- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
காதல் 3
அன்று ஞாயி்றுக்கிழமை காலையில் ஆதிக் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான். காரணம், பிரீத்தியை அழைத்து செல்ல அவள் தந்தை சரி என்று நேற்று கூறவும், இதோ கிளம்பி அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.
அவன் அன்னை அவனை சாப்பிட அழைக்க, அவன் தன் தந்தையுடன் டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். பாட்டியை காணாமல், அவன் அன்னையிடம் விசாரித்தான்.
“அவங்க ஏதோ முக்கியமான வேலை இருக்கு அப்படினு சொல்லி, காலையில் கிளம்பி போய்ட்டாங்க ஆதிக்” என்று கூறினார்.
“ஓ! சரி மா எனக்கும் ஒரு முக்கியமான வேலை இன்னைக்கு இருக்கு, போய்ட்டு வந்திடுறேன்” என்று கூறி தன் காரை எடுத்துக் கொண்டு, பிரீத்தி வீட்டிற்கு வண்டியை விட்டான்.
பிரீத்தியின் தந்தை அவனை வாசல் வரை வந்து வரவேற்க, ஒரு புன்னகையுடன் அவரை நலம் விசாரித்த படி உள்ளே நுழைந்தவன் அதிர்ந்தான்.
அங்கே அவனின் பாட்டி, மிக சுவாரசியமாக பிரீத்தியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
“பாட்டி! நீங்க எதோ முக்கியமான விஷயமா வெளியே போனீங்க அப்படினு அம்மா சொன்னாங்க. இங்க என்ன பாட்டி பண்ணுறீங்க, நீங்க?” என்று உள்ளே எரிச்சல் இருந்தாலும் வெளியே சிரித்த முகத்துடன் கேட்டான்.
“அட என்னடா ஆதிக்! உங்க அப்பா ஏதும் முக்கியமான விஷயம் சொன்னானா என்ன? இவ்வளவு தூரம், உன் மாமனார் வீட்டுக்கு வந்து இருக்க” என்று தெரிந்தும், தெரியாமல் கேட்டார்.
“பாட்டி! அவங்க என்னை வெளியே அழைச்சிட்டு போக, அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு இருந்தாங்க. நேத்து அப்பா சரின்னு சொல்லவும், உடனே வந்துட்டாங்க, அப்படிதானங்க” என்று பிரீத்தி அவனிடமே பந்தை போடவும், வெளியே சிரித்தாலும், உள்ளே பல்லை கடித்தான்.
“சொல்லுறேனு தப்பா எடுத்துக்காதீங்க, இன்னும் ஒரு பதினஞ்சு நாள் ல கல்யாணத்தை வச்சுட்டு, இப்போ வெளியே போறது நல்லது இல்லை”.
“வெளியே நம்ம சொந்தக்காரங்க, எந்த நேரத்துல என்ன பேசுவாங்கன்னு தெரியாது. அவங்க வாய்ல நாமளே, இந்தாங்க அவலை மென்னுங்க அப்படினு சொல்லுற மாதிரி ஆகிடும்”.
“ அதனால, வெளியே எங்கேயும் போக வேண்டாம், வேணும்னா இங்கேயே பேசிக்கட்டும் ரெண்டு பேரும்” என்று பாட்டி நிதர்சனத்தை எடுத்து கூறவும், அவர்களும் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை என்று கூறி, மாபிள்ளையிடம் மன்னிப்பு வேண்டினர்.
“ பரவாலை! நான் போன் ல பேசிக்குறேன். பாட்டி! நீங்க வந்த வேலை ஜோரா முடிஞ்சதுனா, வரீங்களா சேர்ந்தே வீட்டுக்கு போவோம்” என்று கஷ்டபட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்ட ஆதிக்கை பார்த்து, பிரீத்திக்கு சிரிப்பு வந்தது.
அதை அவள் கஷ்டபட்டு தனக்குள் அடக்கவும், அதை கண்டுகொண்ட ஆதிக், அவளை யாருமரியாமல் முறைத்தான். அவளோ, பதிலுக்கு பழிப்பு காட்டினாள் அவனுக்கு.
பாட்டியும், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவனோடு காரில் ஏறி அமர்ந்தார். வண்டி சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் பாட்டியை முறைத்தான்.
“என்னடா முறைப்பு? நாளைக்கு நீங்க சேர்ந்து போறதை, இல்லை நீங்க வெளியிடத்தில் பார்துகிட்டதை யாரவது ஒரு ஆள் பார்த்தாலும், அதை எப்படி கண் காத்து மூக்கு வச்சு பேசலாம் அப்படின்னு தான் நினைப்பாங்க”.
