sakthipriya
SM Exclusive
அத்தியாயம்-1
அதிகாலை வேளை. சூரியன் கூட விழித்து எழுந்து தன் கதிர்களை இன்னும் வீசாத நிலையில் சந்திரா விழித்து எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். சந்திரா கடிகாரத்தில் மணி பார்த்தாள். அதிகாலை நாலரை என்று அது காட்டியது.
“ஏய்! இப்பதான் உனக்கு விடிஞ்சுச்சாடி. மணி ஆறாகப் போகுது. இப்பதான் வாசக் கூட்டப் போறியா? உன்னச் சொல்லி தப்பில்ல. உன்ன செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காளே உன் அத்தே அவளச் சொல்லனும்” என்று கண்ணை உருட்டிக் கொண்டு கமலம் பாட்டி போன வாரம் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் வர பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பாட்டி விழித்து வருவதற்குள் குளித்து விட்டு வந்து வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுடனும் இல்லைன்னா நான் அவ்வளவுதான். என்னால அத்தைக்கு வேற திட்டு விழும் என்ற பயம் அவளை தொற்றிக் கொண்டதால் போர்வையை மடித்து வைத்து விட்டு, உடைகளை சரி செய்துக் கொண்டு, தன் துணிகளை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி விரைந்த சந்திரா எதிரே வந்த சின்ன அத்தை சாந்தி மீது மோதிக் கொண்டாள்.
“ஏய் சந்திரா என்ன இது? எங்க பாத்துட்டு வர்ற நீ? கண்ணு தெரியுதா இல்லையா?” என்று கோபமாகத் திட்டினாள் சாந்தி.
“மன்னிச்சுக்கோங்க அத்தே” என்ற சந்திராவின் கண்களில் கண்ணீர் குளமாகியிருந்தது.
“சரி சரி இனியாச்சும் பாத்து போ. என்ன புரிஞ்சுதா?” என்று அதட்டிவிட்டு பதிலை கூட கேட்காமல் அகல சந்திராவின் மனதில் இதுவே நம்ம அத்தையா இருந்திருந்தால் “சந்திரா செல்லம்! என்ன அவசரம்? மெதுவா போ.” என அன்பாகச் சொல்லி செல்லமாக கன்னத்தில் தட்டியிருப்பாங்க என நினைத்தவள் விசாலாட்சியின் அன்பான சிரித்த முகத்தை நினைத்தவாறு குளியலறையில் நுழைந்தாள்.
சந்திரா தலைக்குக் குளித்து விட்டு, மஞ்சள் நிறத் தாவணி பச்சை கலர் பாவாடைக்கு மாறி, தலையைத் துவட்டாமல் துண்டைக் கட்டிக் கொண்டு வாளியில் தண்ணீர், துடைப்பம், கோலப் பொடியுடன் அவசரமாய் பரபரப்புடன் வாசலுக்குச் செல்ல எதிரே அவள் அத்தை விசாலாட்சி குளிக்க வந்தாள்.
“என்ன செல்லம். இன்னிக்கும் நீ முன்னாடியே குளிச்சிட்டியா? நான்தான் லேட்டா?” என்று அன்பாய் கேட்ட அத்தையின் முகத்தை பார்த்தவுடன் கவலைகள் மறந்து ஆம் என்பது போல் புன்னகைத்தாள்.
