Annapurani Dhandapani
மண்டலாதிபதி
அன்புள்ளங்களுக்கு,
இன்று வாசுவைப்பற்றி ஒற்றை வார்த்தையில் க்ளூ கொடுத்திருக்கிறேன்! அடுத்த அத்தியாயத்திலிருந்து Flash back ஆரம்பிக்கிறேன்! Flash back கொஞ்சம் பெரியதாக இருப்பதால் முழுமையாக அளிக்க வேண்டியிருப்பதால் வரும் திங்களன்று அடுத்த பதிவினை தருகிறேன்! அதற்குள் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாருங்கள்! விரைவில் வருகிறேன்!
19.
இனிமையான எண்ணங்கள் மனம் முழுதும் நிரம்பியிருந்த காரணத்தால் யாமினியும் வாசுவும் புன்னகை முகமாக வலம் வந்ததைப் பார்த்த கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் மனம் மிகவும் மகிழ்ந்தது!
வாசுவின் இளையவர்கள் கூட இவர்களின் இந்தத் தோற்றப் பொலிவு கண்டு மகிழ்ச்சியடையவே செய்தார்கள்!
"ரொம்ப நாளைக்கப்றம் அண்ணன் முகத்தில சிரிப்ப பாக்கறோம்ல!" என்று ஐஷு சௌமியிடம் சந்தோஷமாய்க் கூற,
"ஆமா ஸ்வீட்டீ..... அண்ணாவும் மன்னியும் அழகான பேர்ல(pair)! ஒருத்தருக்கொருத்தர் காம்ப்ளிமென்ட் பண்ணிக்கற மாதிரி இருக்காங்க!"
"ஆமா ப்யூட்டி! சும்மா சாதா ட்ரஸ்லயே இவ்ளோ அழகா இருக்காங்களே, இவங்களுக்கு ப்ரைடல் மேக்கப் பண்ணா...... ப்பா.... மாடல் மாதிரி இருப்பாங்கல்ல...."
"ஆமா ஸ்வீட்டீ.... நானும் இததான் நெனச்சேன்...."
"இவங்களுக்கு நெஜமாவே அப்டி ட்ரஸ் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்குடீ.... அப்டி பண்ணி போட்டோ ஷூட் செஷன் நடத்தி ஆல்பம் க்ரியேட் பண்ணி ஃபேஸ்புக்ல போடணும்! எங்கண்ணன்-அண்ணி : உலகத்திலயே அழகான ஜோடி! அப்டீன்னு!" என்று ஐஷு சொல்ல, சௌமி சிரித்தாள்.
"ரெண்டு பேரும் எப்பவும் இப்டியே சந்தோஷமா இருக்கணும்!" என்று இருவரும் ஒரே குரலில் கூறிக் கொண்டனர்!
ருக்மணி மாமி கூட வாசுவையும் யாமினியையும் பார்த்து, இந்தக் குழந்த வாழ்க்கைல ஒரு வழியா நல்லது நடக்கறது! பெருமாளே! இவா ரெண்டு பேரும் நன்னா இருக்கணும்! என்று தன் மனதுக்குள் திருஷ்ட்டி வழித்துக் கொண்டாள்!
அனைவரும் சாப்பிட உட்கார, யாமினியும் ருக்மணி மாமியும் பரிமாறத் தொடங்க, பாஸ்கர் மாமா, யாமினி தனக்குப் பரிமாறக் கூடாது என்றார்.
"கண்ட கண்ட கழுதையெல்லாம் எனக்கு சாப்பாடு போட வேண்டாம்! டீ ருக்மணி! எங்க போய்த் தொலஞ்ச! எனக்கு சோறு போடறத விட உனக்கென்ன வெட்டி முறிக்கற வேல?" என்று கத்தினார்.
யாமினியின் முகம் சூம்பிப் போயிற்று!
"பாஸ்கரா! நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற! யாமினி ஒண்ணும் கழுதையில்ல..... அவ என் மருமக! ஞாபகம் வெச்சுக்க!" என்று கிருஷ்ணா கோபமாகச் சொன்னார்!
