- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
வணக்கம் மக்களே, இதோ இரண்டாம் பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் ..
அத்தியாயம் – 2
இரவு ஒன்பது மணி அளவில், வீட்டிற்கு வந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டனர் அவளை பெற்றவர்கள். இந்த பணியில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, அவளின் பெற்றவர்கள் இந்த வேலை வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும், அவள் தன் பிடியில் இருந்து இறங்காமல் இது தன்னுடைய லட்சியம் என்று கூறி, இதற்க்கு மேல் எதுவும் கூறாதீர்கள் என்று விட்டாள்.
விசாலாட்சியும் சரி, சேஷாத்ரியும் சரி இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் அவ்வ்வளவு அமைதியாக இருப்பர். ஆனால் அவர்களின் மகள், அவள் இருக்கும் இடத்தை எட்டு ஊருக்கு தெரியும்படி செய்துவிடுவாள். அவள் தான் நம் கதையின் நாயகி சம்யுக்தா தேவி.
“இவ ஒவ்வொரு நாளும், எப்போ வீட்டுக்கு வந்து சேருவான்னு நாம பயந்துகிட்டே இருக்கோம். இவ நம்ம பயத்தை புரிஞ்சிக்காம, இப்படி இருக்காளேங்க” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.
“சாலா! அவ என்ன சின்ன குழந்தையா? நல்லது, கெட்டது எல்லாம் அவளுக்கும் தெரியும் தானே! நம்ம பயமும் அவளுக்கு தெரியும், அதனால தான் அவ போன் பேசி வர இவ்வளவு நேரமாகும்ன்னு சொல்லிடுறா”.
“நம்ம வேலை அவளுக்கு பொருத்தமா, ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் இப்போ. நாமளும் தேடிகிட்டு தான் இருக்கோம், சீக்கிரமே ஒரு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடை அணிந்து கீழே இறங்கி வந்தாள் சம்யுக்தா.
அவர்கள் பேசியது அனைத்தும், அவள் காதுகளிலும் விழுந்தது. தனக்கு திருமணமானதை, இனியும் மறைக்க பிடிக்காமல் அவர்களிடம் சொல்ல எத்தனித்தாள். அதற்குள், அவளின் தந்தை, எது பேசுவது என்றாலும் சாப்பிட்டு முடித்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டார்.
எப்பொழுதும் அவர்களின் வீட்டில் இரவு உணவு, எட்டு மணிக்கு எல்லாம் முடித்து விட்டு, ஒன்பது மணிக்கு எல்லாம் உறங்க சென்று விடுவர். ஆனால், எப்பொழுது இவள் இந்த போலீஸ் வேலையில் சேர போகிறேன் என்று கூறி சென்றாளோ, அப்பொழுதே எல்லாம் மாறிவிட்டு இருந்தது.
சாப்பிட்டு முடித்துவிட்டு, தாய்க்கு உதவியாக கிட்செனில் ஒதுக்கி கொடுத்துவிட்டு மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள். அங்கே ஏற்கனவே, அவளின் தந்தை இவள் என்ன கூற போகிறாள் என்று தெரிந்து கொள்ள, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தார்.
தாய், தந்தையை மனம் வருந்த செய்ய போகிறோம் என்று தெரிந்தாலும், எதற்காக அவள் அன்று அவனை திருமணம் செய்து கொண்டாள் என்று யாரிடமும் கூற அவள் விரும்பவில்லை, ராசப்பன் உள்ளிட்டு.
“அப்பா, அம்மா முதல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற ஐடியாவை ட்ராப் பண்ணுங்க. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, மாமா பையன் ராசப்பன் கூட” என்று அலுங்காமல் குண்டை தூக்கி போட்டாள்.
அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம். ஆம் மகிழ்ச்சி தான், சேஷாத்ரி அநாதை இல்லத்தில் வளர்ந்தவர். அவருக்கு சிறு வயதில் இருந்தே, ஒரு பெரிய குடும்ப சூழலில் இருக்க ஆசை உண்டு.
விசாலாட்சியை பிடித்ததற்கு ஒரு காரணம், அவரின் குணம் ஒன்றும், அவளின் குடும்பமும் தான். தானும் அக்குடும்பத்தில் ஒரு அங்கத்தினாராக வேண்டும், என்ற ஆசை மலையளவு இருந்தது.
