அன்று அலுவலகத்தில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.அன்று ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ரெவ்யூ இருந்தது.யாழினி தான் அதன் டீம் லீட்.
அதற்காக அவள் மிகவும் சிரத்தை எடுத்து குறிப்புகளை தயார் செய்து கொண்டிருந்தாள்.முகில் அவள் அறைக்குள் வந்து விநாயக் அவளை அழைப்பதாக கூற அவன் அறைக்குச் சென்றாள்.விநாயக்குடன் ப்ரியாவும் இருந்தாள்.
அவள் உள்ளே சென்றவுடன் அவள் முன்பு ஒரு பைலை காட்டி “இது என்ன?” என்று கோபமாக வினாவ இவளும் அதே தோனியில் “இது கூடவா தெரியல பைலு..” என்று கிண்டலாக சொல்ல அவள் சொன்னதில் அவனுக்கு கோபம் எகுற பைலை அவள் முகத்திற்கு நேரே தூக்கி எறிந்தவன் “உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?உனக்கு தான் ஆபீஸ் வர இண்ட்ரெஸ்ட் இல்லைல...அப்புறம் எதுக்கு இங்க வந்து என்னோட உயிரை வாங்குற?” என்று கோபத்தில் கத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இப்ப எதுக்கு கத்துற?சொல்லறத தெளிவா சொன்னதான புரியும்” என்று அவள் கேட்க “இந்த கம்பெனிக்கு நம்ம குடுத்த கொட்டேசன் விட நீ 60 லட்சம் ரூபாய் ஜாஸ்தி போட்றுக்க...” என்றான்.
“நான் ஒன்னும் ஜாஸ்தி போடலையே...எனக்கு பிரியா சொன்ன 2 சி தான் போட்டுருக்க...” என்றாள்.ப்ரியாவோ “ நான் எப்ப உன்கிட்ட 2 சி சொன்னேன்...1.40 தான சொன்னேன்...” என்றாள்.
“இல்ல நீ என்கிட்ட 2 சி தான் சொன்ன ....எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு...” என்று சொல்ல ப்ரியாவோ “இல்ல நான் உன்கிட்ட சொல்லும் போது நீ யோகேஷ் கிட்ட போன் பேசிட்டு இருந்த..அதனால நீ மாத்தி நோட் பண்ணி வெச்சுருப்ப...” என்று சொல்ல யோகேஷ் என்ற பெயரைக் கேட்ட உடன் விநாயக்கிற்கு கோபம் தலைக்கு ஏறியது.”கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல....இன்னும் என்ன சின்ன பொண்ணுனு நினைப்பா?எனக்கு நீ என்ன பண்ணுவனு தெரியாது...இந்த கோட்டேசன் இன்னும் 1 ஹவர்ல ரெடி ஆகணும்...” என்றான்.
யாழினி எதோ பேச வர அவளைத் தடுத்தவன் “போ போய் சொன்னத செய்....” என்றான்.யாழினிக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அதுவும் ப்ரியாவின் முன் அவளை அவமானப்படுத்திவிட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் அறைக்கு வந்தவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு 5 நிமிடம் அழுதவள் பின்பு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு வேலையில் ஈடுபட்டாள்.
விநாயக் குடுத்த 1 மணி நேரத்திற்கு முன்பாகவே முடித்துவிட்டாள்.அவனிடம் சென்று காண்பிக்க அவன் ஆச்சர்யம் அடைந்துவிட்டான்.யாழினி திறமைசாலி என்பது அவனுக்குத் தெரியும்..ஆனால் என்ன கொஞ்சம் சோம்பேறி...வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்ததால் பொறுப்பு கொஞ்சம் கம்மி...யாழினியை பாராட்டாமல் அவனால் இருக்க முடியவில்லை “வெரி குட் ஜாப்” என்று புன்னகைக்க அவள் “ஷால் ஐ லீவ் நொவ்?” என்று கேட்க அவள் கோபமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு தலையாட்டி தன் சமதத்தை தெரிவித்தான்
இவள் செய்த ப்ராஜெக்ட் மிகுந்த வரவேற்பை பெற்றது.அன்று வந்தவர்கள் அனைவரும் யாழினியைப் பாராட்ட அதை சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்.
அன்று இரவு மீட்டிங் முடிய 7 மணி ஆகி விட்டதால் விநாயக் யாழினியை தன்னோடு வருமாறு கூற அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் காரில் ஏறி வீட்டிற்குச் சென்று விட்டாள்.
சோர்ந்து போய் வீட்டிற்கு வரும் மகளைப் பார்த்த ரகுராம் “ஏன் தங்கம்..ப்ராஜெக்ட் வொர்க் அவுட் ஆகலையா?” என்று கேட்க “ச்சு இல்லப்பா...ப்ராஜெக்ட் சக்சஸ்...” என்றாள்.” அப்றோ ஏன் டா இவ்வளவு சோகமா இருக்க?” என்று கேட்டதற்கு “அப்பா என்னோட திறமை மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்க?” என்று கேட்டதற்கு “உன்னோட போடன்சியல் என்னனு எனக்கு தெரியும் டா” என்றார்.”அப்ப என்ன நம்ம கம்பெனியோட எம்.டியா பண்றிங்களா?” என்று கேட்க அவரும் “ஓகே டா...பட் ஏன் திடிர்னு?” என்று கேட்டதற்கு “ இல்லப்பா எவ்ளோ நாள் தான் பவர் இல்லாம இருக்கறது..அதனாலதான்...” என்று மழுப்பி தன் அறைக்குச் சென்றால்.
