சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி
"அம்மா........" என்று ஜனனியின் அலறல் சத்தத்தை தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்க வெண்ணிலாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.
அப்போது நர்ஸ் ஒருவர் குழந்தையை கொண்டு வந்து வெண்ணிலாவிடம் நீட்ட தயக்கத்துடன் அந்த குழந்தையை வாங்கியவள் நெஞ்சம் புதிதாக ஒன்றை உணர்ந்தது.
குழந்தையின் ஸ்பரிசம் வெண்ணிலாவை புதிய ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றது.
அப்போது
"நிலா......." என்று தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்த வெண்ணிலா அங்கு வில்லியமை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகத் தோற்றமே காட்டியது.
வில்லியம் அவளது கையில் இருந்த குழந்தையையே பார்த்து கொண்டிருக்க குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்டவள்
"இப்போ என்ன பிரச்சினை இங்க வந்திருக்க????" என்று கோபமாக கேட்டாள்.
"குழந்தையை ஒரே ஒரு தடவை நான் தூக்கி பார்க்கவா??" என்று வில்லியம் கேட்கவும்
அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா
"ஜனனியை ஏமாற்றி அவ வயிற்றில் பிள்ளையை கொடுத்துட்டு இத்தனை நாள் தலைமறைவாக இருந்துட்டு இப்போ எதுக்கு இங்க வந்த???" என்று கேட்க அங்கிருந்த கதிரையில் சோர்ந்து போய் அமர்ந்தான் வில்லியம்.
"நான் ஜனனியை ஏமாற்ற நினைக்கல......உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண பாவம் தான் எங்கள இப்படி ஆக்கிடுச்சு...." என்று வில்லியம் கூறவும் அவனை நம்பாமல் பார்த்தாள் வெண்ணிலா.
"நான் ஜனனியை காலேஜ் டேஸ்ல இருந்து லவ் பண்ணேன்....ஆனா அவ சூர்யா கூடவே சுத்திட்டு இருந்தா.....எப்படியாவது ஜனனி கூட க்ளோஸ் ஆகிடனும்னு நான் வெயிட் பண்ணேன்.....அப்போ தான் ஒரு ரெஸ்டாரண்ட்ல ஜனனியை தனியா மீட் பண்ண கிடைச்சது....அங்க வச்சு தான் ஜனனி சூர்யாவை பத்தி, உன்னை பத்தி சொன்னா......அவளுக்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி அவ கூட எப்படியாவது சேர்ந்துடனும்தான் நான் எல்லாம் பண்ணேன்......ஆனா கடவுள் எனக்கு நல்ல படிப்பினை தந்துட்டாரு.....அன்னைக்கு உனக்கு போட்டோஸ் பத்தி போன்ல பேசிட்டு நான் வரும் போது என் பைக் ஒரு லாரியோட மோதி ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு......
அதற்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.....கண் முழிச்சு பார்க்கும் போது ஹாஸ்பிடல்ல இருந்தேன்.....எங்கே இருக்கேன்னு கூட தெரியல.....அப்போதான் எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார்......நான் அஞ்சு, ஆறு மாசமா கோமால இருந்தேனாம்.....அதுவும் நீலகிரில....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல.....யார் கிட்ட போய் என்ன பேசுறதுனே தெரியல.....அந்த நிமிஷம் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் ஞாபகம் வந்தது.....உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண துரோகம் தான் இதற்கு எல்லாம் காரணம்னு புரிஞ்சது.....ஹாஸ்பிடல்ல இருந்து வெளியே வரும்போது என் போன் மட்டும் தான் என் கையில் இருந்துச்சு.....உடனே ஜனனிக்கு போன் பண்ணுனேன்.....அவ போன் வேலை செய்யல....சூர்யாவோட நம்பர் எனக்கு தெரியல....அதனால உனக்கு போன் பண்ணேன்......ஆனா நீ நான் என்ன சொல்ல வரேனு கேட்காமலேயே போனை வச்சிட்ட.....திரும்ப உனக்கு ட்ரை பண்ணா போன் சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு.....சென்னைக்கு வரலாம்னு பார்த்தா கையில் சுத்தமாக காசு இல்லை.....கிடைச்ச வேலையை செஞ்சு சென்னைக்கு வர காசு சேர்த்தேன்...ஒரு மா நேத்து தான் சென்னை வந்தேன்....ஜனனியை எப்படி பார்ப்பேனு யோசிச்சு யோசிச்சு தயங்கி அவ வீட்டுக்கு இப்போதான் போனேன்.....அங்கே இருந்தவங்க ஜனனியை இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதாக சொன்னாங்க.....உயிரை கையில் பிடிச்சுட்டு ஓடி வந்தேன்....." என்று வில்லியம் கூறியதை கேட்டு வெண்ணிலா மலைத்துப் போய் நின்றாள்.
"ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கஷ்டத்தை சந்திச்சு தான் திருந்தனும்னு கடவுள் நம்ம தலையில் எழுதி இருக்கார் போல......" என்று வெண்ணிலா கூற வில்லியம் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
ஆனால் கடவுள் மேலிருந்து வெண்ணிலாவைப் பார்த்து
"உன்னோட டர்ன் இன்னும் முடியலயேமா....." என்று கூறியது அவளுக்கு தெரியாதே......
அப்போது ஐ.சி.யூ வில் இருந்து வெளியே வந்த டாக்டர்
"ஸாரி மா....அவங்கள எங்களால காப்பாற்ற முடியல....அவங்க ஆரம்பத்திலேயே ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைச்சிருந்தா எங்களால ஏதாவது பண்ணி இருக்க முடியும்.....ஐ யம் ஸாரி....." என்று விட்டு செல்ல
"ஐயோ ஜனனி......." என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வில்லியம் கத்தினான்.
நர்ஸ் வந்து வெண்ணிலாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு சென்று விட வில்லியம் அருகில் வந்த வெண்ணிலா
"இனி இப்படி கண்ணீர் விடுறதால எதுவும் மாறாது வில்லியம்.....இனிமேலாவது நாம பண்ண தப்பை உணர்ந்து திருந்தி வாழனும்னு நினைச்சுக்கோங்க....." என்று கூற
அவளை நிமிர்ந்து பார்த்த வில்லியம்
"என் ஜனனி போனதுக்கு அப்புறம் எனக்கு இங்கே என்ன இருக்கு???? நான் மறுபடியும் நீலகிரிக்கே போயிடுறேன்....." என்று கூற வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
"அப்போ குழந்தை????" என்று வெண்ணிலா வில்லியமை பார்த்து கேட்கவும்
கண்கள் கலங்க அவளைப் பார்த்த வில்லியம்
"அந்த குழந்தையை பார்க்குற தகுதி கூட எனக்கு இல்லை நிலா....அது தான் நான் பார்க்க கூடாதுனு கொண்டு போயிட்டாங்க போல....." என்று கூற வெண்ணிலா என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றாள்.
குழந்தை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று கண்ணாடி தடுப்பின் ஊடாக குழந்தையை பார்த்த வில்லியம் தன் கண்களை துடைத்து கொண்டு வெண்ணிலாவின் அருகில் வந்து
"நாங்க உனக்கு பண்ண துரோகத்துக்கு என் கூட நீ இவ்வளவு பொறுமையாக பேசுனதே பெரிசு நிலா.....ஜனனிக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் நான் செஞ்சு முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன்.....நீங்க குழந்தையை....." என்று கூறியவன் அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு அழ அவனை கூர்மையாக பார்த்தாள் வெண்ணிலா.
"நீங்க இன்னும் திருந்தவே இல்ல வில்லியம்.....நீங்க பண்ண தப்புக்கு குழந்தையை அனாதையாக நிற்கணுமா???? குழந்தைக்கு அம்மா, அப்பா தெரியாம நாளைக்கு அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு நிற்கனும்னா நினைக்குறீங்க நீங்க???" என்று வெண்ணிலா கோபமாக கேட்கவும் அவசரமாக இல்லை என்று தலை அசைத்தான் வில்லியம்.
