• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani- lakshmi2407 (thriller)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
வாவ்...ஆதி கலக்கிடீங்க .....:D:D
வித்யாசமான ஷியாம் ......விஜிக்கு நியாயம் செய்துடீங்க .....மஹாவின் உணர்வுகள், அவளோட தயக்கம், ஷியாமின் புரிதல் சூப்பர்....கடத்தல் சீன் சும்மா சினிமா கண்முன்னால் பாத்தது போல இருந்தது...... ஷியாம் மஹா ******* நடக்கும் சூழ்நிலை அவர்களின் மனநிலை அற்புதமா கொண்டுவந்துடீங்க ...... இப்படி ஒரு நிலையை தான் நான் எதிர்பார்த்தேன் ....Hats off ஆதி ...(y)(y):love:
அம்மும்மா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்....
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஹாய் அனிதா
பிரியாணியோ,சாம்பார் சாதமோ எதுவாக இருந்தாலும் Fresh ஆக சாப்பிட்டால் தான் உடம்புக்கு நல்லது ராசாத்தி :love:
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: bt ivlo kudutha ah athan fridge la vaichu sapdalam nu nenaichennn....
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அங்க எல்லாம் வச்சா டேஸ்ட் போயிரும் அனி.சுட சுட சாப்டணும். அப்போ தான் டேஸ்ட் அப்படியே நிட்கும்ம்ம்ம்ம்???
doneee..inaiku vidiya vidiya sapda vendiyathu than sha
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
ரானிம்மா , இது என்னோட ஒரிஜினல் தானே... கடைசில... ஷியாம் நம்ம வழிக்கு வந்துட்டானே ....

பார்ட் 3 பத்தி...உங்க கமெண்ட்ஸ் க்கு காத்திருக்கிறேன்....
Ofcourse...,உங்களோடது ஒரிஜனல் தான்...
நான் சொல்ல வந்தது....இதுதான்...
சஷியோட,இறுதி பதிவும் இதே போல்தான் இருந்திருக்கும்
கூட,இன்னும் சில பல விளக்கங்களுடன் ......

நான்,..சொன்னது சரிதானே.....?
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
பார்ட் III

சடுதியில், நிலைமையை கையில் எடுத்துக்கொண்டவன் மனம் இதை நான் மஹா மேடம்-க்கு செய்யலை, ஷ்யாம்-க்காக.... அவனுக்காக மட்டுமே.... 8 வருடம் அவன் இட்ட அன்னம் உண்டு... வளர்ந்ததுமே... துரோகம் செய்ய துணிந்த விஜய்க்கும் ... மனசாட்சி உண்டென்று நிரூபிக்கும் நாள் இதுவென்று கண்டான்....களம் கொண்டான்....

அவன் கேட்ட அத்தனை விபரங்களும் ,, அரை மணியில் வந்தது.. பலனோ பூஜ்ஜியம்....மஹா... நோயாளிகளை பார்த்து விட்டு, பிரெஷ்-up ஆனது வரை தெரிந்த கொண்ட விஜிக்கு... பிறகு என்னானாள் என்பது தெரியவில்லை.... இதில் shadow வேறு? அலைபேசியை அமுக்கி, "இளா , எங்க கடைசியா மேடமை பாத்தீங்க?", என்க .... இளா .. வெலவெலத்தான்.... ஷ்யாமோடு விஜயா?, ரெட்டை சூரியன்கள்.. சூடு தாங்குமா? ,

