• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
பதிலேதும் சொல்லாமல் நிற்பவளை முறைத்தவன், “ஏன் டி வாயில என்ன வச்சிருக்க..சொல்லி தான் தொலையேன்…” என்க

அவனது அதட்டலில் திடுக்கிட்டு, “ஆதி, நான் சொல்லுவேன் அப்புறம் நீ என்னை எதுவும் சொல்லக் கூடாது…” அவளின் பேரம் பேசுதலில் புருவம் சுருக்கியவன்

“எங்க அம்மாவுக்கு வேற ஏதாச்சும் கலந்து கொடுத்துட்டியா..?” அதிர்ச்சியாய் அவன் வினவ..

“உங்க அம்மா தான் சிக்க மாட்டுக்கே..அதெல்லாம் இல்ல…” என்றவள் யோசிக்க

“நேத்து நான் குடிச்சத மட்டும் எங்க அம்மா குடிச்சிருந்தா என்ன ஆகிருக்கும்…?” சின்ன கோபத்தில் கேட்டபவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள்,

“நீ லூசு தான் ஆதி...உங்க அம்மாவா இருந்தா முதல் சிப்’லயே துப்பிட்டு வேற காபி போட்டு குடிச்சிருப்பாங்க...நீதான் ஏதோ பெரிய இவன் மாதிரி முழுசையும் குடிச்சி பாத்ரூமை நாறடிச்சுட்ட…” ஒற்றைக் கையை இடுப்பில் வைத்து மறுகைக் கொண்டு தலையில் அடித்தவளின் பிடதியில் அடித்தவன்

“ஏன் டி சொல்ல மாட்ட...உன்னை போட்டுக் கொடுக்காம விட்டேன் பாரு..எனக்கு இன்னமும் வேணும்..”என்றவனுக்கு அயர்வாய் இருந்தது போல கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட, இப்போதும் கையைப் பிசைந்து நின்றாளே தவிர வேணி அழைப்பதற்கான காரணத்தை மட்டும் சொல்லவேயில்லை..

“சரி டி நீ சொல்லுற மாதிரி விளக்கு பொருத்துறதுக்கும் இப்படி முழிச்சிட்டு நிக்குறதுக்கு என்ன சம்பந்தம்னு தெரில..நான் தூங்குறேன்..நீ எங்க அம்மாவையே சமாளிச்சிக்கோ..” அவன் கண்களை மூடி தூங்குவதைப் போல பாவனைச் செய்ய, தனது அலைபேசியில் இருந்து அன்னைக்கு அழைப்புவிடுத்தவள், தன்னைக்கே கேட்காத டோனில் ஏதோ பேசி பின் அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்…

அவளிடமிருந்து போனை வாங்கியவன் லைனில் குழலி இருப்பதைக் கண்டு, “சொல்லுங்க அத்தை..நல்லாயிருக்கீங்களா..?” நலம் விசாரித்து பின்

“சொல்லுங்க அத்தை..” என விஷயத்துக்கு வர, அதற்குள் மதி பாத்ரூமிற்குள் சென்றிருந்தாள்..

“தம்பி, மதி உங்க கிட்டயாயிருக்கா..?”

“இல்லையே அத்தை..பாத்ரூம் போயிட்டா..ஏன்..?” அவனது பதிலுக்கு குழலி ஒரு பெருமூச்சை விடுத்து

“அந்தக் கொடுமைய ஏன் கேட்குறீங்க...அவா பார்க்க என்னை மாதிரி ஆனா குணத்துல அப்படியே உங்க மாமா மாதிரி தம்பி..”

“சரி..அதை எதுக்கு அத்தை இப்போ சொல்றீங்க…”

“இல்ல தம்பி, ரெண்டுக்குமே குளிக்க சோம்பேறித்தனம்..” சொல்லிமுடித்து குழலி அமைதியாகிவிட

“என்ன அத்தை சொன்னீங்க கேட்கல…” என்றவனுக்கு கேட்டது சரியா என்ற குழப்பம் மிஞ்சியிருக்க

“ஆமா தம்பி, உங்களுக்கு கேட்டது சரிதான்..இதுங்க ரெண்டுக்குமே தினமும் குளிக்கிறதுல என்ன பிரச்சனைனே தெரில...ஹாஸ்ப்பிட்டல் கூட கூட்டிப் போய் காமிச்சாச்சு..” என்றவர்..

