"பாட்டி உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க..." என்று வைபவ் கூறவும் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவள் கீழே டைனிங் டேபிளை நோக்கி சென்றாள்.
வெண்ணிலா அமைதியாக சாப்பிடுவதை பார்த்து ஒவ்வொருவரும் கண்களாலேயே தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் வெற்றியின் போன் அடித்தது.
போனை அட்டன்ட் செய்தவன்
"சொல்லுடா சூர்யா....." என்று கூற வெண்ணிலா சட்டென்று நிமிர்ந்து வெற்றியை பார்த்தாள்.
வெற்றி
"என்ன????" என்று வெண்ணிலாவைப் பார்த்து சைகையில் கேட்கவும் அவள் ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்து விட்டு எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.
வெண்ணிலாவின் கைகள் அங்கிருந்த வேலைகளை செய்தாலும் காதுகளை கூர்மையாக்கி வெற்றி பேசுவதை அவள் கேட்டு கொண்டு நின்றாள்.
"என்ன சொன்னான் சூர்யா???" என்று அபிநயா கேட்கவும்
போனை வைத்து விட்டு நிமிர்ந்த வெற்றி
"பங்சனுக்கு வராததுக்கு ஸாரி சொன்னான்....அப்புறம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விஸ் பண்ணனு சொல்ல சொன்னான்..." என்று கூற
"ஏன் நேர்ல வந்து விஷ் பண்ணா அவன் குறைஞ்சா போயிடுவான்????" என்று கேட்டாள் அபிநயா.
"அதுக்கும் ரீசன் சொன்னான் உன் தம்பி.....ஒரு பிஸ்னஸ் டீலிங் விஷயமா டூ, த்ரீ வீக் ஜேர்மன் போறானாம்.....அதனால அதை முடிச்சுட்டு வந்து நேர்ல விஷ் பண்ணுறேனு சொன்னான்....." என்று வெற்றி கூறவும்
வெண்ணிலாவின் கையில் இருந்த தட்டு நழுவி கீழே விழுந்தது.
சமையலறையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அபிநயா வெண்ணிலாவின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து கவலையுடன் அவளருகில் சென்று அவள் தோள் மேல் கை வைத்தாள்.
அபிநயாவின் தொடுகையில் தன்னை மீட்டு கொண்ட வெண்ணிலா எதுவும் பேசாமல் வேகமாக சென்று தன்னறைக்குள் அடைந்து கொள்ள வெண்ணிலாவையே ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பார்த்து கொண்டு இருந்தனர்.
அறைக்குள் வந்த வெண்ணிலா வெற்றி சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவள் மனமோ
"சூர்யா என்னை விட்டு போறானா????" என்று ஏங்கி தவித்தது.
"அது தான் அவனை வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டியே அப்புறம் என்ன????" என்று மனசாட்சி ஒரு புறம் கேள்வி எழுப்ப
மறுபுறமோ
"அவனை பார்க்காமல் எப்படி??? அவன் கூட சண்டை போடாமல்....அவனை சீண்டிப் பார்க்காமல் எப்படி????" என்று யோசித்தவள் பதில் கூற முடியாமல் தவிப்புடன் நின்றாள்.
அறையில் இருக்க மூச்சு முட்டுவது போல இருக்கவே கீழே வந்த வெண்ணிலா வேகமாக தன் காரை எடுத்துக்கொண்டு சென்றாள்.
ஆண்டாள் தவிப்போடு வெற்றியை பார்க்க அவனோ
"அவ கொஞ்ச நேரம் தனியா இருந்து யோசிச்சு பார்க்கட்டும்மா.....இப்போ அவ போறது அவ லைப்ல முக்கியமான முடிவு எடுக்குறதுக்காக....நீங்க கவலைப்படாம இருங்கமா.....அவ தப்பாக எதுவும் பண்ண மாட்டா....." என்று கூறவும் ஆண்டாள் சிறிது சமாதானம் அடைந்தார்.
கை போன போக்கில் காரை ஓட்டி கொண்டிருந்த வெண்ணிலா எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் தவித்து போனாள்.
அப்போது சட்டென்று அவள் கார் முன்னால் ஒரு பெண்மணி வந்து நிற்கவும் காரை சட்டென்று நிறுத்திய வெண்ணிலா காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் அருகில் சென்றாள்.