“சரி இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லியா? நீ போயி வாசல பெருக்கி அழகா பெரிசா ஒரு புள்ளிக் கோலம் போட்டுட்டு வந்துடு. அம்மா குளிச்சிட்டு உனக்கு காபி போட்டு வைக்கிறேன் அப்புறம் பொறுமையா போ. அவசரம் எதுவும் இல்லை” என்று கன்னத்தைத் தட்டி விட்டு விசாலாட்சி குளியலறை நோக்கிச் சென்றாள்,
விசாலாட்சிக்கு வயது நாற்பதிருக்கும். அன்பான கனிவான முகம் மட்டுமல்ல; அன்பான மனமும் கொண்டவள். வீட்டின் மூத்த மருமகள். அவளின் அத்தைதான் என்றாலும் பத்து வயதிலேயே திருமணமாகி தன் குடும்பத்தைப் பிரிந்து பத்து வயதில் அந்த வீட்டில் சந்திரா நுழைந்த நாள் முதல் அவள் காட்டிய அன்பினால் தன் தாயாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆரம்பத்தில் அத்தை என்று அழைத்து வந்தவள் பின் அம்மா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டாள். அவளும் தன் மகளாகவே பாவித்ததால் எதுவும் சொல்ல வில்லை. குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களை அத்தை என்று சொன்னாலும் தனிமையில் அம்மா என்றுதான் அழைப்பாள் சந்திரா.
“சரிங்க அம்மா” என்று தலையசைத்துச் சென்ற சந்திராவுக்கு அந்த வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் அவள் விரைவாகச் சென்று, தன் மெல்லிய விரல்களால் புள்ளிக் கோலத்தை அழகான ஒவியத்தை போல் தீட்டி விட்டு, தன் கோலத்தின் அழகை ரசித்து விட்டு “சபாஷ்டி சந்திரா கலக்கிட்ட” என்று தன்னையே பாராட்டி விட்டு சமையலயறைக்குச் சென்றாள்.
அழகான சின்ன வட்ட முகமும், குறும்பு நிறைந்த மயக்கும் சிறிய விழிகளும், அடர்ந்த கருத்த கூந்தலும், சின்ன இதழ்களும், மெல்லிய பிஞ்சு கைகளும், சின்ன இடையும் மெல்லிய உடல்வாகும் உடைய பதினெட்டு வயது பெண்தான் சந்திரா.
பெரிய அரண்மனை போன்ற அந்த வீட்டில் பல வேலைகாரர்கள் இருந்தாலும் முன் வாசலைப் பெருக்கி கோலத்தை அந்த வீட்டின் மருமகள்தான் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் உத்தரவு. கமலம் பாட்டி பார்க்கும் முன் நடக்கவில்லை என்றால் வீடு ரெண்டு பட்டு விடும் என்பதால் சந்திரா முதல் வேலையாக அதை முடித்து விடுவாள்.
சந்திரா முன் வாசல் வேலையை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழையும் போது குளித்து விட்டு வந்து விசாலாட்சி காலை சமையலை ஆரம்பித்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்த சந்திரா “அம்மா நான் வரதுக்குள்ள உங்கள யாரு சமைக்க சொன்னது?” என்று செல்லமாக கடிந்துக் கொண்டாள்.
“ஏன் மகாராணி வந்து உத்தரவு கொடுத்தாதான் நான் சமைக்கனுமா?” என்று பொய் கோபத்துடன் கேட்டபடி முறைக்கவும் செய்தாள் விசாலாட்சி.
“ஆமா நான் வந்து சொன்ன பின்னாடிதான் சமைக்கனும்.” என்று அசராமல் பதில் தந்த சந்திராவை பார்த்து விசாலாட்சி சிரித்தாள்.
“அம்மா இந்த வேலை எல்லாம் பாக்கதான் நான் இருக்கேன் இல்ல. நீங்க என்ன சமைக்கனுமுன்னு சொன்னீங்கன்னா சமைச்சிட்டுப் போறேன். நீங்க ஏன் சிரமப் படறீங்க?” என்று கேட்டபடி வந்த சந்திரா இன்னும் தலை வாராதிருப்பதைக் கவனித்து விட்டாள்.
“ஆமா நீ குளிச்சிட்டு வந்து எத்தனை நேரமாச்சு? ஈரத் துண்ட இப்படியே தலையில கட்டிக்கிட்டு இருந்தா என்ன ஆகறது? சளி பிடிச்சிக்காது? நீ போயி தலைய துவட்டிட்டு வா.” என்று அன்பாக கட்டளை இட்டாள் விசாலாட்சி.
