• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 24 [Pre - final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அப்டேட் போட லேட் பண்ணதுக்கு ஸாரி பிரண்ட்ஸ்....
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:
maari_2_movie_heroine_sai_pallavi_photos_06.jpgNani-joins-the-2-Crores-club-1138.jpgHohenzollern-Castle-Germany_View-of-the-castle-at-night_571.jpg
வானில் முழு நிலவு மேகங்களுக்குள் ஒளிவதும், வெளி வருவதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க வெண்ணிலாவும், சூர்யாவும் அந்த நிலவின் விளையாட்டையும், ஜேர்மனின் ஹொஹன்ஷோல்லர்ன் கேஸ்டலின் இரவு தோற்றத்தையும் ரசித்த வண்ணம் அவர்கள் வீட்டுக்கு சற்று தள்ளி இருந்த ஒரு புற் தரையில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.


குளிர் காற்று இதமாக அவர்களை வருடிச் செல்ல மெலிதாக நடுங்கிய வெண்ணிலாவை சூர்யா தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.


"என்ன எதுவும் பேசவே மாட்டேங்குறே??" என்று சூர்யா வெண்ணிலாவின் காதோரமாக மெல்லிய குரலில் கேட்கவும்


அவனை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"நீங்க பேசுவீங்கனு நானும் பேசல....." என்று தோளை குலுக்கினாள்.


"எப்போ இருந்து நீ இம்புட்டு நல்லவளா மாறுன ஐசு??? இந்த அதிர்ச்சியான மாற்றத்தை என் பிஞ்சு மனசு தாங்காதே!!!!" என்று போலியாக நெஞ்சில் கை வைத்து கொண்டு சூர்யா கூறவும் அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா பட்டென்று அவன் கையில் அடித்து வைத்தாள்.


"இதை இதை தான் நான் எதிர் பார்த்தேன்.....என்னோட ஐசுனாலே அடாவடியா, ரவுடி பேபி மாதிரி தான் இருக்கணும்....." என்று சூர்யா கூறவும்


அவன் தோளில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்ட வெண்ணிலா
"என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா???" என்று கேட்டாள்.


சூர்யாவிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இருக்குவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த வெண்ணிலா அவன் முகத்தை பார்த்து ஒரு கணம் வாடிப் போனாள்.


சூர்யாவின் முகத்தில் அத்தனை ஏக்கம், கவலை, காதல் என எல்லாம் சேர்ந்திருக்க தவறு ஏதோ செய்து விட்டதைப் போல சூர்யாவிடமிருந்து விலகி அமர முயன்றாள் வெண்ணிலா.


அவளால் முயற்சி செய்ய மட்டுமே முடிந்தது.


ஏனெனில் சூர்யா அவளை அத்தனை இறுக்கமாக தன்னோடு இணைத்து பிடித்து வைத்திருந்தான்.


வெண்ணிலா சூர்யாவை கேள்வியாக பார்க்கவும் அவளைப் பார்த்து புன்னகத்து கொண்ட சூர்யா
"ஒரு தரம் உன்னை போக விட்டுட்டு நான் பட்ட கஷ்டம் போதும்.....இனிமேலும் உன்னை என்னை விட்டு விலகி போக நான் விடமாட்டேன்....." என்று கூற


"தேவ்....." என்று கண்கள் கலங்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் வெண்ணிலா.


"உன் மேல எனக்கு இப்போவும் கோபம் தான்....இப்போ கூட நான் பதில் பேசாமல் இருக்கவும் என்னை விட்டு விலகி போக நினைச்சியே தவிர ஒரு வார்த்தை உன் மனசுல இருக்குறத நீ மனசு விட்டு கேட்கலயே.....அந்த கோபம் நிறைய இருக்கு....." என்று சூர்யா கூறவும்


"தேவ்....நான்..." என்று பேச வந்த வெண்ணிலாவின் இதழின் மேல் விரல் வைத்து வேண்டாம் என்பது போல சூர்யா தலை அசைக்க வெண்ணிலா அமைதியாக அவனை பார்த்தாள்.