"ஜனனியும், நீங்களும் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான்.....ஆனா அதுக்காக ஒண்ணுமே தெரியாத அந்த பச்ச மண்ண தண்டிக்கணுமா???? ஜனனி கடைசியாக என் கிட்ட ஒரு விஷயம் சொன்னா......என் குழந்தையை என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற குழந்தையா வளர விட்டுறாதேனு சொன்னா.....அவ எந்த அர்த்தத்தில் சொன்னானு தெரியல.....ஆனா எப்போ குழந்தையை நான் என் கையில் வாங்குனேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இனி இந்த குழந்தை என் பொறுப்பு......" என்று வெண்ணிலா கூறவும்
அவளை அதிர்ச்சியாக பார்த்த வில்லியம்
"நிலா....." என்று கூற வர அவனைக் கை காட்டி பேச வேண்டாம் என தடுத்தாள் வெண்ணிலா.
"அனாதை ஆசிரமத்தில் இருக்குற ஒவ்வொரு குழந்தைங்களும் உங்களை மாதிரி ஆட்களால அனாதையாக்கப்பட்ட குழந்தைங்க தான்.....அந்த குழந்தைங்க தினம் தினம் எத்தனை கஷ்டம், எத்தனை அவமானப்படுதுனு உங்களுக்கு தெரியுமா???? நீங்க ஈசியா சொல்லிடுவீங்க ஆசிரமத்தில் பார்த்துப்பாங்கனு......ஆனா அந்த பச்ச குழந்தைங்க பாசத்துக்காக எவ்வளவு ஏங்குதுனு யாராவது யோசிக்குறாங்களா??? இல்லையே!!!! இளமை வேகத்தில் நீங்க எல்லாரும் ஏதோ பண்ணிட்டு போயிடுவீங்க.....நாளைக்கு சமூகத்தில் தலை குனிந்து நிற்கப் போறது நீங்க இல்ல....இந்த குழந்தைங்க தான்....." என்று வெண்ணிலா கூற வில்லியம் தலை குனிந்து நின்றான்.
"கடைசியாக ஒண்ணு சொல்றேன் வில்லியம்.....இவ்வளவு நேரம் நீங்க கவலையாக பேசும் போது எனக்கு உங்க மேல இருந்த கோபம் குறைஞ்சது.....ஆனா எப்போ குழந்தையை பற்றி பேசுனீங்களோ அப்போவே உங்க மேல இருந்த கொஞ்ச மரியாதையும் போயிடுச்சு.....இனி நீங்களா கேட்டாலும் குழந்தையை உங்க கிட்ட கொடுக்க மாட்டேன்.....லீகலா இந்த குழந்தையை நான் தத்தெடுத்து என் குழந்தையா வளர்க்கப் போறேன்....." என்று வெண்ணிலா கூறவும் வில்லியம் வாயடைத்துப் போய் நின்றான்.
அதன் பிறகு ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து ஜனனியின் உடலை வில்லியம் எடுத்து சென்று விட வெண்ணிலா குழந்தையையே கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு நின்றாள்.
அப்போது திரும்பி அவளருகில் வந்த வில்லியம்
"இனி உங்க லைப்ல நான் வரமாட்டேன்.....என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடுங்க....." என்று விட்டு சென்று விட வெண்ணிலா சோர்வுடன் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அப்போது அவளது தொலைபேசி அடிக்கவும் எடுத்து பார்த்தவள் வெற்றியின் பெயர் திரையில் ஒளிரவும் அவனிடம் என்ன சொல்வது என்று யோசனையோடு போனை பார்த்து கொண்டு நின்றாள்.
போன் கட் ஆகி மறுபடியும் அடிக்க தயங்கி படியே போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.
"நிலா....நிலா....எங்கமா இருக்க???" என்று வெற்றி பதட்டத்துடன் கேட்கவும்
வெண்ணிலா தயக்கத்துடன்
"வெற்றி....அது....நான் ஹாஸ்பிடல்ல....." என்று கூற
"ஹாஸ்பிடலா???? என்ன ஆச்சு உனக்கு????" என்று பதட்டமாக கேட்டான் வெற்றி.
"எனக்கு ஒண்ணும் ஆகல....அது....நீ விஜயா ஹாஸ்பிடல் வா.....எல்லாம் நேர்ல சொல்லுறேன்....." என்று வெண்ணிலா கூறவும் அடித்துப் பிடித்து கொண்டு வெற்றி எல்லோரையும் அழைத்து கொண்டு விஜயா ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
வரும் வழியில் சூர்யாவையும் ஹாஸ்பிடல்க்கு வருமாறு சொன்ன வெற்றி மின்னல் வேகத்தில் ஹாஸ்பிடலை வந்தடைந்தான்.