“எதுனாலும் போன் ல பேசு, இனி அவ ஆபிஸ் பக்கம் கூட போக கூடாது நீ பார்த்துக்கோ” என்றவரை பார்த்து, அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.
நேராக பாட்டியை வீட்டில் இறக்கிவிட்டு, இவன் நேராக சென்றது அவன் ஆபிஸ்க்கு தான். அவனின் காபின் சென்று கதவை அடைத்தவன், உடனே ப்ரீத்திக்கு தான் கால் செய்தான்.
அவள் எடுத்து பேசவும், உடனே பொரிய தொடங்கி விட்டான். அவளும் அவன் கத்தட்டும் என்று, அமைதியாக இருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.
“என்ன வேணும் உங்களுக்கு? இப்போ நான் இந்த பிராஜக்ட் எடுத்தது உங்களுக்கு பிடிக்கல. அதனால, என்னை அந்த பிராஜக்ட் ல இருந்து விலக சொல்லி , உங்களுக்கு அதை கொடுக்க சொல்லுறீங்க அதானே” என்று தெள்ளத் தெளிவாக அவனிடம் கேட்டாள் பிரீத்தி.
“ம்ம்..அதான் உனக்கே தெரியுது தானே, அப்புறம் என்ன நீயே கொடுத்திடு, யாருக்கும் தெரியாம” என்று அவன் கூறவும், இந்த பக்கம் அவள் மௌனம் சாதித்தாள்.
“ஹே! லைன் ல இருக்கியா?” என்று பொறுக்க முடியாமல் கத்தினான்.
“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல! தெரியாம உங்களை போய் ரோல் மாடலா நினைசேன்னு என்னை நினைச்சா, ஐ ஃபீல் ஷேம் ஆப் இட்”.
“அந்த பிராஜக்ட் என்னோட உழைப்பு, அதை நான் தர மாட்டேன். அட் தி சேம் டைம், இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன். இப்படி ஒரு பெர்சன், என் லைஃப் ல இருக்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டு போனை அணைத்தாள்.
அவளால் தாங்கேவே முடியவில்லை, எப்படி இவன் இப்படி இருக்கிறான் என்று. அப்பொழுது, வெளியே ஒரு முகம், உள்ளே வேறு முகமா? என்று எண்ணி குழம்பி போனாள்.
இங்கே ஆதிக், புன்னகை முகமாக சேரில் அமர்ந்து இருந்தான். அவன் என்ன நினைக்கிறான், ஏன் இதை செய்தான் என்று அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
அன்று ஞாயி்றுக்கிழமை காலையில் ஆதிக் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான். காரணம், பிரீத்தியை அழைத்து செல்ல அவள் தந்தை சரி என்று நேற்று கூறவும், இதோ கிளம்பி அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.
அவன் அன்னை அவனை சாப்பிட அழைக்க, அவன் தன் தந்தையுடன் டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். பாட்டியை காணாமல், அவன் அன்னையிடம் விசாரித்தான்.
“அவங்க ஏதோ முக்கியமான வேலை இருக்கு அப்படினு சொல்லி, காலையில் கிளம்பி போய்ட்டாங்க ஆதிக்” என்று கூறினார்.
“ஓ! சரி மா எனக்கும் ஒரு முக்கியமான வேலை இன்னைக்கு இருக்கு, போய்ட்டு வந்திடுறேன்” என்று கூறி தன் காரை எடுத்துக் கொண்டு, பிரீத்தி வீட்டிற்கு வண்டியை விட்டான்.
பிரீத்தியின் தந்தை அவனை வாசல் வரை வந்து வரவேற்க, ஒரு புன்னகையுடன் அவரை நலம் விசாரித்த படி உள்ளே நுழைந்தவன் அதிர்ந்தான்.
அங்கே அவனின் பாட்டி, மிக சுவாரசியமாக பிரீத்தியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
“பாட்டி! நீங்க எதோ முக்கியமான விஷயமா வெளியே போனீங்க அப்படினு அம்மா சொன்னாங்க. இங்க என்ன பாட்டி பண்ணுறீங்க, நீங்க?” என்று உள்ளே எரிச்சல் இருந்தாலும் வெளியே சிரித்த முகத்துடன் கேட்டான்.
“அட என்னடா ஆதிக்! உங்க அப்பா ஏதும் முக்கியமான விஷயம் சொன்னானா என்ன? இவ்வளவு தூரம், உன் மாமனார் வீட்டுக்கு வந்து இருக்க” என்று தெரிந்தும், தெரியாமல் கேட்டார்.
