நன்றி வசந்தி சிஸ்..SUPER SIS
நன்றி வசந்தி சிஸ்..SUPER SIS
நன்றி சிஸ் ?Good
நன்றி சிஸ் ??ஷியாமின் உணர்வுகள் அருமையா வந்து இருக்கு....ஷியாம் கண்ணீர் வெரி வெரி நைஸ் டச்...அப்புறம் அவன் பாடும் பாடல் ...கலக்கிடீங்க ....
நன்றி புவி சிஸ் ?super super super sis
Super madam. Ur style is good. Ella biriyaniyum konjam hotttaaaa irunducha. This was actually realistic. Shyam's reaction might be in this way only I guessஅழுத்தமாக... ஆழமாக.. நிதானமாக... வன்மையில் மென்மையாக அவனின் இதழில் கவிதை எழுதிக் கொண்டு இருந்தாள் நிதானமாக....!
இதழ் முத்தத்தில் திளைத்த அவளை தன் மார்போடு இறுக்க அணைத்துக் கொண்டான்... இந்த நொடி வரை தான் அனுபவித்த வேதனையை போக்க…
திருமணம் முடிந்த இந்த 100 நாளில் அவளின் முதல் முத்தம் கண்களில் தானாக கண்ணீர் வடிந்தது..! சொட்டாக விழுந்து அவள் தலையை நனைத்தது..
ஆம் கண்ணீர் தான்.. இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த வேதனை, துக்கம், கோபம் எல்லாம் கண்ணீராக வந்தது...
அவளை தாம் திருமணம் செய்ய பட்ட கஷ்டம் என்ன..., அவமானம் என்ன..., எல்லாம் ஒரே நொடியில் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டாள் அவனின் அவள்...
அவனின் கண்ணீரை பார்த்த அவளுக்கு அவள் மேலையே கோபம் வந்தது, திருமணத்திற்கு முன் அவனை பற்றி எல்லாம் அறிந்தும், வீட்டில் அவனுக்காக பேசி, கார்த்திக்கை முறைத்து, பைரவியிடம் திட்டு வாங்கி எல்லாம்.., எல்லாம்.. அவனுக்காக செய்து யாரோ ஒருவன் சொன்னதற்காய் இவனை அழவைத்து விட்டோமே என்று அத்தனை வேதனையாக இருந்தது...
" மிர்ச்சி உன் கண்ணில் கண்ணீரை நான் பார்க்கணும் " என்று கூறிய ஷியாம் ஒரு நிமிடம் அவள் கண் முன் வந்துப் போனான்...
அன்று அப்படி கூறிய ஷியாம் இதுவல்ல... இவன் முற்றிலும் மாறிப் போனான் அவளுக்காய் அவள் ஒருத்திக்காய்... அவள் மேல் கொண்ட காதலுக்காய்.. அன்று அவன் அப்படி சொன்னதற்காய் தாம் அவனை ரொம்பவே அழவைக்குறோமே என்று நினைக்க வைத்தது அவளை.." அவன் அவளை அழவைத்தது எல்லாம் அந்த நேரம் ஏனோ மறந்து போனது...
ஆனால் "நான் என்னை முற்றிலும் மாற்றிக் கொண்டேனே இதும் அவன் மேல் கொண்ட காதலா? " என்று அவளுக்கு அவளே கேள்விக் கேட்டு விடைக்காய் காத்திருந்தாள்...
அவளின் கேள்விக்கு விடையாய் " அவனுக்காய் நான் முற்றிலும் மாறிப் போனேன், அவனின் மேல் கொண்ட அளவுக்கதிகமான காதலால் அவன் எனக்கே எனக்கு என்ற உரிமையால்.. பொசசிவ்னெஸ் ஓவராகி முட்டாள் மாதிரி முடிவெடுத்திருக்கேன்...
என்ன இருந்தாலும் அவனின் சட்டையை பிடித்து கேட்டிருந்தால் அவனுக்கு இந்த வேதனை வேண்டாமே, அவளுக்கும் அந்த ஒரு நாள் வேதனை வேண்டாமே. எல்லாம் தன் முட்டாள் தனத்தால் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்... அவளின் கண்ணீர் அவனின் சட்டையை நனைக்க...
" பாவா " என்று அழைத்தாள்
-------------- பதிலில்லை இப்பொழுதும் அவனுக்கு அவள் மேல் கோபம் இருக்கிறது தான், ஆனால் என்னை வருந்தவைத்த அவளும் வருந்துவாள் என்று அவனுக்கு தெரியும்... அவளின் கண்ணீர் அவனுக்கும் வேதனை அளித்தது.. அப்படியே அவளை அணைத்துக் கொண்டே நின்றான்.. கூடவே நடுக்கத்துடன். அவனுக்கு இன்னும் கமிஷனர் அவனை அழைத்ததே மனம் முழுவதும் ஓடிக் கொண்டு இருந்தது...
அவனின் நடுக்கம் அவளும் அறிந்து தான் இருந்தாள்.. எல்லாம் தன் முட்டாள் தனத்தால் என்று எண்ண மட்டுமே முடிந்தது அவளால்..