"அம்மா........" என்று ஜனனியின் அலறல் சத்தத்தை தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்க வெண்ணிலாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.
அப்போது நர்ஸ் ஒருவர் குழந்தையை கொண்டு வந்து வெண்ணிலாவிடம் நீட்ட தயக்கத்துடன் அந்த குழந்தையை வாங்கியவள் நெஞ்சம் புதிதாக ஒன்றை உணர்ந்தது.
குழந்தையின் ஸ்பரிசம் வெண்ணிலாவை புதிய ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றது.
அப்போது
"நிலா......." என்று தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்த வெண்ணிலா அங்கு வில்லியமை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகத் தோற்றமே காட்டியது.
வில்லியம் அவளது கையில் இருந்த குழந்தையையே பார்த்து கொண்டிருக்க குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்டவள்
"இப்போ என்ன பிரச்சினை இங்க வந்திருக்க????" என்று கோபமாக கேட்டாள்.
"குழந்தையை ஒரே ஒரு தடவை நான் தூக்கி பார்க்கவா??" என்று வில்லியம் கேட்கவும்
அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா
"ஜனனியை ஏமாற்றி அவ வயிற்றில் பிள்ளையை கொடுத்துட்டு இத்தனை நாள் தலைமறைவாக இருந்துட்டு இப்போ எதுக்கு இங்க வந்த???" என்று கேட்க அங்கிருந்த கதிரையில் சோர்ந்து போய் அமர்ந்தான் வில்லியம்.
"நான் ஜனனியை ஏமாற்ற நினைக்கல......உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண பாவம் தான் எங்கள இப்படி ஆக்கிடுச்சு...." என்று வில்லியம் கூறவும் அவனை நம்பாமல் பார்த்தாள் வெண்ணிலா.
"நான் ஜனனியை காலேஜ் டேஸ்ல இருந்து லவ் பண்ணேன்....ஆனா அவ சூர்யா கூடவே சுத்திட்டு இருந்தா.....எப்படியாவது ஜனனி கூட க்ளோஸ் ஆகிடனும்னு நான் வெயிட் பண்ணேன்.....அப்போ தான் ஒரு ரெஸ்டாரண்ட்ல ஜனனியை தனியா மீட் பண்ண கிடைச்சது....அங்க வச்சு தான் ஜனனி சூர்யாவை பத்தி, உன்னை பத்தி சொன்னா......அவளுக்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி அவ கூட எப்படியாவது சேர்ந்துடனும்தான் நான் எல்லாம் பண்ணேன்......ஆனா கடவுள் எனக்கு நல்ல படிப்பினை தந்துட்டாரு.....அன்னைக்கு உனக்கு போட்டோஸ் பத்தி போன்ல பேசிட்டு நான் வரும் போது என் பைக் ஒரு லாரியோட மோதி ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு......
அதற்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.....கண் முழிச்சு பார்க்கும் போது ஹாஸ்பிடல்ல இருந்தேன்.....எங்கே இருக்கேன்னு கூட தெரியல.....அப்போதான் எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார்......நான் அஞ்சு, ஆறு மாசமா கோமால இருந்தேனாம்.....அதுவும் நீலகிரில....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல.....யார் கிட்ட போய் என்ன பேசுறதுனே தெரியல.....அந்த நிமிஷம் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் ஞாபகம் வந்தது.....உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண துரோகம் தான் இதற்கு எல்லாம் காரணம்னு புரிஞ்சது.....ஹாஸ்பிடல்ல இருந்து வெளியே வரும்போது என் போன் மட்டும் தான் என் கையில் இருந்துச்சு.....உடனே ஜனனிக்கு போன் பண்ணுனேன்.....அவ போன் வேலை செய்யல....சூர்யாவோட நம்பர் எனக்கு தெரியல....அதனால உனக்கு போன் பண்ணேன்......ஆனா நீ நான் என்ன சொல்ல வரேனு கேட்காமலேயே போனை வச்சிட்ட.....திரும்ப உனக்கு ட்ரை பண்ணா போன் சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு.....சென்னைக்கு வரலாம்னு பார்த்தா கையில் சுத்தமாக காசு இல்லை.....கிடைச்ச வேலையை செஞ்சு சென்னைக்கு வர காசு சேர்த்தேன்...ஒரு மா நேத்து தான் சென்னை வந்தேன்....ஜனனியை எப்படி பார்ப்பேனு யோசிச்சு யோசிச்சு தயங்கி அவ வீட்டுக்கு இப்போதான் போனேன்.....அங்கே இருந்தவங்க ஜனனியை இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதாக சொன்னாங்க.....உயிரை கையில் பிடிச்சுட்டு ஓடி வந்தேன்....." என்று வில்லியம் கூறியதை கேட்டு வெண்ணிலா மலைத்துப் போய் நின்றாள்.
"ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கஷ்டத்தை சந்திச்சு தான் திருந்தனும்னு கடவுள் நம்ம தலையில் எழுதி இருக்கார் போல......" என்று வெண்ணிலா கூற வில்லியம் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
ஆனால் கடவுள் மேலிருந்து வெண்ணிலாவைப் பார்த்து
"உன்னோட டர்ன் இன்னும் முடியலயேமா....." என்று கூறியது அவளுக்கு தெரியாதே......
அப்போது ஐ.சி.யூ வில் இருந்து வெளியே வந்த டாக்டர்
"ஸாரி மா....அவங்கள எங்களால காப்பாற்ற முடியல....அவங்க ஆரம்பத்திலேயே ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைச்சிருந்தா எங்களால ஏதாவது பண்ணி இருக்க முடியும்.....ஐ யம் ஸாரி....." என்று விட்டு செல்ல
"ஐயோ ஜனனி......." என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வில்லியம் கத்தினான்.
நர்ஸ் வந்து வெண்ணிலாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு சென்று விட வில்லியம் அருகில் வந்த வெண்ணிலா
"இனி இப்படி கண்ணீர் விடுறதால எதுவும் மாறாது வில்லியம்.....இனிமேலாவது நாம பண்ண தப்பை உணர்ந்து திருந்தி வாழனும்னு நினைச்சுக்கோங்க....." என்று கூற
அவளை நிமிர்ந்து பார்த்த வில்லியம்
"என் ஜனனி போனதுக்கு அப்புறம் எனக்கு இங்கே என்ன இருக்கு???? நான் மறுபடியும் நீலகிரிக்கே போயிடுறேன்....." என்று கூற வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
"அப்போ குழந்தை????" என்று வெண்ணிலா வில்லியமை பார்த்து கேட்கவும்
கண்கள் கலங்க அவளைப் பார்த்த வில்லியம்
"அந்த குழந்தையை பார்க்குற தகுதி கூட எனக்கு இல்லை நிலா....அது தான் நான் பார்க்க கூடாதுனு கொண்டு போயிட்டாங்க போல....." என்று கூற வெண்ணிலா என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றாள்.
குழந்தை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று கண்ணாடி தடுப்பின் ஊடாக குழந்தையை பார்த்த வில்லியம் தன் கண்களை துடைத்து கொண்டு வெண்ணிலாவின் அருகில் வந்து
"நாங்க உனக்கு பண்ண துரோகத்துக்கு என் கூட நீ இவ்வளவு பொறுமையாக பேசுனதே பெரிசு நிலா.....ஜனனிக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் நான் செஞ்சு முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன்.....நீங்க குழந்தையை....." என்று கூறியவன் அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு அழ அவனை கூர்மையாக பார்த்தாள் வெண்ணிலா.
"நீங்க இன்னும் திருந்தவே இல்ல வில்லியம்.....நீங்க பண்ண தப்புக்கு குழந்தையை அனாதையாக நிற்கணுமா???? குழந்தைக்கு அம்மா, அப்பா தெரியாம நாளைக்கு அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு நிற்கனும்னா நினைக்குறீங்க நீங்க???" என்று வெண்ணிலா கோபமாக கேட்கவும் அவசரமாக இல்லை என்று தலை அசைத்தான் வில்லியம்.
