• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
காரை எடுத்த விநாயக் தன் அலுவலகம் நோக்கி காரைச் செலுத்தினான்.அலுவலகம் சென்றவுடன் விநாயக் காரை நிறுத்த கார் பார்க்கிங் செல்ல வண்டியில் இருந்து இறங்கிய யாழினி தன் அறையை நோக்கிச் சென்றாள்.காரை நிறுத்தி விட்டு தன் அறைக்குச் சென்றவன் அன்று வந்திருந்த மெயில்களை செக் செய்து கொண்டிருந்தான்.

இன்டர்காம் ஒலிக்க அதை எடுத்தவன் எதிரில் சொன்னதைக் கேட்டு "ம்ம்..சரி வர சொல்லுங்க" என்று கூறி போனை வைத்தான்.

அவன் அறைக்குள் நுழைந்த பிரியவைப் பார்த்து புன்னகைத்து " ஹாய்" ஒன்றை உதிர்த்தான்.அவளும் அவனும் பொதுவான சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர்.பின்பு மெதுவாக பிரியா தயங்கிக் கொண்டே "விநாயக் கேன் ஐ ஆஸ்க் யூ அ பேவர்?" என்று கேட்க விநாயக்கோ , " லிஸன் பிரியா! நீ என்னோட பிரண்ட். என்கிட்ட ஹெல்ப் கேக்க நீ தயங்க வேண்டியதில்லை...உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னு கேளு...என்னால முடுஞ்சா கண்டிப்பா நான் அதை செய்யுற.."என்று கூற "நீ எனக்கு பிரண்ட் மட்டு இல்ல விநாயக் ....என்னோட வெல்விஷறும் நீ தான்!நீ பண்ண உதவிய நான் என்னைக்கும் மறக்கமாட்ட...நான் இப்ப உயிரோட இருக்கனா அதுக்கு காரணமே நீ தான்" என்று கூறி அழுதாள்.

விநாயக், "பிரியா என்ன இது சின்ன பொண்ணு மாறி ...முதல்ல கண்ண தோட.....உனக்கு என்ன ப்ராப்ளம் வந்தாலும் நான் பாத்துக்குற...என்ன விஷயம் சொல்லு...." என்று கேட்க பிரியா மீண்டும் விசும்பினாள்.

"..ச்சு...என்ன பிரியா இது சின்ன குழந்தை மாறி...அழாத..."என்று கூற அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அவளை சமாதானம் செய்ய இருக்கையிலிருந்து எழுந்த விநாயக் அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்.தண்ணீர் குடித்த அவன் கைகளைப் பிடித்தவள் மீண்டும் குழுங்கி குழுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் சமாதானம் ஆகும் வரை சிறிது நேரம் காத்திருந்தவன் அவள் அழுகை சிறிது கம்மி ஆனதும் " சொல்லு மா.." என்று கேட்க " அம்மா எனக்கு போன் பண்ணி ஜெர்மனி வர சொன்னாங்க..நான் போக மாட்டேன்னு சொன்ன...அதனால அவங்களுக்கு என்மேல செம்ம கோபம்...இங்க வேலைக்கு போய் சம்பாரிக்குற திமுறுல தான வர மாடங்குற... நான் என்ன பண்ணற பாருன்னு சொல்லி போன வெச்சுட்டாங்க... அப்புறம் 2 டேஸ் கழிச்சு என்ன ஆபீஸ்ல இருந்து தூக்கிட்டாங்க.. ரீஸன் என்னனு கேட்டதுக்கு எங்க டீம் லீட் மேல் இடத்து ஆர்டர் மா...எதுக்குன்னு தெரியலுன்னு சொல்லறாரு...அம்மா தான் ஏதாச்சும் பண்ணிருப்பாங்கன்னு எனக்கு தோணுது...இப்ப நான் வேற ஆஃபீஸ் போனா கூட அம்மா இப்படி தான் ஏதாச்சும் பண்ணுவாங்க...அதனால உன்னோட ஆஃபீஸ்லயே எனக்கு ஏதாச்சும் வேலை தரியா? ப்ளிஸ்..." என்று சொல்ல " கண்டிப்பா தர பிரியா...உனக்கு இல்லாததா?" என்றவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு "இங்க இப்ப கரெண்டா டீம் லீட் போஸ்ட் ஒன்னு காலியா இருக்கு...உனக்கு ஒகே வா?" என்று கேட்க "இட்ஸ் மை ப்ளசர்... தேங்க்ஸ் விநாயக்" என்று ஆனந்தமாக கூறினாள்.
அப்பொழுது தீடீரென்று கதவைத் திறந்துகொண்டு யாழினி உள்ளே வர இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
விநாயக் பிரியாவைவிட்டு எப்படி விலகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததாள் யாழினி வந்ததைக் கவனிக்கவில்லை.ஆனால் பிரியா பார்த்துவிட்டாள்.
யாழினியைப் பார்த்த பிரியா வேண்டுமென்றே விநாயக்குடன் ஒட்டி மீண்டும் அழத் தொடங்கினாள்.

