யாழினியின் கண்ணைக் கட்ட “ஏன்டா கண்ணுலாம் கட்ற....ரொம்ப பெரிய சர்ப்ரைஸா?” என்று கேட்க “வந்து பாரு டி தெரியும்” என்றான்.
அவளை பால்கனிக்கு அழைத்துச் சென்றவன் கண்ணில் இருந்த கட்டை அவிழ்த்து விட அவளின் முன் ஒரு அழகிய பக் நாய்க் குட்டி இருந்தது.அதைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதைத் தூக்கி அதன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள்.
அதை ஆசை தீரக் கொஞ்சி முடித்தவள் அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக விநாயக்கிடம் “அம்மாக்கு தான் நாய்னா பிடிக்காதே அப்றோம் எப்படி பெர்மிசன் வாங்குன?” என்று கேட்க அவனோ “அத்தைக்கு தெரியாது.அவங்களுக்கு தெரியாம வெச்சுக்கோ” என்று கூற அதிர்ந்தவள் “டேய் லூசு! அம்மாக்கு மட்டும் நான் நாய்க் குட்டி வளர்கிறது தெரிஞ்சுச்சு நான் செத்த” என்று அதிர்ந்தவள் நாய் குட்டியை பரிதாபமாக பார்த்தாள்.
அவளைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன் மேலும் அவளைக் கலாய்க்க தொடங்கினான்.”உனக்கு இந்த குட்டி வேணும்னா அத்தைக்கு தெரியாம தான் வளர்க்கணும்” என்று சொல்ல அவளோ “எனக்கு இந்த குட்டி வேணும் ஆனா அம்மா கிட்ட கேட்டா கண்டிப்பா அலோ பண்ண மாட்டாங்க” என்று பாவமாக கூற அவளின் முக பாவனைகளை ரசித்தவன் மேலும் அவளை வம்பிழுக்க எண்ணி “அப்ப நீ பேசாம அத்தைக்கு தெரியாம வளர்த்து” என்று கூற அவளோ அந்த நாய்க் குட்டியை அணைத்தவாறே “அது எப்படி டா முடியும்?” என்று பாவமாக கேட்க அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவன் சிரிப்தைப் பார்த்தவள் அவனை அடிக்க கை ஓங்க அவள் கையைப் பிடித்து தடுத்தவன் “ஏய் லூசு! அத்தை கிட்ட பெர்மிசன் வாங்காம எப்படி டி நான் இந்த குட்டிய வாங்கிருப்ப!!(??)” என்று புருவத்தை உயர்த்தி கேட்க அவள் ஆனந்தத்தில் அவனை அணைத்து” யூ ஆர் தி பெஸ்டஸ்ட்” என்றாள்.
அணைத்து நின்ற அவளின் தலையைப் பிடித்து இடம் வலமாக ஆட்டியவன் “வா கேக் கட் பண்ணலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.
மெழுகுவர்த்திகளுக்கு இடையில் அவளுக்குப் பிடித்த ரெட் வெல்வெட் கேக் இருந்தது.
“ஹாப்பி பர்த்டே டியர் யாழி” என்று அவன் பாட அவள் கேக் வெட்டினாள்.கேக்கை எடுத்து அவனுக்கு உட்டப் போக அவள் கையில் இருந்து கேக்கை வாங்கியவன் அவளுக்கு அதை ஊட்டினான்.பின்பு அவள் அவனுக்கு ஊட்டினால்.இன்னொரு துண்டை எடுத்து நாய் குட்டிக்கு ஊட்ட அதை அழகாக அது சாப்பிட்டது.
யாழினிக்கு சிறிய வயதிலிருந்தே நாய் வளர்க வேண்டும் என்று ஆசை.ஆனால் சந்தானலக்ஷ்மிக்கு நாய் என்றால் அலர்ஜி.அதனால் அவர் யாழினியை நாய் வளர்க்க விடவில்லை.அவளும் எவ்வளவோ அடம் பிடித்தும் அவர் கேட்கவில்லை.
யாழினிக்கு இப்பொழுது அவர் நாய் வளர்க்க சம்மதம் தெரிவித்தது மிகவும் ஆச்சர்யம்.விநாயக்கிடம்”எப்படி டா அம்மா பெர்மிசன் குடுத்தாங்க?” என்று ஆச்சர்யமாக கேட்க அவனோ “அதுக்கு எல்லாம் தனி திறமை வேண்டும்” என்று சொல்ல அவனை முறைத்தவள் “ஓவரா சீன் போடாம சொல்லு” என்று கேட்க அவன் “போ டி! போய் தூங்குற வழிய பாரு” என்று கூற அவள் அவனை முறைக்க “நாளைக்கு காலேஜ் போனும்ல...போ டி...போய்த் தூங்கு” என்றான்.
அவளும் நாய் குட்டியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றால்.விநாயக் அங்கிருந்த கேக்கை எடுத்து பிரிட்ஜில் வைத்து விட்டு தன் அறைக்குச் சென்றான்.
விநாயக் தன் அறைக்குச் சென்று மொபைலில் எதோ செய்து கொண்டிருக்கும்பொழுது அவன் அறைக்கு யாழினி அந்த நாய் குட் டியுடன் வந்தாள். “தூங்கலையா?” என்றவன் கேட்டதற்கு “இதுக்கு எதாச்சு பேர் வெக்கணும்” என்றாள்.
