- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 5
சம்யுக்தா அன்று விடுமுறை எடுத்து, வீட்டில் தான் இருந்தாள். அவள் எதற்காக இத்தனை நாள் காத்து இருந்தாளோ, அது இப்பொழுது நடக்க போகிறது.
அவள் பெற்றோரிடம் சொல்லி இருந்தாள், இன்று ராசுவின் வீட்டினரின் வருகையை பற்றி. மனதில் சந்தோசம் பொங்க, அண்ணன் குடும்பத்தினரின் வருகைக்காக தடபுடலாக மதிய உணவினை சமைக்க தொடங்கினார் விசாலாட்சி.
வீட்டின் முன் கார்களின் ஒலி கேட்கவும், சேஷாத்ரியும், விசாலாட்சியும் வெளியே வந்தனர். அண்ணன் வீட்டினர் அனைவரும், குடும்ப சகிதமாக தட்டு, தாம்பலத்துடன் வருகை புரிந்தனர்.
அன்று தங்கையை வீட்டை விட்டு துரத்திய பிறகு, ராமச்சந்திர மூர்த்தி இன்று தான் தங்கையை காண்கிறார். அவரை பார்த்து எந்த நல விசாரிப்பும் செய்ய, அவர் மனம் இடம் கொடுக்க வில்லை.
“வாங்க அண்ணா, வாங்க அண்ணி! எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று அங்கு வந்து இருந்த அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.
சேஷாத்ரியும், அவர் பங்குக்கு எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்து, இருக்கையில் அமர வைத்தார்.
விசாலாட்சிக்கு, அண்ணன் பேசாதது வருத்தம் அளித்தது. என்ன இருந்தாலும், அவர் அன்று செய்தது தவறல்லவா, அதனால் பொறுத்துக் கொண்டார். அதற்குள் காமாட்சி, சம்யுக்தாவை அழைக்க சொல்லவும், மகளை அழைக்க மாடி ஏற போகும் சமயத்தில், அவளே மாடியில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தாள்.
மகளை பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது, வெளுத்து போன ஒரு தொழ தொழ சட்டையும், சாயம் போன ஜீன்ஸும் அணிந்து கொண்டு, முடியை பறக்க விட்டு, ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டிலும், மறு கை அவளின் தலை முடியை சரி செய்வதில் பிசியாக இருந்தது.
அண்ணன் குடும்பத்தினர் முன் மகள் இப்படி வருவதில், அவருக்கு உடன்பாடு இல்லை. ஆகையால் அவள் கீழே வருமுன், இவர் மேலே செல்ல நினைக்கையில் அவள் கீழே இறங்கி வந்ததோடு மட்டுமில்லாமல், அவர்களை பார்த்து வாங்க என்று கை கூப்பி வரவேற்று, அங்கே ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்த ராசப்பன் அருகில், இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
விசாலாட்சியும், சேஷாத்ரியும் மகளின் இந்த நடவடிக்கையை பார்த்து அதிர்ந்து போய் இருந்தனர். இவர்களோடு, மற்றவர்களும் அவளின் செயலில் அதிர்ந்து போய் இருந்தனர்.
ராசப்பன் இதை எதிர்பார்த்து இருந்ததால், அவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். அவனுக்கு இப்பொழுது, அவள் இப்படி இடித்துக் கொண்டு எல்லோர் முன்பும் அமர்ந்தது தான் சங்கடமாக இருக்கின்றது.
ஆனாலும், பெண்ணவளின் அருகாமையில் அவன் கிறங்கி போய் இருந்தான் என்பது தான் உண்மை. அவன் கிறங்கி போய் இருந்த சமயத்தில், அவனின் தந்தையின் ஓங்கிய குரல், அவனை நிகழ்காலத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தது.
“கொஞ்சங் கூட மரியாதை தெரியாத பிள்ளையா இருக்கு, நாகரிகம் கூட தெரியல இந்த பிள்ளைக்கு. ஆத்தாகாரி மாதிரி தான பொண்ணு இருப்பா, ஒழுங்கா உன் மவனை இவளை வெட்டிவிட்டுட்டு, நான் சொல்லுற பொண்ணுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த சொல்லு”.
“இது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது, கிளம்பு இங்கு இருந்து” என்று அதட்டல் போட்டார் மனைவியிடம்.
தந்தை பேசியது அதிகப்படி என்று உணர்ந்த ராசப்பன், அவரருகில் நெருங்க செல்லும் நேரம், சம்யுக்தாவின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை அங்கு.
