• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dhruva kadhal - 11 teaser

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மாலை நேர காற்றை சுவாசித்தபடி, அந்த பத்தாவது மாடி அப்பார்ட்மெண்ட் பால்கனியில் நின்று கடல் அலைகளை வெறித்துக் கொண்டு நின்றாள் காவ்யஹரிணி.

துபாய் அரசு அருங்காட்சியத்தில் வேலைக்கு சேர்ந்து, கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாத காலமும், எப்படி சென்றது என்று அவளிடம் கேட்டால், அதற்கு பதில் ஒரு கசந்த புன்னகை மட்டுமே.

அன்று அரசர், faiq அவர் மகன் என்று அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், அவனின் நிச்சயத்தையும் கூறவும், அதில் அவள் மனம் அதிர்ந்தது.

அப்பொழுது தான், அவளின் மனதை முழுவதுமாக புரிந்து கொண்டாள். தான் அவன் மேல் கொண்டது ஈர்ப்பு இல்லை, உண்மையான காதலை என்று. அன்று நடந்ததை, அவள் நினைத்து பார்த்தாள்.

“வாழ்த்துக்கள்! மகனுக்கு நிச்சயம் வச்சு இருக்கும் பொழுது, இப்படி ஒரு புகைப்படம் வந்தா கண்டிப்பா கோபம் வருவது இயல்பு தான். இனி இப்படி ஒரு தவறு நடக்காது, நீங்க நிச்சய வேலைகளை பாருங்க, நாங்களும் நாளைக்கு ஊருக்கு கிளம்பனும்” என்று தாத்தா நாசுக்காக, எல்லோரும் கிளம்புவோம் என்று சொன்னதை உடனே புரிந்து கொண்டு, மொத்த குடும்பமும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்றனர்.

அப்பொழுது, காவ்யஹரிணி அவனை கடக்கும் பொழுது, அவனை ஒரு முறை பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தி பாராமல் சென்றாள்.

அதன் பிறகு, அவனை அவள் பார்க்கவில்லையே தவிர, அவனை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். மறக்க நினைத்தும், அவளால் அது முடியவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top