“இல்லம்மா வீட்டுல எல்லாருக்கும் காபி தரனும் அத முடிச்சிட்டு நான் உடனே செய்யறேன்” என்று சொன்னவளிடம் “சந்திரா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அதுவுமில்லாம பாட்டி பாத்தா உன் அம்மாவதான் திட்டுவாங்க. இப்ப நீ போ. நான் சொன்னா நீ கேட்பியா இல்ல மாட்டியா?” என்று மிரட்ட சரி என்று தலையசைத்துச் சென்றாள் சந்திரா.
சந்திரா செல்லும் வேளையில் எதிர் வந்த சாந்தி “ஏய்! காபி போட்டுட்டியா? அங்க பாட்டி, மாமா எல்லோரும் முழிச்சிட்டாங்க.” என்று கோபமாக இரைந்தாள்.
சந்திரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.
“இல்ல சாந்தி நான்தான் அவள தலைய துவட்டுன்னு சொல்லி அனுப்பிச்சேன், நான் காபி போட்டுட்டேன். இப்ப கொடுத்திடலாம்.” என்று பரிந்து வந்த அத்தை விசாலாட்சியிடம் “இல்லக்கா இப்பவே நேரமாச்சு. அத்தய பத்திதான் உங்களுக்கு தெரியுமில்ல.” என்று பயத்துடன் சொன்னாள் சாந்தி.
“சரி கண்ணம்மா இங்க வா. இந்த காபிய எடுத்துட்டு போயி பாட்டிக்கும் உன் மாமாவுக்கும் வேகமாக கொடுத்துட்டு வந்துடு” என்று அன்போடு சொல்ல விசாலாட்சி சொல்ல “சரிம்மா” என்று தலையசைத்து கையில் ரெண்டு காபி டம்ளர்கள் கொண்ட தட்டுடன் மாமாவின் அறையை நோக்கிச் சென்றாள் சந்திரா.
“அக்கா நம்ம சந்திரா நல்லா வளர்ந்துட்டா. ரொம்ப பொறுப்பா நடந்துக்கறா. இப்பதான் சின்ன பொண்ணா இந்த வீட்டுக்கு வந்த மாதிரி இருக்குக்கா.” என்று அவள் சென்றபின் பாராட்டினாள் சாந்தி.
“சாந்தி நீ ஏன் எப்ப பார்த்தாலும் அவள திட்டிக்கிட்டே இருக்க. கொஞ்சம் அன்பா சொல்ல வேண்டியதுதானே? அவ நல்ல பொண்ணு சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவா இல்ல” என்று விசாலாட்சி கேட்டாள்.
“அக்கா நானும் அவ நிலையில இருந்து வந்தவதான். நான் இந்த குடும்பத்தில மருமகளா வந்தப்ப நீங்கதான் என்ன பாத்துக்கிட்டிங்க. எனக்காக எவ்வளவு முறை அத்தைகிட்ட திட்டு வாங்கினிங்க அக்கா. சந்திரா நல்ல பொண்ணுதான். எனக்கும் அவள் பிடிக்கும் ஆனா நீங்க அவகிட்ட ரொம்ப அன்பா இருக்கீங்க அதனாலதான் அவ தப்பு செஞ்சு நீங்க அத்தைகிட்ட மாட்டக் கூடாதுன்னு நான் கண்டிப்பா இருக்ககேன் அவ்வளவுதான்” என்று தெளிவாகப் பேசிய சாந்தியினை பார்த்து வியந்து நின்றாள் விசாலாட்சி.
“அக்கா இதெல்லாம் உங்கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்கிட்ட விசயம்தான். நான் உங்கள அக்கான்னு கூப்பிட்டாலும் நீங்க எனக்கு அம்மாதான். சரிக்கா நான் போயி அவருக்கும் ராகுலுக்கும் காபி கொடுத்து வர்றேன்” காபி டம்ளர்களுடன் தன் அறையை நோக்கிச் சென்றாள் சாந்தி.
சந்திரா தன்னுடைய மாமா விசுவநாதன் அறைக்குள் மெல்ல நுழைந்த போது அவர் அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தார்.