அவனும் அவளும் சேர்ந்து பேரை யோசித்துக் கொண்டிருந்தனர்.யாழினி ஒரு பேர் சொன்னாள் அது நல்லா இல்லை என்று அவனும் இவன் ஒன்று சொன்னால் அது நல்லா இல்லை என்று அவளும் மாத்தி மாத்தி யோசித்துக் கொண்டிருந்தனர்.
கடைசியாக “வினு” என்று விநாயக் சொல்ல அவளுக்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால் சரி என்றாள்.இருவரும் அதைக் கொஞ்ச நேரம் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
யாழினி அப்படியே உறங்கிவிட விநாயக் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு பிரிட்டோவைத் துாக்கிக் கொண்டு யாழினியின் அறைக்குச் சென்றான்.யாழினியின் மெத்தையில் பிரிட்டோவும் விநாயக்கும் உறங்கினர்.
காலையில் யாழினியின் அறைக்குச் சென்ற சந்தானலட்சுமி அங்கே விநாயக் படுத்திருப்பதைப் பார்த்து அவனை எழுப்பினார்.தூக்கத்தில் இருந்து கண் முழித்தவன் “குட் மார்னிங் அத்தை” என்க “யாழி எங்க?” என்றார் அவர். “ நேத்து நைட் கேக் வெட்டிட்டு பிரிட்டோக்கு பேர் யோசிச்சுட்டு இருந்தோமா அப்படியே அவ என் ரூம்ல தூங்கிட்டா.அதனால நான் இங்க வந்து தூங்கிட்ட” என்றான்.
சிரித்துக்கொண்டே அவர் விநாயக்கின் அறைக்குச் சென்று யாழினியை எழுப்பினார்.அவள் கண் விழித்தவுடன் “ஹாப்பி பர்த்டே யாழி” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைக்க அவரைக் கட்டிக்கொண்டவள் “தேங்க்ஸ் மா!பிரிட்டோவ அலோ பண்ணதுக்கு” என்றதற்கு அவர் “எல்லாம் அந்த விநாயக் பயல் ஆல தான்.என்கிட்ட ஒரு வாரம் கெஞ்சினான்.அப்பவும் நான் ஒதுக்கல...கடைசில ஒரு நாள் புல்லா சாப்படமா இருந்தான்...அதனால தான் ஒத்துக்கிட்ட” என்றார்.
விநாயக் எப்பொழுதும் யாழினிக்குப் பிடித்ததை எப்படியாவது நிறைவேற்றிவிடுவான்.யாழினியும் தனக்கு எதாவது காரியம் ஆகா வேண்டும் என்றால் முதலில் வந்து நிற்பது விநாயக்கிடம் தான்.விநாயக்கிற்கு எப்பொழுதும் யாழினியின் மேல் அக்கறை அதிகம்.அவளின் விருப்பு வெறுப்புகளை அவளை விட நன்றாக அறிந்து வைத்திருப்பவன் அவன் தான்.சிறு வயதிலிருந்தே யாழினியின் எல்லா செயல்களிலும் உடனிருப்பவன் அவன் தான்.
யாழினி கீழே வர அவளை அனைவரும் வாழ்த்தினர்.அவள் கல்லூரிக்கு கிளம்புவதாக சொல்ல விநாயக் அவளை தான் அழைத்துச் செல்வதாக சொன்னான்.
அவன் கூறியவுடன் அன்று பைக்கில் ப்ரியாவை அழைத்துச் சென்றது ஞாபகம் வர கோபம் கொண்டவள் “நான் பஸ்லயே போற” என்றாள்.எப்பொழுதும் தன்னை அவனுடன் அழைத்துச் செல்லுமாறு அடம் பிடிப்பவள் இன்று அவனுடன் வர மாட்டேன் என்றதால் அவளை கேள்விக்குறியாக நோக்க அவளோ அவனை கண்டுகொள்ளாமல் “பாய்” என்று கூறி சென்றாள்.
அவன் அவள் பின்னாடியே ஓடிச் சென்று அவள் கையைப் பிடித்து நிறுத்த அவளோ கோபமாக அவன் கையை உதறினாள்.அவன் “இப்ப உனக்கு என்ன டி பிரச்சனை?” என்று கேட்டதற்கு “உன்னால என்ன பைக்ல காலேஜிக்கு கூடிட்டு போக முடியாது பட் ப்ரியாவோட போக முடியும்..” என்று மூக்கு புடைக்க கூறியவளைப் பார்த்துச் சிரித்தவனைபார்த்து முறைத்தாள்.
சிரித்துக்கொண்டே அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் “லூசு! நான் வர்ற வழில அவளோட கார் பிரேக் டவுன்...அதனால லிப்ட் கேட்டா...எங்களுக்கு இன்டர்னல்ஸ் வேற...அதனால லிப்ட் குடுத்த” என்றான்.அவனது பதிலில் திருப்தி அடைந்தவள் “சாரி டா! நான் தான் தப்பா நினைச்சுட்ட” என்றவளைப் பார்த்து “சரி வா போலாம்” என்றான்.
காலேஜில் ப்ரியா கோபமாக நடந்து கொண்டிருந்தாள்.அங்கே வந்த அவள் தோழி சுஜா “ ஏன் இவளோ கோபமா இருக்க?” என்று கேட்டதற்கு தன் மொபைலை காட்டியவள் “எப்படி டி இப்படி நடந்திருக்கும்?” என்று கேட்க அவள் தோழியும் “இப்படி நடக்கும்னு நானும் எதிர்பார்கல”என்றாள்.