எனது புன்னகையின் முகவரி...
ஹாய் நட்பூஸ்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..? இதோ உங்களைக் காண அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். நான் உங்களின் சந்தியா ஸ்ரீ.
கோடிகணக்கில் பணம் இருந்தாலும் சந்தோசம் என்பது மனிதனுக்கும் முக்கியமான ஒன்று! ஆனால் சந்தோசம் என்றால் என்ன என்பதையே அறியாமல் வளரும் ஒரு குழந்தை பின்னாளில் எப்படி இருப்பான்..?! அவனின் மனநிலை எப்படி இருக்கும்..?! இப்படி ஒரு நிலையில் தான் வளர்கிறான் நமது கதையின் கதாநாயகன்..!
காசு, பணம் சொந்தபந்தங்கள் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி நாம் தேடி போககூடாது.. சந்தோசம் நமக்குள் தான் இருக்கிறது என்று நினைத்து தன்னை சுற்றி உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷ தென்றலை அழைத்து வருகிறாள் நமது கதையின் கதாநாயகி...!
இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே எப்படி இருக்கும்..?! என்று நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்... பூவிற்கே புன்னகையை அறிமுகம் செய்யும் அவளின் புன்னகையில் அவனின் மனம் மயங்குமா..?! இல்லையா என்பதை நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்..
இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவங்களைக்கொண்டு, “எனது புன்னகையின் முகவரி..” என்ற கதையின் மூலம் உங்களை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறேன்..
“உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!” கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை மீண்டும் உங்களிடம் எதிர்பார்த்து வந்திருக்கிறேன்..
இப்படிக்கு
உங்களின் தோழி
சந்தியா ஸ்ரீ