ஹரிஷையும் அபியையும் பிளைட் ஏற்றிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.விநாயக் யாழினியை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு காரை எடுக்க கார் பார்க்கிங் சென்றான்.
"எனக்கு அண்ணா யூனிவர்சிட்டி தான் வேணும்"என்று ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தது
காதில் விழ காரை எடுத்தவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
யாழினியின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு ராதை, சந்தானலட்சுமி, விநாயக்
அவளுடன் சென்றிருந்தனர்.சந்தானகிருஷ்ணன், ரகுராமிற்கு அன்று முக்கியமான மீட்டிங்
இருந்ததால் அவர்களால் யாழினியுடன் கவுன்சிலிங்கிற்கு செல்ல முடியவில்லை.
யாழினிக்கு அவர்கள் வராதது சிறு வருத்தம் தான்.ஆனாலும் எந்தக் கல்லூரி கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவள் விரும்பிய கல்லூரியிலே அவளுக்கு சீட்டுக் கிடைத்துவிட்டதால் மிகவும்
சந்தோஷமாக இருந்தாள்.விநாயக்கும் அதே கல்லூரியில் தான் பி.இ படித்து வருகிறான்.
அடுத்த நாள் காலை யாழினி காலேஜிற்கு தேவையான பொருட்கள் ஷாப்பிங் செய்ய
வேண்டும் என்று கூற ராதை சந்தானலட்சுமி யாழினி மூவரும் கிளம்பினர்.
ஒரு நாள் முழுவதும் சுற்றித் திரிந்த யாழினி எடுத்தது இரண்டே இரண்டு துணிகள் தான்.
ராதையும் சந்தானலட்சுமியும் நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டார்கள்.
இரவு வந்தவர்களை "பர்சேஸ்லா ஒரே நாள்ல முடிச்சுட்டிங்க போல" என்று விநாயக்
ஏளனமாக கேட்க ராதை அவனை முறைத்தார்.
யாழினி ஷாப்பிங் என்று சென்றுவிட்டாள் ஒரு துணி எடுப்பற்கு குறைந்தது இரண்டு மணி
நேரமாவது செய்வாள்.ஒரு துணியை எடுக்க பத்து துணியையாவது போட்டுப் பார்ப்பாள்.
அவள் துணியை மற்றவர் தேர்ந்தெடுப்பதையும் விரும்பமாட்டாள்.
சந்தானலட்சுமி " விநா நாளைக்கு நீயே யாழி கூட ஷாப்பிங் போடா.எங்களால அவ கூட
அலைய முடியல" என்று கூற சிரித்துக்கொண்டே "நாளைக்கு அவகிட்ட நான் மாட்டுனனா!"
என்று கூறி தன் சம்மதத்தை தெரிவித்தான்.
அன்று இரவு உணவின்பொழுது ரகுராம், "யாழி குட்டி பர்சேஸ்லா எப்டி போச்சு?" என்று
கேட்க அவள் "இரண்டு டிரஸ் தான் பா எடுத்த.நாளைக்கு போகனும்"என்றாள்.
சந்தானலட்சுமி, "யாழி குட்டி நீ நாளைக்கு விநாயக் கூட ஷாப்பிங் போ.எனக்கும்
அத்தைக்கும் டயர்டா இருக்கு"என்று கூற அவளும் சரியெனத் தலையசைத்தாள்.
இரவு அனைவரும் படுக்கச் சென்றுவிட தன் அறையில் படுத்த யாழினிக்கோ உறக்கம்
வரவில்லை.எழுந்து விநாயக்கின் அறைக்குச் சென்று டமார் டமார் என்று தட்ட அவன்
என்னமோ ஏதோ என்று பதறி கதவைத் திறந்தான்.
அங்கே நின்றிருந்த யாழினியைப் பார்த்து, "ஏன்டி இப்ப கதவ தட்டின?" என்று கேட்க "
இன்னைக்கு நடந்துட்டே இருந்தது நால ரொம்ப கால் வலிக்குது வினு!அமுக்கிவிடு."
என்றாள்.
அவன்"பதினெட்டு வயசாக போகுது இன்னு பாப்பா மாறியே பண்றது"என்று அவள்
தலையில் செல்லமாக அடித்தான்.