அது எல்லாம் திருமணம் முடிந்து, விசாலாட்சியின் தந்தை இறந்த பிறகு, அவளின் அண்ணன் அவளையும், தன்னையும் அக்குடும்பத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டார். அப்பொழுது மனது வலித்தாலும், தன்னை விட மனைவியின் வலி அதிகம் என்பதை உணர்ந்தவர், அவரை அதன் பின் அழைத்துக் கொண்டு சென்றது சென்னைக்கு தான்.
மனைவியை எவ்வளவு தான் தாங்கினாலும், அவருக்கும் தாய் வீட்டு நினைப்பு என்று ஒன்று உண்டு அல்லவா. அதற்காகவே, திருவிழா சமயத்தில் ஊரில் சேஷாத்ரி வாங்கிய ஒரு வீட்டில் தான் வந்து குடும்பத்துடன் தங்குவர்.
அந்த சமயத்தில் தான், தள்ளி நின்று கொண்டு விசாலாட்சி தன் அண்ணன் குடும்பத்தினரை பார்த்துக் கொள்வார். தந்தை இறந்த அதிர்ச்சியில், தாயும் அடுத்து உடனே இறக்கவும், அவரை குற்ற உணர்ச்சி முள்ளாக குத்தி கிழித்தது.
“நான் பாவி! இரண்டு பேரையும் கொன்னுட்டேனே!” என்று புலம்பிய விசாலாட்சியை, சமாதானப்படுத்த சேஷாத்ரி திணறி போய் விடுவார்.
சில நாட்கள் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தவரை, சேஷாத்ரி ஒரு அதட்டல் போட்டார்.
“இப்படி அழுது புலம்பினா, அவங்க உனக்கு திரும்ப கிடைச்சிடுவாங்களா? இல்லை ல, அப்புறம் ஏன் புலம்புற?” என்று அதட்டினார்.
முதல் முறையாக அவரின் அதட்டலில், அவர் முழித்தார். அதை பார்த்த சேஷாத்ரிக்கு, தன்னை கட்டுபடுத்த முடியவில்லை. உடனே, அவரை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டார்.
“இங்க நான், உன்னை பத்தி மட்டும் நினைச்சிக்கிட்டு இருக்கேன் சாலா. கொஞ்சம் நீ என்னையும் புரிஞ்சிக்கோ டா, எத்தனை நாள் நான் இப்படி கையை கட்டி வேடிக்கை பார்க்கிறது?” என்று அவர் கூறவும், நிதர்சனம் புரிய விசாலாட்சி அதன் பின் தெளிந்தார்.
சேஷாத்ரி அதன் பின் தன் அன்பால், அவரை மாற்றி தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தார். அதன் பின் சம்யுக்தாவை கருவில் சுமக்கும் பொழுது தான், அவருக்கு தாய் வீடு நியாகம் வந்தது.
அப்பொழுது, அதை பார்த்த சேஷாத்ரிக்கு வருத்தம் இருந்தாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல், அவருக்கு வேண்டியது எல்லாவற்றையும் அவரே அவருக்கு செய்து வந்தார். அதன் பின் சம்யுக்தா பிறந்த பிறகு, விசாலாட்சி கோவில் திருவிழாவிற்கு அவளுக்கு ஐந்து வயதாகிய பின் தான் அழைத்து வந்தார்.
கூட்டத்தில், யாருமறியாமல் சேஷாத்ரியும், விசாலாட்சியும் அவளின் அண்ணன் குடும்பத்தினை பார்த்து விட்டு செல்வர். இப்பொழுது மகளின் புகுந்த வீடு அது, என்று தெரிந்த பின் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“ஏன் சம்யு? நாங்க ஏதும், உன்னை கஷ்டப்படுத்துறோமா?எங்க கிட்ட சொல்லனும்ன்னு தோணலையா உனக்கு?” என்று அவள் இதைப் பற்றி சொல்லவில்லையே தங்களிடம் என்ற ஆதங்கத்தில் கேட்டார் விசாலாட்சி.
“அம்மா! சொல்லணும் தான் நினைச்சேன், பட் சொல்லனும்னா எல்லாமே சொல்லணும், இப்போ வரைக்கும் நான் ஏன் அவனை கல்யாணம் பண்ணேன்னு அவன் கிட்ட கூட சொல்லல”.
“ப்ளீஸ்! இப்போதைக்கு என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. நான் கண்டிப்பா எல்லா விஷயமும் சொல்லுறேன், ஆனா இப்போ இல்லை” என்று கூறிவிட்டு, மாடியில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.