"இன்னைக்கு நம்ம மனசுல இருக்குறத எல்லாம் பேசி தீர்த்துடுவோம்.....முதல்ல என் மனசுல இத்தனை நாளா இருக்குற விஷயத்தை எல்லாம் நான் சொல்லி முடிச்சுடுறேன்....." என்று விட்டு சூர்யா கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டு கொண்டான்.


"நான் சின்ன வயதிலிருந்தே உன் கூட சண்டை போட்டது தான் அதிகம்.....ஆனா நீ பிறந்திருந்த அப்போ பர்ஸ்ட் டைம் உன்னை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.....அது ஏன்னு எனக்கு அப்போ தெரியல.....எப்போதும் உன் கூடவே இருக்கணும்னு தோணும்.....அதனால தான் அடிக்கடி உங்க வீட்டுக்கு நான் வருவேன்.....ஆனா நீ எங்க அம்மா கிட்ட ஒரு பொய் சொல்லி என்னை மாட்டி விட்ட பாரு....சத்தியமாக அதற்கு அப்புறம் உன் பக்கமே வரக்கூடாதுனு தான் இருந்தேன்....ஆனா ஏனோ தெரியல என்னால அப்படி இருக்க முடியல....வெளியில உன் மேல கோபமாக இருக்குற மாதிரி காட்டிப்பேன்....அதே நேரம் என் மனசுக்குள்ள நீ கோபமாக என்னை திட்டுறத நினைச்சு பார்த்து சிரிச்சுக்குவேன்....அப்படி தான் அன்னைக்கு ஒரு நாள் உன் கூட வம்பு வளர்த்தேன்.....


கடைசியில் மொத்தமாக நான் என் மனசை உன் கிட்ட கொடுத்துட்டேன்.....அதற்கு அப்புறம் சட்டு சட்டுன்னு நீ என் கூட பேசாமல் போயிடுவ....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியாது....சரி நீயாகவே பேசட்டும்னு நான் இருப்பேன்....அந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருஷமாக தான் எனக்கு இருக்கும்.....
வைபவை பார்க்க வர்றப்போ எல்லாம் நீ உன் ரூம்ல போய் ஒளிஞ்சுக்குவ....எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கும்....அப்போவே உன் முன்னாடி வந்து உனக்கு என்ன தான் டி பிரச்சினைனு கேட்க தோணும்....ஆனா உன் மேல என் கோபத்தை காட்ட எனக்கு அப்போ பிடிக்கல.....ஒரு கட்டத்திற்கு மேல முடியாமல் தான் நான் உன்னை தேடி வந்தேன்....நீ அப்போவே ஜனனியை பற்றி சொன்ன நான் தான் கேட்கல....." என்று கரகரத்த குரலில் கூறவும் அவனை தாவி அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.


"எல்லா தப்பும் என் மேல தான் தேவ்.....நான் ஆரம்பத்தில் இருந்தே உங்க கிட்ட மனசு விட்டு பேசல....அப்படி பேசி இருந்தா இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.....எனக்கு சின்ன வயதிலிருந்தே உங்களை ரொம்ப பிடிக்கும்....இது உங்களுக்கு கூட தெரியாது....என் அம்மா, வெற்றி, அப்பா எல்லாம் உங்களை பற்றி அடிக்கடி பேசிட்டே இருப்பாங்க.....
அது எனக்கு பிடிக்காது....எல்லோரும் நினைச்சாங்க என்னை விட்டு உங்களுக்கு எல்லாரும் பாசம் காட்டுறதனால பொறாமைனு.....ஆனா உண்மையான காரணம் என்ன தெரியுமா???? என்னைத் தவிர வேறு யாரும் உங்களை பற்றி பேச கூடாது....அது ஏன்னு எனக்கு அப்போ புரியல....அதை புரிஞ்சுக்க நான் நினைச்சும் பார்க்கல....உங்களை கோபப்படுத்தி பார்க்கணும் அப்போ நீங்க என் கூட உரிமையா சண்டை போடுறதுல ஏதோ ஒரு பீல் வரும்....அந்த டைம் அது என்னனு எனக்கு தெரியல....எப்போ நான் உங்கள அவ்வளவு நெருக்கமாக முதல் முதலாக பார்த்தேனோ அப்போ தான் என் மரமண்டைக்கு புரிஞ்சது இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்னு....." என்று வெண்ணிலா கூறவும்