பதட்டத்துடன் அவர் நிற்பதைப் பார்த்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவள்
"என்னம்மா ஆச்சு????" என்று கேட்கவும்
அந்த பெண்
"எங்க முதலாளி அம்மாவுக்கு திடீர்னு பிரசவ வலி வந்துடுச்சு.....ஆம்பள துணை யாரும் இல்லமா....ஹாஸ்பிடல் போக கொஞ்சம் உதவியாக செய்ங்கமா...." என்று அவர் கை கூப்பி கேட்க
அவர் கைகளை பிடித்து
"இதெல்லாம் வேண்டாம்மா.....முதல்ல அவங்கள ஹாஸ்பிடல் போகலாம் வாங்க....." என்று விட்டு அவருடன் சென்ற வெண்ணிலா அங்கே பஸ் ஸ்டாண்டில் வலியில் துடித்து கொண்டிருந்த ஜனனியை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.
ஜனனியும் வெண்ணிலாவைப் பார்த்து அதிர்ச்சியாக அந்த அதிர்ச்சியை அவள் பிரசவ வலி மறக்க செய்தது.
"அம்மா......." என்று ஜனனி அலற அந்த சத்தத்தில் தன்னை மீட்டு கொண்ட வெண்ணிலா உடனடியாக ஜனனியை தன் காரில் ஏற்றி கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்.
போகும் வழி முழுவதும் ஜனனி
"ஐ யம் ஸாரி நிலா.....ஐ யம் ஸாரி....." என்று கூறி கொண்டே வர வெண்ணிலாவிற்கோ எதுவும் புரியவில்லை.
"ஜனனி தனியாக இப்படி கஷ்டப்படுறாளா??? அப்போ சூர்யா எங்கே????" என்று யோசனையோடே காரை செலுத்தியவள் ஹாஸ்பிடல் வந்தடைந்ததும் ஜனனியை அவசரமாக உள்ளே அழைத்து சென்றாள்.
டாக்டர் வந்து அவளை உள்ளே அழைத்து சென்றதும் வெண்ணிலா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து கொண்டு நின்றாள்.
அப்போது வெண்ணிலாவின் அருகில் வந்த டாக்டர்
"நிலா யாரு???" என்று கேட்டார்.
"நான் தான் டாக்டர்....." என்று வெண்ணிலா கூறவும்
"நீங்க தான் நிலாவா??? பேஷண்ட் உங்க கூட பேசணும்னு சொல்லிட்டே இருக்காங்க....ட்ரீட்மெண்ட் பண்ண விடுறாங்க இல்ல....கொஞ்சம் அவங்கள பேசி சமாதனப்படுத்துங்க....." என்று டாக்டர் கூற வேகமாக ஜனனியை தேடி சென்றாள் வெண்ணிலா.
"என்னை மன்னிச்சுடு நிலா.....இந்த வார்த்தையை சொல்ல எனக்கு தகுதி இருக்கா இல்லையானு எனக்குத் தெரியலை நிலா......ஆனாலும் இதை நான் உன்கிட்டயும், சூர்யாகிட்டயும் கேட்டே ஆகணும்......." என்று கூற வெண்ணிலா அவளை குழப்பமாக பார்த்தாள்.
அப்போது ஜனனி இது நாள் வரை சூர்யா மற்றும் வெண்ணிலாவைப் பிரிப்பதற்காக செய்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கூற வெண்ணிலா திகைத்துப் போய் நின்றாள்.
"சூர்யா எனக்கு இல்லாமல் போயிடுவானோனு பயத்தில் தான் நான் வில்லியமை ஹெல்ப் பண்ண கொண்டு வந்தேன்..... அன்னைக்கு மால்ல சூர்யா மாதிரி உனக்கு தெரிஞ்சது வில்லியம் தான்.....சூர்யாவையும், என்னையும் சேர்த்து பேச வைச்சதும் நான் தான்....." என்று ஜனனி கூற வெண்ணிலா சட்டென்று அவள் கையில் இருந்து தன் கையை எடுத்து கொண்டாள்.