விநாயக் அவள் அறைக்குச் சென்று கால் அமுக்கிவிட தூங்கிவிட்டாள்.அப்படியே அயர்ந்து தூங்குபவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பின்பு தான் அறைக்குச் சென்றான்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு யாழினியின் அறைக்கு விநாயக் செல்ல அவள் குப்புற
படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.அவள் எழுந்து ரெடி ஆகி இருப்பாள் என்று நினைத்த
விநாயக் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
,"யாழி எந்திரி.டைம் டென் ஆச்சு." என்று விநாயக் எழுப்ப "போடா! நான் தூங்கனும் " என்றவள்
தூங்கிக்கொண்டே கூற, "நீ இப்ப எந்திருச்சு அரை மணி நேரத்துல ரெடி ஆகலினா நான்
உன்ன ஷாப்பிங் கூப்டுட்டு போகமாட்ட. என் பிரெண்ட்ஸ் கூட வெளிய போயிருவ"
என்றவன் மிரட்ட
"ப்ளிஸ் டா!நேத்து சுத்துனதுல ரொம்ப டையர்டா இருக்கு.இன்னு கொஞ்ச நேரம்
தூங்கிக்குற" என்று யாழினி கெஞ்சினாள்.அவளின் டையர்டான முகத்தைப் பார்த்தவன், "
சரி யாழு இன்னொரு அரை மணி நேரத்துல ரெடி ஆயிரு" என்று கூறினான்.
ஆனால் அவனுக்குத் தெரியும் திரும்ப அவன் போய் எழுப்பும் வரை அவள்
எழுந்திருக்கமாட்டாள் என்று.
கீழே சென்றவனிடம் ராதை, "யாழி ரெடி ஆயிட்டாளா? நான் அவளுக்கு டிபன் எடுத்து
வைக்கட்டா?" என்று கேட்க அவன் சிரித்துக்கொண்டே, "அவ இன்னும் எந்திருக்கவே இல்ல
மா" என்றான்.
சந்தானலட்சுமி கிட்சனிலிருந்து வெளியே வந்து, "அவளுக்கு கொஞ்சமாச்சு பொறுப்பு
இருக்கா?ஷாப்பிங் போனும்னு மட்டும் சொல்லுவா..ஆனா எந்திருக்க மாட்டா...நான் போய்
அவள எழுப்புற" என்று கூறினாள்.விநாயக், " அத்தை நேத்து புல்லா சுத்துன டையர்ட்ல அவ
தூங்குறா...அவ தூங்கி எந்திரிச்ச உடனே நான் கூப்டுட்டு போற" என்று அவரை
சமாதானப்படுத்தினான்.
பதினொரு மணிக்கு யாழினியின் அறைக்குச் சென்று அவளை எழுப்பினான்.அவள்
கிளம்பியதும் இருவரும் ஷாப்பிங் சென்றனர்.
11 மணிக்கு ஆரம்பித்த உடைத் தேடல் இரவு 9 மணி வரை நீண்டது.விநாயக்கை யாழினி படுத்தி எடுத்து விட்டாள்."வினு இந்த ட்ரெஸ் நல்லா இருக்கா?இந்த கலர் என்னை டல்லா காட்டுதா?இந்த ட்ரெஸ் டிசைன் நல்லா இருக்கா?" என்று பல வித கேள்விகளை கேட்டு அவனை ஒரு வழி செய்துவிட்டாள்.
விநாயக் அவனுக்குப் பிடித்த உடைகளை எடுத்துக் கொடுத்தால் " இது டிசைன் நல்லா இல்லை..இது கலர் ரொம்ப டார்க்கா இருக்கு...இது பழைய பேஷன்....இது ரொம்ப லாங்கா இருக்கு" என்று 1008 குறை கூறினாள்.
விநாயக் நொந்து விட்டான்.யாழினி எப்பொழுதும் ஷாப்பிங் சென்றாள் அதிக நேரம் செய்வாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் இப்பொழுது அவள் செய்வது மிகவும் அதிகப்படியான அலப்பறை என்று அவனுக்குத் தோன்றியது.
அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை " கிராப் டாப் கொண்டு வாங்க,கலாம்காரி டாப்ஸ் தாங்க, இதை விட லைட் கலர் காட்டுங்க,பலாசோ பான்ட் காட்டுங்க" என்று படுத்தி எடுத்து விட்டாள். அவர்களை பார்க்கையில் விநாயக்கிற்கே பாவமாக இருந்தது." யாழி அவங்க பாவம்..இருக்கிறத பாரு" என்று அவள் காதில் முணு முனுக்க அவனை முறைத்தவள் " நீ உன் வேலைய பாத்துட்டு போ டா" என்றுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.
விநாயக்கு நேரம் போகவே இல்லை...அவனும் போனை நோண்டிப் பார்த்தான்...கடையில் இருப்பவர்களை வேடிக்கை பார்த்தான்.ஆனால் நேரம் போகவே இல்லை...
"யாழி காலேஜிக்கு தான டிரஸ் எடுக்கிற... ஏதோ கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்கிற மாறி ஏன் இவ்வளவு அலப்பறை பண்ணற...சீக்கிரம் எடு" என்று கடுப்பாக கூற அவனை முறைத்தவள் "டேய் வந்து 5 ஹவர்ஸ் தான ஆச்சு.." என்று சொல்ல " வந்த 5 மணி நேரத்துல 5 ட்ரெஸ் தான் எடுத்திருக்க" என்று கடுப்பாக கூறினான்.
"சரி சரி எடுக்குற..." என்று கூறி மீண்டும் உடைகளை பார்க்கச் சென்றவளை கையைப் பிடித்து இழுத்தவன் " மணி 3 ஆச்சு...வா சாப்பிட போலாம்..." என்று அழைத்துச் சென்றான்.
ஹோட்டலிற்கு சென்றவர்கள் உணவை உண்டு முடித்தனர்.வெளிய வந்தவுடன் யாழினி ஐஸ் கோலா வேண்டும் என்று கேட்டாள். அந்த ஹோட்டலின் அருகில் ஒரு ஐஸ் கோலா கடை இருக்கும்.எப்பொழுது அங்கு சென்றாலும் யாழினி ஐஸ் கோலா சாப்பிடாமல் வர மாட்டாள்.
"உனக்கு இப்ப சளி இருக்கு...இன்னொரு நாள் வாங்கலாம்..." என்று அவளை அழைத்துச் செல்ல நினைக்க அவளோ " எனக்கு இப்பவே வேணும்...வங்கித் தா" என்று அடம் பிடிக்க அவளை முறைத்தவன் " உனக்கு ட்ரெஸ் எடுக்கணும்னா பேசாம கடைக்கு வா..இல்லனா வீட்டுக்கு போலாம்" என்று அலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.பேசாமல் கடையை நோக்கி நடந்தாள்.
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.அவள் முகத்தைப் பார்த்த விநாயக்கிற்கு பாவமாக இருந்தது.அவளிடம் அவன் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டுச் சென்றான். வெளியே சென்று ஐஸ் கோலா வாங்கியவன் திரும்ப கடைக்குச் சென்றான்.
ஐஸ் கோலவை அவளுக்கு கொடுக்க " இத நான் கேட்டப்பவே வாங்கி கொடுத்துருக்கலாம்ல ..." என்றவள் அதை ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கி விட்டாள்.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் அவளிடம் சீக்கிரம் உடையை தேர்வு செய்ய சொல்லி அவன் சொல்ல அவளோ " பாக்கலாம் பாக்கலாம்" என்றாள்."இன்னைக்கு நைட்குள்ள எவ்வளவு ட்ரெஸ் எடுக்கணுமோ எடுத்துக்கோ...இனிமேல் உன்ன ஷாப்பிங் கூப்பிட்டு போக வேண்டானு அத்தை சொல்லிட்டாங்க" என்று அசால்ட்டாக ஒரு பொய்யை சொன்னான்.அதனால் அவளும் உடையை சீக்கிரமாக தேர்வு செய்தாள்.ஒரு வழியாக 20 உடைகள் எடுத்து விட்டு இருவரும் 9 மணிக்கு கடையை விட்டு வெளியே வர அங்கே பார்த்தவர்களைப் பார்த்து அதிர்ந்தனர்.
அங்கே ஹரிஷும் அபியும் சிரித்த படியே பேசி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்களை பார்த்து ஆச்சர்யமானவர்கள் அவர்கள் முன் சென்றனர்.அங்கே இவர்கள் இருவரையும் எதிர்பார்க்கத்தவர்கள் அதிர்ந்ததனர.யாழினியும் விநாயக்கும் கோபமாக அவர்களை முறைத்தனர்.
