ரஞ்சிதா எதுவும் சொல்லாமல் இருப்பதும், கண்ணாத்தாளின் அமைதியும், அவளின் பேச்சும் தனலட்சுமிக்கு சந்தேகத்தை கிளப்ப யோசித்தவாறு சென்றாள்.
அவள் சென்ற சில நிமிடங்களில் வந்து சேர்ந்த ஆனந்தன் தன் மனைவியை பார்த்து பிரமித்து நின்று விட்டான்.
"வாவ் கண்ணா... சூப்பராக இருக்கிறாய்" என்று ஆனந்தன் பாராட்ட அவள் சிரித்தாள்.
"ரஞ்சிதா... நீயும் சூப்பராக மாறி விட்டாய்" என்று பாராட்ட ரஞ்சிதாவுக்கும் சந்தோஷம்.
"என்னங்க... இனி உங்கள் கூட வேலை பன்னுகிறவங்கள் உங்களை கேலி செய்ய மாட்டார்கள் இல்லையா" என்றாள் கண்ணாத்தாள்.
"கேலி செய்ய மாட்டாங்க கண்ணா ஆனால் இனி ஆனந்தனுக்கு இப்படி ஒரு மனைவியா என்று பொறாமை படுவார்கள்"என்றான் ஆனந்தன்.
"உங்களை இனி யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்க எனக்கு அதுவே போதும்." என்ற கண்ணாத்தாளை பெருமையாக பார்த்து சிரித்தான்.
"சரி வாங்க போகலாம்" என்று ஆனந்தன் சொல்ல அவனுடன் காரில் கிளம்பி இருவரும் மண்டபத்திற்கு சென்றார்கள்.
மண்டபத்தின் முன் வாசலில் வெட்டிங் ரிசப்ஷன் ஆனந்தன் கண்ணாத்தாள் என்ற அவர்கள் இருவரின் பெயர் மற்றும் தேதி பொறிக்கபட்ட சின்ன போர்டு அலங்காரம் செய்யபட்டு இருந்தது.
ரிசப்ஷன் தொடங்க இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் உள்ளதால் மண்டபத்தில் அதிக நபர்கள் இல்லை.
ஆனந்தன் வீட்டு ஆட்கள், கண்ணாத்தாள் வீட்டு ஆட்கள் என்று அந்த பத்து நபர்கள் மத்தபடி வேலை ஆட்கள். மங்கல வாத்தியகாரர்கள், வீடியோ எடுப்பவர்கள் மட்டும் இருந்தனர்.
கண்ணாத்தாள் மாமாக்கள் சமையலை பார்க்க, மற்றவர்கள் வரவேற்புக்கு ஆயுத்தமாக பெண்கள் இறுதியாக தங்களை தயார் செய்து வந்தனர்.
கண்ணாத்தாளுக்கு எந்த வேலையும் இல்லாமல் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபடி இருந்தாள்.
அவள் கண்கள் மற்றவர்களை பார்த்தாலும் சிந்தனை எல்லாம் அவள் அக்காவை சுற்றியே இருந்து வந்தது.
இந்த அக்காவும், அர்ச்சனா அக்காவும் எங்கே இன்னும் காணோம். கொஞ்சம் சீக்கீரமாகதான் வந்தால் என்ன என்று அவள் மனம் சிந்தித்தது.
அவளின் மனதின் கேட்டு விட்டதோ என்னவோ அவள் அக்கா தனலட்சுமி அவள் பையனை தூக்கி கொண்டு வந்தாள்.
அர்ச்சனாவும் தன் மகளுடன் வர அவர்கள் இருவரின் காதல் கணவன்களும் அருகில் வந்தார்கள்.
"அர்ச்சனா... நம்ம இருவரையும் அவர்கள் மன்னித்து ஏற்று கொள்வார்களா?" என்று சந்தேகமாய் கேட்டு விட்டு பார்த்தாள் தனலட்சுமி.
"எனக்கு அந்த டவுட்தான் தனா... நாம் உள்ளே போனதும் என்ன நடக்க போகுதோ? நாம் என்ன பன்ன போகிறோமோ?" என்று புலம்பியபடி வந்தாள் அர்ச்சனா.
"நாங்க இருக்கோம் தனா. அங்கே எது நடந்தாலும் நாங்க துணையாக இருப்போம்" என்ற தனசேகரிடம் எந்தவித பதற்றமும் தெரியவில்லை.
"நீங்க வாங்க கல்யாணத்திலே ஒரு கை பார்க்கலாமுன்னு சொன்னோம் இப்ப ரிசப்ஷனில் ஒரு முடிவுதான் வந்து இருக்கிறோம்" என்று ஆகாஷ் பேச அர்ச்சனா பதற்றமானாள்.
"அங்கே வந்து வம்பிழுக்க ஆரம்பிச்சிராதீங்க. எங்களின் பக்கத்தில் இருங்க. நாங்கள் ரெண்டு பேரும் பேசி கொள்கிறோம்" என்றாள் அர்ச்சனா.
"நீங்களும் தாங்க" என்று தனலட்சுமி தன் கணவனிடம் சொன்னாள்.
"நாங்களாக எந்த வம்புக்கு போக மாட்டோம். அவர்கள் ஏதாவது உங்களை பற்றி தப்பாக பேசி அவமானபடுத்தினால் எங்களை கேட்க கூடாது" என்று தனசேகர் சொல்லிவிட்டு பார்த்தான்.
"அப்படி எதுவும் நடக்காதுங்க அப்படியே நடந்தாலும் எனக்காக கொஞ்சம் பொறுத்துகோங்க" என்று தனலட்சுமி கூற,
"நீங்களும்தாங்க" என்றாள் அர்ச்சனா.
மண்டபத்தின் உள்ளே நான்கு பேரும் நுழைந்தபொழுது எல்லோருடைய பார்வைகளும் அவர்கள் பக்கம் திரும்பியது.