"இப்ப என்னாச்சு ப்ரி.. திரும்ப ஏன் அழுகுற?" என்று வினவ " நீ மட்டும் இல்லைனா இப்ப என்ன பண்ணிருப்பனு நினைச்ச...அதனால அழுகை வந்துறுச்சு..." என்று கூறி மேலும் விசிம்பினாள்.

அவன் அவளை ப்ரி என்று அழைத்ததால் யாழினிக்கு கோபம் வந்தது.இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் " இந்த பேப்பர்ல சைன் வேணும்" என்றாள்.

பிரியா யாழினியை பார்த்து நட்பாக புன்னகைக்க யாழினியின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.விநாயக்கிற்கு நன்றாகத் தெரிந்தது யாழினிக்கு பிரியா இங்கு வந்தது புடிக்கவில்லை என்று.அவன் மனதுக்குள் "ஒரு சின்ன தப்பு பிரியா பண்ணத்துக்கு இவ ஏன் எப்பவும் ப்ரியாவ வில்லி மாறியே பாக்குறா...இன்னும் மேச்சுரிட்டியே வரல" என்று நினைத்தான்.

அந்த பேப்பரில் சைன் போட்டவன் அவளிடம் சில அலுவலக சம்மந்தப்பட்ட விஷயங்களை கேட்டுக்கொண்டு இருந்தான்.

பின்பு "பிரியா இங்க டீம் லீட்டா ஜாயின் பண்ணிருக்காங்க... ஈவினிங் அவங்கள இன்டர்டியூஸ் பண்ண ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணிரு" என்றான்.

யாழினியின் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.ஒன்றும் சொல்லாமல் "ம்ம்.." என்று விட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.
தன் அறைக்குச் சென்றவள் டேபிளின் மேல் அப்படியே படுத்தாள். அவள் அனுமதி கேட்காமலேயே கண்ணீர் வந்து கொண்டிருந்தது.தனக்கு பிரியவைப் பிடிக்காது என்பதைத் தெரிந்தும் அவளை வேலைக்கு சேர்த்தவனை நினைத்து கோபம் வந்தது.அவளால் தான் இன்று இவர்கள் பேசாமல் இருக்கின்றனர்...ஆனாலும் அவன் இவளை வேலைக்கு சேர்த்ததை நினைத்து மனம் சுட்டது.

விநாயக்கோ முற்றிலும் வேறு மன நிலையில் இருந்தான். தன்னை ...தன்னுடைய பாசத்தை ஒரு மூன்றாம் நபர் சொன்னத்தைக் கேட்டு சந்தேகப்பட்டு அவனிடம் சண்டை போட்டவளை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தவன் யோசித்து செயல்பட துடங்கினான்.

ஈவினிங் ப்ரியாவை வரவேற்க ஒரு மீட்டிங் வைத்து அவளை அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான் விநாயக்.யாழினிக்கு தலை வலித்தது...எப்போது வீட்டிற்கு போவோம் என்றிருந்தது.

ஒரு வழியாக மணி 6 ஆக கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது அவள் அன்று விநாயக்குடன் வந்தது.

"ச்சு.." என்று சலித்தவள் அவனுக்கு கால் செய்தாள்.முதல் இரண்டு முறை போன் எடுக்காமல் போகவே அவனை பார்க்கச் சென்றாள். அவள் படிக்கு அருகில் செல்கையில் விநாயக்கும் பிரியாவும் சிரித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்தவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.பற்களை கடித்து தன்னைக் கட்டுப்படுத்தியவள் காரை நோக்கிச் சென்றாள்.