ஹரிஷ் " மச்சான்" என்று விநாயக்கின் மேல் கை போட அவன் கையை தட்டிவிட்டவன் அவனைப் பார்த்து முறைத்து " இந்த நேரத்துல ரெண்டு பேரும் ஒட்டுக்கா என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என்று கோபமாக கேட்க "மச்சான் அது வந்து..." என்று தயங்கி " நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணறோம் டா" என்றான்." எத்தனை நாளா?" என்று அபியைப் பார்த்து கேட்க பதில் சொல்ல வாயைத் திறந்த ஹரிஷை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டான்.அபி தயங்கிய படியே " 2 மாசமா" என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
"லூசு லூசு அண்ணா சும்மா கோபமா இருக்க மாரி ஆக்ட் பண்ண...இதுக்கெல்லாம் போய் யாராச்சும் அழுவியா?ஆமா அண்ணா நான் ஹரிஷைத்தான் லவ் பண்ணரனு ஸ்ட்ரோங்கா சொல்லணும்...முதல கண்ணை தொட" என்று அவளை சமாதானப்படுத்தினான்.
"அடப்பாவி ரெண்டு மாசமா லவ் பண்ணறிங்க...ஆனா எங்ககிட்ட சொல்லவே இல்ல...எங்ககிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சு விட்டுட்டீங்க தான?" என்று கோபமாக யாழினி கேட்க " அப்படி எல்லாம் இல்லை டி... அவரு தான் உன்னோட பர்த் டே அன்னைக்கு சப்ரைசா சொல்லலாம்னு சொன்னாரு..." என்றாள்.
" அவரா...யாரு அந்த அவரு?" என்று யாழிலினி அவளை கேலி செய்ய வெட்கத்துடன் " ஹரிஷ் தான்" என்று சொல்ல " பாருடா மேடம் வெக்கம்லாம் படுறாங்க..." என்று அவளை ஓட்ட அந்த இடமே சிரிப்புச் சத்தம் நிறைந்திருந்தது .
"எப்படி டா லவ் பண்ண அரம்பிச்சிங்க?" என்று விநாயக் கேட்க " சின்ன வயசுல இருந்தே எனக்கு அவள பிடிக்கும் டா..அதனால தான் எப்போதும் அவகிட்ட வம்பு பண்ணிட்டு இருப்ப...அவளுக்கும் என்ன புடிக்கும்னு எனக்கு தெரியும்....+2 முடுச்ச உடனே சொல்லலாம்னு இருந்த....அவ +2 எக்ஸாம்ஸ் முடுஞ்ச உடனே பேஸ் புக்ல ரெக்வஸ்ட் குடுத்த...ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம்.... அப்படியே ஒரு நாள் ப்ரொபோஸ் பண்ணிட்ட...முதல அப்படி எல்லாம் எனக்கு பிலிங்ஸ் இல்லைனு பொய் சொன்ன... அப்புறம் நான் அவகிட்ட பேசவே இல்லை....அவளா என்னை தேடி வருவான்னு எனக்கு தோணுச்சு...அதே மாதிரி ரிசல்ட் வந்த உடனே நான் ஏன் அவளுக்கு போன் பண்ணலைன்னு எனக்கு போன் பண்ணி சண்டை போட்டா...அப்ப நீ என்னை உண்மையா லவ் பண்ணலையானு சொல்லி ஒரே அழுகை...அதுக்கு அப்புறம் அவளை சமாதானம் பண்ணி..." என்று சொல்ல யாழினி" அதனால தான் ரிசல்ட் வந்த அன்னைக்கு போன் வந்த உடனே தனியா போனியா?" என்று கேட்க ஆம் என்று தலை அசைத்தான்.
திடீரென்று யாரோ ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டு நினைவிற்கு வந்தான் விநாயக்.யாழினி தான் தட்டிக்கொண்டிருந்தாள்.காரை எடுக்கச் சென்றவன் 20 நிமிடம் வரை வராமல் இருக்கவே கார் பார்க்கிங்கிற்கு வந்தவள் அவன் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருப்பதைப் பார்த்து ஜன்னலைத் தட்டினாள்." சாரி" என்று கூறி வண்டியை எடுத்தான்.