"என்ன பெரிய மருமக.... யார் இவ...... இன்னாரோட பொண்ணு..... இன்னாரோட பேத்தி..... இன்ன குடும்பத்திலேந்து வந்திருக்கேன்னு எதாவது தெரியுமா இவளுக்கு..... எங்கியோ குப்பைல கிடந்திருப்பா.... அவள யாராவது கொண்டு போய் அனாத ஆஸ்ரமத்தில போட்டிருப்பா.... என்ன பொறப்போ இவ..... நல்லவளுக்கா பொறந்திருப்பா.... கண்டிப்பா இவம்மா கெட்டவளாதான் இருப்பா.... அதான் ஒருத்தன் இவளக் கெடுத்துட்டான்..... இவளெல்லாம் உன் மருமகள்னு எப்டி நீ ஒத்துகிட்ட...." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசினார் பாஸ்கர் மாமா!
கேட்டிருந்த அனைவரும் அதிர்ந்தனர் என்றால் வாசு கோபத்தில் கண்கள் சிவக்க மாமாவை அடிப்பதற்காக எழுந்தான்!
பவதாரிணியை பரிசோதிப்பதற்காக ஆகாஷ் வாசுவின் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்!
வாசுவைத் தடுக்க அவன் வேகமாக வரவும் யாமினியின் அழுத்தமான வார்த்தைகள் அதைவிட வேகமாக வந்து வாசுவைத் தடுத்தது!
"நில்லுங்க வாசு!"
"எப்டி பேசறார் பாரு யாமினி!?"
கொஞ்ச நாளாக தன்னைக் கெடுத்தவன் பற்றிய எண்ணங்களினால் ஒரு மாதிரி வேதனையான மனநிலையில் இருந்த யாமினி, இன்று வாசு என்ற ஆண் சிங்கத்தின் காதலை தன் மனதில் உணர்ந்து கொண்டதினாலோ என்னமோ, தைரியசாலியாக, யாரை வேண்டுமானாலும் அடித்துக் கேள்வி கேட்கும் பழைய யாமினியாக மாறியிருந்தாள்!
"அவர் என்ன பொய்யா சொன்னாரு! உண்மையதானே சொல்றாரு!" என்றாள்.
"என்ன பேசற நீ?" என்றான் வாசு கோபமாக!
"ஆமா வாசு! என்னப் பெத்தவங்க யார் என்னன்னு எனக்கு சத்தியமா தெரியாது! உண்மையாவே எங்கம்மாவ யாராவது ஏமாத்தியிருக்கலாம்! குந்தி தேவி மாதிரி ஊர் உலகத்துக்கு பயந்து அவ என்ன குப்பைல வீசியிருக்கலாம்! கரெக்ட்டுதானே!?" என்றாள்.
"ஆனா...." என்று இழுத்த வாசுவை திரும்பவும் நிறுத்தினாள் யாமினி!
"இல்லன்னா.... பொறந்தது பொண்ணுன்னு தெரிஞ்சி எந்த புண்ணியவானோ நா வேணாம்னு தூக்கி போட்டிருக்கலாம்..... எந்த சுயநலவாதியோட பேராசையினாலோ, என் கழுத்தில கிடந்த சங்கிலிக்காக நா கடத்தி வரப்பட்டு நா அநாதையாக்கப்பட்டிருக்கலாம்..... மதக்கலவரத்தில செத்து போன ஏதாவது முஸ்லிம் தம்பதியரோட குழந்தையா கூட நா இருந்திருக்கலாம்..... ரோட் ஆக்ஸிடென்ட்ல மாட்டி என்ன பெத்தவங்க என்ன மட்டும் காப்பாத்திட்டு அவங்க செத்து போயிருக்கலாம்..... நாந்தான் பிச்சயெடுக்கறேன்.... எம்பொண்ணாவது நல்லா வாழட்டும்னு எந்த பிச்சக்காரியாவது என்ன ஆஸ்ரம வாசல்ல போட்டிருக்கலாம்.... கரெக்ட்டுதானே வாசு..." என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள் யாமினி!
"ஆமா யாமினி! நீ சொன்னது எதுவா வேண்ணா உனக்கு நடந்திருக்கலாம்!"
"ம்... அப்ப அநாதையா நா மாறினது என் தப்பில்ல! என்னப் பெத்தவங்க யார்ன்னு தெரியாம இருக்கறது என் தப்பு இல்லவேயில்ல! இந்த சமுதாயத்தோட தப்பு! அதுக்கு நா ஏன் வருத்தப்படணும்! இவர் சொல்றது கரெக்ட்டு தான்!" என்றாள்.