மாடியில் அறை கட்ட, விருப்பம் இல்லாமல் இருந்தது அவளின் தந்தைக்கு. ஆனால் மகளோ தனக்கு மாடியில் தான் அறை வேண்டும் என்று அழுத்தமாக கூறி, தனக்கு பிடித்த விதத்தில் கட்டி அமைத்துக் கொண்டாள்.
தன் அறைக்கு வந்தவள், கதவை சாற்றிவிட்டு அங்கு இருந்த ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றுடன் சேர்ந்து நிலா வெளிச்சத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் கண் அதை ரசிக்க, மனமோ கட்டியவனை கரித்துக் கொண்டு இருந்தது. காலையில் அவன் ஸ்டேஷனில் அடித்த கூத்தை நினைத்து, இப்பொழுதும் பல்லைக் கடித்தாள்.
“அவன், உன்னை வம்பு பண்ணானா யுக்தா?” என்று கை முஷ்டி இறுக கேட்டவனை பார்த்து, அவள் இல்லை என்று தலையை இடமும் வலமும் ஆட்டினாள்.
அதன் பிறகு அவன் சற்று கோபத்தை குறைத்து இருந்தாலும், எதற்காக அவள் அவனை கைது செய்து இருக்கிறாள் என்று தெரியாமல் அவளை பார்த்து முறைத்தான்.
அவனின் கோபம் தன்னை ஒன்றும் செய்யாது என்பது போல், அவள் கெத்தாக அமர்ந்து இருந்தாள். அதில் அவன் கோபம் மேலும் அதிகரித்து, அவன் பற்கள் உடையும் அபாயம் ஏற்பட்டது.
இன்னும் காரணம் சொல்லவில்லை என்றால், அவன் இன்னும் ஏதாவது கிறுக்குத்தனம் செய்வான் என்று எண்ணி, அவனை கைது செய்த காரணத்தை கூறினாள்.
“ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்து கிட்டவனை, உள்ள தூக்கி போடாம வேற என்ன செய்ய சொல்லுறீங்க?” என்று நிதானமாக அவனை பார்த்து கேட்கவும், அவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் கைது செய்து இருந்தவனை நோக்கி சென்றான்.
அத்தியாயம் – 2
இரவு ஒன்பது மணி அளவில், வீட்டிற்கு வந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டனர் அவளை பெற்றவர்கள். இந்த பணியில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, அவளின் பெற்றவர்கள் இந்த வேலை வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும், அவள் தன் பிடியில் இருந்து இறங்காமல் இது தன்னுடைய லட்சியம் என்று கூறி, இதற்க்கு மேல் எதுவும் கூறாதீர்கள் என்று விட்டாள்.
விசாலாட்சியும் சரி, சேஷாத்ரியும் சரி இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் அவ்வ்வளவு அமைதியாக இருப்பர். ஆனால் அவர்களின் மகள், அவள் இருக்கும் இடத்தை எட்டு ஊருக்கு தெரியும்படி செய்துவிடுவாள். அவள் தான் நம் கதையின் நாயகி சம்யுக்தா தேவி.
“இவ ஒவ்வொரு நாளும், எப்போ வீட்டுக்கு வந்து சேருவான்னு நாம பயந்துகிட்டே இருக்கோம். இவ நம்ம பயத்தை புரிஞ்சிக்காம, இப்படி இருக்காளேங்க” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.
“சாலா! அவ என்ன சின்ன குழந்தையா? நல்லது, கெட்டது எல்லாம் அவளுக்கும் தெரியும் தானே! நம்ம பயமும் அவளுக்கு தெரியும், அதனால தான் அவ போன் பேசி வர இவ்வளவு நேரமாகும்ன்னு சொல்லிடுறா”.
“நம்ம வேலை அவளுக்கு பொருத்தமா, ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் இப்போ. நாமளும் தேடிகிட்டு தான் இருக்கோம், சீக்கிரமே ஒரு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடை அணிந்து கீழே இறங்கி வந்தாள் சம்யுக்தா.
அவர்கள் பேசியது அனைத்தும், அவள் காதுகளிலும் விழுந்தது. தனக்கு திருமணமானதை, இனியும் மறைக்க பிடிக்காமல் அவர்களிடம் சொல்ல எத்தனித்தாள். அதற்குள், அவளின் தந்தை, எது பேசுவது என்றாலும் சாப்பிட்டு முடித்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டார்.