"எனக்கு அண்ணா யூனிவர்சிட்டி தான் வேணும்"என்று ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தது
காதில் விழ காரை எடுத்தவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
யாழினியின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு ராதை, சந்தானலட்சுமி, விநாயக்
அவளுடன் சென்றிருந்தனர்.சந்தானகிருஷ்ணன், ரகுராமிற்கு அன்று முக்கியமான மீட்டிங்
இருந்ததால் அவர்களால் யாழினியுடன் கவுன்சிலிங்கிற்கு செல்ல முடியவில்லை.
யாழினிக்கு அவர்கள் வராதது சிறு வருத்தம் தான்.ஆனாலும் எந்தக் கல்லூரி கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவள் விரும்பிய கல்லூரியிலே அவளுக்கு சீட்டுக் கிடைத்துவிட்டதால் மிகவும்
சந்தோஷமாக இருந்தாள்.விநாயக்கும் அதே கல்லூரியில் தான் பி.இ படித்து வருகிறான்.
அடுத்த நாள் காலை யாழினி காலேஜிற்கு தேவையான பொருட்கள் ஷாப்பிங் செய்ய
வேண்டும் என்று கூற ராதை சந்தானலட்சுமி யாழினி மூவரும் கிளம்பினர்.
ஒரு நாள் முழுவதும் சுற்றித் திரிந்த யாழினி எடுத்தது இரண்டே இரண்டு துணிகள் தான்.
ராதையும் சந்தானலட்சுமியும் நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டார்கள்.
இரவு வந்தவர்களை "பர்சேஸ்லா ஒரே நாள்ல முடிச்சுட்டிங்க போல" என்று விநாயக்
ஏளனமாக கேட்க ராதை அவனை முறைத்தார்.
யாழினி ஷாப்பிங் என்று சென்றுவிட்டாள் ஒரு துணி எடுப்பற்கு குறைந்தது இரண்டு மணி
நேரமாவது செய்வாள்.ஒரு துணியை எடுக்க பத்து துணியையாவது போட்டுப் பார்ப்பாள்.
அவள் துணியை மற்றவர் தேர்ந்தெடுப்பதையும் விரும்பமாட்டாள்.
சந்தானலட்சுமி " விநா நாளைக்கு நீயே யாழி கூட ஷாப்பிங் போடா.எங்களால அவ கூட
அலைய முடியல" என்று கூற சிரித்துக்கொண்டே "நாளைக்கு அவகிட்ட நான் மாட்டுனனா!"
என்று கூறி தன் சம்மதத்தை தெரிவித்தான்.
அன்று இரவு உணவின்பொழுது ரகுராம், "யாழி குட்டி பர்சேஸ்லா எப்டி போச்சு?" என்று
கேட்க அவள் "இரண்டு டிரஸ் தான் பா எடுத்த.நாளைக்கு போகனும்"என்றாள்.
சந்தானலட்சுமி, "யாழி குட்டி நீ நாளைக்கு விநாயக் கூட ஷாப்பிங் போ.எனக்கும்
அத்தைக்கும் டயர்டா இருக்கு"என்று கூற அவளும் சரியெனத் தலையசைத்தாள்.
இரவு அனைவரும் படுக்கச் சென்றுவிட தன் அறையில் படுத்த யாழினிக்கோ உறக்கம்
வரவில்லை.எழுந்து விநாயக்கின் அறைக்குச் சென்று டமார் டமார் என்று தட்ட அவன்
என்னமோ ஏதோ என்று பதறி கதவைத் திறந்தான்.
அங்கே நின்றிருந்த யாழினியைப் பார்த்து, "ஏன்டி இப்ப கதவ தட்டின?" என்று கேட்க "
இன்னைக்கு நடந்துட்டே இருந்தது நால ரொம்ப கால் வலிக்குது வினு!அமுக்கிவிடு."
என்றாள்.
அவன்"பதினெட்டு வயசாக போகுது இன்னு பாப்பா மாறியே பண்றது"என்று அவள்
தலையில் செல்லமாக அடித்தான்.
விநாயக் அவள் அறைக்குச் சென்று கால் அமுக்கிவிட தூங்கிவிட்டாள்.அப்படியே அயர்ந்து தூங்குபவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பின்பு தான் அறைக்குச் சென்றான்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு யாழினியின் அறைக்கு விநாயக் செல்ல அவள் குப்புற
படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.அவள் எழுந்து ரெடி ஆகி இருப்பாள் என்று நினைத்த
விநாயக் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
,"யாழி எந்திரி.டைம் டென் ஆச்சு." என்று விநாயக் எழுப்ப "போடா! நான் தூங்கனும் " என்றவள்
தூங்கிக்கொண்டே கூற, "நீ இப்ப எந்திருச்சு அரை மணி நேரத்துல ரெடி ஆகலினா நான்
உன்ன ஷாப்பிங் கூப்டுட்டு போகமாட்ட. என் பிரெண்ட்ஸ் கூட வெளிய போயிருவ"
என்றவன் மிரட்ட
"ப்ளிஸ் டா!நேத்து சுத்துனதுல ரொம்ப டையர்டா இருக்கு.இன்னு கொஞ்ச நேரம்
தூங்கிக்குற" என்று யாழினி கெஞ்சினாள்.அவளின் டையர்டான முகத்தைப் பார்த்தவன், "
சரி யாழு இன்னொரு அரை மணி நேரத்துல ரெடி ஆயிரு" என்று கூறினான்.
ஆனால் அவனுக்குத் தெரியும் திரும்ப அவன் போய் எழுப்பும் வரை அவள்
எழுந்திருக்கமாட்டாள் என்று.
கீழே சென்றவனிடம் ராதை, "யாழி ரெடி ஆயிட்டாளா? நான் அவளுக்கு டிபன் எடுத்து
வைக்கட்டா?" என்று கேட்க அவன் சிரித்துக்கொண்டே, "அவ இன்னும் எந்திருக்கவே இல்ல
மா" என்றான்.
சந்தானலட்சுமி கிட்சனிலிருந்து வெளியே வந்து, "அவளுக்கு கொஞ்சமாச்சு பொறுப்பு
இருக்கா?ஷாப்பிங் போனும்னு மட்டும் சொல்லுவா..ஆனா எந்திருக்க மாட்டா...நான் போய்
அவள எழுப்புற" என்று கூறினாள்.விநாயக், " அத்தை நேத்து புல்லா சுத்துன டையர்ட்ல அவ
தூங்குறா...அவ தூங்கி எந்திரிச்ச உடனே நான் கூப்டுட்டு போற" என்று அவரை
சமாதானப்படுத்தினான்.
பதினொரு மணிக்கு யாழினியின் அறைக்குச் சென்று அவளை எழுப்பினான்.அவள்
கிளம்பியதும் இருவரும் ஷாப்பிங் சென்றனர்.
11 மணிக்கு ஆரம்பித்த உடைத் தேடல் இரவு 9 மணி வரை நீண்டது.விநாயக்கை யாழினி படுத்தி எடுத்து விட்டாள்."வினு இந்த ட்ரெஸ் நல்லா இருக்கா?இந்த கலர் என்னை டல்லா காட்டுதா?இந்த ட்ரெஸ் டிசைன் நல்லா இருக்கா?" என்று பல வித கேள்விகளை கேட்டு அவனை ஒரு வழி செய்துவிட்டாள்.
விநாயக் அவனுக்குப் பிடித்த உடைகளை எடுத்துக் கொடுத்தால் " இது டிசைன் நல்லா இல்லை..இது கலர் ரொம்ப டார்க்கா இருக்கு...இது பழைய பேஷன்....இது ரொம்ப லாங்கா இருக்கு" என்று 1008 குறை கூறினாள்.
விநாயக் நொந்து விட்டான்.யாழினி எப்பொழுதும் ஷாப்பிங் சென்றாள் அதிக நேரம் செய்வாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் இப்பொழுது அவள் செய்வது மிகவும் அதிகப்படியான அலப்பறை என்று அவனுக்குத் தோன்றியது.
அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை " கிராப் டாப் கொண்டு வாங்க,கலாம்காரி டாப்ஸ் தாங்க, இதை விட லைட் கலர் காட்டுங்க,பலாசோ பான்ட் காட்டுங்க" என்று படுத்தி எடுத்து விட்டாள். அவர்களை பார்க்கையில் விநாயக்கிற்கே பாவமாக இருந்தது." யாழி அவங்க பாவம்..இருக்கிறத பாரு" என்று அவள் காதில் முணு முனுக்க அவனை முறைத்தவள் " நீ உன் வேலைய பாத்துட்டு போ டா" என்றுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.
