• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 6(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~6


சாஷினி டி.வி.க்கு முன் இருந்தாலே தவிர அவள் மனம் அங்கு இல்லை.... காதோரம் சன்மியூசிக் இசைத்துக்கொண்டிருக்க அந்த பாடலை அனுபவிக்க அவள் மனம் இசையவில்லை..

அவள் மனம் மூணாரின் பயணத்தை தொடர்ந்தது...

அன்று..ஜனவரி 11;

மூணாரின் குளுமையில் தன்னை தானே அணைத்துக்கொண்டு அனைவரையும் வெறுத்து ஓராய் நின்றவளை அவனின் மூச்சுகாற்று தீண்ட அவனை நினைத்துக்கொண்டே திரும்பியவள் கண் முழுதும் அவனே நிறைந்திருந்தான்.. தன் கருவிழியையும் நம்பாதவள் அதை கசக்க மீண்டும் அவனே தெரிந்தான்..

அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளின் பாவனைகள் புரியவில்லை போலும்.. அவளோ அவன் வந்ததற்காக சந்தோஷமடைவதா அல்ல ஒருநாள் முழுவதும் பித்து பிடிக்க வைத்ததால் அவனை கரித்துக்கொட்டவா என்ற குழப்பத்தில் அவள் இருந்தாள்..


அவளின் சிலையென சமைந்த முகத்தை பார்த்தவன் உறைந்து தான் போனான்.. குளுரில் நிற்காமல் துடிக்கும் உதடுகள்.. தன்னையே முழுங்கிவிட பார்க்கும் விழிகள் .. ஸ்கார்ப் போட்டதால் கட்டுக்குள் அடங்காத இரு முன்முடிகள் அவளின் நெற்றியை உரசிக்கொண்டிருக்க.. சிறிய காதில் அதற்க்கு ஏத்தார் போல் ஆடிக்கொண்டிருந்த தங்க ஜிமிக்கியும்..குளுரை சற்றும் தாங்காத மேனி ஸ்வட்டர் போட்டிருக்க..அழகு பொம்மையாய் அவன் கண்ணுக்கு தெரிய இதழில் சிரிப்பை காட்ட..

அவளோ இவன் எப்டி வந்தான் என்ற குழப்பத்தில் இருக்கிற மூளையை குழப்பிகொண்டிருக்க... அவள் கண் முன் கையை அசைக்க நினைவிற்கு வந்தாள் சாஷினி....

“துருவ்... நீ.. நீ.. எப்போ..எப்டி ..இங்க ..வந்தா..”அனைத்துக்கேள்வியையும் ஒற்றை கூற்றில் அவள் போடா.. சிரித்தவன்..

“இப்ப தான் வந்தேன் சாஷினி...”
அடிகடி பேர் வைத்து அழைகாதவன்.. வா மா.. போ மா..என்ற சொற்களில் தொக்கியவன் அவள் பெயரை சொன்னதும்.. உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி வட்டமடித்தது...


“ஓஹோ... சரி நீ ஏன் நேத்து வரல.உன்ன பாக்காம என்னால இருக்க....”சொல்லி முடிக்கும் போதுதான் உணர்ந்தாள்,..”ஐயோ ஒலரிரியே மா.. சரி வா சமாளிப்போம்...”மனதில் நினைத்தவள்...

“நான் .. நான் இலா.. கார்த்திக் ரொம்ப மிஸ் பண்ணன் உன்ன.. அப்றோம் சஞ்சனா எல்லாரும்..”

அவள் சமாளிப்பதை புரிந்தவன்..”உண்மை என்னவோ அத சொல்லு மா.. நா வரலன்னு நீ அலுதியாமே..அவ்ளோ பிரிண்ட்ஷிப் நமக்குள்ள வந்த்ருச்சா சாஷினி..”

“ஐயோ இவன் என்ன ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாதிரி பேசறான் இவன் சரி பட்டு வரமாட்டான் போல இருக்குதே..”உள்மனசு அலற..அதை அடக்கி கொண்டவள்..

“உண்மை அதான்...”

“எத சொல்ற மா..”

“நா உன்ன மிஸ் பண்ணேன்..நீ இல்லாம என்னால போகமுடில..வீட்டுக்கு கிளம்பளாம்னு இருந்தேன்..ஜோதி மிஸ் தான் போகவிடல.. நீ இல்லாத இடத்துல என்னால இருக்க முடில ...துருவ்..”

இருவரும்அமைதியை பரவவிட..”எல்லாரும் எங்க..”

“தெரில..நா எதையும் கவனிக்கல..” அவள் மழலையாய் சொல்ல இவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

அவன் கார்த்திக்கிற்கு அழைத்தான்..”மச்சான்..எங்க இருக்கீங்க எல்லாரும்..”