"பாவா"
அவளின் " பாவா " எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவனுக்கு கிக்காகவே இருந்தது... ஆனால் இன்று அவளின் தவறு அவளுக்கு புரிய வேண்டும் என்று அழுத்தமாக நின்றுக் கொண்டான்... கூடவே கொஞ்சமே கொஞ்சம் அவளை சீண்டவும் ஆசை கொண்டது மனது...
அவன் தன்னை நோக்காமல் இருப்பதை கண்டு காண்டான அவள், அவனை விட்டு தள்ளி நின்று இடுப்பில் கைகளை வைத்து முறைத்துக் கொண்டே " டேய் மாமா " எனவும்
எப்பொழுதும் அவனையே மறக்க வைக்கும் அழைப்பு... அவனின் வேதனையை கொஞ்சம் குறைக்க... அவளை பார்த்தான்... கண்களில் காதல் பொங்க...
…………….. அவன் பார்வையில் கன்னங்கள் சிவக்க இப்பொழுது மௌனமாவது அவள் முறையானது... " இப்படி பார்த்தால் எப்படி தான் பேச்சுவருமாம்.." என்று அவள் மனது செல்லமாக முறைத்துக் கொண்டது அவனை...
"ஏய்...! குல்பி.." என்று உல்லாசமாக சிரித்தான், அவளை கண்டு, அவள் வெட்கத்தை கண்டு...
" என்னடி இப்போ தான் அப்படி முறைச்ச இப்போ இப்படி கம்னு இருந்தா எப்படி " என கடையோர இதழ் புன்னகையில் விரிய அவளை நோக்கினான் அவன்...
அவளை நோக்கி, மிக மெதுவாக அடியெடுத்து வைத்து வர..
"ஐயோ பக்கத்துல வாறானே.. சும்மாவே பார்வையால் கொல்லுவான் " என்று அவள் மனது செல்ல கோபத்துடனும், செல்லமாகவும் சிணுங்கிக்கொண்டது....
அருகில் வந்து அவள் கையை பிடித்து " மாஹா" என்று அழைத்து அவனை நோக்க செய்து ஜன்னலின் அருகே அந்த நிலவைக் காட்டி...
" இது தான் ஷியாம், இப்படி தான் இருந்தேன் நான்... பெரிய சாம்ராஜ்யத்துக்கு ராஜா.. என்னை யாரும் அடக்க முடியாது.. நான் ஷியாமளப் பிரசாத்... மது, மாது எல்லாம் எனக்கு ஒரு கேஷ்வல் விஷயம்... அதை நான் பெரிதாக எடுக்கவில்லை அன்று.. ஆனால் அதனால் தான் இன்னைக்கு வாழ்க்கையே திசைமாறி, போயிருக்கு மஹா.. எந்த நிலையிலும் உன்னை… உன்ன விட்டு போகக்கூடாது, எனக்கு எல்லாமே நீ, நீ இல்லாத வாழ்க்கையே இல்லை... உன்னை தேடி நான் அலைந்த ஒவ்வொரு நொடியும் நீ தான் எனக்கு எல்லாம்னு உணர்ந்தேன்..
யாராவது ஒரு நாள் நான் எதுவும் வேண்டாம் எனக்கு நீ மட்டும் போதும் என்று ரோடு ரோடாக அலைவேன் என்று சொல்லிருந்தா அவனை பார்த்து “நான் ஷியாம்டா என்னை யாரும் அப்படி அலைய வைக்க முடியாது” என்று மார்தட்டி சொல்லிருப்பேன் அப்படி தான் நான் இருந்தேன் இன்னைக்கு எல்லாம் மாறிப்போச்சு மஹா.. எல்லாம் உன் காதல் தான்... நான் உன்கிட்ட சொன்ன பொய் தான் உன்னை இந்த அளவுக்கு போக வச்சுருக்கு.. இதுக்கு சாரி என்று என்னால் ஒரு வார்த்தையில் முடிக்க முடியாது... ஆனாலும் கார்த்திக் சொன்ன மாதிரி காலுல விழ ஆசை தாண்டி... ஆனா நான் ஷியாம்டி… ஷியாம் மஹாவேங்கடலக்ஷ்மி " என்று தன் மனநிலையை அவளிடம் கூறிவிட்டோம் என்ற நிம்மதியில் வேதனையில் ஆரம்பித்து கேலியில் முடித்தான் அவன்....
அவன் கூற… கூற… அவளுக்கும் வேதனையாக இருந்தது... அவனை பற்றி நன்கு அறிந்த பின்னும்... அவன் அவளுக்காக, அவளை நினைத்த மனதால் வேற யாரையும் நினைக்காத, அவனை தான் பழையதை வைத்து அவனை சாடுவது எந்த விதத்தில் சரி... இப்படியே பழையதை வைத்து தொங்கிக் கொண்டு இருந்தால் எங்களுக்கான வாழ்க்கையை எப்படி தான் வாழ்வது... என்று எண்ணமிட்டவளை...