பாஸ்கர் மாமா பெருமையாக வாசுவைப் பார்த்தார்!
"பாத்தியா! நா சொல்றது சரின்னு இந்தப் பொண்ணே ஒத்துகிட்டா! நா எப்பவுமே சரியாதான் பேசுவேன்! அதனால மொதல்ல இவள இந்தாத்த விட்டு..."
"பொறுங்க.... நா இன்னும் பேசி முடிக்கல...." என்று மாமாவை கடுமையான குரலில் நிறுத்தினாள் யாமினி!
"நா பண்ணாத தப்புக்கு எனக்கு எதுக்கு தண்டனை!? என் பிறப்பு.... நீங்க கேட்ட இன்னார்னு வேண்ணா தெரியாம இருக்கலாம்.... ஆனா இப்ப நா திருமதி யாமினி வாசுதேவன்! அதாவது... திருவாளர் வாசுதேவனுடைய மனைவி! திருவாளர் கிருஷ்ணராஜ் திருமதி பவதாரிணி கிருஷ்ணராஜ் தம்பதியோட மருமகள்! எனக்குன்னு இந்த ஒரு அடையாளம் இப்ப இருக்கு!" என்றாள் திடமாக!
"என்ன இந்த வீட்ட விட்டுப் போகச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கெடையாது! ஆனா உங்கள இந்த வீட்ட விட்டுப் வெளிய போன்னு சொல்ற அதிகாரம் எனக்கிருக்கு! ஏன்னா, நா இந்த வீட்டு மருமக!" என்று நிறுத்தி சில நொடிகள் கழித்து, "ஆனா நா அத சொல்ல மாட்டேன்! ஏன்னா..... உங்கள விட எனக்கு இங்கிதம் தெரியும்!" என்று விட்டு ருக்மணி மாமியைப் பார்த்து, "நா பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க!" என்று மனதாற மன்னிப்பும் கேட்டாள்!
"சபாஷ் யாமினி!" என்று கூறி வாசு பலமாகக் கைதட்டினான்! ஆகாஷ் மனதுக்குள், அடேங்கப்பா! சரியான நெத்தியடி! என்று நினைத்துக் கொண்டான்! ஐஷுவும் சௌமியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு, "இவருக்கு இது தேவையா?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்!
கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனம் மகிழ்ந்தாலும் நிலைமை விபரீதமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்!
"என்னையா வெளிய போன்னு சொல்ற? அத நீயும் கேட்டு கை தட்றயா?" என்று கோபமாகக் கேட்ட பாஸ்கர் மாமா, சட்டென்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிய, இதைப் பார்த்த வாசு, முகம் சுளித்தான்!
"மாமா! இந்த நெஞ்சு வலி ட்ராமா இனிமே செல்லாது! எழுந்திருங்க!" என்றான்!
ஏனெனில், வாசு பள்ளி கல்லூரியில் படிக்கும்போது மாமா இதைப்போல எதையாவது சொல்லி அவனை அதட்டி அதிகாரம் செய்யும் போதெல்லாம் வாசு எதிர்த்துப் பேசுவான்! அப்போதெல்லாம் பாஸ்கர் மாமா நெஞ்சு வலி வந்தது போல நடித்து தன் அதிகாரத்துக்கு வாசுவை கட்டுப்பட வைப்பார்! சில சமயம் அவர் ஜெயிப்பார்! பல சமயம் பவதாரிணியின் வற்புருத்தலில் அவன் மாமா பேச்சைக் கேட்பது போல நடிப்பான்!
ஆனால் அதைப் போல இப்போது செய்ய வேண்டுமென்றால் யாமினியை அல்லவா அவர் சொல்வது போல வீட்டை விட்டு அனுப்ப வேண்டும்!? இது எப்படி முடியும்? இவர் இப்படி ஏதாவது தடங்கல் செய்வார் என்றுதானோ என்னமோ அப்பா என் கல்யாணத்தை அப்படி அவசர அவசரமாக நடத்தி வைத்தார் போல! இப்படி நினைத்துதான் வாசு, பாஸ்கர் மாமா தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிவதைப் பார்த்து, "உங்க ட்ராமா இங்க இனிமே செல்லாது!" என்றான்.