"ஜனனியும், நீங்களும் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான்.....ஆனா அதுக்காக ஒண்ணுமே தெரியாத அந்த பச்ச மண்ண தண்டிக்கணுமா???? ஜனனி கடைசியாக என் கிட்ட ஒரு விஷயம் சொன்னா......என் குழந்தையை என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற குழந்தையா வளர விட்டுறாதேனு சொன்னா.....அவ எந்த அர்த்தத்தில் சொன்னானு தெரியல.....ஆனா எப்போ குழந்தையை நான் என் கையில் வாங்குனேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இனி இந்த குழந்தை என் பொறுப்பு......" என்று வெண்ணிலா கூறவும்
அவளை அதிர்ச்சியாக பார்த்த வில்லியம்
"நிலா....." என்று கூற வர அவனைக் கை காட்டி பேச வேண்டாம் என தடுத்தாள் வெண்ணிலா.
"அனாதை ஆசிரமத்தில் இருக்குற ஒவ்வொரு குழந்தைங்களும் உங்களை மாதிரி ஆட்களால அனாதையாக்கப்பட்ட குழந்தைங்க தான்.....அந்த குழந்தைங்க தினம் தினம் எத்தனை கஷ்டம், எத்தனை அவமானப்படுதுனு உங்களுக்கு தெரியுமா???? நீங்க ஈசியா சொல்லிடுவீங்க ஆசிரமத்தில் பார்த்துப்பாங்கனு......ஆனா அந்த பச்ச குழந்தைங்க பாசத்துக்காக எவ்வளவு ஏங்குதுனு யாராவது யோசிக்குறாங்களா??? இல்லையே!!!! இளமை வேகத்தில் நீங்க எல்லாரும் ஏதோ பண்ணிட்டு போயிடுவீங்க.....நாளைக்கு சமூகத்தில் தலை குனிந்து நிற்கப் போறது நீங்க இல்ல....இந்த குழந்தைங்க தான்....." என்று வெண்ணிலா கூற வில்லியம் தலை குனிந்து நின்றான்.
"கடைசியாக ஒண்ணு சொல்றேன் வில்லியம்.....இவ்வளவு நேரம் நீங்க கவலையாக பேசும் போது எனக்கு உங்க மேல இருந்த கோபம் குறைஞ்சது.....ஆனா எப்போ குழந்தையை பற்றி பேசுனீங்களோ அப்போவே உங்க மேல இருந்த கொஞ்ச மரியாதையும் போயிடுச்சு.....இனி நீங்களா கேட்டாலும் குழந்தையை உங்க கிட்ட கொடுக்க மாட்டேன்.....லீகலா இந்த குழந்தையை நான் தத்தெடுத்து என் குழந்தையா வளர்க்கப் போறேன்....." என்று வெண்ணிலா கூறவும் வில்லியம் வாயடைத்துப் போய் நின்றான்.
அதன் பிறகு ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து ஜனனியின் உடலை வில்லியம் எடுத்து சென்று விட வெண்ணிலா குழந்தையையே கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு நின்றாள்.
அப்போது திரும்பி அவளருகில் வந்த வில்லியம்
"இனி உங்க லைப்ல நான் வரமாட்டேன்.....என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடுங்க....." என்று விட்டு சென்று விட வெண்ணிலா சோர்வுடன் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அப்போது அவளது தொலைபேசி அடிக்கவும் எடுத்து பார்த்தவள் வெற்றியின் பெயர் திரையில் ஒளிரவும் அவனிடம் என்ன சொல்வது என்று யோசனையோடு போனை பார்த்து கொண்டு நின்றாள்.
போன் கட் ஆகி மறுபடியும் அடிக்க தயங்கி படியே போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.
"நிலா....நிலா....எங்கமா இருக்க???" என்று வெற்றி பதட்டத்துடன் கேட்கவும்
வெண்ணிலா தயக்கத்துடன்
"வெற்றி....அது....நான் ஹாஸ்பிடல்ல....." என்று கூற
"ஹாஸ்பிடலா???? என்ன ஆச்சு உனக்கு????" என்று பதட்டமாக கேட்டான் வெற்றி.
"எனக்கு ஒண்ணும் ஆகல....அது....நீ விஜயா ஹாஸ்பிடல் வா.....எல்லாம் நேர்ல சொல்லுறேன்....." என்று வெண்ணிலா கூறவும் அடித்துப் பிடித்து கொண்டு வெற்றி எல்லோரையும் அழைத்து கொண்டு விஜயா ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
வரும் வழியில் சூர்யாவையும் ஹாஸ்பிடல்க்கு வருமாறு சொன்ன வெற்றி மின்னல் வேகத்தில் ஹாஸ்பிடலை வந்தடைந்தான்.