எப்பொழுதும் அவர்களின் வீட்டில் இரவு உணவு, எட்டு மணிக்கு எல்லாம் முடித்து விட்டு, ஒன்பது மணிக்கு எல்லாம் உறங்க சென்று விடுவர். ஆனால், எப்பொழுது இவள் இந்த போலீஸ் வேலையில் சேர போகிறேன் என்று கூறி சென்றாளோ, அப்பொழுதே எல்லாம் மாறிவிட்டு இருந்தது.
சாப்பிட்டு முடித்துவிட்டு, தாய்க்கு உதவியாக கிட்செனில் ஒதுக்கி கொடுத்துவிட்டு மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள். அங்கே ஏற்கனவே, அவளின் தந்தை இவள் என்ன கூற போகிறாள் என்று தெரிந்து கொள்ள, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தார்.
தாய், தந்தையை மனம் வருந்த செய்ய போகிறோம் என்று தெரிந்தாலும், எதற்காக அவள் அன்று அவனை திருமணம் செய்து கொண்டாள் என்று யாரிடமும் கூற அவள் விரும்பவில்லை, ராசப்பன் உள்ளிட்டு.
“அப்பா, அம்மா முதல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற ஐடியாவை ட்ராப் பண்ணுங்க. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, மாமா பையன் ராசப்பன் கூட” என்று அலுங்காமல் குண்டை தூக்கி போட்டாள்.
அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம். ஆம் மகிழ்ச்சி தான், சேஷாத்ரி அநாதை இல்லத்தில் வளர்ந்தவர். அவருக்கு சிறு வயதில் இருந்தே, ஒரு பெரிய குடும்ப சூழலில் இருக்க ஆசை உண்டு.
விசாலாட்சியை பிடித்ததற்கு ஒரு காரணம், அவரின் குணம் ஒன்றும், அவளின் குடும்பமும் தான். தானும் அக்குடும்பத்தில் ஒரு அங்கத்தினாராக வேண்டும், என்ற ஆசை மலையளவு இருந்தது.
அது எல்லாம் திருமணம் முடிந்து, விசாலாட்சியின் தந்தை இறந்த பிறகு, அவளின் அண்ணன் அவளையும், தன்னையும் அக்குடும்பத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டார். அப்பொழுது மனது வலித்தாலும், தன்னை விட மனைவியின் வலி அதிகம் என்பதை உணர்ந்தவர், அவரை அதன் பின் அழைத்துக் கொண்டு சென்றது சென்னைக்கு தான்.
மனைவியை எவ்வளவு தான் தாங்கினாலும், அவருக்கும் தாய் வீட்டு நினைப்பு என்று ஒன்று உண்டு அல்லவா. அதற்காகவே, திருவிழா சமயத்தில் ஊரில் சேஷாத்ரி வாங்கிய ஒரு வீட்டில் தான் வந்து குடும்பத்துடன் தங்குவர்.
அந்த சமயத்தில் தான், தள்ளி நின்று கொண்டு விசாலாட்சி தன் அண்ணன் குடும்பத்தினரை பார்த்துக் கொள்வார். தந்தை இறந்த அதிர்ச்சியில், தாயும் அடுத்து உடனே இறக்கவும், அவரை குற்ற உணர்ச்சி முள்ளாக குத்தி கிழித்தது.
“நான் பாவி! இரண்டு பேரையும் கொன்னுட்டேனே!” என்று புலம்பிய விசாலாட்சியை, சமாதானப்படுத்த சேஷாத்ரி திணறி போய் விடுவார்.
சில நாட்கள் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தவரை, சேஷாத்ரி ஒரு அதட்டல் போட்டார்.
“இப்படி அழுது புலம்பினா, அவங்க உனக்கு திரும்ப கிடைச்சிடுவாங்களா? இல்லை ல, அப்புறம் ஏன் புலம்புற?” என்று அதட்டினார்.
முதல் முறையாக அவரின் அதட்டலில், அவர் முழித்தார். அதை பார்த்த சேஷாத்ரிக்கு, தன்னை கட்டுபடுத்த முடியவில்லை. உடனே, அவரை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டார்.