"ஹேய்.....இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சுருக்கோம் இல்லையா????" என்று சூர்யா கேட்க


"அது தான் மேட் பார் ஈச் அதர்...." என்றவாறு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வெண்ணிலா.


"சின்ன வயதிலிருந்தே இவ்வளவு பொஸசிவ்வா இருந்த நான் ஜனனி கூட உங்களை பார்த்தா என்ன பண்ணி இருக்கணும்???" என்று வெண்ணிலா கேட்கவும்


வாய் விட்டு சிரித்த சூர்யா
"அதுவும் சரிதான்!!!! எனக்கு இப்போ தானே உன் சில்லி கோபத்தோட அர்த்தம் புரியுது....." என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.


அவனது கையை தட்டி விட்ட வெண்ணிலா
"ஆனாலும் நான் உங்களை சந்தேகப்பட்டு இருக்க கூடாது தேவ்....அதுவும் ஜனனி....குழந்தை...அப்படி....." என்று தடுமாற


அவளது தலையில் தட்டிய சூர்யா
"லூசு நான் அந்த விஷயத்தில் வருத்தப்பட்டது என்னவோ உண்மை தான்....ஆனா இது எல்லாம் நீ ஏன் பண்ணுறேனு எனக்கு பின்னாடி தானே தெரிஞ்சது....." என்று கூற அவனை குழப்பமாக பார்த்தாள் வெண்ணிலா.


"நான் தான் உங்க கூட பேசவே இல்லையே....." என்று வெண்ணிலா கூறவும்


"நீ பேசி இருந்தா தான் எனக்கு இன்னும் கோபம் கூடி சண்டை வந்திருக்க வாய்ப்பு இருக்கு.....ஆனா நீ தான் என் கூட பேசலயே அதனால தான் எல்லாம் புரிஞ்சது...." என்று சூர்யா கூற வெண்ணிலா அவனை முறைத்து பார்த்தாள்.


வெண்ணிலாவின் முறைப்பை பார்த்து சிரித்துக்கொண்ட சூர்யா
"நான் ஆல்ரெடி சொல்லி இருக்கேன்....நீ என் மேல கோபப்படுறது என் மேல இருக்குற அன்பால் தான்....
ஆனா உனக்கு தான் எதுவுமே புரியாதே....." என்று கூறவும்


அவனை மேலும் முறைத்து பார்த்த வெண்ணிலா
"அப்படி என்ன எனக்கு புரியல????" என்று கோபமாக கேட்டாள்.


"உனக்கு எதுவுமே புரியாது.... அத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாப்பா அவங்க கூட இருக்கட்டும்னு சொன்னதே நாம இரண்டு பேரும் மனசு விட்டு பேசட்டும்னு தான்....அதை கூட நீ புரிஞ்சுக்காம பதிலுக்கு பதில் பேசிட்டு இருந்த...." என்று சூர்யா கூறவும்


"ஓஹோ.....அதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்கா????" என்று கேட்டாள் வெண்ணிலா.


"அட கடவுளே!!! உன்னை வைச்சுகிட்டு எப்படி தான் என் வாழ்க்கை போகப் போகுதோ தெரியல....." என்று சூர்யா சலித்து கொண்டே கூறவும்


"இப்படி சலிச்சுகிட்டு ஒண்ணும் நீங்க என் கூட வாழத் தேவையில்லை....." என்று விட்டு கோபமாக எழுந்து கொண்ட வெண்ணிலா அதே கோபத்தோடு சூர்யாவை தள்ளி விட்டு விட்டு வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.