கீழே விழுந்து சில நொடிகளுக்கு மேல் ஆகியும் பாஸ்கர் மாமா எழுந்து கொள்ளாததால் சௌமி தன் அப்பாவின் அருகில் சென்று பார்த்து அலறினாள்.
"அண்ணா! இது ட்ராமா இல்ல.... அப்பா மூக்குலேந்து ப்ளட் வரது....." என்று கத்தினாள்.
அவளுடைய அலறலில் எல்லாருடைய கவனமும் அவரிடம் செல்ல, ஆகாஷ் முதலுதவி செய்தான்.
"வாசு! பிபி ஷூட் அப் ஆயிருக்கு! அவர உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் போடணும்டா!" என்றான்.
"சீக்கிரம்...." என்று வாசு அதற்கு நடவடிக்கை எடுக்க, ஆகாஷ் சௌமியிடம் கூறினான்.
"சௌமி! அங்கிள் கிட்ட பேசிகிட்டேயிரு! அவர் மயக்கம் ஆகிடக் கூடாது!" என்று எச்சரிக்கை செய்தான்.
சௌமி எதோ பேச்சு கொடுக்க, பாஸ்கர் மாமா, இந்தக் களேபரத்திலும் தன்னுடைய ஆதிக்கத்தை வாசுவின் மீது செலுத்தினார்.
"டே.... வாசு.... நேக்கு என்னமோ ஆகப்போறது..... நா கண்ண மூடறதுக்கு முன்னால என் பொண்ணு கழுத்தில தாலியக் கட்டுடா...." என்று கத்தினார்!
இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்! யாமினிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது! அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள்!
"மாமா..... வாய மூடுங்க.... சௌமி என் தங்கை! அது மட்டுமில்ல! நா ஏற்கனவே கல்யாணம் ஆனவன்! இதோ இருக்கா என் மனைவி!" என்று அழுத்தமான குரலில் கத்தினான் வாசு!
மாமா, அவன் பேசியதிலிருந்த முதல் வாக்கியத்தை மட்டும்தான் மனதில் வாங்கிக் கொண்டார் போலும்! அதனால் அதற்கு மட்டும் பதிலளித்தார்!
"டே.... என்னடா தங்கை.... அவ என்ன உன் கூடப் பொறந்த தங்கையா.... இல்லதானே.... அதனால நீ தாலி கட்டுடா!" என்றார்.
"மாமா..." என்று பல்லைக் கடித்தான் வாசு!
"டே வாசு.... சௌமி கழுத்தில தாலி கட்டுடா.... நா அத கண் குளிரப் பாத்துட்டு சாவேன்டா..."
"மாமா! நீங்க யாரப்பத்தியும் கவலப்பட மாட்டீங்களா? சௌமிக்கும் ஒரு மனசிருக்கு! அதுல அவளுக்குன்னு ஆசைகள் இருக்கு! நீங்க இப்டி பிடிவாதம் பிடிக்கறதுனால எதுவும் ஆகப்போறதில்ல.... பேசாம இருங்க! எல்லாம் சரியாய்டும்!" என்றான்! அவன் மனம் முழுக்க மாமாவின் மீது வெறுப்பு இருந்தாலும் இப்போது அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் நிதானமாகப் பேசினான்! ஆனால் மாமா விடுவதாக இல்லை! பிடிவாதம் பிடித்தார்!
"வாசூ.... சௌமிக்கு என்ன வேண்டியிருக்கு ஆசை....நா சொல்ற பையன அவ கல்யாணம் பண்ணிக்கணும்.... நா இருக்கும் போதே அவ கல்யாணத்த முடிக்கணும்... ருக்மணிக்கு இதெல்லாம் எதுவும் தெரியாதுடா... அவளுக்கு சமைக்கவும் சாப்டவும் விதவிதமா மாட்டிகிட்டு மினுக்கவும்தான் தெரியும்.... நீ தாலி கட்டுடா..." என்றார்.
இதைக் கேட்டதும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ருக்மணி மாமியும் சௌமியும் சட்டென அழுகையை நிறுத்தினர்! இருவருக்கும் வேதனையும் கோபமும், பாஸ்கர் மாமாவின் மீது வெறுப்பும் வந்தது!