"சார் இல்ல?" என்று மென்று முழுங்கியவனிடம், பேசி விஷயத்தை கறந்தான் ... கடைசியா மஹா போனது பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோவில்....என்று கேட்டவன் , "ஓகே பக்கத்துல CCTV கேமரா வச்ச வீடு ஏதாவது இருக்கா பாரு... இல்ல கோவில்ல காமெரா இருக்கா?, யார் வந்தாங்க.. கார் எதாவது வந்ததா? நார்த்-இந்தியன்ஸ்? அடுத்த 10 நிமிஷத்துல .. இதெல்லாம் எனக்கு வேணும்.... ", தடதடத்தான்....
துரித கதியில் .... வந்த விஷயங்களை கோர்த்தான்....., "சார்", என்றழைத்தவன்....ஷ்யாமின் நிலைகுத்திய விழிகளை கண்டு நொந்தான்...., "கொஞ்சம் இங்க பாருங்க.... இது கோவில் வெளி வாசல்ல இருக்கிற cctv footage ... இதுல வித்யாசமா இருக்கிற இந்த வண்டியை பாருங்க... இது டொயாட்டோ hiace, வண்டி உள்ளுக்குள்ள அகலம் அதிகம்... ஸ்ட்ரெக்ச்சர் நடுல போற அளவு... மேடமை sedate பண்ணி இருந்தா கூட ஈஸியா... ட்ராவல் பண்ண முடியும் யாரும் கண்டு பிடிக்க முடியாது.... அந்த ஊர்ல இப்படி ஒரு வண்டி, யார்கிட்டயும் இல்ல...",.அடுத்த பதிவை மாற்றி " இது , அதே வண்டி மதியம் ஒருமுறை வந்து வேவு பாத்த footage", எனக்கென்னவோ... இந்த வண்டிய பிடிச்சா .. மேடம் எங்கன்னு தெரிஞ்சிடும்-ன்னு தோணுது", என்றவனை நம்பிக்கையுடன் பார்த்தவன்.., "கமிஷனர் கிட்ட பேசு...எல்லா செக் போஸ்ட்க்கும் வண்டி நம்பரை அனுப்பு.. வெயிட்...நம்பர் ப்ளேட் மாத்தி இருக்க வாய்ப்பிருக்கு.. வண்டி மாடல், மேக், அதையும் whatzup பண்ண சொல்லு....ஆனா ஒரு விஷயம்.....அந்த வண்டி சென்னை வர்ற வரை, மஹா-வை நம்ம பாக்கிற வரை...அவங்கள நாம follow பண்றது தெரிய கூடாது.....",

"திண்டிவனத்துலேர்ந்து மதுராந்தகம் வர்றதுக்குள்ள , அவங்க போட்டோ , எத்தனை பேர் இருக்காங்க.. ன்னு நமக்கு தெரியணும்..." கர்ஜித்தவன்.... "அந்த வண்டி முன்னால...மைல்டு ஆக்ஸிடென்ட் பண்ணுங்க..,கெட் தி டீடெயில்ஸ்.", வியூகம் வகுத்தவன், யோசனையோடு, " ஆனா, விஜி ட்ராவல் டைம் குறைஞ்சது 4 மணி நேரமாவது ஆகுமே...மெஸேஜ் 2hrs ல பார்க் ஸ்டேஷன் வர சொல்லி இருக்கே....? இடிக்குதே?"
"சார் அது நம்மள டென்ஷன்-ல வச்சிருக்க ஒரு ட்ரிக்...என்றான்....", "இன்னும் கொஞ்ச நேரத்துல, டைம் மாத்தி கொடுப்பாங்க...", விஜியின் குரலும் தேய்ந்தே வந்தது... இவர்கள் வழிமுறைகள்... இவர்களுக்கே திரும்பும் போது ... தாங்கவியலாமல் போகும் என்று யார் கண்டார்கள்?.

வினை விதைத்தவனும், வினை முடித்தவனுமாய்.. வினை அறுக்கிறார்கள்.....
தெய்வம் நின்றே கொல்கின்றது.... தெளிவும் பட்ட பின்பே வருகின்றது....

"but ..அவங்களுக்கு டவுட் வர கூடாது... நாம கிளம்பி பார்க் போயிடலாம்...., பொட்டி எடுத்துக்கோ....விஜி", என்ற ஷியாம்... சட்டென திரும்பி.... விஜியை அணைத்தான்.....விஜி திகைக்க...."தேங்க்ஸ்டா ", என்று நெகிழ்ந்தான்...., "பாஸ், நான் பண்ணினத்துக்கு....", விஜிக்கு கண்ணீர் உடைப்பெடுக்க...., சட்டென மீண்ட ஷியாம்,, "ஓகே, பிளான் படி பக்காவா போகுதான்னு பாரு....", என்று சூழலை இலகுவாக்கினான்....