உள்ளுக்குள் சிரித்து கொண்டே வீட்டை நோக்கி நடந்த வெண்ணிலா
"கொஞ்ச நேரம் உன்னை வைச்சு விளையாடிப் பார்த்துடலாம்டா தேவ்....." என்று நினைத்துக் கொண்டாள்.


"ஹேய் பச்ச மிளகாய்!!!!" என்று சிரித்துக்கொண்டே வெண்ணிலாவின் பின்னால் ஓடி வந்த சூர்யா அவள் கையை பிடிக்க போலியான கோபத்தோடு அவனது கையை உதறி விட்டு வேகமாக அவர்களது அறையை நோக்கி சென்றாள் வெண்ணிலா.


வெண்ணிலா அறைக்குள் நுழைவதற்குள் வேகமாக ஓடி வந்து அறைக்குள் நுழைந்து கொண்ட சூர்யா அதே வேகத்தோடு வெண்ணிலாவை அறைக்குள் இழுத்து எடுத்து விட்டு அறை கதவை வேகமாக தாழ் போட்டான்.


என்ன நடந்தது என்று வெண்ணிலா புரிந்து கொள்வதற்கு இடையில் சூர்யா இவற்றை எல்லாம் செய்து முடித்து இருக்க
"இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமாக ரூமுக்குள்ள என்னை இழுத்து கதவை லாக் பண்ணிங்க????" என்று கோபமாக கேட்டாள் வெண்ணிலா.


"மை ஸ்வீட் சில்லி ஐசு.....உன் கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான் எனக்கு தெரியும்....பட் நம்ம பிரச்சினையை மத்தவங்க பார்க்க வேண்டாமே....அது மட்டுமில்லாமல் நான் உன் கிட்ட அடி வாங்குறத அந்த ராபர்ட் பார்த்தா எனக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுமே.....அதற்காக தான்....." என்று சூர்யா கூறவும்


அதற்கு மேல் வெண்ணிலாவினால் அவள் கோபத்தை வைத்து இருக்க முடியவில்லை.


"உங்க கூட...." என்று சிரித்துக்கொண்டே அவனது தோளில் நான்கு, ஐந்து அடிகளை பரிசாக கொடுத்த வெண்ணிலா


"காலையில் போகும் போது சொன்னிங்களே.....ராபர்ட்டுக்கும், உங்களுக்கும் ஒரு கணக்கு இருக்குதுனு.....அது என்ன????" என்று கேட்டாள்.


"முதல்ல சிட் டவுன்....." என்று அங்கிருந்த ஸோபாவில் அவளை அமரச் செய்த சூர்யா வெண்ணிலாவின் மடியில் தலை வைத்து படுத்து கொள்ள வெண்ணிலா சிரித்துக் கொண்டே அவன் தலை முடியை கோதி விட்டு கொண்டிருந்தாள்.


வெண்ணிலாவின் ஸ்பரிசத்தை சூர்யா ஆழ்ந்து ரசித்து கொண்டு இருக்க அவனது தலை முடியை பற்றி இழுத்த வெண்ணிலா

"அப்படியே தூங்கிடலாம்னு பார்த்தா கொன்னுடுவேன்....ஒழுங்கா அது என்ன கணக்குனு சொல்லுங்க.." என்று கேட்டாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
தன் தலையை தடவி விட்டு கொண்ட சூர்யா
"பக்கா வைஃப்பா மாறிட்ட ஐசு நீ....." என்று கண் சிமிட்டினான்.


"ஐசு ஐசு னு ஐஸ் வைச்சது போதும்....விஷயத்தை சொல்லுங்க....." என்று வெண்ணிலா கேட்கவும்


அன்று பிளைட்டில் நடந்ததை எல்லாம் சூர்யா ஒன்று விடாமல் கூற வெண்ணிலா விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்.