“இங்க நான், உன்னை பத்தி மட்டும் நினைச்சிக்கிட்டு இருக்கேன் சாலா. கொஞ்சம் நீ என்னையும் புரிஞ்சிக்கோ டா, எத்தனை நாள் நான் இப்படி கையை கட்டி வேடிக்கை பார்க்கிறது?” என்று அவர் கூறவும், நிதர்சனம் புரிய விசாலாட்சி அதன் பின் தெளிந்தார்.
சேஷாத்ரி அதன் பின் தன் அன்பால், அவரை மாற்றி தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தார். அதன் பின் சம்யுக்தாவை கருவில் சுமக்கும் பொழுது தான், அவருக்கு தாய் வீடு நியாகம் வந்தது.
அப்பொழுது, அதை பார்த்த சேஷாத்ரிக்கு வருத்தம் இருந்தாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல், அவருக்கு வேண்டியது எல்லாவற்றையும் அவரே அவருக்கு செய்து வந்தார். அதன் பின் சம்யுக்தா பிறந்த பிறகு, விசாலாட்சி கோவில் திருவிழாவிற்கு அவளுக்கு ஐந்து வயதாகிய பின் தான் அழைத்து வந்தார்.
கூட்டத்தில், யாருமறியாமல் சேஷாத்ரியும், விசாலாட்சியும் அவளின் அண்ணன் குடும்பத்தினை பார்த்து விட்டு செல்வர். இப்பொழுது மகளின் புகுந்த வீடு அது, என்று தெரிந்த பின் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“ஏன் சம்யு? நாங்க ஏதும், உன்னை கஷ்டப்படுத்துறோமா?எங்க கிட்ட சொல்லனும்ன்னு தோணலையா உனக்கு?” என்று அவள் இதைப் பற்றி சொல்லவில்லையே தங்களிடம் என்ற ஆதங்கத்தில் கேட்டார் விசாலாட்சி.
“அம்மா! சொல்லணும் தான் நினைச்சேன், பட் சொல்லனும்னா எல்லாமே சொல்லணும், இப்போ வரைக்கும் நான் ஏன் அவனை கல்யாணம் பண்ணேன்னு அவன் கிட்ட கூட சொல்லல”.
“ப்ளீஸ்! இப்போதைக்கு என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. நான் கண்டிப்பா எல்லா விஷயமும் சொல்லுறேன், ஆனா இப்போ இல்லை” என்று கூறிவிட்டு, மாடியில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.
மாடியில் அறை கட்ட, விருப்பம் இல்லாமல் இருந்தது அவளின் தந்தைக்கு. ஆனால் மகளோ தனக்கு மாடியில் தான் அறை வேண்டும் என்று அழுத்தமாக கூறி, தனக்கு பிடித்த விதத்தில் கட்டி அமைத்துக் கொண்டாள்.
தன் அறைக்கு வந்தவள், கதவை சாற்றிவிட்டு அங்கு இருந்த ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றுடன் சேர்ந்து நிலா வெளிச்சத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் கண் அதை ரசிக்க, மனமோ கட்டியவனை கரித்துக் கொண்டு இருந்தது. காலையில் அவன் ஸ்டேஷனில் அடித்த கூத்தை நினைத்து, இப்பொழுதும் பல்லைக் கடித்தாள்.
“அவன், உன்னை வம்பு பண்ணானா யுக்தா?” என்று கை முஷ்டி இறுக கேட்டவனை பார்த்து, அவள் இல்லை என்று தலையை இடமும் வலமும் ஆட்டினாள்.
அதன் பிறகு அவன் சற்று கோபத்தை குறைத்து இருந்தாலும், எதற்காக அவள் அவனை கைது செய்து இருக்கிறாள் என்று தெரியாமல் அவளை பார்த்து முறைத்தான்.
அவனின் கோபம் தன்னை ஒன்றும் செய்யாது என்பது போல், அவள் கெத்தாக அமர்ந்து இருந்தாள். அதில் அவன் கோபம் மேலும் அதிகரித்து, அவன் பற்கள் உடையும் அபாயம் ஏற்பட்டது.
இன்னும் காரணம் சொல்லவில்லை என்றால், அவன் இன்னும் ஏதாவது கிறுக்குத்தனம் செய்வான் என்று எண்ணி, அவனை கைது செய்த காரணத்தை கூறினாள்.
“ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்து கிட்டவனை, உள்ள தூக்கி போடாம வேற என்ன செய்ய சொல்லுறீங்க?” என்று நிதானமாக அவனை பார்த்து கேட்கவும், அவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் கைது செய்து இருந்தவனை நோக்கி சென்றான்.