"எனக்கு தெரியும் நிலா.....நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் இருக்காது......" என்று ஜனனி கூற
வெண்ணிலா அவள் வயிற்றைக் காட்டி
"குழந்தை....." என்று கேட்கவும்
"வில்லியம் என்னை வன் சைட்டா லவ் பண்ணி இருக்கான் அது எனக்கு தெரியல......உனக்கு ஒரு போட்டோஸ் கவர் வர்றதுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நானும், வில்லியமும் ஒரு பார்ட்டிக்கு போய் இருந்தோம்....அங்க வச்சு நான் ட்ரிங்ஸ் பண்ணிட்டேன்....அப்போ தான் வில்லியம் என்னை லவ் பண்ணுறத சொன்னான்....அப்போ எங்களை மீறி எல்லாம் போயிடுச்சு.....அதற்கு அப்புறம் நாங்க இதைப் பத்தி பேசல.....உங்களை பிரிக்க கிராபிக்ஸ் பண்ணி போட்டோஸ் அனுப்பலாம்னு டிசைட் பண்ணி உனக்கு அனுப்புனோம்.....அன்னைக்கு தான் கடைசியாக வில்லியமை நான் பார்த்தேன்.....அதற்கு அப்புறம் அவன் என்ன ஆனான்??? எங்கே போனான்??? எதுவும் தெரியல.....அன்னைக்கு வைபவ் பர்த்டே பங்சன்ல தான் நான் பிரக்னென்ட்னு தெரிய வந்திச்சு....ஆனால் அதை நீ தப்பாக புரிஞ்சுகிட்ட....உன் கிட்ட இதை சொல்ல வர்றதுக்குள்ள என் அம்மா, அப்பா என்னை விட்டு போயிட்டாங்க.....யாரும் இல்லாமல் அனாதையாக நின்னேன்.....அப்போ தான் நான் பண்ண எல்லாத் தப்பும் எனக்கு புரிஞ்சது.....எல்லார்கிட்டயும் எல்லாம் சொல்லிடலாம்னு நினைக்கும் போது உங்க இரண்டு பேர் லைஃப்லயும் ஏதேதோ ஆகிடுச்சு.....என்னை மன்னிச்சுடு நிலா....இந்த உண்மை எல்லாம் சூர்யாவிற்கும் தெரியும்.....அன்னையில் இருந்து சூர்யா என் கூட பேசுறதே இல்லை.....நான் பண்ண தப்புக்கு என்னை அவன் உயிரோட விட்டதே பெரிசு......நான் சூர்யாவை காதலிச்சேன்.....ஆனா எப்போ சூர்யா மனசுல நீ இருக்கேனு தெரிஞ்சதோ அன்னைக்கே நான் செத்துட்டேன் நிலா.....உங்களை பிரிக்கணும்னு கேவலமான எண்ணத்தோடு இதற்கு முன்னாடி சுத்திட்டு இருந்தேன்.....இப்போ யாரும் இல்லாத அனாதையாக நிற்குறேன்.....இனி நான் உயிரோடு இருப்பேனா இல்லையா தெரியல.....ஒரு வேளை நான் இறந்துட்டா என் குழந்தையை தயவுசெய்து என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற ஒரு பொண்ண வளர்க்காம எல்லாரோட அன்பும் கிடைக்குற மாதிரி பார்....த்து......க்கோ.........நி...லா......." என்றவாறு ஜனனி கண்களை மூடி மயங்க பதட்டம் கொண்ட வெண்ணிலா
"டாக்டர்.....டாக்டர்......" என்று கத்தி கொண்டே டாக்டரை அழைத்து கொண்டு வந்தாள்.
ஜனனிக்கு சிகிச்சை ஆரம்பித்து விட வெண்ணிலா இது நாள் வரை அவள் செய்த தவறுகளை எல்லாம் எண்ணி கண்ணீர் வடித்தாள்.
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் இரண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே
நானும் மருக
என்ன செய்வேனோ...?
ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
"நான் இனி சூர்யா முகத்தில் எப்படி முழிப்பேன்.....சந்தேகப்பட்டு நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்......சூர்யா.....சூர்யா......" என்று அழுது புலம்பிய வெண்ணிலா உடனடியாக தன் போனை எடுத்து சூர்யாவிற்கு அழைப்பு மேற்கொண்டாள்.
தூக்க கலக்கத்தில் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்து
"ஹலோ....." என்று கூற சூர்யாவின் குரல் வெண்ணிலாவின் கண்களில் கண்ணீரை சுரக்க செய்தது.
தன் தொண்டையை சரி செய்து கொண்ட வெண்ணிலா
"நான் நிலா பேசுறேன்......" என்று கூற மறுமுனையில் சூர்யா அமைதியாக இருந்தான்.
"ஜனனியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்.....விஜயா ஹாஸ்பிடல்......நீங்க வரமுடியுமா????" என்று வெண்ணிலா கேட்கவும்
மறுபுறம் கோபம் கொண்ட சூர்யா
"அவ உனக்கும், எனக்கும் பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு அவளை கொன்னு போட்டாலும் பரவாயில்லைனு நான் இருக்கேன்....நீ அவளுக்கு சேவகம் பண்ணிட்டு இருக்க அப்படி தானே??? முதல்ல அங்கே இருந்து கிளம்பி வீட்டுக்கு போற வழியை பாரு....." என்று விட்டு போனை வைத்து விட வெண்ணிலாவோ செய்வதறியாது போனையே வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.........