"அவ்வளவுக்கு பக்கத்தில் யாரு இருக்காங்கனு கூட தெரியாமல் ரொமான்ஸ் பண்ணுறான் அந்த பாவி....அதுவும் என்னை மாதிரி ஒரு பிரம்மச்சாரி கிட்ட....." என்று சூர்யா கூறவும்


"என்னது பிரம்மச்சாரியா???? யாருப்பா அது????" என்று சுற்றிலும் வெண்ணிலா தேடி பார்க்க


அவளது ஜடையைப் பிடித்து இழுத்த சூர்யா
"கண்ணுக்கு முன்னாடி குத்துக்கல்லாட்டம் நான் இருக்கும் போது அங்க என்ன லுக்கு????" என்று கேட்டான்.


"ஓஹ்.....ஸார் தான் அந்த பிரம்மச்சாரியா???? ஒரு பொண்ணு கூட தனியா ரூம்ல இருந்து கடலை போட்டு கிட்டு இருக்குறவங்க தான் உங்க ஊர்ல பிரம்மச்சாரியா??? சொல்லவே இல்ல...." என்று வெண்ணிலா நக்கலாக கூறவும்


எழுந்து அமர்ந்த சூர்யா
"நீ இப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்புறம் நான் இங்க இருக்குறதே தப்பு......" என்று விட்டு எழுந்து கொள்ள


"நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் தேவ்.....ஸாரி....." என்று அவன் கை பிடித்து கெஞ்சலாக கூறினாள் வெண்ணிலா.


"அட கிறுக்கு பயபுள்ள....நான் கோபப்பட்டு எழுந்திரிச்சேன்னு நினைச்சியா???? இன்னையோட இந்த பிரம்மச்சரியத்தை முடிக்கலாம்னு தான் எந்திரிச்சேன்....காலையில் நான் சொன்னது ஞாபகம் இருக்கு தானே....நான் இத்தனை நாள் காத்திருந்த அந்த நேரம் இப்போ வந்திருச்சு....." என்று சூர்யா சிரித்த வண்ணம் கூற


"அடப்பாவி......" என்று அவனை வாயைப் பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா.


வெண்ணிலாவின் கை பிடித்து எழுப்பி தன் அருகில் நெருங்கி நிற்க செய்த சூர்யா அவள் கண்களை காதலோடு நோக்கினான்.


அத்தனை நேரம் வாய் ஓயாமல் சூர்யாவோடு பேசி கொண்டு இருந்த வெண்ணிலா சூர்யாவின் ஒற்றை பார்வையில் தன் உலகம் மறந்து போய் சொக்கிப் போய் நின்றாள்.


வெண்ணிலாவின் இடையில் கை வைத்து அவளைத் தன்னருகில் இழுத்து கொண்டவன் தன் இதழ் முத்திரையை அவள் நெற்றியில் பதித்தான்.


வெண்ணிலாவின் உடலில் ஏதேதோ மாற்றங்கள் தோன்ற அவளது கைகள் தானாக சூர்யாவின் கழுத்தை வளைத்து கொண்டது.


இரு காதல் மனங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து கொள்ள அவர்களது இதழ்கள் நான்கும் கவி பாடத் தொடங்கியது.


உன்னைத் தொடர்ந்து நான் என்னை தொடர்ந்து நீ என்று அந்த சூரியனும் நிலவும் வானில் பவனி வருவதைப் போல பெண்ணவளின் காதலை தொடர்ந்து ஆண் அவன் காதலை காட்ட இனி நமக்கு அங்கு வேலை இல்லை.


நிலாவின் காதலில் சூர்யாவும், சூர்யாவின் காதலில் நிலாவும் தங்களை மறந்து போய் இருக்க வானில் சூரியன் நிலவை வழி அனுப்பி விட்டு தன் கடமையை பார்க்க வந்து சேர்ந்தது.


சூரிய வெளிச்சம் கண்களில் படவும் மெல்ல கண் திறந்த வெண்ணிலா தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவளது மனம் கவர்ந்த சூர்யனைப் பார்த்து புன்னகத்து கொண்டாள்.


இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் மேலும் மேலும் அவளை வெட்கம் கொள்ள வைக்க வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்ட வெண்ணிலா குளித்து முடித்து விட்டு சத்தம் எழுப்பாமல் சூர்யாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு ஆண்டாளை பார்க்க சென்றாள்.


ஆண்டாள் மற்றும் ராபர்ட் பெட்டியும், கையுமாக தயாராகி நிற்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட வெண்ணிலா
"அம்மா எங்கம்மா கிளம்பிட்ட????" என்று ஆச்சரியமாக கேட்டாள்.


"வேற எங்க ஊருக்கு தான்...." என்று ஆண்டாள் கூறவும்


"என்ன????" என்று அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா


"ராபர்ட் நீங்க எங்க கிளம்பிட்டீங்க????" என்று கேட்டாள்.


"அம்மாவும், நானும் மட்டும் இல்லை.....நீங்க, ஸார், குட்டி முதலாளி எல்லோரும் ஊருக்கு தான் போகப் போறோம்......" என்று ராபர்ட் கூறவும்


"வாட்?????" என்று அதிர்ச்சியான வெண்ணிலா


"கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன் பா....." என்று கெஞ்சலாக கேட்டாள்.


"நான் சொல்லட்டும்மா ஐசு????" என்றவாறு அறையில் இருந்து பெட்டியோடு வெளியேறி வந்த சூர்யாவை அதிர்ச்சியாக பார்த்த வெண்ணிலா


"என் சின்ன இதயம் உங்க சஸ்பென்ஸ் தாங்காதுடா சாமி.....என்ன நடக்குது இங்கே??? நீங்களாவது சொல்லுங்க தேவ்....." என்றவாறே சூர்யாவின் அருகில் சென்று நின்றாள்.


"என்னோட வேலைகள் எல்லாம் முடிஞ்சது.....ஸோ நாம ஊருக்கு போகப் போறோம்...." என்று சூர்யா கூறவும்


அவனை வியப்பாக பார்த்த வெண்ணிலா
"ரியலி??????" என்று விழி விரித்து ஆச்சரியமாக கேட்டாள்.


"ஆனா உங்களுக்கு நிறைய நாள் ஆகும்னு வெற்றி சொன்னானே????" என்று வெண்ணிலா யோசிக்கவும்


அவளது தோளில் கை போட்டு கொண்ட சூர்யா
"அந்த வேலையில் நான் இருந்தா நிறைய நாள் தான் ஆகும்.....பட் அந்த வேலை இப்போ வேறு ஒருத்தங்க காண்ட்ராக்ட்க்கு போயாச்சே.....ஷோ நமக்கு இங்க இருக்கணும்னு அவசியம் இல்லையே...." என்று கூற


"என்ன காண்ட்ராக்ட் வேறொரு ஆளுக்கு போயிடுச்சா???? எப்படி????" என்று பதட்டமாக கேட்டாள் வெண்ணிலா.


"கூல் ஐசு கூல்.....வேறு ஆள்னா என்னோட கம்பெனில இருக்குற இன்னொரு சப் அசிஸ்டென்ட் ஒருத்தங்களுக்கு கொடுத்துருக்கேன்....ஏன்னா இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கல்யாணம் ஆகப்போகுதே....." என்று சூர்யா கூறவும்


"இது என்னடா புதுக்கதை????" என்று தலையில் கை வைத்து கொண்டு நின்றாள் வெண்ணிலா.