இன்று வாசுவைப்பற்றி ஒற்றை வார்த்தையில் க்ளூ கொடுத்திருக்கிறேன்! அடுத்த அத்தியாயத்திலிருந்து Flash back ஆரம்பிக்கிறேன்! Flash back கொஞ்சம் பெரியதாக இருப்பதால் முழுமையாக அளிக்க வேண்டியிருப்பதால் வரும் திங்களன்று அடுத்த பதிவினை தருகிறேன்! அதற்குள் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாருங்கள்! விரைவில் வருகிறேன்!
இது இருளல்ல!
19.
இனிமையான எண்ணங்கள் மனம் முழுதும் நிரம்பியிருந்த காரணத்தால் யாமினியும் வாசுவும் புன்னகை முகமாக வலம் வந்ததைப் பார்த்த கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் மனம் மிகவும் மகிழ்ந்தது!
வாசுவின் இளையவர்கள் கூட இவர்களின் இந்தத் தோற்றப் பொலிவு கண்டு மகிழ்ச்சியடையவே செய்தார்கள்!
"ரொம்ப நாளைக்கப்றம் அண்ணன் முகத்தில சிரிப்ப பாக்கறோம்ல!" என்று ஐஷு சௌமியிடம் சந்தோஷமாய்க் கூற,
"ஆமா ஸ்வீட்டீ..... அண்ணாவும் மன்னியும் அழகான பேர்ல(pair)! ஒருத்தருக்கொருத்தர் காம்ப்ளிமென்ட் பண்ணிக்கற மாதிரி இருக்காங்க!"
"ஆமா ப்யூட்டி! சும்மா சாதா ட்ரஸ்லயே இவ்ளோ அழகா இருக்காங்களே, இவங்களுக்கு ப்ரைடல் மேக்கப் பண்ணா...... ப்பா.... மாடல் மாதிரி இருப்பாங்கல்ல...."
"ஆமா ஸ்வீட்டீ.... நானும் இததான் நெனச்சேன்...."
"இவங்களுக்கு நெஜமாவே அப்டி ட்ரஸ் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்குடீ.... அப்டி பண்ணி போட்டோ ஷூட் செஷன் நடத்தி ஆல்பம் க்ரியேட் பண்ணி ஃபேஸ்புக்ல போடணும்! எங்கண்ணன்-அண்ணி : உலகத்திலயே அழகான ஜோடி! அப்டீன்னு!" என்று ஐஷு சொல்ல, சௌமி சிரித்தாள்.
"ரெண்டு பேரும் எப்பவும் இப்டியே சந்தோஷமா இருக்கணும்!" என்று இருவரும் ஒரே குரலில் கூறிக் கொண்டனர்!
ருக்மணி மாமி கூட வாசுவையும் யாமினியையும் பார்த்து, இந்தக் குழந்த வாழ்க்கைல ஒரு வழியா நல்லது நடக்கறது! பெருமாளே! இவா ரெண்டு பேரும் நன்னா இருக்கணும்! என்று தன் மனதுக்குள் திருஷ்ட்டி வழித்துக் கொண்டாள்!
அனைவரும் சாப்பிட உட்கார, யாமினியும் ருக்மணி மாமியும் பரிமாறத் தொடங்க, பாஸ்கர் மாமா, யாமினி தனக்குப் பரிமாறக் கூடாது என்றார்.
"கண்ட கண்ட கழுதையெல்லாம் எனக்கு சாப்பாடு போட வேண்டாம்! டீ ருக்மணி! எங்க போய்த் தொலஞ்ச! எனக்கு சோறு போடறத விட உனக்கென்ன வெட்டி முறிக்கற வேல?" என்று கத்தினார்.
யாமினியின் முகம் சூம்பிப் போயிற்று!
"பாஸ்கரா! நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற! யாமினி ஒண்ணும் கழுதையில்ல..... அவ என் மருமக! ஞாபகம் வெச்சுக்க!" என்று கிருஷ்ணா கோபமாகச் சொன்னார்!