அதிகாலை வேளை. சூரியன் கூட விழித்து எழுந்து தன் கதிர்களை இன்னும் வீசாத நிலையில் சந்திரா விழித்து எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். சந்திரா கடிகாரத்தில் மணி பார்த்தாள். அதிகாலை நாலரை என்று அது காட்டியது.
“ஏய்! இப்பதான் உனக்கு விடிஞ்சுச்சாடி. மணி ஆறாகப் போகுது. இப்பதான் வாசக் கூட்டப் போறியா? உன்னச் சொல்லி தப்பில்ல. உன்ன செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காளே உன் அத்தே அவளச் சொல்லனும்” என்று கண்ணை உருட்டிக் கொண்டு கமலம் பாட்டி போன வாரம் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் வர பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பாட்டி விழித்து வருவதற்குள் குளித்து விட்டு வந்து வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுடனும் இல்லைன்னா நான் அவ்வளவுதான். என்னால அத்தைக்கு வேற திட்டு விழும் என்ற பயம் அவளை தொற்றிக் கொண்டதால் போர்வையை மடித்து வைத்து விட்டு, உடைகளை சரி செய்துக் கொண்டு, தன் துணிகளை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி விரைந்த சந்திரா எதிரே வந்த சின்ன அத்தை சாந்தி மீது மோதிக் கொண்டாள்.
“ஏய் சந்திரா என்ன இது? எங்க பாத்துட்டு வர்ற நீ? கண்ணு தெரியுதா இல்லையா?” என்று கோபமாகத் திட்டினாள் சாந்தி.
“மன்னிச்சுக்கோங்க அத்தே” என்ற சந்திராவின் கண்களில் கண்ணீர் குளமாகியிருந்தது.
“சரி சரி இனியாச்சும் பாத்து போ. என்ன புரிஞ்சுதா?” என்று அதட்டிவிட்டு பதிலை கூட கேட்காமல் அகல சந்திராவின் மனதில் இதுவே நம்ம அத்தையா இருந்திருந்தால் “சந்திரா செல்லம்! என்ன அவசரம்? மெதுவா போ.” என அன்பாகச் சொல்லி செல்லமாக கன்னத்தில் தட்டியிருப்பாங்க என நினைத்தவள் விசாலாட்சியின் அன்பான சிரித்த முகத்தை நினைத்தவாறு குளியலறையில் நுழைந்தாள்.
சந்திரா தலைக்குக் குளித்து விட்டு, மஞ்சள் நிறத் தாவணி பச்சை கலர் பாவாடைக்கு மாறி, தலையைத் துவட்டாமல் துண்டைக் கட்டிக் கொண்டு வாளியில் தண்ணீர், துடைப்பம், கோலப் பொடியுடன் அவசரமாய் பரபரப்புடன் வாசலுக்குச் செல்ல எதிரே அவள் அத்தை விசாலாட்சி குளிக்க வந்தாள்.
“என்ன செல்லம். இன்னிக்கும் நீ முன்னாடியே குளிச்சிட்டியா? நான்தான் லேட்டா?” என்று அன்பாய் கேட்ட அத்தையின் முகத்தை பார்த்தவுடன் கவலைகள் மறந்து ஆம் என்பது போல் புன்னகைத்தாள்.
“சரி இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லியா? நீ போயி வாசல பெருக்கி அழகா பெரிசா ஒரு புள்ளிக் கோலம் போட்டுட்டு வந்துடு. அம்மா குளிச்சிட்டு உனக்கு காபி போட்டு வைக்கிறேன் அப்புறம் பொறுமையா போ. அவசரம் எதுவும் இல்லை” என்று கன்னத்தைத் தட்டி விட்டு விசாலாட்சி குளியலறை நோக்கிச் சென்றாள்,
விசாலாட்சிக்கு வயது நாற்பதிருக்கும். அன்பான கனிவான முகம் மட்டுமல்ல; அன்பான மனமும் கொண்டவள். வீட்டின் மூத்த மருமகள். அவளின் அத்தைதான் என்றாலும் பத்து வயதிலேயே திருமணமாகி தன் குடும்பத்தைப் பிரிந்து பத்து வயதில் அந்த வீட்டில் சந்திரா நுழைந்த நாள் முதல் அவள் காட்டிய அன்பினால் தன் தாயாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆரம்பத்தில் அத்தை என்று அழைத்து வந்தவள் பின் அம்மா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டாள். அவளும் தன் மகளாகவே பாவித்ததால் எதுவும் சொல்ல வில்லை. குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களை அத்தை என்று சொன்னாலும் தனிமையில் அம்மா என்றுதான் அழைப்பாள் சந்திரா.