" ஏய் ஜாங்கிரி என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. என்னை உன் காலுல விழ வைக்க ஆசைப்படுறியா குல்பி " என்று சீண்டலாக கேட்டுக் கொண்டே அவள் மிக அருகே நெருங்கி நின்றான் அவன்..
" குல்பி "
-----------------------
"என்னடி... நான் பேசிட்டே இருக்கேன் நீ இப்படி இருக்க. இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலியா " என்று வேதனையாக கேட்க
"இல்லடா உன்னை எப்படி நான் இந்தளவுக்கு நேசிக்க ஆரம்பித்தேன், நீ இப்படி தான் என்று தெரிந்தும், நீ வேண்டும் என்று அடம் பிடித்து, நீ வேண்டாம் என்று அழுது, உனக்காக பார்த்து, இப்படி எல்லாம் செய்து எப்படிடா… எப்படி இருந்த மஹாவ இப்படி “ஷியாமா” மாத்திட்ட.. நீ ஏதோ மேஜிக் பண்ணிட்ட என்னை “ என்று இதழ் சுழித்து குற்றம் சுமத்தியவளை
“ரசனையான, காதலாக, சந்தோசமாக, பெருமையாக, கர்வமாக” பார்க்க...
அவனின் பார்வை அவளை ஏதோ செய்ய நிலம் நோக்கி பார்வையை தாழ்த்தியவளை நோக்கி..
“ வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! நல்லழகே!
ஊனமறு நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா !” என்று தன் கண்ணம்மாவை கைகளில் காதலாக ஏந்திக் கொண்டான்...
" என்னடா மச்சானை இன்னும் காணும்..சேதாரம் எப்படின்னு தெரியலியே " என்று வீட்டில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.. பைரவி அவனை இருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்....
ஆனால் அவனோ அதை எல்லாம் கவனிக்காமல் ஷியாமுக்காக காத்துக் கொண்டு இருந்தான்... அவளின் உடன்பிறப்பு செய்து வைத்திருக்கும் வேலை அப்படி...
சிறிது நேரத்தில் ஷியாமின் அடக்கமட்டாத சிரிப்பில் அவர்களை நோக்கி திரும்பினான் கார்த்திக்.. மஹா ஷியாமிடம் எதுவோ கூறி சிரிக்க.. ஷியாம் அவனின் அக்மார்க் புன்னகையை எடுத்துவிட்டான்.. பலநாட்களுக்கு பிறகான புன்னகை....
அவர்களின் புன்னகை முகத்தை கண்ட பிறகு தான் கார்த்திக் நிம்மதி பெருமூச்சுவிட்டான்... அவர்களுக்குள் பிரச்னை முடிந்துவிட்டதா என்று தெரியாது ஆனால் அவனின் சந்தோச முகம் இனி அவர்களுக்குள் பிரச்னை ஏதும் வராது என்று அவனுக்கு உரக்க கூறியது...
அவர்களை பார்த்த ஜோதி, பைரவி என்று எல்லாருக்குமே சந்தோசம்... இனி அவர்களுக்கு ஏதும் வராது, வரவும் ஷியாம் விடமாட்டான் என்று... அவர்களின் பார்வையை கண்ட அவள் அவனிடம் மெதுவாக…
" பாவா.. இந்த பைரவி முறைச்சு முறைச்சு பார்க்குது என்னை... ஏதாவது சொன்னா நீ காப்பாத்து பாவா" என்று அவனிடம் கெஞ்சலாக கூறிக் கொண்டு வந்தாள் அவள்...
சும்மா சொன்னாலே கேட்கும் ஷியாம் அவளின் இப்படி கெஞ்சலை கேட்காமல் விடுவானா என்ன... அவளின் இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி அணைத்து இழுத்து அவள் காதில் " என்னை இத்தனை காதலிக்க வைக்கும், என்னை காதலிக்கும் உனக்கு இதை கூட செய்ய மாட்டேனா மிர்ச்சி " என்று அவள் காதில் கூறிக் கொண்டே அவர்களை நோக்கி வந்தனர்..
அவர்கள் இவரின் முகம் அத்தனை சந்தோசமாக இருந்தது... இவர்களை பார்த்த அத்தனை பேருக்கும் பெரும் நிம்மதி..
பைரவி தன் மனதில் " இந்த புள்ள இனியாவது கிறுக்கு வேலை பண்ணாம இருக்கட்டும் " என்று இறைவனுக்கு ஒரு வேண்டுதலை வைத்தார்...
ஜோதிக்கோ மிகவும் சந்தோசமாக இருந்தது " மஹா, இனி ஷியாமை தன்னில் இறுக்க பிடித்துக் கொள்வாள் “ என்று...
##################### டொட்டடொயிங்க் ####################
நன்றி சிஸ் ?Super madam. Ur style is good. Ella biriyaniyum konjam hotttaaaa irunducha. This was actually realistic. Shyam's reaction might be in this way only I guess
Thanks