அலைபேசியில்,, அரை மணியை கழித்த விஜி , வண்டி ஒட்டிக் கொண்டு வரும் ஷ்யாமை பார்த்து..." பாஸ்.. பார்க் வந்துட்டோம்....", மெஸேஜ் - ம் வந்தது... 2 Hrs more ..என்று.... அலைபேசியவன்...., பாஸ்... மதுராந்தகம் கிராஸ் பண்ணிட்டாங்க... 3 பேர் இருக்காங்க... ரெண்டு male , ஒரு female ... பின்னால சீட்-ல மேடமை படுக்க வச்சு கூட்டி வர்றாங்க.... போட்டோஸ் இன்னும் கொஞ்சம் தெளிவா எடுக்க சொல்லி இருக்கேன்..." சொன்னவனிடம்..".பரவால்ல அத அப்படியே கமிஷனருக்கு அனுப்பு..., எனக்கென்னவோ... இங்க நம்மள கண் காணிக்கை ஆள் இருக்கும்னு தோணுது..... கண்டு பிடி...", முக்கால் மணி நேரத்தில்.. அனைத்தும் அவர்கள் வசப்பட்டது.... அலை பேசியை வைத்து... ஆஷி கைது செய்யப்பட...சென்னை போலீஸ் .. அமர்க்களமாய் கொண்டாடியது....

விஜி மஹாவை காரில் ஏற்றிய கையோடு.... "இங்க எல்லாம் நான் பாத்துக்கிறேன் பாஸ்.. நீங்க வீட்டுக்கு போங்க...", என்றவனிடம், "ஓகே. நாளைக்கு ஆபீஸ்-ல பாக்கலாம்", என்று ஷியாம் முடிக்க..., "பாஸ்", தழுதழுத்தான்... விஜி... "உஷ்..., கூடப் பொறந்தாதான் உறவுன்னு யாருடா சொன்னா?, நான் உன்னை அப்படித்தான் பாத்தேன்..., நீயே போனாலும் நான் விடறதா இல்லை, உத்தண்டி வீடு short circuit ஆகி எரிஞ்சதுன்னா நினைக்கிற.... என் பிளான்...தான் அது... எல்லாத்தயும் லீகலா.. பண்ணப் போறோம்... மொத்தமா.. கறுப்பை எல்லாம் கொடுத்து...வெளில வர்றோம்... நீ எங்கூட இருக்க.. இருப்ப....ஓகே...?", "எஸ் பாஸ் ", இவன் சிரிப்பு மீண்டிருந்தது.... மனம் லேசானது...

போயஸ் கார்டன் வீட்டில் .... மஹா இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில்.... நிர்மலமாய் உறங்கும் அவளையே ... வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.... உயிர் போய் மீண்டு வந்தது போல் இருந்தது.... சின்னதாய் அசைவு...மெல்ல கண் விழித்தவள்....விழித்தாள் .... நான் இங்கே எவ்வாறு வந்தேன் என...திரும்பியவள்... ஷியாம் முகம் பார்த்து பேச்சிழந்தாள் ... "மிர்ச்சி " என்ற குரல் உயிர் வரை ஊடுருவ....உலகம் மறந்து போனாள் மஹா.... கண்களின் கண்ணீரில்.... இருவருக்குள்ளும் ...பேச்சற்ற மௌனம் .. சில நொடிகளே....

வேகமாய், இறுக்கமாய், விழித்தால் .. தொலைந்து விடுவானோ என்ற அச்சத்துடன்....இருக்க கட்டி இருந்தால் ஷ்யாமை..... மந்திரம் போல்... பாவா.. பாவா..., அவளின் ஒவ்வொரு இதழனைப்பிற்கும்....உருகினான் .. ஷ்யாமளபிரசாத்.... இனி இவர்கள் இருவருக்குள்ளே காற்றே நுழையலாகாது எனும் போது... நமக்கு என்ன வேலை?

இருவரிடத்தும் பேச.. சந்தேகம் களைய மலை போல் விஷயங்கள் இருந்தும்..... உயிர் தேடலுக்கு முன்... அவை பின்னுக்கு போயின.... ஷ்யாமா வாழ்க்கை நீண்டு நிலைத்து இருக்க..... எல்லாம் வல்ல இறையை வேண்டி.... முடிக்கிறேன்....
ஆதிம்மா அடிதூள்ம்மா
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top