2
துருவ் ஹாஸ்பிடல் வந்திருந்த சமயத்தில் கார்த்திக் சத்யாவை காணச் செல்ல இருந்தான்.வேலையை முடித்துவிட்டு அவசர அவசரமாய் கிளம்பியவனை தடுத்தது சசியின் குரல்.“என்ன டா வேலையை முடிச்சதும் நீயும் அவனும் சொல்லாமக்கொள்ளாம ஓடுறிங்க “என்றான் சசி.
“இல்லை நா.துருவ் அம்மா வ பாக்க ஹாஸ்பிடல் போயிருகான்.ரெகுலர் செக் அப் தான் நா.”என்று படபடவென பொரிந்து தள்ளினான் கார்த்திக்.
“அப்போ நீ உன் ஆள பாக்க போற அதான.”விஷமமாய் கண்சிமிட்டி கேட்டவனிடம் என்ன சொல்லலாம் என யோசித்தவன் “ஆமா அண்ணா. நான் என் ஆள பாக்கபோறேன் நீங்க ட்ரைன்க்கு கரி அள்ளி போடபோறீங்க அதான நா``”?என்று கூறி கண் சிமிடியவன் தனக்கும் காமெடி வரும் என்பதை சுட்டிகாட்டினான்.
“எப்பா தம்பி அண்ணன் சரண்டர் “என்று இரு கைகளையும் காதில் வைத்து ஒரு காலை பின் வைத்து குனிந்து நின்றான்.” பின்பு இருவரும் சிரிப்பில் இணைந்து கொள்ள “போ போ பா காத்து வரட்டும் “என்று கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்றான் சசி .
பின்பு சிறிது நேரம் யோசித்துவிட்டு தனது ராசாளியை எடுத்து கிளம்பினான்.
#மெரினா பீச்.
இன்று சனி கிழமை என்பதால் மெரீனாவில் கூட்டம் அலைமோதியது.எங்கு பார்த்தாலும் கடைகளும் கூட்டமுமாய் இருந்தது.பெற்றவர்களை ஏமாற்றி ஊர் சுற்றும் பல காதலர்கள் கூடும் இடமாக விளங்கியது மெரினா.(நோ அபன்ஸ் மக்களே)
அந்த கூடத்தில் தன்னவளை தேடினான்.மெயின் ரோட்டிற்கு அருகில் உள்ள ஐஸ் கிரீம் பர்லரில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சத்யா.
“ஹே சத்யா வந்து ரொம்ப நேரம் ஆச்சா”தான் லேட் என்பதை உணர்ந்து தன்னை மண்ணிப்பாலா என்று ஏங்கும் பார்வையை வீசினான்.
“இல்லை கார்த்திக் இப்பதான் வந்தேன்,சாரி கார்த்திக் நான் என்ன பத்தி மட்டும் யோசிச்ருகேனு புரிது.நான் எங்க வீட்ல சொல்லி புரியவைக்கிறேன் கார்த்திக்.துருவ் கிட்ட பேசுன பிறகு தான் புரிது நான் பண்ணினது தப்புன்னு. ..நான் உன்ன ரொம்ப லவ் பண்ணுறேன் கார்த்திக் .நான் கோவமா பேசுனத மனசுல வச்சிக்காத டா ப்ளீஸ்”.என்ன சொல்வதென்று தெரியாமல் எதோ உளறினால் சத்யா.
நண்பனின் வார்த்தையில் சத்யாவிடம் இவ்ளளவு மாற்றமா என்று யோசித்து மெய்மறந்தான் .
சிறிது நேரம் மௌனம் காத்த இருவரும் கண்களில் காதலை பருகினர். முதலில் சுரணை பெற்ற கார்த்திக் சத்யாவின் கையை பிடித்தான்.
காதல் ஜோடிகளுக்கு உதவ கடவுளாக அனுப்பியவர்கள் போல .. அவர்களின் கோபத்தை உணர்ந்த ...அவன் பின்னால் இருந்த இரு ஆடவர்கள் திடீரென கிட்டார் எடுத்து
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற
கை பிடித்தவன் அவளின் வலது கரத்தை ஏந்தி
“உன் காதலுக்கு அடிமை ஆனேன் ஆனா உன் நம்பிக்கையை மிஸ் பண்ணுன உணர்வு வந்துருச்சு.... நம்ம காதலுக்கு சாட்சிய என்னால செய்ய முடிஞ்ச ஒரே விஷயம் இதுதான்..” என்றவன் முதலில் ஒரு பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
கண்களில் நீர் சொட்ட அவன் காதலில் திளைத்த சத்யா அதை பெற்றுகொண்டாள் .பேச வார்த்தை ஏதும் இன்றி தவித்தவளின் உணர்வை புரிந்தவன்...