“நாங்க கீழ வந்துட்டோம் டா..மலைல இருந்து... இந்த சாஷினி எங்க ஓடுச்சு தெரில.. “
“மச்சான் அவகூட தான் பேசிட்டு இருக்கேன்...நீங்க டவுன்க்கு ஷாப்பிங் கூட்டிட்டு போ எல்லாரையும் நான் அங்க வரேன்.. மிஸ் கிட்ட சொல்லாத ..சஞ்சனா கிட்ட சொலிடு.. அவள மத்தவங்கள சாமாளிக்க சொல்லிடு..”


“சரி சரி மச்சான்..எதுனா கால் பண்ணு வரேன் ..பாய்..”
அவர்கள் கிளம்பி விட்டனர்...


“டூ ஹவர்ஸ் டைம் இருக்கு வா..நடந்துக்கிட்டே பேசலாம்..”

இருவரும் ஒரே சீராய் நடக்க..அவனோ அமைதியாய் வர.. சாஷினிக்கு உள்ளுக்குள் அடித்துக்கொண்டிருந்தது..”என்ன நினச்சிருப்பான்.. நம்மல புடிகலையோ..சரி கேப்போம் ...என்ன பண்ணிடுவான் “

தைரியத்தை வரவைத்துக்கொண்டவள்”துருவ்.. நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா

“.. அவள் புருவத்தை உயர்த்திக்கொண்டு பாவமாய் முகத்தை வைத்துகொண்டு அவள் கேட்க..அவனுக்கே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது..அதை அடக்கியவன்..

“நீ இன்னும் தெளிவா பேசல மா..உனக்கு என்ன தோணுதோ அத சொல்லு ..நான் அப்றம் சொல்றேன்..”

“நான் உன்ன ஒரு வருஷமா பாக்குறேன் உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும்... எதுவா இருந்தாலும் நான் உன்கூட இருப்பேன்..”என்றவள் அவன் கையை இறுக்கமாய் பிடித்தாள்..”இந்த மாதிரி .”என்றவளின் கண் கையை காட்டியது..

“உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் ... உன்ன பத்தி எனக்கு தெரிஞ்சது ஒன்னு தான் உனக்கு அம்மா மட்டும் தான் புடிக்கும்..நீ அம்மா மேல வச்சிருக்க லவ் என்ன உன்மேல இன்னும் பைத்தியமாக்குது டா...லவ் இஸ் மேஜிகல் துருவ் ..யாருக்கு எப்போம் வரும்னு தெரியாது.. எனக்கும் தான்..”அமைதியானால் அவனின் பதிலுகாக...

அவனோ அமைதியாய் இருந்தான்..அவன் கண்ணை பார்த்தவளுக்கு ஏதும் விளங்கவில்லை.. “எதையுமே உன் கண்ணுல இருந்து கண்டு புடிக்க முடியாது டா”

“துருவ் .. ஐ லவ் யூ ... ஐ வில் பீ தேர் பார் யூ அல்வேஸ்.. எனக்கு நீ வேணும் டா..”அவன் கையை புடித்துகெஞ்சினாள்..

“எனக்கு உன்மேல அந்த பீல் இதுவரைக்கும் வந்தது இல்ல மா.. நீ சொல்றதால நான் அச்செப்ட் பண்ண முடியாது மா.. லவ் இஸ் சம்திங் மோர்.. அது ஒரு பீல் ..எல்லாராலையும் அதை கொடுக்க முடியாது மா.. “

“நிஜமாவே ஒரு டைம் ..ஒரு டைம் கூட..உன்ன மீறி ஏன் மேல பீல் வரலையா..”
அவன் யோசித்தான்.. சற்று முன் கூட அவனையும் மீறி அவன் கண்கள் அவளை அளவெடுத்ததே..இவளவு தூரம் அவனை வர வைத்தது அவனின் காதல் என்பதை அவன் உணரவில்லை போலும்..


“எனக்கு தெரில.. ஆனா இப்போ என்கிட்ட பதில் இல்ல சாஷினி..கிளம்பலாம்..”
டூரும் முடிந்தது.. அவளோ அவனை விட்டு விலக தொடங்கினாள்..ஆனால் ஒன்றில் அவளுக்கு உறுதி இருந்தது.. சஞ்சனா கேட்கும் போதெல்லாம் அவள் கூறுவது ஒன்று தான்..”அவன் வருவான்.. எனக்கு தெரியும்...”


பிரிவு கொடுக்கும் வலி உலகத்தில் ஏதும் இல்லை.. அந்த வலி துருவை தாக்க கணையை தூக்கி நின்றது..

அவளும் கடந்த கால நினைவுகளுக்கு ஏற்றார் போல் தொலைக்காட்சி இசைக்க தொடங்கியது..

ஒண்ணா இருந்த நியபகத்தை நெஞ்சோடு சேர்த்துவச்சேன்..

தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன்..

பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான் வானத்தில் அது பறக்கும்..

காத்திருந்தா தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்..

கணவாய் அவன் மறைந்தான்..கண்ணீராய் அவள் கரைந்தாள்.....................
இன்று...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top