“சரிங்க அம்மா” என்று தலையசைத்துச் சென்ற சந்திராவுக்கு அந்த வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் அவள் விரைவாகச் சென்று, தன் மெல்லிய விரல்களால் புள்ளிக் கோலத்தை அழகான ஒவியத்தை போல் தீட்டி விட்டு, தன் கோலத்தின் அழகை ரசித்து விட்டு “சபாஷ்டி சந்திரா கலக்கிட்ட” என்று தன்னையே பாராட்டி விட்டு சமையலயறைக்குச் சென்றாள்.
அழகான சின்ன வட்ட முகமும், குறும்பு நிறைந்த மயக்கும் சிறிய விழிகளும், அடர்ந்த கருத்த கூந்தலும், சின்ன இதழ்களும், மெல்லிய பிஞ்சு கைகளும், சின்ன இடையும் மெல்லிய உடல்வாகும் உடைய பதினெட்டு வயது பெண்தான் சந்திரா.
பெரிய அரண்மனை போன்ற அந்த வீட்டில் பல வேலைகாரர்கள் இருந்தாலும் முன் வாசலைப் பெருக்கி கோலத்தை அந்த வீட்டின் மருமகள்தான் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் உத்தரவு. கமலம் பாட்டி பார்க்கும் முன் நடக்கவில்லை என்றால் வீடு ரெண்டு பட்டு விடும் என்பதால் சந்திரா முதல் வேலையாக அதை முடித்து விடுவாள்.
சந்திரா முன் வாசல் வேலையை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழையும் போது குளித்து விட்டு வந்து விசாலாட்சி காலை சமையலை ஆரம்பித்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்த சந்திரா “அம்மா நான் வரதுக்குள்ள உங்கள யாரு சமைக்க சொன்னது?” என்று செல்லமாக கடிந்துக் கொண்டாள்.
“ஏன் மகாராணி வந்து உத்தரவு கொடுத்தாதான் நான் சமைக்கனுமா?” என்று பொய் கோபத்துடன் கேட்டபடி முறைக்கவும் செய்தாள் விசாலாட்சி.
“ஆமா நான் வந்து சொன்ன பின்னாடிதான் சமைக்கனும்.” என்று அசராமல் பதில் தந்த சந்திராவை பார்த்து விசாலாட்சி சிரித்தாள்.
“அம்மா இந்த வேலை எல்லாம் பாக்கதான் நான் இருக்கேன் இல்ல. நீங்க என்ன சமைக்கனுமுன்னு சொன்னீங்கன்னா சமைச்சிட்டுப் போறேன். நீங்க ஏன் சிரமப் படறீங்க?” என்று கேட்டபடி வந்த சந்திரா இன்னும் தலை வாராதிருப்பதைக் கவனித்து விட்டாள்.
“ஆமா நீ குளிச்சிட்டு வந்து எத்தனை நேரமாச்சு? ஈரத் துண்ட இப்படியே தலையில கட்டிக்கிட்டு இருந்தா என்ன ஆகறது? சளி பிடிச்சிக்காது? நீ போயி தலைய துவட்டிட்டு வா.” என்று அன்பாக கட்டளை இட்டாள் விசாலாட்சி.