வாரத்தில் ஒரு நாள் சண்டை போட்டு குளிக்க வைக்கும் அவரது வீரத்தைச் சொல்ல, வந்த சிரிப்பை அடக்கி போனை வைத்தவன் இப்போது வெடித்து சிரித்திருந்தான்..

உடல் சோர்வையும் ஒதுக்கி வைத்து, பாத்ரூம் கதவைத் தட்ட, அவனது சிரிப்பு சத்தம் கேட்டு அங்கே பதுங்கியிருந்தவளுக்கு இப்போது கதவ திறந்தா நக்கல் பண்ணுவானே என்ற தயக்கம் இருந்த போதும் வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தாள்..

“ஹா ஹா...ஹே பொண்டாட்டி…” அவனது சிரிப்பினூடே அழைத்த அழைப்பை ரசித்தவள், அமைதியாய் நிற்க,

“ஹே டம்மி பீஸு...ஹா ஹா..இதுக்கு தான் இந்த அலப்பறையா..?” என்றவனை முறைத்தவள்

“வேணாம் ஆதிக்...சிரிக்காத..” என்றவள் பாத்ரூம் வாசலிலே நிற்க,

“என்னது வேணாம்..காலையில ரூம்ல ஒரு பேட் ஸ்மெல் வரும் போதே நினைச்சேன்..ஹா ஹா..உங்க அப்பாவும் குளிக்க மாட்டாராமே...அத்தை எப்படி டி இருந்தாங்க பாவம் தான்…” பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு அடியாய் அவன் முன்னேற, அவனின் முன்னேறுதலில் பின்னேறினாள் மதியழகி..

“ஹே ரொம்ப பண்ணாத ஆதிக்..எனக்கு ஃபீவர் அதான் குளிக்கல..” என்றவள் இப்போது பாத்ரூம் சுவரில் மோதி நின்றாள்..

அவள் மோதி நின்றதும் ஸவரின் வால்வைத் திறந்து விட்டவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பக்கெட்டை மொத்தமாய் தூக்கி அவள் மீது ஊற்றியவன், அவன் மீது தண்ணீர் படாதவாறு தள்ளி நின்று கொண்டான்..

மொத்தமாய் நனைந்தபின் முகத்தை கைகளால் துடைத்தவள், மூச்சை வேகமாய் இழுத்து விட, இவ்வளவு நேரம் விளையாட்டாய் பேசியவனுக்கு இப்போது நனைந்த இரவு உடையில் தெரிந்த அங்கங்களும், மூச்சை வேகமாய் இழுத்து விடுவதால் மேல் ஏறி இறங்கும் மார்பென அவனை உசுபேத்தி விட்டது..

கண்கள் பருகும் அங்கங்களுக்குத் தடை விதித்தவன், வேகமாய் அவ்விடத்தைவிட்டு அகன்று, “சீக்கிரம் வா மதி..” என்பதை மட்டும் உரைத்து பால்கனியில் தஞ்சம் புகுந்தான்..

அவன் விட்டுச் சென்ற பத்து நிமிடத்திலே குளித்து முடித்தவளுக்கு உடையில்லாதது நினைவுக்கு வர, அங்கிருந்த பூத்துவாலையை உடலில் சுற்றியவள், ஆதியிடம் உடை எடுத்துக் கேட்கலாம் எனத் தலையை மட்டும் வெளியே நீட்ட, யாருமில்லாத அறை அவளை வரவேற்றது..

“பாவி..பாவி இப்படி பண்ணிட்டானே..” அவன் ஜாகிங் சென்றுவிட்டான் என நினைத்து வாய்விட்டுத் திட்டியவள், ஆதிக்கின் கப்போர்ட்டில் அடுக்கி வைத்த தனது உடைமைகளில் ட்ரெஸை எடுக்க, இவளது சத்தம் கேட்டு அறைக்குள் திரும்பியவனுக்கு மதி நின்ற கோலம் திகைப்பை மட்டுமே வாரியிறைத்தது..

அவன் அதிர்ந்து நிற்க, உடையை எடுத்துக் கொண்டு திரும்பியவள் தன்பின்னே நிற்கும் ஆதியைத் தான் நிற்கும் கோலம் மறந்து முறைத்தவள், தங்தங்கென அவனுக்கு அருகே சென்று, “ஏன் ஆதி..இப்படி ஜில் தண்ணீல நிக்க வச்சுட்ட..?” என்றவளின் கேள்விக்கு பதில் வேண்டி அவன் முகம் பார்த்து நிற்க

ஆனால் அவனது பார்வையோ கழுத்தில் இருந்து மார்புக் குழியில் உருண்டு மறைந்த நீர்துளிகளிலே நிலைத்திருந்தது..