“உன் அழக பாத்து நான் உன்ன லவ் பண்ணல.உன்ன புடிச்சிச்சு..உன் மனசு புடிச்சிச்சு..என்ன மிரட்டி மிரட்டி தொரத்துன உன் அடாவடி காதல் எனக்கு புடிச்சிச்சு என்ன பத்தி மட்டும் யோசிக்கிற உன் காதல் புடிச்சிச்சு.. அதுக்குமேல நீ ஏன் மேல வச்ச அன்பு மட்டும் தான் நான் வாழவே வச்சிருக்கு.உன்ன நான் நிறையவே கஷ்டபடுத்திட்டேன்.இனிமே ஏதும் பண்ணமாட்டேனு சொல்லணும்னு எனக்கும் ஆசை தான்..” என்று நிதானித்தவன் “அக்செப்ட் மை அபோலோஜி டார்லிங்” என்று கூறி ஒற்றை டைசி பூவை நீட்டினான்..அது அவளுக்கு பிடித்தமான பூ என்பதால் அதை முகம் மலர்ந்து வாங்கி கொண்டவள்...
அவ்வளவு நேரம் கட்டு படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவளின் கண்களை பிரிந்தன.
தன் வலக்கரம் நீட்டியவனுக்கு கையை கொடுத்தால்... தன் வாழ்கையையே அற்பனிக்றேன் என்பதை சொல்லாமல் சொன்னது அவளது விழிகள்......
அங்கிருந்த அணைவரும் கைகள் தட்டி அரவம் செய்ய இணைந்த இரு ஜோடிகளும் கட்டிகொண்டன ஒருவரையொருவர்.
இங்க இவ்வளோ லவ் சீன் போய்ட்டு இருக்கு ஆனா அங்க....????? ஹஸ்பிட்டல நம்ம ஹீரோ என்ன பன்னுரருனு பாப்போம் வாங்க.
#ஹாஸ்பிடல்;
மனதை கொள்ளையடித்த இரு பெண்களை பார்த்த துருவ் உணர்ச்சி ஏதுமின்றி நின்றான்.
ஒரு ஆறு வருடங்கள் கழித்து சாஷினியை பார்த்தான்.
அதே அழகு அவனை பதினேழு வயதில் காதலில் விழச்செய்த அதே கண்கள்.எதையும் கூறும் கண்கள் ஏனோ இன்று எதுவும் சொல்லவில்லையே..இறகை போல மிருதுவான கன்னம் இன்னும் பொலிவடைந்ததே.பொய் கூற நினைக்கும் இதழும் என்னிடம் மட்டும் கூறிய உண்மைகள் பல ஆனால் இன்றைய நிலை வேறே. லைட் ப்ளூ கலர் குர்தியில் மிக ரம்யமாய் இருந்தால்..
தலை கோதும் விதம் மாறியதே..
ஆடை அணியும் விதம் மாறியதே
பேசும் பேச்சு மாறியதே
மாறாதது என்னவோ இரண்டு தான்
உன் கண்கள் ஒன்று
என்னை பாக்கும் விதம் மற்றுமொன்று..
ஆடை அணியும் விதம் மாறியதே
பேசும் பேச்சு மாறியதே
மாறாதது என்னவோ இரண்டு தான்
உன் கண்கள் ஒன்று
என்னை பாக்கும் விதம் மற்றுமொன்று..
வெறும் இரு நிமிடங்களே அமைதியாய் எடை போட்டான்..
“ஹாய் லட்டு மா ஹொவ் ஆர் யூ? “என்றவன் தன அருகில் காவ்யா இருப்பதை மறந்து பின்பு அவளை பார்த்து தன சொன்னதை உணர்ந்தவன் நாக்கை கடித்துக்கொண்டான்.