“இல்லம்மா வீட்டுல எல்லாருக்கும் காபி தரனும் அத முடிச்சிட்டு நான் உடனே செய்யறேன்” என்று சொன்னவளிடம் “சந்திரா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அதுவுமில்லாம பாட்டி பாத்தா உன் அம்மாவதான் திட்டுவாங்க. இப்ப நீ போ. நான் சொன்னா நீ கேட்பியா இல்ல மாட்டியா?” என்று மிரட்ட சரி என்று தலையசைத்துச் சென்றாள் சந்திரா.
சந்திரா செல்லும் வேளையில் எதிர் வந்த சாந்தி “ஏய்! காபி போட்டுட்டியா? அங்க பாட்டி, மாமா எல்லோரும் முழிச்சிட்டாங்க.” என்று கோபமாக இரைந்தாள்.
சந்திரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.
“இல்ல சாந்தி நான்தான் அவள தலைய துவட்டுன்னு சொல்லி அனுப்பிச்சேன், நான் காபி போட்டுட்டேன். இப்ப கொடுத்திடலாம்.” என்று பரிந்து வந்த அத்தை விசாலாட்சியிடம் “இல்லக்கா இப்பவே நேரமாச்சு. அத்தய பத்திதான் உங்களுக்கு தெரியுமில்ல.” என்று பயத்துடன் சொன்னாள் சாந்தி.
“சரி கண்ணம்மா இங்க வா. இந்த காபிய எடுத்துட்டு போயி பாட்டிக்கும் உன் மாமாவுக்கும் வேகமாக கொடுத்துட்டு வந்துடு” என்று அன்போடு சொல்ல விசாலாட்சி சொல்ல “சரிம்மா” என்று தலையசைத்து கையில் ரெண்டு காபி டம்ளர்கள் கொண்ட தட்டுடன் மாமாவின் அறையை நோக்கிச் சென்றாள் சந்திரா.
“அக்கா நம்ம சந்திரா நல்லா வளர்ந்துட்டா. ரொம்ப பொறுப்பா நடந்துக்கறா. இப்பதான் சின்ன பொண்ணா இந்த வீட்டுக்கு வந்த மாதிரி இருக்குக்கா.” என்று அவள் சென்றபின் பாராட்டினாள் சாந்தி.
“சாந்தி நீ ஏன் எப்ப பார்த்தாலும் அவள திட்டிக்கிட்டே இருக்க. கொஞ்சம் அன்பா சொல்ல வேண்டியதுதானே? அவ நல்ல பொண்ணு சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவா இல்ல” என்று விசாலாட்சி கேட்டாள்.
“அக்கா நானும் அவ நிலையில இருந்து வந்தவதான். நான் இந்த குடும்பத்தில மருமகளா வந்தப்ப நீங்கதான் என்ன பாத்துக்கிட்டிங்க. எனக்காக எவ்வளவு முறை அத்தைகிட்ட திட்டு வாங்கினிங்க அக்கா. சந்திரா நல்ல பொண்ணுதான். எனக்கும் அவள் பிடிக்கும் ஆனா நீங்க அவகிட்ட ரொம்ப அன்பா இருக்கீங்க அதனாலதான் அவ தப்பு செஞ்சு நீங்க அத்தைகிட்ட மாட்டக் கூடாதுன்னு நான் கண்டிப்பா இருக்ககேன் அவ்வளவுதான்” என்று தெளிவாகப் பேசிய சாந்தியினை பார்த்து வியந்து நின்றாள் விசாலாட்சி.
“அக்கா இதெல்லாம் உங்கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்கிட்ட விசயம்தான். நான் உங்கள அக்கான்னு கூப்பிட்டாலும் நீங்க எனக்கு அம்மாதான். சரிக்கா நான் போயி அவருக்கும் ராகுலுக்கும் காபி கொடுத்து வர்றேன்” காபி டம்ளர்களுடன் தன் அறையை நோக்கிச் சென்றாள் சாந்தி.
சந்திரா தன்னுடைய மாமா விசுவநாதன் அறைக்குள் மெல்ல நுழைந்த போது அவர் அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தார்.
Last edited: