• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 6(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
துபாய்க்கு சென்று கொண்டிருந்த பத்மநாபன் மனம் பழைய கதையை தேடியது....

..................................................

பாதாமநாபனும் லட்சுமியும் லவ் மேரேஜ்...சொந்தங்கள் அவனை விலக்க.. தன் உழைப்பாலும் லட்சுமியும் சேமிப்பாலும் அன்று தான் சொந்த வீடு என ஒன்றை வாங்க முடிந்தது...

சொந்தங்களுக்கு பத்திரிகை வைத்தாலும் வந்தது சொற்பம் ... தன் வளர்ச்சியிலும் வருத்தம் அடைகிற சொந்தங்கள் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்தார்..கலங்கிய தன் நண்பனை சரி செய்ய அப்போவே தங்கதுரையின் பழைய ஜோக்குகளை கையாண்டார் காவ்யாவின் அப்பா பாலா...இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர்...

அன்று டிசம்பர் 3௦...

வீட்டில் மூவரும் தூங்கி கொண்டிருந்தனர் மதிய உணவிற்கு பின்பு.. திடீரன வலியில் துடித்த லட்சுமி தன் கணவரை மட்டும் எழுப்பினார்..முதல் முறை நெஞ்சு வலி.. பத்மநாபன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க பாலாவை அழைத்து மூவரும் ஹாஸ்பிடல் சென்றனர்..

பாலாவின் மனைவி துருவை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்..
ஐ சி யூ வார்டிற்கு முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் மனதில் ஆயிரம் கவலைகள்.. “உலகம் அறியாத குழந்தை ..அம்மா அம்மா என்று முந்தானையை பிடித்து சுற்றுபவனை என்ன சொல்லி புரிய வைப்பது..கடவுளே இது நடக்கணுமா “...என்று மனதில் குழம்பிகொண்டார்..


வெளியே வந்த டாக்டர்..”உங்க மனைவி தான லட்சுமி.. அவங்களுக்கு பஸ்ட் அட்டாக் ..லேட் ஆயிருந்த அவங்க பொழைக்க சான்ஸ் கம்மி ஆயிருக்கும்.. இப்போ ஷி இஸ் ஓகே.. நீங்க பாருங்க ..டிஸ்டர்ப் பண்ண கூடாது...”சினிமாவில் வரும் டாக்டர் போல சொல்லிவிட்டு திரும்பினார்...

“டாக்டர்..”பத்மநாபனின் குரல்..”எஸ் சொல்லுங்க ..”

“இனிமே இந்த மாதிரி ஆகதுல டாக்டர்..இனிமே நல்ல ஆயிடுவால.. முப்பது வயசு தான் ஆகுது..இப்போவே அட்டாக் லாம் வருமா டாக்டர்..”சின்ன குழந்தை கேட்பது போல கேட்டார்....

“வராதனு சொல்ல முடியாது..எப்போனாலும் வரலாம்.. வராம கூட போகலாம்.அவங்க ஹார்ட் கொஞ்சம் வீக்கா இருக்கு.”
அவர் செல்ல..பத்மநாபன் உள்ளே சென்று லட்சுமியை பார்த்தார்... மூக்கின் மீது மாஸ்க்..கையில் ட்ரிப்ஸ்...ஆன்காங்கு ஓயர்ஸ் ...”இப்டி பாக்க தான் நாம சேர்ந்தோம டி..எனக்காக இல்லனாலும் துருவ் என்ன பண்ணுவான்னு யோசிக்கலையே மா நீ..”அழதொடங்கினார்..


கண் முழித்த லட்சுமி...”துருவ்..எங்க” தட்டுதடுமாறி கேட்டாள்..சரியாக.. பாலாவின் மனைவியும் அவனை அழைத்து வர..