"என்ன பெரிய மருமக.... யார் இவ...... இன்னாரோட பொண்ணு..... இன்னாரோட பேத்தி..... இன்ன குடும்பத்திலேந்து வந்திருக்கேன்னு எதாவது தெரியுமா இவளுக்கு..... எங்கியோ குப்பைல கிடந்திருப்பா.... அவள யாராவது கொண்டு போய் அனாத ஆஸ்ரமத்தில போட்டிருப்பா.... என்ன பொறப்போ இவ..... நல்லவளுக்கா பொறந்திருப்பா.... கண்டிப்பா இவம்மா கெட்டவளாதான் இருப்பா.... அதான் ஒருத்தன் இவளக் கெடுத்துட்டான்..... இவளெல்லாம் உன் மருமகள்னு எப்டி நீ ஒத்துகிட்ட...." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசினார் பாஸ்கர் மாமா!
கேட்டிருந்த அனைவரும் அதிர்ந்தனர் என்றால் வாசு கோபத்தில் கண்கள் சிவக்க மாமாவை அடிப்பதற்காக எழுந்தான்!
பவதாரிணியை பரிசோதிப்பதற்காக ஆகாஷ் வாசுவின் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்!
வாசுவைத் தடுக்க அவன் வேகமாக வரவும் யாமினியின் அழுத்தமான வார்த்தைகள் அதைவிட வேகமாக வந்து வாசுவைத் தடுத்தது!
"நில்லுங்க வாசு!"
"எப்டி பேசறார் பாரு யாமினி!?"
கொஞ்ச நாளாக தன்னைக் கெடுத்தவன் பற்றிய எண்ணங்களினால் ஒரு மாதிரி வேதனையான மனநிலையில் இருந்த யாமினி, இன்று வாசு என்ற ஆண் சிங்கத்தின் காதலை தன் மனதில் உணர்ந்து கொண்டதினாலோ என்னமோ, தைரியசாலியாக, யாரை வேண்டுமானாலும் அடித்துக் கேள்வி கேட்கும் பழைய யாமினியாக மாறியிருந்தாள்!
"அவர் என்ன பொய்யா சொன்னாரு! உண்மையதானே சொல்றாரு!" என்றாள்.
"என்ன பேசற நீ?" என்றான் வாசு கோபமாக!
"ஆமா வாசு! என்னப் பெத்தவங்க யார் என்னன்னு எனக்கு சத்தியமா தெரியாது! உண்மையாவே எங்கம்மாவ யாராவது ஏமாத்தியிருக்கலாம்! குந்தி தேவி மாதிரி ஊர் உலகத்துக்கு பயந்து அவ என்ன குப்பைல வீசியிருக்கலாம்! கரெக்ட்டுதானே!?" என்றாள்.
"ஆனா...." என்று இழுத்த வாசுவை திரும்பவும் நிறுத்தினாள் யாமினி!
"இல்லன்னா.... பொறந்தது பொண்ணுன்னு தெரிஞ்சி எந்த புண்ணியவானோ நா வேணாம்னு தூக்கி போட்டிருக்கலாம்..... எந்த சுயநலவாதியோட பேராசையினாலோ, என் கழுத்தில கிடந்த சங்கிலிக்காக நா கடத்தி வரப்பட்டு நா அநாதையாக்கப்பட்டிருக்கலாம்..... மதக்கலவரத்தில செத்து போன ஏதாவது முஸ்லிம் தம்பதியரோட குழந்தையா கூட நா இருந்திருக்கலாம்..... ரோட் ஆக்ஸிடென்ட்ல மாட்டி என்ன பெத்தவங்க என்ன மட்டும் காப்பாத்திட்டு அவங்க செத்து போயிருக்கலாம்..... நாந்தான் பிச்சயெடுக்கறேன்.... எம்பொண்ணாவது நல்லா வாழட்டும்னு எந்த பிச்சக்காரியாவது என்ன ஆஸ்ரம வாசல்ல போட்டிருக்கலாம்.... கரெக்ட்டுதானே வாசு..." என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள் யாமினி!
"ஆமா யாமினி! நீ சொன்னது எதுவா வேண்ணா உனக்கு நடந்திருக்கலாம்!"
"ம்... அப்ப அநாதையா நா மாறினது என் தப்பில்ல! என்னப் பெத்தவங்க யார்ன்னு தெரியாம இருக்கறது என் தப்பு இல்லவேயில்ல! இந்த சமுதாயத்தோட தப்பு! அதுக்கு நா ஏன் வருத்தப்படணும்! இவர் சொல்றது கரெக்ட்டு தான்!" என்றாள்.