அதை பார்த்தும் பார்காத சாஷினி மெல்லிய புன்னகை உதிர்தவள் ”ஐஅம் குட் துருவ்”
.தேவி அம்மாவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்து முடிந்தது.. அதுவரை காவ்யாவை மறந்த நம் ஹீரோ “காவ்யா கிளம்பலாமா “ என்றான்.
பதில் பேச சக்தியற்று இருந்தவள் தலையை மட்டும் அசைத்தாள். மூவரும் சாஷினியிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினர்.கார் வந்ததும் வாசல் வரை வந்து வழி அனுப்பிய சாஷினியை கண்டதும் பல குழபங்கள் உதயமாயிற்று துருவின் மனதில்.
வீட்டிற்கு வந்ததும் தேவி அம்மாவிடம் விடைபெற்று தன்னறை சென்றவன் அமைதியை அமர்ந்தான்.
அப்போது தான் தன் நண்பனை சந்தித்துவிட்டு வந்த பத்மநாபன் துருவின் முகம் சரி இல்லை என்பதை உணர்ந்தார்.
“வாமா காவ்யா ,ஹாஸ்பிடல்ல ஏதும் சொன்னாங்களா “மாத்திரையை பார்த்தவண்ணம் கேட்டார் பத்மநாபன்.
“இல்ல அப்பா எல்லாமே கரெக்டா தான் இருக்குதுனு சொல்லிட்டாங்க ,ஒழுங்கா டேபிலெட் போட்டஒண்ணுமில்லன்னு சொன்னங்க அப்பா”என்றால் காவ்யா.
“சரி மா மாத்திரைகளை பிரித்து சாப்பிடும் நேரத்தை தேவிகிட்ட சொல்லிடு மா..”எல்லாம் முடித்துவிட்டு துருவை பார்க்கச் சென்றால்.
அவள் போவதை பார்த்த பத்மநாபன் “ஏன் புள்ளைக்கு ஏத்த பொண்ணு தான்.அவன் அம்மாவை போல நல்லா பாத்துப்பா”என மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டார்.
அதை உணர்ந்துகொண்ட தேவி “போதும் போதும் மருமகள பாத்து கண்ணு வைக்காதிங்க”நமக்கு பொன்னு இல்லன்னு வருதபடவே வேணாம்ங்க “கூறிவிட்டு சமையல் அறை சென்றால் தேவி .
துருவ் அறை திறந்தே இருந்தது .தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் என நினைத்து உள்ளே சென்றாள் காவ்யா .அவனின் குழப்பம் அவன் முகத்திலேயே தெரிந்ததால் அவன் அருகில் ஆரவம் செய்யாமல் அமர்ந்தாள் காவ்யா.
அறையில் சில மணிநேரம் மௌனம் நிரம்பியது.திடீரென எழுந்தவன் அவள் முன் மண்டியிட்டு அவள் முகம் நோக்கினான் சிறிது நேரம். பின்பு என்ன செய்வதென்று அறியாதவன் அவள் இடுப்பை சுற்றி அவள் மடியில் படுத்து அழத்தொடங்கினான்.
அம்மாவை பிரிந்த போது அழுதான் அதற்கு பின் அழுகிறான் என்றால் இது தான் முதல் முறை.
பாசமாய் தலை கோதியவள் “குழப்பமா இருக்குறிய துருவ்” என்றால் காவ்யா அவன் அழுகையை நிறுத்த.
வார்த்தையில் உறுதி அடைந்தவன் எழுந்து அமர்தான் அவள் அருகில்.அவள் கையை கோர்த்தவண்ணம் “ஆமா காவ்யா,ஏன் சாஷினிய நான் மறுபடி பாக்கணும்..இந்த கடவுள் என்ன தான் பண்ண நினைக்குறாரு..அவ காதல்ல இருந்து வெளிய வர எவ்ளோ கஷ்ட பட்டேன்னு உனக்கு தெரியும்ல மா..”கண்கள் கலங்க சிறு பிள்ளையை போல் பேசினான்....
அவனின் நிலை புரிந்தவள் “இப்போ என்ன பண்ணலாம் துருவ் ,அவளை தனிய மீட் பண்ணு,ஏதும் கேக்கணும்னா ப்ரீயா பேசு அப்றோம் எல்லாம் சரி ஆயிடும் மாமா “
தன் லட்சுமி அம்மாவை போல தன்னை புரிந்து கொள்பவள் இவளும் தான் என்பதை மறுமுறை நிரூபணம் செய்தாள் காவ்யா.
அவன் அமைதி அவளுக்கு என்னவோ போல் இருந்தது .அதுவரை சுவரை பார்த்து பேசியவள் அவன் தோளை பிடித்து திருப்பினாள் அவளை நோக்கி.
“மாமா ,காவ்யா இவ்ளோ நல்லவலானு யோசிக்கிற புரிது “என்றவளை தலை அசைப்பில் இல்லை என்றவனின் உதடில் கைவைத்து பேச வேண்டாம் என்றாள்.
“ நான் உன்ன லவ் பண்றேன் நீ இப்டி குழம்பி போய் அமைதியாய் மூட் ஆப்பா இருக்கிறது எனக்கு புடிக்காது.என்ன பொறுத்தவரை நீ எப்போமே சந்தோஷமா இருக்கனும்.நீ என்ன விட்டு போகமாட்டனு எனக்கு தெரியும்..ஏதும் யோசிச்சு குழப்பிக்காத டா ..நீ போயிட்டு வா” தன்னை விட அவனை அதிகமாக நம்புகிறாள் என்பதை உணர்த்தினாள் காவ்யா.
“நீ மட்டும் அன்னிக்கி இல்லைணா இந்த துருவ் இல்லை ..எந்த பொன்னும் செய்ய நினைக்காத ஒரு விஷயம் பண்ணுற ..உனக்கு துரோகம் பண்ண யாருக்கும் மனசு வராது டி. நீ கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் காவ்யா .”என்றவன் அவளை காதலால் அணைத்தான்..காதலின் சுழற்சியில் சிக்கிய இருவரும் தன்னிலை மறந்தனர்..
பிரிய மாட்டோம் என்பதற்கு அறிகுறியாய் இதழ் ஒன்றியதுஅதனுடன் மனமும் ஒன்றியது.
இருவரின் பரஸ்பரத்தை பிரித்தது கதவை தட்டும் ஒலி..
கதவை திறந்த காவ்யா “டேய் க்ரிஷ் குட்டி ஸ்கூல் முடிஞ்சிச்சா”என்று கேட்டவாறு அவனை கைகளில் எடுத்து முத்தமிட்டாள்.
“வந்துட்டேன் காவ்யா ,சாக்கி எங்க?”என மழழையை கேட்டவனிடம் இல்லை என்று எப்டி சொல்வதென்று தெரியாமல் முழித்தவளை காப்பற்றினான் துருவ்.
“இன்னிக்கி உனக்கு சாக்கி இல்ல”உள்ளிருந்து குரல் கொடுத்தான் துருவ்.
“உன்கிட்ட கேக்கல டா அண்ணா நீ சும்மா இரு “செல்லமாய் அதட்டினான் க்ரிஷ் குட்டி.
“நீ காவ்யாவ அண்ணினு கூப்டா உனக்கு ஐஸ்கிரீம் வங்கி தறேன்..உனக்கு புடிச்ச பட்டர் ஸ்காட்ச்” ஆப்ஷன் குடுத்தான் துருவ்
ஐஸ் கிரீம் என்றவுடன் அனைத்தையும் செய்யும் குழந்தை தானே எல்லோரும் ..வயதை பார்க்க கூடாது ஐஸ் கிரீம்னு வந்துடா கால்ல கூட விழலாம்..சரிதானே மக்களே !
அதுவரை லஞ்ச் பேகைகையில் வைத்திருந்தவன் அதை அப்படியே போட்டுட்டு
“காவ்யா அண்ணி காவ்யா அண்ணி வாங்க ஐஸ் சாப்டலாம் வா வா “என்றான் அவள் கழுத்தைக் கட்டி கொண்டு..
அதுவரை அசதரனமாய் இருந்த துருவ் அவன் செய்கையில் மெய் மறந்து சிரிக்க தொடங்கினான் அவனுடன் கவ்யாவும் தேவியும் பத்மநாபனும் சேர்ந்தனர்.ஒன்றும் புரியாத க்ரிஷும் சிரிப்பில் கலந்துகொண்டான்.