அவளின் வன்மை கண்டு
அதிர்ந்த ,ஷ்யாம் அசையாமல் நின்றான்.அவனின் இதழ் சுவையில் மூழ்கியிருந்தவள் ,
கண்ணீரின் சுவையுணர்ந்து
கலங்கி நிமிர்ந்தாள்.
சிவந்த கண்களில் கண்ணீருடன் நின்றவனை
நோக்கி, " ஷ்யாம் என்னடா இது"
என்றவள்,தன் உயரத்திற்கு அவனை இழுத்து,கண்துடைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
"மஹா!
நெவர் டூ திஸ் டு மீ டி,செத்து
பிழைத்தேன்" என்றான்.
" என்னை வெறுத்துடுவியா? "
என்றவளிடம்,
" நீ "என
" என்னால் என்றைக்குமே உன்னை வெறுக்க முடியாதுடா.
ஏன்னா ஏன்னா ஐ லவ்யூடா!
ஐ லவ்யூ! ஐ லவ் யூ" என பிதற்ற
"பின்ன நான் மட்டும் எப்படி டி
உன்ன வெறுப்பேன்,ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ" என தொண்டை அடைக்க கூறியவனை பாய்ந்து
அணைத்தாள்.
அவளின் வேதனையான முக
பாவத்தை பார்த்தவன்,
வழக்கமான குறும்பு குரலில்
"ஹேய் மஹா"
" ம்"
" மிர்ச்சி"
" ம்ம்ம்"
" என்னடி இது கூட தெரியல,
செமயா சொதப்புற"
" ம்ம் புரொஃபசர் சரியில்லடா
நான் என்ன பண்ண?"
அவளும் சிறிது மீண்டிருந்தாள்.
" புரொஃபசர் பி.எச்.டி பண்ணவர்டி,உன்னால ஃபாலோ பண்ண முடியலன்னு
சொல்லு இனிமே தினமும் ட்யூஷன்தான்"என்றபடி
அவள் இதழோடு இதழ் பின்ன,
உயரம் இடிக்க தன் உயரத்திற்கு
அவளை தூக்கியிருந்தான்.
அங்கே பூ ஒன்று புயலாகி
புதையல் எடுக்க,
புயல் சூறாவளியாக சுழன்று
சுழன்று அடித்தது.
மூச்சுக்குதிணறி,
ஒருவருக்கொருவர்,மூச்சை பறிமாறியும் முடியாத போது
இருவரும் விலகி நின்று
சிரித்தனர்.
" இப்ப" என்றவளிடம்
" டபுள் ஓகே" என்றான்.
கடைசிவரை தன் காதலை அவளுக்கு புரிய வைக்கவே முடியாதோ என்று அவன் மனம்
கலங்கியது.தான் விரும்பியதை இன்று நடத்திவிடுவது,பிறகு
மஹாவின் முடிவு என்று
எண்ணியவன்,அவளிடம்
" ஒரு நிமிஷம் மஹா
வந்து விடுகிறேன் " என்று
வெளியே செல்ல முயன்றவனை
" நானும் வரேன்" என்று சொல்ல
" ப்ளீஸ்" என்றவன்,அங்கிருந்த
சோஃபாவில் அவளை அமர வைத்துவிட்டு வேகமாக வெளியேறினான்.
தன் ஜாக்குவாரை நோக்கி
சென்றவன்,அதைத்திறந்து
சில பைகளை கைகளில்
எடுத்துக்கொண்டான்.நேராக
சென்று கார்த்திக் ரூம் கதவை
தட்டியவன்,அவன் திறக்கவும்
" நானும்,மஹாவும் வெளியே
போறோம்டா,அம்மாவும்,அத்தையும் கேட்டா சொல்லிடு" என்றான்.