"ஓகே ஓகே....நீ கன்பியூஸ் ஆகாத......நான் பர்ஸ்ட்ல இருந்து சொல்றேன்.....நான் இங்க வந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு தானே....நான் ஆல்ரெடி சொல்லி இருக்கேன் உன்னை பார்க்காம நான் எப்படி இருந்தேன்னு......ஷோ என்னால உன்னை பிரிஞ்சு உன்னை பார்க்காமல் இருக்க முடியல....அங்க இருக்கும் போது ஏதோ ஒரு ரீசனால நாம மீட் பண்ணுவோம்....இல்ல இல்ல....மீட் பண்ண வைப்பேன்....பட் இங்க இருந்தா அது முடியாது.....அதனால ஆல்ரெடி நான் டிசைட் பண்ணி வைச்சேன்....ஆறு மாதங்களுக்கு அப்புறம் இந்த பொறுப்பு எல்லாம் வேற ஒருத்தங்க கிட்ட கொடுத்துட்டு ஊருக்கு வந்து உன்னையும், பாப்பாவையும் என் கூட கூட்டிட்டு போறதுனு.....பட் ஸ்வீட் சர்ப்பரைஸா நீயே வந்துட்ட.....ஷோ எல்லாம் பக்காவா முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறோம்....." என்று சூர்யா கூறவும்


"அப்போ கல்யாணம்???" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.


"அது நேற்று வெற்றிக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு, மாமாவுக்கு, அத்தைக்கு எல்லோருக்கும் போன் பண்ணி பேசி நான் பண்ண பிளான்.....உனக்கு ஊருக்கு போய் சொல்லலாம்னு தான் நினைச்சேன்....பட் உன்னை இன்னும் கன்பியூஸ் பண்ண விரும்பல.....ஷோ பைனல் டிசிஸன் நெக்ஸ்ட் வீக் நம்ம மேரேஜ்....." என்று சூர்யா கூற


"தேவ்....." என்று சந்தோஷமாக அவனை கட்டி கொண்டாள் வெண்ணிலா.


"ஏன் இது எல்லாம் நேற்றே என்கிட்ட சொல்லல??? இன்னும் எத்தனை சர்ப்பரைஸ் வைச்சிருக்கிங்க நீங்க???" என்று வெண்ணிலா கேட்கவும்


அவளது நெற்றியில் செல்லமாக முட்டிய சூர்யா
"நைட் இதை பற்றி பேசவா நமக்கு டைம் இருந்துச்சு????" என்று அவள் காதில் மெதுவாக கேட்க வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.


"நம்ம மேரேஜ் அன்னைக்கு பாப்பாவுக்கு பேரும் வைக்கப்போறோம்....." என்று கூற கண்கள் இரண்டிலும் கண்ணீர் வடிய அவனை மேலும் இறுக அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.


"நான் உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தி....." என்றவளின் வாயை தன் கரங்களால் மூடிக்கொண்ட சூர்யா


"இனி வரப் போற நாட்கள் தான் நமக்கு தேவையானது.....கடந்து போனது எல்லாம் ஒரு ஆக்சிடெண்ட்.....அதை பற்றி பேசி இனி வரப்போகிற நாட்கள் எல்லாத்தையும் கஷ்டப்படுத்த வேண்டாமே......" என்று கூறவும்


அவன் கன்னத்தில் எம்பி இதழ் பதித்த வெண்ணிலா
"இப்போ உன் மேல இருக்குற பொசஸிவ் இன்னும் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சுடா.....தேங்க்ஸ்டா தேவாங்கு....." என்று கூற


"தேவாங்கா???" என்று அதிர்ச்சியாக கேட்டான் ராபர்ட்.


"அச்சச்சோ....." என்று தன் தலையில் தட்டி கொண்ட வெண்ணிலா அப்போது தான் அங்கிருந்த ராபர்ட்டையும், ஆண்டாளையும் பார்த்து சமாளிப்பாக சிரித்தாள்.


சூர்யாவோ ராபர்ட்டை கேள்வியாக பார்க்கவும்

"ஸார் பிளைட்க்கு டைம் ஆகுது.....நான் லக்கேஜ் எல்லாம் கொண்டு போய் வைக்குறேன்.....நீங்க வாங்க ஸார்....." என்று விட்டு ராபர்ட் விட்டால் போதும் என்பது போல ஓட வெண்ணிலா, சூர்யா, மற்றும் ஆண்டாள் சிரித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து ஏர்போர்ட் நோக்கி புறப்பட்டனர்........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top