“என்ன சொன்னீங்க? மரியாதை தெரியாத பிள்ளையா? நானா? வந்த உடனே உங்களை கும்பிட்டு வாங்கன்னு சொல்லிட்டு, என் புருஷன் பக்கத்தில தான உட்கார்ந்தேன், இதுல நீங்க எங்க தப்பை கண்டீங்க?” என்று சோபாவில் இருந்து எழுந்து கேட்டாள்.
அவள் கேட்ட விதத்திலே, அவள் தந்தையை சமாளித்துக் கொள்வாள் என்று அறிந்து, அவன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டான்.
“என்ன டா இப்படி உங்க அப்பாவை கேள்வி கேட்குறா, உங்க அப்பா கோபக்காரர் டா அடிச்சிட போறார்” என்று பயந்தார் காமாட்சி.
இதே பயம் தான் விசாலாட்சிக்கும், ஆகையால் மகளை அடக்க அவர் நினைக்கையில், சேஷாத்ரி தடுத்து விட்டார்.
“அவ அவங்க தாய் மாமா கிட்ட, உரிமையா சண்டை போடுறா, மாமனார் கிட்ட இல்லை” ஆகையால் பேசாமல் இருக்கும் படி கூறினார்.
தன்னிடம் இப்படி நிமிர்வாக கேள்வி கேட்கும் சம்யுக்தாவை, அவருக்கு பார்த்த மாத்திரத்தில் அவள் யாரின் வாரிசு என்று தெரிந்தது. இதே நிமிர்வும், தெளிவும் அவரின் தந்தைக்கு உண்டு.
அதே நிமிர்வு, அவரின் மகன் ராசப்பனிடத்தில் கண்டு இருக்கிறார். ஆனால் அந்த தெளிவு, இவளிடத்தில் தான் கான்கிறார். தன் பதிலுக்காக காத்து இருக்கும், தங்கை மகளை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினார்.
“நாங்க இன்னைக்கு இங்க வரோம்ன்னு, உனக்கு தெரியும் தான. அப்போ நீ என்ன செய்து இருக்கணும், புடவை கட்டி இருக்கணும். சரி அது கூட பரவாயில்லை, புடவை இப்போ எல்லாம் எந்த பிள்ளைக்கு ஒழுங்கா கட்ட தெரியுது, ஒரு சுடிதார் போட்டு இருக்கலாம் ல பொண்ணு” என்று பேசவும், இவள் சிரித்தாள்.
சம்யுக்தா அன்று விடுமுறை எடுத்து, வீட்டில் தான் இருந்தாள். அவள் எதற்காக இத்தனை நாள் காத்து இருந்தாளோ, அது இப்பொழுது நடக்க போகிறது.
அவள் பெற்றோரிடம் சொல்லி இருந்தாள், இன்று ராசுவின் வீட்டினரின் வருகையை பற்றி. மனதில் சந்தோசம் பொங்க, அண்ணன் குடும்பத்தினரின் வருகைக்காக தடபுடலாக மதிய உணவினை சமைக்க தொடங்கினார் விசாலாட்சி.
வீட்டின் முன் கார்களின் ஒலி கேட்கவும், சேஷாத்ரியும், விசாலாட்சியும் வெளியே வந்தனர். அண்ணன் வீட்டினர் அனைவரும், குடும்ப சகிதமாக தட்டு, தாம்பலத்துடன் வருகை புரிந்தனர்.
அன்று தங்கையை வீட்டை விட்டு துரத்திய பிறகு, ராமச்சந்திர மூர்த்தி இன்று தான் தங்கையை காண்கிறார். அவரை பார்த்து எந்த நல விசாரிப்பும் செய்ய, அவர் மனம் இடம் கொடுக்க வில்லை.
“வாங்க அண்ணா, வாங்க அண்ணி! எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று அங்கு வந்து இருந்த அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.
சேஷாத்ரியும், அவர் பங்குக்கு எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்து, இருக்கையில் அமர வைத்தார்.
விசாலாட்சிக்கு, அண்ணன் பேசாதது வருத்தம் அளித்தது. என்ன இருந்தாலும், அவர் அன்று செய்தது தவறல்லவா, அதனால் பொறுத்துக் கொண்டார். அதற்குள் காமாட்சி, சம்யுக்தாவை அழைக்க சொல்லவும், மகளை அழைக்க மாடி ஏற போகும் சமயத்தில், அவளே மாடியில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தாள்.
மகளை பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது, வெளுத்து போன ஒரு தொழ தொழ சட்டையும், சாயம் போன ஜீன்ஸும் அணிந்து கொண்டு, முடியை பறக்க விட்டு, ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டிலும், மறு கை அவளின் தலை முடியை சரி செய்வதில் பிசியாக இருந்தது.