விநாயக்கு நேரம் போகவே இல்லை...அவனும் போனை நோண்டிப் பார்த்தான்...கடையில் இருப்பவர்களை வேடிக்கை பார்த்தான்.ஆனால் நேரம் போகவே இல்லை...
"யாழி காலேஜிக்கு தான டிரஸ் எடுக்கிற... ஏதோ கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்கிற மாறி ஏன் இவ்வளவு அலப்பறை பண்ணற...சீக்கிரம் எடு" என்று கடுப்பாக கூற அவனை முறைத்தவள் "டேய் வந்து 5 ஹவர்ஸ் தான ஆச்சு.." என்று சொல்ல " வந்த 5 மணி நேரத்துல 5 ட்ரெஸ் தான் எடுத்திருக்க" என்று கடுப்பாக கூறினான்.
"சரி சரி எடுக்குற..." என்று கூறி மீண்டும் உடைகளை பார்க்கச் சென்றவளை கையைப் பிடித்து இழுத்தவன் " மணி 3 ஆச்சு...வா சாப்பிட போலாம்..." என்று அழைத்துச் சென்றான்.
ஹோட்டலிற்கு சென்றவர்கள் உணவை உண்டு முடித்தனர்.வெளிய வந்தவுடன் யாழினி ஐஸ் கோலா வேண்டும் என்று கேட்டாள். அந்த ஹோட்டலின் அருகில் ஒரு ஐஸ் கோலா கடை இருக்கும்.எப்பொழுது அங்கு சென்றாலும் யாழினி ஐஸ் கோலா சாப்பிடாமல் வர மாட்டாள்.
"உனக்கு இப்ப சளி இருக்கு...இன்னொரு நாள் வாங்கலாம்..." என்று அவளை அழைத்துச் செல்ல நினைக்க அவளோ " எனக்கு இப்பவே வேணும்...வங்கித் தா" என்று அடம் பிடிக்க அவளை முறைத்தவன் " உனக்கு ட்ரெஸ் எடுக்கணும்னா பேசாம கடைக்கு வா..இல்லனா வீட்டுக்கு போலாம்" என்று அலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.பேசாமல் கடையை நோக்கி நடந்தாள்.
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.அவள் முகத்தைப் பார்த்த விநாயக்கிற்கு பாவமாக இருந்தது.அவளிடம் அவன் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டுச் சென்றான். வெளியே சென்று ஐஸ் கோலா வாங்கியவன் திரும்ப கடைக்குச் சென்றான்.
ஐஸ் கோலவை அவளுக்கு கொடுக்க " இத நான் கேட்டப்பவே வாங்கி கொடுத்துருக்கலாம்ல ..." என்றவள் அதை ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கி விட்டாள்.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் அவளிடம் சீக்கிரம் உடையை தேர்வு செய்ய சொல்லி அவன் சொல்ல அவளோ " பாக்கலாம் பாக்கலாம்" என்றாள்."இன்னைக்கு நைட்குள்ள எவ்வளவு ட்ரெஸ் எடுக்கணுமோ எடுத்துக்கோ...இனிமேல் உன்ன ஷாப்பிங் கூப்பிட்டு போக வேண்டானு அத்தை சொல்லிட்டாங்க" என்று அசால்ட்டாக ஒரு பொய்யை சொன்னான்.அதனால் அவளும் உடையை சீக்கிரமாக தேர்வு செய்தாள்.ஒரு வழியாக 20 உடைகள் எடுத்து விட்டு இருவரும் 9 மணிக்கு கடையை விட்டு வெளியே வர அங்கே பார்த்தவர்களைப் பார்த்து அதிர்ந்தனர்.
அங்கே ஹரிஷும் அபியும் சிரித்த படியே பேசி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்களை பார்த்து ஆச்சர்யமானவர்கள் அவர்கள் முன் சென்றனர்.அங்கே இவர்கள் இருவரையும் எதிர்பார்க்கத்தவர்கள் அதிர்ந்ததனர.யாழினியும் விநாயக்கும் கோபமாக அவர்களை முறைத்தனர்.
