருந்த பகுதிக்கு சென்றனர்.
முதல் ரதத்தில் கங்காவும், மதியும் ஏறி அமர்ந்தனர். அவர்கள் பின்னே உள்ள ரதத்தில், அவளின் மற்ற தோழிகள் ஏறினர். ரதத்தை, காவிரிபூம்பட்டனத்தில் உள்ள அரண்மனை நோக்கி செலுத்த கூறினாள் தேரோட்டியிடம்.
“நாம் இப்பொழுது, நம் மிடார நாட்டிற்கு அல்லவா செல்ல வேண்டும் மதி! ஏன், இப்பொழுது அங்கே செல்ல கூறுகிறாய்?” என்று வினவினாள் கங்கா.
“ஒரு இளவரசியாக, நான் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன் கங்கா. அரண்மனைக்கு சென்று, அங்கே என்ன நடக்கிறது என்று காண வேண்டும் முதலில்”.
“அதன் பிறகு தான் மிடார நாட்டிற்கு சென்று, என் தந்தையிடம் இதை பற்றி கூற வேண்டும்” என்று கூறினாள் மதி.
அவள் கூறியதை கேட்ட கங்காவும், ஒப்புக் கொண்டாள். அவளும் இங்கு வந்ததில் இருந்து, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இங்கு மக்கள் படும் பாட்டையும், அவர்களின் பயத்தையும்.
ஆகையால், தோழியின் யோசனைக்கு சரி என்று கூறியதோடு மட்டுமில்லாமல், மற்ற தோழிகளுக்கும் விஷயத்தை கூறினாள்.
அரண்மனை முன்பு வந்து நின்ற ரதத்தில் இருந்து, இறங்க தொடங்கினர் எல்லோரும். ஏனோ அங்கு உள்ள சூழ்நிலை, சரி இல்லாதது போல் தோன்றியது மதிக்கு.
ஆகையால் அவள் தன் தோழி கங்காவிடம், கண்களால் செய்தி அனுப்பினாள். அவளும் அதை புரிந்து கொண்டு, அதை செயலாற்ற மற்ற தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.