விநாயக் வந்தவுடன் அவனிடம் இதைப் பற்றி சொல்ல அவன் சிரித்துக்கொண்டே நடந்ததைக் கூறினான்.”அவ ஆசை பட்ட மாரி பண்ணிறலாம் மாமா...இன்னைக்கு தப்பு என்மேல தான்...விசாரிக்காம அவள திட்டிட்ட...” என்றான்.
அவளை சமாதானப்படுத்த அவள் அறைக்குச் சென்ற விநாயக் கதவைத் தட்ட வந்து திறந்தவள் ஒன்றும் பேசாமல் நின்றாள்.அவன் “சாரி யாழி...பிரியா மேல தான் தப்பு...நான் தான் விசாரிக்காம உன்ன திட்டிட்ட..” என்று மன்னிப்பு வேண்ட அவளோ “இல்ல பரவாயில்லை...யாருக்கா இருந்தாலும் அந்த டைம்ல கோபம் வரத்தான் செய்யும்...ஆஸ் அ பாஸ்சா நீ செஞ்சது கரெக்ட்தான்....பட் நான் எப்பவும் உன்ன நான் என்னோட விநாயகா தான் நினைச்ச... நமக்குள்ள எவ்வளவோ சண்டை வந்துருக்கு...ஆன எப்போதும் நாமா மத்தவங்க முன்னாடி சண்டை போட்டது இல்ல...நீ முன்னாடி சொன்னது கோபத்துல சொல்லரனு நான் இவ்வளவு நாள் நினைச்சுட்டு இருந்த...ஆன இப்ப தான் புரியுது அது உண்மைன்னு...நீங்க வேற ஒருத்தர் முன்னாடி வெச்சு என்ன திட்டுற அளவுக்கு போயிடன்ல..
தப்பு என்மேல தான்....சாரி விநாயக்..ச்சு.. பழைய மாறிய கூப்டுட சாரி மாமா... இனி உங்க லைப்ல வர மாட்ட...இவளோ நாள் உங்களை கஷ்டப்படுத்துனத்துக்கு..." என்றவள் தன் அறை கதவை சாத்தி விட்டாள்.
விநாயக் கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை.
.
அதற்காக அவள் மிகவும் சிரத்தை எடுத்து குறிப்புகளை தயார் செய்து கொண்டிருந்தாள்.முகில் அவள் அறைக்குள் வந்து விநாயக் அவளை அழைப்பதாக கூற அவன் அறைக்குச் சென்றாள்.விநாயக்குடன் ப்ரியாவும் இருந்தாள்.
அவள் உள்ளே சென்றவுடன் அவள் முன்பு ஒரு பைலை காட்டி “இது என்ன?” என்று கோபமாக வினாவ இவளும் அதே தோனியில் “இது கூடவா தெரியல பைலு..” என்று கிண்டலாக சொல்ல அவள் சொன்னதில் அவனுக்கு கோபம் எகுற பைலை அவள் முகத்திற்கு நேரே தூக்கி எறிந்தவன் “உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?உனக்கு தான் ஆபீஸ் வர இண்ட்ரெஸ்ட் இல்லைல...அப்புறம் எதுக்கு இங்க வந்து என்னோட உயிரை வாங்குற?” என்று கோபத்தில் கத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இப்ப எதுக்கு கத்துற?சொல்லறத தெளிவா சொன்னதான புரியும்” என்று அவள் கேட்க “இந்த கம்பெனிக்கு நம்ம குடுத்த கொட்டேசன் விட நீ 60 லட்சம் ரூபாய் ஜாஸ்தி போட்றுக்க...” என்றான்.
“நான் ஒன்னும் ஜாஸ்தி போடலையே...எனக்கு பிரியா சொன்ன 2 சி தான் போட்டுருக்க...” என்றாள்.ப்ரியாவோ “ நான் எப்ப உன்கிட்ட 2 சி சொன்னேன்...1.40 தான சொன்னேன்...” என்றாள்.
“இல்ல நீ என்கிட்ட 2 சி தான் சொன்ன ....எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு...” என்று சொல்ல ப்ரியாவோ “இல்ல நான் உன்கிட்ட சொல்லும் போது நீ யோகேஷ் கிட்ட போன் பேசிட்டு இருந்த..அதனால நீ மாத்தி நோட் பண்ணி வெச்சுருப்ப...” என்று சொல்ல யோகேஷ் என்ற பெயரைக் கேட்ட உடன் விநாயக்கிற்கு கோபம் தலைக்கு ஏறியது.”கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல....இன்னும் என்ன சின்ன பொண்ணுனு நினைப்பா?எனக்கு நீ என்ன பண்ணுவனு தெரியாது...இந்த கோட்டேசன் இன்னும் 1 ஹவர்ல ரெடி ஆகணும்...” என்றான்.