ஹரிஷ் " மச்சான்" என்று விநாயக்கின் மேல் கை போட அவன் கையை தட்டிவிட்டவன் அவனைப் பார்த்து முறைத்து " இந்த நேரத்துல ரெண்டு பேரும் ஒட்டுக்கா என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என்று கோபமாக கேட்க "மச்சான் அது வந்து..." என்று தயங்கி " நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணறோம் டா" என்றான்." எத்தனை நாளா?" என்று அபியைப் பார்த்து கேட்க பதில் சொல்ல வாயைத் திறந்த ஹரிஷை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டான்.அபி தயங்கிய படியே " 2 மாசமா" என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
"லூசு லூசு அண்ணா சும்மா கோபமா இருக்க மாரி ஆக்ட் பண்ண...இதுக்கெல்லாம் போய் யாராச்சும் அழுவியா?ஆமா அண்ணா நான் ஹரிஷைத்தான் லவ் பண்ணரனு ஸ்ட்ரோங்கா சொல்லணும்...முதல கண்ணை தொட" என்று அவளை சமாதானப்படுத்தினான்.
"அடப்பாவி ரெண்டு மாசமா லவ் பண்ணறிங்க...ஆனா எங்ககிட்ட சொல்லவே இல்ல...எங்ககிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சு விட்டுட்டீங்க தான?" என்று கோபமாக யாழினி கேட்க " அப்படி எல்லாம் இல்லை டி... அவரு தான் உன்னோட பர்த் டே அன்னைக்கு சப்ரைசா சொல்லலாம்னு சொன்னாரு..." என்றாள்.
" அவரா...யாரு அந்த அவரு?" என்று யாழிலினி அவளை கேலி செய்ய வெட்கத்துடன் " ஹரிஷ் தான்" என்று சொல்ல " பாருடா மேடம் வெக்கம்லாம் படுறாங்க..." என்று அவளை ஓட்ட அந்த இடமே சிரிப்புச் சத்தம் நிறைந்திருந்தது .
"எப்படி டா லவ் பண்ண அரம்பிச்சிங்க?" என்று விநாயக் கேட்க " சின்ன வயசுல இருந்தே எனக்கு அவள பிடிக்கும் டா..அதனால தான் எப்போதும் அவகிட்ட வம்பு பண்ணிட்டு இருப்ப...அவளுக்கும் என்ன புடிக்கும்னு எனக்கு தெரியும்....+2 முடுச்ச உடனே சொல்லலாம்னு இருந்த....அவ +2 எக்ஸாம்ஸ் முடுஞ்ச உடனே பேஸ் புக்ல ரெக்வஸ்ட் குடுத்த...ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம்.... அப்படியே ஒரு நாள் ப்ரொபோஸ் பண்ணிட்ட...முதல அப்படி எல்லாம் எனக்கு பிலிங்ஸ் இல்லைனு பொய் சொன்ன... அப்புறம் நான் அவகிட்ட பேசவே இல்லை....அவளா என்னை தேடி வருவான்னு எனக்கு தோணுச்சு...அதே மாதிரி ரிசல்ட் வந்த உடனே நான் ஏன் அவளுக்கு போன் பண்ணலைன்னு எனக்கு போன் பண்ணி சண்டை போட்டா...அப்ப நீ என்னை உண்மையா லவ் பண்ணலையானு சொல்லி ஒரே அழுகை...அதுக்கு அப்புறம் அவளை சமாதானம் பண்ணி..." என்று சொல்ல யாழினி" அதனால தான் ரிசல்ட் வந்த அன்னைக்கு போன் வந்த உடனே தனியா போனியா?" என்று கேட்க ஆம் என்று தலை அசைத்தான்.
திடீரென்று யாரோ ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டு நினைவிற்கு வந்தான் விநாயக்.யாழினி தான் தட்டிக்கொண்டிருந்தாள்.காரை எடுக்கச் சென்றவன் 20 நிமிடம் வரை வராமல் இருக்கவே கார் பார்க்கிங்கிற்கு வந்தவள் அவன் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருப்பதைப் பார்த்து ஜன்னலைத் தட்டினாள்." சாரி" என்று கூறி வண்டியை எடுத்தான்.