அருகில் வந்து ஷ்யாமை அணைத்த கார்த்திக்
" நீயும் லட்டுவும் சந்தோஷமா
இருக்கனுன்டா, வேறெதுவும்
வேணாம்"
அண்ணனாக கலங்கியவனை
தோளில் தட்டி கொடுத்து,
" டோன்ட் வர்ரி மச்சான்
எல்லாம் நான் பாத்துக்கறேன்"
என்றவன் தங்கள் அறை நோக்கி நடந்தான்.
மஹாவை நெருங்கியவன்
பைகளை அவளிடம் தர
திறந்து பார்த்து நிமிர்ந்தவளிடம்
" ப்ளீஸ் டி" என்றான்.
சிறிது நேரத்தில் திரும்பியவள்
அழகிய டிசைனர் சேலை உடுத்தி,ஆளை வசீகரிக்கும்
அழகுடன் நின்றாள்.கண்
கொட்டாது அவளைப் பார்த்தவன்
" அள்றடி" என,
அவளும் அவனையே கண்கொட்டாது பார்த்தாள்.
அவனும் ஆடை மாறியிருந்தான்.
அவனது தோற்றம், அவார்ட்
ஃபங்ஷனை நினைவு படுத்தியது.அவன் நகைக்
கடைக்குள் நுழைந்தபோது அவனை ரசித்தது,அதைத் தொடர்ந்த முத்தம்,உடல்
சிலிர்த்தது அவளுக்கு.
தன்னையே விழுங்குவது போல்
பார்த்தவளை நோக்கி
புருவம் உயர்த்தி என்ன என
ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் ஒண்டினாள்.சிறிது நேரம் அவளை அணைத்து,
அவள் தலை கோதியபடி நின்றவன்,அவள் உச்சியில்
முத்தமிட்டு ,அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தினான்.
கட்டிலின் மீதிருந்த ஒரு கவரை
எடுத்தவன்,அவள் காலடியில் அமர்ந்தான்.மெல்ல அவள் பாதங்களை தன் மடி மீது
வைத்தவன்,நிறைய வேலைப்பாடுகளுடன் கூடிய,அதிக சத்தம் வராத
கொலுசை அவள் காலில்
அணிவித்தவன்,மென்மையாக
அதன் மீது முத்தமிட்டவன்,நிமிர்ந்து மஹாவை பார்க்க
அவள் குனிந்து அவன்
நெற்றியில் முத்தமிட
" போடி எனக்கு மம்மி கிஸ்
வேணாம்" என்றான்.
சிறித்தபடி அவன் தலையை
கலைத்தவள்,பட்டும் படாமல்
இதழ் ஓரத்தில் முத்தமிட்டாள்.
எழுந்து நின்றவன்
"மஹா
வெளியே போலாமா?"
என்றான்.
" நீ எங்க கூப்பிட்டாலும்"
என்று அவன் கரம் பற்றிக்
கொண்டாள்.
அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
" என்ன பண்ற ஷ்யாம் இறக்கிவிடு"
"பார்த்தேன்டி , பாதம் முழுக்க
கன்னிச் சிவந்திருக்கு"
" அது ..அது ... " என்றவள் திணற
"ப்ளீஸ் டி பேசாம வா"
அவள் தன் கைவிட்டு ஒன்று
இரண்டு என,"என்ன குல்ஃபி"
என்றவனிடம்,
" இதோட மூன்று வாட்டி ப்ளீஸ்
சொல்லிட்ட, என் பாவா வான்னு
டவுட்,அதான்"என
" உன் பாவாவே தாண்டி என் மிரப்பக்கா" என்று தன்
கையிலிருந்தவளின் தலையில் செல்லமாய் முட்டினான்.
அவளைத்தூக்கி சென்று காரில் விட்டவன்,காரை நிறுத்திய இடம் பார்க் ஹயாத் ஹோட்டல்.கீழே
இறங்கியவளை மீண்டும் தூக்க முற்பட ,அவள் கெஞ்சலாய் பார்த்ததும் நடக்க ஆரம்பித்தான். அவனின் வலது
முழங்கையில் ,தன் இடது கை
நுழைத்து,தன் வலக்கையால்
அவன் ஆர்ம்ஸ் பற்றியபடி
அவனை,உரசிக் கொண்டு நடந்தாள்.அவளின் நெருக்கத்தில் அவன் உடல்
சிலிர்த்து அடங்கியது.