அவனது பார்வை போகும் இடத்தை கவனியாதவள், “நான் இங்க கேட்டுட்டே இருக்கேன் நீ எங்க பார்த்துட்டேயிருக்க..?”கோபம் போலும்கேட்டவள் அவன் பார்வை சென்ற திக்கை குனிந்து பார்க்க, இப்போது உரைத்தது தான் நிற்கும் நிலை…

கைகளில் இருந்த உடையை மார்போடு அணைத்தவள், அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்ப, அவளது விலகலை கை நீட்டி தடுத்தவன், பின்னிருந்து அவளை அணைக்க, சூடான அவனது தேகம் கொடுத்த கதகதப்பில் வேர்த்து போனது மதியழகிக்கு…

“விடு ஆதிக் அத்தை கூப்பிடுறாங்க..” என்றவளின் சத்தம் அவளது வாயிலே கரைந்து போக, மெதுவாய் தன்னை நோக்கித் திருப்பியவன் அவளது இடையில் ஒரு கையையும், ஈரம் சொட்டும் கூந்தலில் மறுகரத்தையும் வைத்தான்…

அவனது மென்மையான தொடுகையில் மெல்லிய உணர்வுகள் கிளர்ந்தெழ சிலையெனச் சமைந்தாள் மதியழகி..

அவளிடம் எதிர்ப்பில்லாமல் போனதும், இன்னும் அவளை நெருங்கியவன் அவளது கைகளில் இருந்த உடையைக் கட்டிலில் வாங்கிப் போட்டு காற்றில் மிதிந்தவளது கரங்களை தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டான்…

நெற்றி, இமைகள், மூக்கு என ஆள் காட்டி விரலால் தொட்டுப் பார்த்தவனின் விரல் நுனி இதழில் வட்டமிட, “அழகி…” என்றவனின் குரலில் இருந்த மயக்கத்தில் வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் மதியழகி…

அவளது பெரிய நயனங்களில் பார்வையைக் கலக்கவிட்டவன், விழி மொழியில் கண்களை மூடச் சொல்லி தொடரவா? எனக் கேட்டு வைக்க, வெட்கமும் தயக்கமும் பிடிவாதமும் போட்டி போட்டு வெளிப்படுத்திய கண்களுக்கு நேரதிராய் அழைப்பு விடுத்து மெல்லத் திறந்தது அவளது இதழ்கள்…

அவளது சம்மதம் புரிந்தவன் மீண்டும், அவளிடம் விழிகளை மூடச் சொல்ல, “முடியாது என்பதைப் போல சண்டித்தனம் செய்த அவளது பார்வையை உள்வாங்கியவன், நான் மூட வைக்கிறேன் என்று மறுவார்த்தை பேசியவனின் இதழ் எடுத்த அமுதத்தில் தானாய் அவள் விழிமூடி கைகள் அவனது முடியைக் நெரித்தது..

நிமிடம் மொத்தமும் முத்தத்தில் கரைய, இடையில் இருந்த கைகள் கொஞ்சம் மேலேறி அவளை உணரத் துடிக்க அவனது கைகளுக்கு கடிவாளமிடத் திறனில்லாமல் உருகிக் குலைந்தாள் மதி…

முத்தத்தில் குளிக்க வைத்தவன், அடுத்த கவியை படைக்க முற்படும் முன் அறைந்து தட்டப்பட்ட கதவின் சத்தத்தில் அடித்துப் பிடித்து விலகி நின்றனர் ஆதியும் மதியும்…

ஆதி மதியுடன் இணைவான்..
Wow super episode ???
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Madhi ne weekly once than kulippiya seriyana alukku samiyara ne:LOL::LOL::LOL::LOL:....pavam madhi amma rendu alukku samiyars..........Aadhi madhi nalla romance oodrappa karadi mathiri veni ma kathavai thatti break pottanglea.....
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

இவர்களின் ஏகாந்தநிலையை குலைப்பதற்கு வந்தவர் யார் வேணியம்மாவா.

நன்றி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Ayyoo... pathikichu.... pathikichu... hoo... hoo.. penne....
????
Nice ud adhi ma???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top