அண்ணன் குடும்பத்தினர் முன் மகள் இப்படி வருவதில், அவருக்கு உடன்பாடு இல்லை. ஆகையால் அவள் கீழே வருமுன், இவர் மேலே செல்ல நினைக்கையில் அவள் கீழே இறங்கி வந்ததோடு மட்டுமில்லாமல், அவர்களை பார்த்து வாங்க என்று கை கூப்பி வரவேற்று, அங்கே ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்த ராசப்பன் அருகில், இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
விசாலாட்சியும், சேஷாத்ரியும் மகளின் இந்த நடவடிக்கையை பார்த்து அதிர்ந்து போய் இருந்தனர். இவர்களோடு, மற்றவர்களும் அவளின் செயலில் அதிர்ந்து போய் இருந்தனர்.
ராசப்பன் இதை எதிர்பார்த்து இருந்ததால், அவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். அவனுக்கு இப்பொழுது, அவள் இப்படி இடித்துக் கொண்டு எல்லோர் முன்பும் அமர்ந்தது தான் சங்கடமாக இருக்கின்றது.
ஆனாலும், பெண்ணவளின் அருகாமையில் அவன் கிறங்கி போய் இருந்தான் என்பது தான் உண்மை. அவன் கிறங்கி போய் இருந்த சமயத்தில், அவனின் தந்தையின் ஓங்கிய குரல், அவனை நிகழ்காலத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தது.
“கொஞ்சங் கூட மரியாதை தெரியாத பிள்ளையா இருக்கு, நாகரிகம் கூட தெரியல இந்த பிள்ளைக்கு. ஆத்தாகாரி மாதிரி தான பொண்ணு இருப்பா, ஒழுங்கா உன் மவனை இவளை வெட்டிவிட்டுட்டு, நான் சொல்லுற பொண்ணுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த சொல்லு”.
“இது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது, கிளம்பு இங்கு இருந்து” என்று அதட்டல் போட்டார் மனைவியிடம்.
தந்தை பேசியது அதிகப்படி என்று உணர்ந்த ராசப்பன், அவரருகில் நெருங்க செல்லும் நேரம், சம்யுக்தாவின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை அங்கு.
“என்ன சொன்னீங்க? மரியாதை தெரியாத பிள்ளையா? நானா? வந்த உடனே உங்களை கும்பிட்டு வாங்கன்னு சொல்லிட்டு, என் புருஷன் பக்கத்தில தான உட்கார்ந்தேன், இதுல நீங்க எங்க தப்பை கண்டீங்க?” என்று சோபாவில் இருந்து எழுந்து கேட்டாள்.
அவள் கேட்ட விதத்திலே, அவள் தந்தையை சமாளித்துக் கொள்வாள் என்று அறிந்து, அவன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டான்.
“என்ன டா இப்படி உங்க அப்பாவை கேள்வி கேட்குறா, உங்க அப்பா கோபக்காரர் டா அடிச்சிட போறார்” என்று பயந்தார் காமாட்சி.
இதே பயம் தான் விசாலாட்சிக்கும், ஆகையால் மகளை அடக்க அவர் நினைக்கையில், சேஷாத்ரி தடுத்து விட்டார்.
“அவ அவங்க தாய் மாமா கிட்ட, உரிமையா சண்டை போடுறா, மாமனார் கிட்ட இல்லை” ஆகையால் பேசாமல் இருக்கும் படி கூறினார்.
தன்னிடம் இப்படி நிமிர்வாக கேள்வி கேட்கும் சம்யுக்தாவை, அவருக்கு பார்த்த மாத்திரத்தில் அவள் யாரின் வாரிசு என்று தெரிந்தது. இதே நிமிர்வும், தெளிவும் அவரின் தந்தைக்கு உண்டு.
அதே நிமிர்வு, அவரின் மகன் ராசப்பனிடத்தில் கண்டு இருக்கிறார். ஆனால் அந்த தெளிவு, இவளிடத்தில் தான் கான்கிறார். தன் பதிலுக்காக காத்து இருக்கும், தங்கை மகளை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினார்.
“நாங்க இன்னைக்கு இங்க வரோம்ன்னு, உனக்கு தெரியும் தான. அப்போ நீ என்ன செய்து இருக்கணும், புடவை கட்டி இருக்கணும். சரி அது கூட பரவாயில்லை, புடவை இப்போ எல்லாம் எந்த பிள்ளைக்கு ஒழுங்கா கட்ட தெரியுது, ஒரு சுடிதார் போட்டு இருக்கலாம் ல பொண்ணு” என்று பேசவும், இவள் சிரித்தாள்.