“அம்மா.”.என்று ஓடி போய் கட்டிகொண்டான்..”என்ன தனியா தூங்க வச்சிட்டு நீ எங்க போய்ட்ட..அப்பாவும் இல்ல..நா தான் எந்த தப்பும் பண்ணலல மா.. நீ சொன்னதும் நான் சாப்டேன்ல ஏன் போன மா...”அவள் மீது சாய்ந்து அழுதான்...

“துருவ்..அம்மாக்கு வலிக்க போது..நீ நின்னு பேசு டா..”பத்மநாபன் தட்டுதடுமாறி பேசினார்..

“அம்மா ஏன் நீ இங்க இருக்க..நாம வீட்ல இருந்து கீதா அம்மா தான் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க..ஏன் னு கேட்டேன் ஏதும் சொல்லல.. என்னாச்சு லட்டூமா...”

மெல்லிய குரலில்..”ஒண்ணுமில்ல கண்ணா.. அம்மா நாளிக்கி வீட்டுக்கு வருவேன்..நீ சமத்தா கீதா அம்மா வீட்ல இருக்கனும் சரியா..”

“நா உன்ன விட்டு போமாட்டேன்.. “மழலையாய் அடம்பிடிக்க.. கட்டு படுத்த முடியாமல் வெளியே சென்றார் பத்மநாபன்.. உடன் பாலாவும் வெளி வந்தார்...

ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்த தான் நண்பனை பார்த்த பாலா என்ன சொல்வதென்று அறியாமல் அமைதியாய் நின்றார்...

“பாலா ..துருவ் பேசுறத பாரு.. லட்சுமி இல்லாம நான் என்ன பண்ணுறது..”

“இல்ல டா...தங்கசிக்கு ஒன்னும் ஆகாது.. நீ இப்டிலாம் பேசாத..”
ஒருவாரு தேறினார்..


ஒரு சிறிய பெட்டில் துருவ் தூங்கி கொண்டிருக்க... லட்சுமி அனைவரையும் அருகில் அழைத்தார்... “அண்ணா நான் ஒன்னு கேப்பேன் அது மட்டும் செய்விங்களா...”பாலாவை பார்த்து கேட்க..

“சொல்லு மா என்ன பண்ணனும்....”.

“அண்ணா எனக்கு ஏதும் ஆனாலும் நீங்களும் கீதாவும் துருவ பாத்துகோங்க.. நம்ம உறவு கடைசி வர போனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்றேன் ..அண்ணா ..இது என்னோட கடைசி ஆசைனு நினைச்சி பண்ணுங்க நா ...”

“அண்ணி ஏன் இப்டி பேசறிங்க..உங்களுக்கு ஒன்னும் ஆகாது... பயமா இருக்கு அண்ணி..நீங்க நல்ல தான் இருக்கீங்க..”கீதா பதட்டத்தில் உளறினாள்..

“லட்சுமி.. கண்டிப்பா நீ நினைகிற மாதிரி தான் எல்லாம் நடக்கும்..அது வரைக்கும் நீயும் இருப்ப..”பாலாவின் சொல்லில் நிம்மதி அடைந்த லட்சுமி தன் கணவர் பக்கம் திரும்பினாள்...

“நான் உங்க கூட இல்லனாலும் துருவ நல்ல பாத்துகோங்கா..இன்னொரு கல்யாணம் கூட பண்ணிகொங்க நம்ம பையன் நல்லா இருக்கனும்..”

“லூசு மாதிரி பேசாத லட்சுமி உனக்கு ஒன்னும் இல்ல..அமைதியா தூங்கு...” அமைதியை பரவ விட்டனர் அனைவரும்...இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பினர்...

அன்றிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து லட்சுமி பிரிந்தார் அனைவரையும் விட்டு....

அன்று தான் நாளை.. காலம் ஓட கடமைகள் ஓட...துருவின் காதலும் தோர்க்க... தாய்மையும் விலக.. தனியாய் நின்றவனை காவ்யா ஏந்த..நம்பிக்கை அற்ற வாழ்வில் ஒளியாய் நின்றாள் காவ்யா..

கனவுகள் தொடரும்......................................
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top