"விநாயக் நான் வரப்ப ஆட்டோல வந்த...உனக்கு பராப்ளம் இல்லைனா என்ன வீட்ல ட்ராப் பண்ணிறியா?" என்று கேட்க " இதுல என்ன இருக்கு பிரி...நான் உன்ன ட்ராப் பண்ணற" என்றான்.

யாழினிக்கு எங்கயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.விநாயக்கிடம்"எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு...அதனால நான் கேப்ல போற" என்று கூற அவளை நன்றாக முறைத்தவன் " பிரியாவ வீட்ல விட்டுட்டு உன் வொர்க்க போய் பாக்கலாம்" என்றான்.ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும் அவளுக்கு பிரியா வருவது பிடிக்காமல் தான் வேலை இருப்பதாக பொய் சொல்கிறாள் என்று.

வேறு வழி இல்லாமல் யாழினி விநாயக்குடன் சென்றாள். யாழினியும் விநாயக்கும் முன்னால் அமர்ந்து கொள்ள பிரியா பின்னால் அமர்ந்து கொண்டாள்.யாழினியின் முகம் கோபத்தில் செர்ரி சிகப்பாக சிவந்து கிடந்தது.அப்பொழுது பார்த்து எப்.எம்மில்

"ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி
உன்கூட தான் போட்டோ புடுச்ச டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுத்தா ஹனி மூணுல"

என்ற பாட்டு ஒலிக்க மேலும் கோபம் அடைந்தவள் அதை அணைத்தாள்.விநாயகிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.அவளுக்கு அந்தப் பாட்டு பிடிக்கவே பிடிக்காது.சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்று முடியாமல் சிரித்து விட்டான்.அவன் சிரிப்பதை பார்த்து மேலும் கோபம் வர அவனை முதுகில் அடித்தாள்.

ப்ரியாவிற்கு விநாயக் ஏன் சிரித்தான் என்பது புரியவில்லை மேலும் யாழினி அவனை அடுத்தவுடன் அந்தப் பாட்டிற்காக தான் அவன் அவளை அடித்தான் என்பதை புரிந்து கொண்டாள்.அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை என்று நினைத்த பிரியா இப்பொழுது பழைய மாதிரியே இருக்க குழப்பம் அடைந்தவள் அவர்களை பிரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.


ப்ரியாவின் வீடு வந்துவிட அவள் இறங்கி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்தாள்."இன்னொரு நாள் வரோம் பிரியா" என்று விநாயக் சொல்ல அவனிடம் " டெய்லி நான் மட்டும் தனியா இருக்க கஷ்டமா இருக்கு...நீங்க ரெண்டு பேரும் வந்திங்கனா ரொம்ப சந்தோஷப் படுவ..." என்று சொல்ல மறுக்க முடியாமல் விநாயக் காரில் இருந்து இறங்கினான்.யாழி னியையும் வருமாறு கண்களால் சைகை செய்ய வேறு வழி இல்லாமல் அவன் பின்பு சென்றாள்.

பிரியா ஒரு ஒற்றை படுக்கை அறை அப்பார்ட்மென்டில் வசித்து வந்தாள். அங்கு கிட்டத்தட்ட 100 குடி இருப்புகள் இருந்தன.அவள் வீடு மிகவும் அழகாக இருந்தது.அதைப் பார்த்ததும் யாழினிக்கு விநாயக் ஒரு நாள் கூறியது நினைவுக்கு வந்தது " ரூம் எப்பவும் நீட்டா இருக்கணும் யாழி...கொஞ்சமாச்சு ரூம்ம நீட்டா வெச்சு பழகு..." .ஆனால் இன்று வரை அவள் அவன் சொன்னதை செய்யவில்லை.

விநாயக்கின் அறை மிகவும் சுத்தமாக இருக்கும்.அவனுக்கு அறை அழகாக சுத்தமாக இருந்தால் தான் புடிக்கும்...ஆனால் யாழினி அதுக்கு நேர் எதிர்..எப்பொழுதும் அறையில் எல்லா பொருட்களும் சிதறிக் கிடக்கும் ...விநாயக்கும் அவளுக்கு பல விதமாக சொல்லிப் பார்த்து விட்டான்... ஆனால் அவள் அவன் சொன்னதற்கு செவி சாய்க்கவில்லை...ராதை கூட திட்டுவார் "பாரு டி...அவன் பையன்...அவனே ரூமே எவ்வளவு நீட்டா வெச்சுருக்கான்.. நீ போட்ட புள்ள ரூம எவ்வளவு அசிங்கமா வெச்சுருக்க..." என்று திட்டுவார்.