யாழினி எதோ பேச வர அவளைத் தடுத்தவன் “போ போய் சொன்னத செய்....” என்றான்.யாழினிக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அதுவும் ப்ரியாவின் முன் அவளை அவமானப்படுத்திவிட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் அறைக்கு வந்தவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு 5 நிமிடம் அழுதவள் பின்பு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு வேலையில் ஈடுபட்டாள்.
விநாயக் குடுத்த 1 மணி நேரத்திற்கு முன்பாகவே முடித்துவிட்டாள்.அவனிடம் சென்று காண்பிக்க அவன் ஆச்சர்யம் அடைந்துவிட்டான்.யாழினி திறமைசாலி என்பது அவனுக்குத் தெரியும்..ஆனால் என்ன கொஞ்சம் சோம்பேறி...வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்ததால் பொறுப்பு கொஞ்சம் கம்மி...யாழினியை பாராட்டாமல் அவனால் இருக்க முடியவில்லை “வெரி குட் ஜாப்” என்று புன்னகைக்க அவள் “ஷால் ஐ லீவ் நொவ்?” என்று கேட்க அவள் கோபமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு தலையாட்டி தன் சமதத்தை தெரிவித்தான்
இவள் செய்த ப்ராஜெக்ட் மிகுந்த வரவேற்பை பெற்றது.அன்று வந்தவர்கள் அனைவரும் யாழினியைப் பாராட்ட அதை சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்.
அன்று இரவு மீட்டிங் முடிய 7 மணி ஆகி விட்டதால் விநாயக் யாழினியை தன்னோடு வருமாறு கூற அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் காரில் ஏறி வீட்டிற்குச் சென்று விட்டாள்.
சோர்ந்து போய் வீட்டிற்கு வரும் மகளைப் பார்த்த ரகுராம் “ஏன் தங்கம்..ப்ராஜெக்ட் வொர்க் அவுட் ஆகலையா?” என்று கேட்க “ச்சு இல்லப்பா...ப்ராஜெக்ட் சக்சஸ்...” என்றாள்.” அப்றோ ஏன் டா இவ்வளவு சோகமா இருக்க?” என்று கேட்டதற்கு “அப்பா என்னோட திறமை மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்க?” என்று கேட்டதற்கு “உன்னோட போடன்சியல் என்னனு எனக்கு தெரியும் டா” என்றார்.”அப்ப என்ன நம்ம கம்பெனியோட எம்.டியா பண்றிங்களா?” என்று கேட்க அவரும் “ஓகே டா...பட் ஏன் திடிர்னு?” என்று கேட்டதற்கு “ இல்லப்பா எவ்ளோ நாள் தான் பவர் இல்லாம இருக்கறது..அதனாலதான்...” என்று மழுப்பி தன் அறைக்குச் சென்றால்.
விநாயக் வந்தவுடன் அவனிடம் இதைப் பற்றி சொல்ல அவன் சிரித்துக்கொண்டே நடந்ததைக் கூறினான்.”அவ ஆசை பட்ட மாரி பண்ணிறலாம் மாமா...இன்னைக்கு தப்பு என்மேல தான்...விசாரிக்காம அவள திட்டிட்ட...” என்றான்.
அவளை சமாதானப்படுத்த அவள் அறைக்குச் சென்ற விநாயக் கதவைத் தட்ட வந்து திறந்தவள் ஒன்றும் பேசாமல் நின்றாள்.அவன் “சாரி யாழி...பிரியா மேல தான் தப்பு...நான் தான் விசாரிக்காம உன்ன திட்டிட்ட..” என்று மன்னிப்பு வேண்ட அவளோ “இல்ல பரவாயில்லை...யாருக்கா இருந்தாலும் அந்த டைம்ல கோபம் வரத்தான் செய்யும்...ஆஸ் அ பாஸ்சா நீ செஞ்சது கரெக்ட்தான்....பட் நான் எப்பவும் உன்ன நான் என்னோட விநாயகா தான் நினைச்ச... நமக்குள்ள எவ்வளவோ சண்டை வந்துருக்கு...ஆன எப்போதும் நாமா மத்தவங்க முன்னாடி சண்டை போட்டது இல்ல...நீ முன்னாடி சொன்னது கோபத்துல சொல்லரனு நான் இவ்வளவு நாள் நினைச்சுட்டு இருந்த...ஆன இப்ப தான் புரியுது அது உண்மைன்னு...நீங்க வேற ஒருத்தர் முன்னாடி வெச்சு என்ன திட்டுற அளவுக்கு போயிடன்ல..
தப்பு என்மேல தான்....சாரி விநாயக்..ச்சு.. பழைய மாறிய கூப்டுட சாரி மாமா... இனி உங்க லைப்ல வர மாட்ட...இவளோ நாள் உங்களை கஷ்டப்படுத்துனத்துக்கு..." என்றவள் தன் அறை கதவை சாத்தி விட்டாள்.
விநாயக் கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை.
.