இருவருக்கும் அந்த நெருக்கம்
தேவையான ஒன்றாக இருந்தது. இழந்ததை திரும்ப பெற்ற
மகிழ்ச்சியில் அவனும்,தவறே
செய்யாதவனை துன்புறுத்திவிட்டோமே,
ஒருவேளை அவன் தன்னை வெறுத்திருந்தால்,அவனில்லாத
வாழ்க்கை சாத்தியமா? என்ற
தவிப்பில் அவளும் இன்னும்
நெருக்கமாக நடந்தனர்.
ஒரு வி.ஐ.பி சூட் முன் அவளை
நிறுத்தியவன்,
" கண்ணை மூடு மஹா
நான் சொல்ற வரை
திறக்ககூடாது" என்றவன்
அவள் கண் மூடியதும்
அறையுள் நுழைந்து ஒவ்வொரு சுவிட்சாக ஆன் செய்து முடித்து
அவளை கண் திறக்க சொன்னான்.
கண்திறந்தவள்,விழிகள்
ஆச்சரியத்தில்விரிந்தது.
அசந்துதான்போனாள்.
அறைமுழுவதும் சுற்றியவளின்
விழிகள் ஓரிடத்தில் நிலை
கொண்டது.அருகில் சென்றவள்
அந்த இடத்தை மென்மையாக
தடவியபடி,ஷ்யாமை கேள்வியாக நோக்கினாள்.அவன் ஆம் என்பதாய் கண்மூடி திறந்து
"100th day சர்ப்ரைஸ்" என
அப்படியே மடிந்து அமர்ந்து
தன் கைகளால் முகத்தை மூடி
கதறினாள்.அருகில் குனிந்து
அவள் தோள் பற்றியவனை,ஷர்ட் காலர் பிடித்து இழுத்தவள்,அவன்
முகம் முழுவதும் முத்தமழை
பொழிந்தாள்,அழுதபடி.
" அழாதடி,அப்புறம் நானும்
அழுவேன்,உன்னால சகிக்க
முடியாது"
" ஏன்டா என்னை இவ்வளவு
லவ் பண்ற,இவ்வளவு லவ்வும்
எனக்கே எனக்கா? இதுக்கெல்லாம் நான் அருகதையான்னு இருக்குடா!"
"எனக்கென்னடி அருகதை இருக்கு உன்னை கட்டிக்க"
" அப்படி சொல்லாத ஷ்யாம்"
" நீயும் இனி இப்படி சொல்லாதே
நீ எனக்கு வேணும்டி,காலம் முழுக்க,நான் சாகிற வரை"
என்றவனை இன்னுமாய் இறுக்கி கொண்டு கதறினாள்.
எழுந்தவன் கை பிடித்து அவளை எழுப்பினான்.அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி ,பார்வையை சுழற்றினாள்.
அங்கே அவர்களின் முதல்
சந்திப்பிலிருந்து அனைத்தும்
தத்ரூபமான ஓவியமாக
அறை முழுவதும்,
நிரம்பியிருந்த்து.ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் mahath
என்று கையெழுத்து இருந்தது.
அவள் பெயரின் முதலும்
அவன் பெயரின் முடிவும்.
அவனையே இமைக்காது பார்த்தவளை நோக்கி கண்
சிமிட்டினான்.
" நான் உனக்கு கிஃப்ட் எதுவும்
வாங்கலையேடா"
" நான் என்ன கேட்பேன்னு உனக்கு தெரியாதா மிர்ச்சி "
அவன் குரல் குழைந்து வந்த விதமே அவளுக்கு தெரிவித்தது
அவன் கேட்கப்போவதை.