பாஸ்கர் மாமா பெருமையாக வாசுவைப் பார்த்தார்!
"பாத்தியா! நா சொல்றது சரின்னு இந்தப் பொண்ணே ஒத்துகிட்டா! நா எப்பவுமே சரியாதான் பேசுவேன்! அதனால மொதல்ல இவள இந்தாத்த விட்டு..."
"பொறுங்க.... நா இன்னும் பேசி முடிக்கல...." என்று மாமாவை கடுமையான குரலில் நிறுத்தினாள் யாமினி!
"நா பண்ணாத தப்புக்கு எனக்கு எதுக்கு தண்டனை!? என் பிறப்பு.... நீங்க கேட்ட இன்னார்னு வேண்ணா தெரியாம இருக்கலாம்.... ஆனா இப்ப நா திருமதி யாமினி வாசுதேவன்! அதாவது... திருவாளர் வாசுதேவனுடைய மனைவி! திருவாளர் கிருஷ்ணராஜ் திருமதி பவதாரிணி கிருஷ்ணராஜ் தம்பதியோட மருமகள்! எனக்குன்னு இந்த ஒரு அடையாளம் இப்ப இருக்கு!" என்றாள் திடமாக!
"என்ன இந்த வீட்ட விட்டுப் போகச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கெடையாது! ஆனா உங்கள இந்த வீட்ட விட்டுப் வெளிய போன்னு சொல்ற அதிகாரம் எனக்கிருக்கு! ஏன்னா, நா இந்த வீட்டு மருமக!" என்று நிறுத்தி சில நொடிகள் கழித்து, "ஆனா நா அத சொல்ல மாட்டேன்! ஏன்னா..... உங்கள விட எனக்கு இங்கிதம் தெரியும்!" என்று விட்டு ருக்மணி மாமியைப் பார்த்து, "நா பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க!" என்று மனதாற மன்னிப்பும் கேட்டாள்!
"சபாஷ் யாமினி!" என்று கூறி வாசு பலமாகக் கைதட்டினான்! ஆகாஷ் மனதுக்குள், அடேங்கப்பா! சரியான நெத்தியடி! என்று நினைத்துக் கொண்டான்! ஐஷுவும் சௌமியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு, "இவருக்கு இது தேவையா?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்!
கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனம் மகிழ்ந்தாலும் நிலைமை விபரீதமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்!
"என்னையா வெளிய போன்னு சொல்ற? அத நீயும் கேட்டு கை தட்றயா?" என்று கோபமாகக் கேட்ட பாஸ்கர் மாமா, சட்டென்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிய, இதைப் பார்த்த வாசு, முகம் சுளித்தான்!
"மாமா! இந்த நெஞ்சு வலி ட்ராமா இனிமே செல்லாது! எழுந்திருங்க!" என்றான்!
ஏனெனில், வாசு பள்ளி கல்லூரியில் படிக்கும்போது மாமா இதைப்போல எதையாவது சொல்லி அவனை அதட்டி அதிகாரம் செய்யும் போதெல்லாம் வாசு எதிர்த்துப் பேசுவான்! அப்போதெல்லாம் பாஸ்கர் மாமா நெஞ்சு வலி வந்தது போல நடித்து தன் அதிகாரத்துக்கு வாசுவை கட்டுப்பட வைப்பார்! சில சமயம் அவர் ஜெயிப்பார்! பல சமயம் பவதாரிணியின் வற்புருத்தலில் அவன் மாமா பேச்சைக் கேட்பது போல நடிப்பான்!
ஆனால் அதைப் போல இப்போது செய்ய வேண்டுமென்றால் யாமினியை அல்லவா அவர் சொல்வது போல வீட்டை விட்டு அனுப்ப வேண்டும்!? இது எப்படி முடியும்? இவர் இப்படி ஏதாவது தடங்கல் செய்வார் என்றுதானோ என்னமோ அப்பா என் கல்யாணத்தை அப்படி அவசர அவசரமாக நடத்தி வைத்தார் போல! இப்படி நினைத்துதான் வாசு, பாஸ்கர் மாமா தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிவதைப் பார்த்து, "உங்க ட்ராமா இங்க இனிமே செல்லாது!" என்றான்.
