• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani- Sandhiya Sri

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் அவனின் இதழ்களில் முத்தம் பதிக்க அவளின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தான் ஷ்யாம். இத்தனை நாட்களாக மனதில் இருத்த ஒருவிதமான ஏமாற்றம் மறைவதை உணர்ந்தவனின் மனம், தன்னை முத்தமிடுவது தன்னுடைய குல்பி என்பதை உணர்ந்ததும், அவளின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவன் அவளின் இடையோடு தனது இருகரங்களையும் கோர்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான்..

அவள் காலையில் இருந்து படுத்தியபாடுகள் அன்று முழுவதும் பித்துபிடித்தவன் போல அலைந்த அலைச்சல் எல்லாம் அவனின் மனதில் படமாக ஓட, அவள் அவனின் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க கண்களை திறந்து அவளைப் பார்த்தவன்,

“உன்னால மட்டும் தாண்டி என்னை பித்தனாக மாற்ற முடியுது..” என்று கூறி அவளைப் பார்த்து கண்சிமிட்டியவன், “ஏண்டி உன்னோட பாவா காலையில் இருந்து பைத்தியம் போல அலைந்தது எல்லாம் எப்படி ஒரு பாலில் சிக்ஸர் அடிச்சு வீழ்த்திட்ட..” என்று கேட்டதும் அவள் வெக்கத்தில் தலைக்குனிய, “இப்போ நான் நெருங்கினால் நீ விலகுவாயோ என்று இப்பொழுது கூட என்னோட மனம் கிடந்தது தவிக்கிறது மஹா..” என்றான் ஷ்யாம்..

அவன் கூறியதைக் கேட்ட மஹாவின் மனம் வலிக்க, “நான் செய்தது எல்லாம் தப்புதான் ஷ்யாம்.. நான் உன்னை எல்லோர் முன்னாடியும் உன்னை விட்டுகொடுகாமல் பேசி இருக்கணும்.. ஆனால் அதில் இருக்கும் காரணத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும்.. எனக்கே எனக்கு மட்டும் தான் நீ வேண்டும் என்ற சுயநலம், உன்மேல் நான் வைத்திருந்த காதல் எல்லாம் என்னை இந்த அளவுக்கு செய்ய வைத்து என்பதை நீ புரிந்துக்க..” என்று அவள் தன்னுடைய காதலை வார்த்தைகளால் சொல்ல, அவளைப் பார்த்த ஷ்யாம்,

“ஏய் என்னடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன என்னவோ உளறுகிறாய் மஹா..” என்று குறும்பாக அவன் கேட்டதும், அவன் கூறியதைக் கேட்டு இயல்பு நிலைக்கு வந்தவள், “ஏண்டா நான் உன்னோட மஹா என்று சொல்லிட்டு இருக்கிறேன்.. நீ என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கிறாய்..” என்று அவள் நெஞ்சில் அடிக்க, அவன் வாய்விட்டு சிரித்தான்..

அவன் சிரிப்பதைப் புரியாமல் பார்த்த மஹாவைப் பார்த்தவன், “ஏய் லூசு காலையில் இருந்து என்னை தவிக்கவிட்டப்பா தெரியலையா நீ என்னோட மஹா.. இந்த மஹாவை இந்த லூசு ஷ்யாம் தேடுவேன் என்று..” என்று கேட்டதும், அவனின் நெஞ்சில் சாய்ந்து நின்ற மஹா,

“ரொம்ப சாரி பாவா..” என்று சொல்ல, அவளின் ‘பாவா’ என்ற வார்த்தையில் அவனுக்கு கிக்கேற, “பாவா என்று சொல்லியே மனுசனை கவுத்துரு..” என்று கூறியவன் அவள் எதிர்பார்த்த நேரத்தில் அவளின் இதழில் முத்தக்கவிதை எழுத அவனின் முத்தத்தில் மயங்கினாள் மஹா..

அவள் தன்னை மறந்து முத்தத்தில் மயங்கி நின்ற தருணத்தைப் பயன்படுத்துய ஷ்யாம் அவளை இருக்கையிலும் ஏந்த அதை முற்றிலும் எதிர்பார்க்காத மஹா, “பாவா..” என்று அழைக்க அவளின் ஒற்றை வார்த்தையில் தன்னுடைய காதலை உணர்ந்தவன்,

“இன்னைக்கு என்னை தவிக்க விட்டதுக்கு உன்னோட பாவா என்ன செய்கிறேன் என்று பாரு..” என்று அவளைப் படுக்கையில் படுக்க வைத்த ஷ்யாம் மஹாவின் மீது வைத்திருந்த காதலை அவளிடம் அவன் காட்ட, அவனின் காதலைக்கண்டு அவளின் முகம் செவ்வானத்திற்கு போட்டியாக மாற, தன்னுடைய மனதில் இருந்த நினைவுகளை மறந்து அவனின் குல்பியாக ஷ்யாமின் மனைவியாக மாறி அவளின் காதலனுடன் தன்னுடைய காதல் யுத்தத்தை ஆரமித்தாள் மஹா..

இரு உள்ளங்களும் தங்களின் மனதில் இருந்த காதலை இப்பொழுது சரியாக புரிந்து கொள்ள அவர்கள் வாழ்க்கை பயணத்தின் படுத்த கட்டத்தை நோக்கி பயணித்தனர்..
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அடடா பிரியாணி ஒவ்வொன்றும் அடி சக்கன்னு சொல்ல வைக்குது. சைலன்ட் ரீடர்ரா சுத்திட்டு இருந்தஎங்களை எல்லாம் கமென்ட் போட வெச்சு இருக்கீங்க. Shyam is magical.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த பதிவு ரொம்ப, ரொம்ப
நல்லாயிருக்கு, சந்தியா ஸ்ரீ டியர்
உங்களுக்கு பரிசு கிடைக்க
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சந்தியா செல்லம்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இந்த பதிவு ரொம்ப, ரொம்ப
நல்லாயிருக்கு, சந்தியா ஸ்ரீ டியர்
உங்களுக்கு பரிசு கிடைக்க
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சந்தியா செல்லம்
தேங்க்ஸ் பானும்மா.. நான் கதையே படிக்காமல் fre - final மட்டும் படித்து எழுதினேன்.. அதனால் என்னால் இவ்வளவுதான் எழுத முடிந்தது..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top