பிரியா இருவருக்கும் ஆப்பிள் ஜுஸ் கொண்டு வர தன் நினைவுகளில் இருந்து மீண்டாள்.மூவரும் ஜூஸைப் பருக ஆரம்பித்தனர்."ஜூஸ் நல்ல இருக்கு ப்ரி..." என்று விநாயக் சொல்ல யாழினிக்கு புரை ஏறியது.அன்றொரு நாள் அவனுக்கு அவள் ஆப்பிள் ஜுஸ் போட்டுக் கொடுக்க அதைக் குடித்தவன் "இது ஆப்பிள் ஜூஸ்சா இல்ல அரிசி கழிஞ்ச தண்ணியானு எனக்கு சந்தேகமா இருக்கு" என்றவன் கிண்டல் செய்தது ஞாபகம் வந்தது.

பழைய விநாயக் எப்பொழுதும் அவளை ஓட்டு அவளை சிரிக்க வைப்பான்.ஆனால் இப்பொழுதோ எப்பொழுதும் ஏதாவது திட்டி அவளை அழ வைத்துக் கொண்டிருக்கிறான்.இதை நினைக்கையில் அவள் கண்ணில் கண்ணீர் கட்டி விட்டது.

திடீரென்று விநாயக் அவள் கையை தொடவும் நினைவு பெற்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவன்" யாழினி வா போலாம்" என்றான்.ப்ரியாவிடம் விடை பெற்று இருவரும் காரை நோக்கிச் சென்றனர்.

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.யாழினி கண்ணை மூடி தலையை சாய்த்து ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தாள். விநாயக்கும் அமைதியாக காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

"க்கும்" என்று விநாயக் தொண்டையை கணைக்க யாழினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்."உனக்கு ஏன் பிரியாவ புடிக்கவே மாட்டேங்குது?" என்று கேட்க 'காலைல லேட் ஆச்சு காருக்கு வான்னு கூப்பிடமா வேலைகரங்கள வெச்சு கூப்பிட சொல்லிட்டு ...இப்ப ப்ரியாவ பத்தி பேசனும்னா மட்டும் பேசுறான்..இடியட்' என்று மனதுக்குள் நினைத்தவள் " அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்றாள்.

"அப்படியா?" என்றவன் கேட்ட கேள்வியில்லையே அவன் அதை நம்ப வில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது."ஆமா எனக்கு அவள புடிக்கல...அவ உன்ன பாக்குறது புடிக்கல...உன்கிட்ட பேசறது புடிக்கல...அப்புறம்..." என்று ஏதோ சொல்ல வருவதற்குள் டமார் என்ற சத்தம் கேட்க அதிர்ந்து ரோட்டை நோக்கினாள் யாழினி.

எதிர்புறம் வந்து கொண்டிருந்த லாரி ஒரு இருசக்கர வாகனத்தின் மேல் மோதி அதில் வந்து கொண்டிருந்தவர் தூக்கி வீசப்பட்டர்்.அதைப் பார்த்த யாழினிக்கு சப்த நாடியும் ஓடிங்கி விட்டது.அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சிற்கு அழைத்து அவரை அதில் ஏற்றினர்.விநாயக் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.யாழினி காரில் இருந்து இறங்கவில்லை...கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது கொண்டு இருந்தது.வாய் கந்த சஷ்டி கவசத்தை முணு முணுத்துக் கொண்டு இருந்தது. வெளியே ஆம்புலன்ஸ் சென்றதும் காரிற்குள் வந்தான்.அவன் உள்ளே வந்தவுடன் அவனை கட்டி அணைத்தவள் கதறி விட்டாள்."அவருக்கு ஒன்னும் இல்லை டா...சரி ஆயிரும்" என்று அவளை சமாதானப்படுத்த முயல அவள் அழுது கொண்டே தான் இருந்தாள். அவள் அழுகை குறையும் வரை அவளை முதுகை நீவி விட்டு இருந்தவன் அழுகை சற்று குறைந்ததும் ஒன்றும் பேசாமல் காரை எடுத்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
Kaniskavarna டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Kaniskavarna டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
விநாயக் பிரீயா மேல வெறுப்பு இல்லை உன் மேல் இருக்கற காதல் அவளை அப்படி செய்ய வைக்குது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top