எப்போதும் அவன் கேட்பது ஒன்றுதானே.
" வா ஷ்யாம் நம்ம வீட்டுக்கு
போகலாம்"
இருவருக்குள்ளும் ஒரு
மோனநிலை .
போயஸ் கார்டன் வீட்டின் முன் கார் நின்றது.மீண்டும் அவளை
கைகளில் ஏந்தியபடி
வீட்டிற்குள் சென்றவன்
தங்கள் அறையில் நுழைந்து
அவளைக் கீழே விட்டவன்,அவள்
" ஷ்யாம்" என
" இன்னும் ஒரு கிஃப்ட் பாக்கி மஹா" என்றவன்,
மொபைல் எடுத்து சிலவற்றை
காட்டினான்.
இன்பமாக அதிர்ந்தாள்.அதில்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்
சேர்வதற்கான வேலைகளை
ஆரம்பித்தருந்தான்.
"நான் உன்ன விட்டு போக மாட்டேன்"
" யார் உன்னை விட்டா,உன்
படிப்பு முடியற வரை நான்
உன்னுடன்தான்,இந்த சில
மாதங்களில் அதற்கான
எல்லா ஏற்பாடும் பண்ணிடுவேன்"
என்றவனை காதலாய் பார்த்தாள்.
சுவரில் சாய்ந்து கைகளை
கட்டியபடி நின்றவன்,ஒரு
கையை ஏந்தியது போல் நீட்டி
"என் கிஃப்ட் எங்கே?"என்றான்.
எட்டி அவன் கையை பற்றியவள்,
சிறிது இடைவெளிவிட்டு நின்று
அவன் கண்களைப் பார்த்தபடி,
அவன் விழிகளுக்குள் மூழ்கியபடி,அவனை ரசித்தபடி
பாட ஆரம்பித்தாள்.
நீ ..பார்த்த விழிகள்....
நீ..பார்த்த நொடிகள்....
எப்போதும் போல் மயக்கியது
அவள் குரல்
கேட்டாலும்...வருமா..
கேட்காத...வரமா...
வராது என்று தலையசைத்தான்
இது ..போதுமா...
இல்லை...அவசரமா...
போதாது என்றான்
இன்னும்...வேண்டுமா..
அதில்... நிறைந்திடுமா...
எப்போதும் இல்லை என்றான்
எல்லாம் சைகையால்
நாம்.. பார்த்த நாள்...
நம்..வசம் வருமா
உயிர்..தாங்குமா..
என்..விழிகளில்.. முதல்வலி
அவள் நிறுத்த
நிஜமடி..பெண்ணே..
என்று பாடியபடி அவளை சுண்டி
இழுத்தவன்,முற்றிலும் அவளில்
தன்னை தொலைத்திருந்தான்.
எப்போதும் அவனை விழுங்கும்
விழிகளில் முத்தமிட்டவன்,
அவன் முத்தமிட்டதால் சிவந்த
கன்னங்களில் முத்தமிட்டு,
மூக்கு நுனியில் முத்தமிட்டான்.
சிறிது நிறுத்தி அவளை பார்க்க
இதற்குமேல் தாங்காது என்பவளாய் அவன் இதழ்களை
களவாடியிருந்தாள்.
இதழ்கள் ஒன்றையொன்று
மென்மையாய்,வன்மையாய்
விசாரிக்க,அவளது கைகள்
அவனின் பின்புற சிகையில்
ரிதமாய் அலைய,அவன் கைகளோ அவள் அங்கங்களை
அணு அணுவாய் அளவெடுத்துக் கொண்டிருந்தது.
அப்படியே அவளைக் கைகளில் அள்ளியவன்,கட்டிலில் சாய்க்க
அவனை இழுத்து
அணைத்திருந்தாள் மஹா.
அவளில் மூழ்கி முத்தெடுக்க
துவங்கினான்
ஷ்யாமள பிரசாத்.