கீழே விழுந்து சில நொடிகளுக்கு மேல் ஆகியும் பாஸ்கர் மாமா எழுந்து கொள்ளாததால் சௌமி தன் அப்பாவின் அருகில் சென்று பார்த்து அலறினாள்.
"அண்ணா! இது ட்ராமா இல்ல.... அப்பா மூக்குலேந்து ப்ளட் வரது....." என்று கத்தினாள்.
அவளுடைய அலறலில் எல்லாருடைய கவனமும் அவரிடம் செல்ல, ஆகாஷ் முதலுதவி செய்தான்.
"வாசு! பிபி ஷூட் அப் ஆயிருக்கு! அவர உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் போடணும்டா!" என்றான்.
"சீக்கிரம்...." என்று வாசு அதற்கு நடவடிக்கை எடுக்க, ஆகாஷ் சௌமியிடம் கூறினான்.
"சௌமி! அங்கிள் கிட்ட பேசிகிட்டேயிரு! அவர் மயக்கம் ஆகிடக் கூடாது!" என்று எச்சரிக்கை செய்தான்.
சௌமி எதோ பேச்சு கொடுக்க, பாஸ்கர் மாமா, இந்தக் களேபரத்திலும் தன்னுடைய ஆதிக்கத்தை வாசுவின் மீது செலுத்தினார்.
"டே.... வாசு.... நேக்கு என்னமோ ஆகப்போறது..... நா கண்ண மூடறதுக்கு முன்னால என் பொண்ணு கழுத்தில தாலியக் கட்டுடா...." என்று கத்தினார்!
இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்! யாமினிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது! அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள்!
"மாமா..... வாய மூடுங்க.... சௌமி என் தங்கை! அது மட்டுமில்ல! நா ஏற்கனவே கல்யாணம் ஆனவன்! இதோ இருக்கா என் மனைவி!" என்று அழுத்தமான குரலில் கத்தினான் வாசு!
மாமா, அவன் பேசியதிலிருந்த முதல் வாக்கியத்தை மட்டும்தான் மனதில் வாங்கிக் கொண்டார் போலும்! அதனால் அதற்கு மட்டும் பதிலளித்தார்!
"டே.... என்னடா தங்கை.... அவ என்ன உன் கூடப் பொறந்த தங்கையா.... இல்லதானே.... அதனால நீ தாலி கட்டுடா!" என்றார்.
"மாமா..." என்று பல்லைக் கடித்தான் வாசு!
"டே வாசு.... சௌமி கழுத்தில தாலி கட்டுடா.... நா அத கண் குளிரப் பாத்துட்டு சாவேன்டா..."
"மாமா! நீங்க யாரப்பத்தியும் கவலப்பட மாட்டீங்களா? சௌமிக்கும் ஒரு மனசிருக்கு! அதுல அவளுக்குன்னு ஆசைகள் இருக்கு! நீங்க இப்டி பிடிவாதம் பிடிக்கறதுனால எதுவும் ஆகப்போறதில்ல.... பேசாம இருங்க! எல்லாம் சரியாய்டும்!" என்றான்! அவன் மனம் முழுக்க மாமாவின் மீது வெறுப்பு இருந்தாலும் இப்போது அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் நிதானமாகப் பேசினான்! ஆனால் மாமா விடுவதாக இல்லை! பிடிவாதம் பிடித்தார்!
"வாசூ.... சௌமிக்கு என்ன வேண்டியிருக்கு ஆசை....நா சொல்ற பையன அவ கல்யாணம் பண்ணிக்கணும்.... நா இருக்கும் போதே அவ கல்யாணத்த முடிக்கணும்... ருக்மணிக்கு இதெல்லாம் எதுவும் தெரியாதுடா... அவளுக்கு சமைக்கவும் சாப்டவும் விதவிதமா மாட்டிகிட்டு மினுக்கவும்தான் தெரியும்.... நீ தாலி கட்டுடா..." என்றார்.
இதைக் கேட்டதும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ருக்மணி மாமியும் சௌமியும் சட்டென அழுகையை நிறுத்தினர்! இருவருக்கும் வேதனையும் கோபமும், பாஸ்கர் மாமாவின் மீது வெறுப்பும் வந்தது!