“மதி கண்ணா ப்ளீஸ் டா..சொல்லிடாத..” எனக் கெஞ்ச
“என்னை இனி திட்டுவீங்களா..?”
“மாட்டேன் மாட்டேன்…” என்றவரின் கன்னத்தை தொட்டு முத்தம் வைத்தவள்..
“ஆனா நீங்க இப்படி நடிக்க போய் மட்டும் தான் எங்க கல்யாணம் அப்புறம் நான் இந்தியா வந்தது எல்லாமே நடந்தது..சோ…” என்றவள் மறுமுறையும் கன்னம் கிள்ளி முத்த, அவளின் செய்கையில் சிரித்தவர்,
“என் பையனும் கண்டுபிடிச்சிருப்பானோ..?” தனது அதிமுக்கிய சந்தேகத்தை கேட்கும் மாமியாரைக் குறுக்கிட்டவள்..
“உங்க பையன் உங்கள மாதிரி கொஞ்சம் தத்தி தான்...அம்மா பாசத்துல அவருக்கு புத்தி மலுங்கிட்டு போல…” தன்னிடமே தனக்கும் தன் மகனுக்கும் புத்தி கம்மியெனச் சொல்லும் மருமகளின் தலையில் வலிக்காமல் ஒரு அடி வைத்தவர்..
“மதி..என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா..?” தவறான சமயத்தில் சரியான கேள்விக் கேட்கும் மாமியாரிடம்
“பிடிக்கலன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..?” என்றவளைப் பாவமாய் பார்த்தவர்
“மதி, என் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..அதான் உனக்கும் பிடிக்கும் தானே..?” அவரின் பேச்சில் வியப்படைந்த மதி
“உங்க பையனுக்கு என்னைப் பிடிக்கும்னு எப்படிச் சொல்லுறீங்க..?” என்றவளை நிதானமாய் பார்த்தவர்
“என் பையனைப் பத்தி எனக்குத் தெரியும்..நீயும் ஒரு நாள் புரிஞ்சுப்ப..இப்போவே உங்களை சேர்ந்து வாழ சொல்லல, ஆனா எப்பவுமே பிரிஞ்சு நின்னுடக்கூடாதுன்னு தான் சொல்றோம்..சீக்கிரமே பேரன பெத்துக் கொடு ஆத்தா..” வேணியின் கடைசி வரியில் கன்னம் சிவந்தவள்..
“கவலையே வேண்டாம் அத்தை..இன்னும் பத்தே மாசத்துல உங்களுக்கு ஒரு பேத்தி ஒரு பேரன் கன்பார்ம்..” என்றவள் சொன்ன வேகத்தில் அறைக்குத் திரும்பிவிட்டாள்…
அவளின் பதிலில் சிரித்துக்கொண்ட வேணிக்கு அவளின் பிடித்தமும் புரிந்துவிட மனநிறைவோடு பூஜையறையில் விளக்கேற்றினார்..
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை ஜன்னல் வழியே கவனித்த தர்மருக்கு, இந்தப் புதுக் கூட்டணி வெற்றியடைந்தாள் இனி வீட்டில் அனைவரின் பாடும் திண்டாட்டம் தான் என்ற பயம் மட்டுமே..
என்றும் இல்லா திருநாளாய் அன்று இரவு எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்த ஆதிக், மதியும் வேணியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “மதி ஒரு முக்கியாமன பார்ட்டி இருக்கு..கிளம்பி வாயேன்..” என்றழைக்க
அவனுடன் முதன் முதலாய் வெளியே செல்லப் போகிறோம் என்பதில் குதித்து சந்தோசமாய் கிளம்ப போனவளைத் தடுத்த வேணி, “மதி சேலைக் கட்டிக்கோ..” என்றார்..
அவரிடம் சரியெனத் தலையசைத்த மதி, அறைக்குத் திரும்பி அலமாரியில் சேலையைத் தேட அன்னையிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன் கேட்ட முதல் கேள்வியே, “மதி இன்னைக்கு குளிச்சியா..?” என்பது தான்..
“ஏன்..?” என்றவளின் குரலில் இருந்த மாறுபாட்டில் சிரித்தவன்
“இல்ல..எனக்கும் உன் நாத்தம் பழகிட்டு பட் பார்ட்டிக்கு வரவங்க பாவம் இல்லையா..?” என்றவனை எரித்துவிடுவது போல பார்த்தவள்..
“ரொம்ப தான்…” சிலிர்த்துக் கொண்டு, அங்கேயே உடை மாற்ற முற்பட்டாள்..
“அடிங்க..நான் இங்க ஒருத்தன் இருக்கேன் உனக்கு கொஞ்சமாச்சும் கூச்சம் இருக்கா டி..” என்றவன் விளையாட்டு போல கேட்டு, அறையை விட்டு வெளியேறப் போக
கையில் இருந்த சேலையை கட்டிலில் போட்ட மதி, “ஆதி, ஐ வான்னா கிஸ் யூ..” என்றவளின் விழிகள் அவனது விழியைத் தான் பார்த்திருந்தது..
அவளது பேச்சில் வாயடைத்துப் போனவன், “பார்ட்டிக்கு நேரமாச்சு மதி..கிளம்பு,..” என்பதை மட்டும் சொல்லி நகர, மதிக்கு அவனது விலகல் ஒருவித வலியைக் கொடுக்க, சேலைக் கட்ட மனமில்லாமல் சில நிமிடம் கட்டிலில் அமர்ந்தவளின் கண்கள் கண்ணீரை நிறுத்த மறுத்தது..
அவளே வாய்விட்டு கேட்கும் அளவிற்கு நடந்துக் கொண்ட தனது மடத்தனத்தை நொந்தவனுக்கு அவள் கேட்டும் தான் கொடுக்க முடியாத இந்நேரத்தை அறவே வெறுத்தான்..
அவள் கேட்ட அந்நிமிடம் அவனுக்கும் அவள் தேவையாய் தானிருந்தாள், ஆனால் இன்னும் அரை மணி நேரத்தில் போக வேண்டிய பார்ட்டி மிக முக்கியமான ஒன்று என்பதால் மட்டுமே அவன் அவளை விலகி வந்தது..
“எல்லாம் இன்று ஒரு நாள் மட்டும் தானே” என அவன் நினைத்திருக்க விதி வேறு விதமாய் மதியைக் குழப்பியது..
ஆதி மதியுடன் இணைவான்..