“பாட்டி! அவங்க என்னை வெளியே அழைச்சிட்டு போக, அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு இருந்தாங்க. நேத்து அப்பா சரின்னு சொல்லவும், உடனே வந்துட்டாங்க, அப்படிதானங்க” என்று பிரீத்தி அவனிடமே பந்தை போடவும், வெளியே சிரித்தாலும், உள்ளே பல்லை கடித்தான்.
“சொல்லுறேனு தப்பா எடுத்துக்காதீங்க, இன்னும் ஒரு பதினஞ்சு நாள் ல கல்யாணத்தை வச்சுட்டு, இப்போ வெளியே போறது நல்லது இல்லை”.
“வெளியே நம்ம சொந்தக்காரங்க, எந்த நேரத்துல என்ன பேசுவாங்கன்னு தெரியாது. அவங்க வாய்ல நாமளே, இந்தாங்க அவலை மென்னுங்க அப்படினு சொல்லுற மாதிரி ஆகிடும்”.
“ அதனால, வெளியே எங்கேயும் போக வேண்டாம், வேணும்னா இங்கேயே பேசிக்கட்டும் ரெண்டு பேரும்” என்று பாட்டி நிதர்சனத்தை எடுத்து கூறவும், அவர்களும் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை என்று கூறி, மாபிள்ளையிடம் மன்னிப்பு வேண்டினர்.
“ பரவாலை! நான் போன் ல பேசிக்குறேன். பாட்டி! நீங்க வந்த வேலை ஜோரா முடிஞ்சதுனா, வரீங்களா சேர்ந்தே வீட்டுக்கு போவோம்” என்று கஷ்டபட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்ட ஆதிக்கை பார்த்து, பிரீத்திக்கு சிரிப்பு வந்தது.
அதை அவள் கஷ்டபட்டு தனக்குள் அடக்கவும், அதை கண்டுகொண்ட ஆதிக், அவளை யாருமரியாமல் முறைத்தான். அவளோ, பதிலுக்கு பழிப்பு காட்டினாள் அவனுக்கு.
பாட்டியும், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவனோடு காரில் ஏறி அமர்ந்தார். வண்டி சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் பாட்டியை முறைத்தான்.
“என்னடா முறைப்பு? நாளைக்கு நீங்க சேர்ந்து போறதை, இல்லை நீங்க வெளியிடத்தில் பார்துகிட்டதை யாரவது ஒரு ஆள் பார்த்தாலும், அதை எப்படி கண் காத்து மூக்கு வச்சு பேசலாம் அப்படின்னு தான் நினைப்பாங்க”.
“எதுனாலும் போன் ல பேசு, இனி அவ ஆபிஸ் பக்கம் கூட போக கூடாது நீ பார்த்துக்கோ” என்றவரை பார்த்து, அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.
நேராக பாட்டியை வீட்டில் இறக்கிவிட்டு, இவன் நேராக சென்றது அவன் ஆபிஸ்க்கு தான். அவனின் காபின் சென்று கதவை அடைத்தவன், உடனே ப்ரீத்திக்கு தான் கால் செய்தான்.
அவள் எடுத்து பேசவும், உடனே பொரிய தொடங்கி விட்டான். அவளும் அவன் கத்தட்டும் என்று, அமைதியாக இருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.
“என்ன வேணும் உங்களுக்கு? இப்போ நான் இந்த பிராஜக்ட் எடுத்தது உங்களுக்கு பிடிக்கல. அதனால, என்னை அந்த பிராஜக்ட் ல இருந்து விலக சொல்லி , உங்களுக்கு அதை கொடுக்க சொல்லுறீங்க அதானே” என்று தெள்ளத் தெளிவாக அவனிடம் கேட்டாள் பிரீத்தி.
“ம்ம்..அதான் உனக்கே தெரியுது தானே, அப்புறம் என்ன நீயே கொடுத்திடு, யாருக்கும் தெரியாம” என்று அவன் கூறவும், இந்த பக்கம் அவள் மௌனம் சாதித்தாள்.
“ஹே! லைன் ல இருக்கியா?” என்று பொறுக்க முடியாமல் கத்தினான்.
“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல! தெரியாம உங்களை போய் ரோல் மாடலா நினைசேன்னு என்னை நினைச்சா, ஐ ஃபீல் ஷேம் ஆப் இட்”.
“அந்த பிராஜக்ட் என்னோட உழைப்பு, அதை நான் தர மாட்டேன். அட் தி சேம் டைம், இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன். இப்படி ஒரு பெர்சன், என் லைஃப் ல இருக்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டு போனை அணைத்தாள்.
அவளால் தாங்கேவே முடியவில்லை, எப்படி இவன் இப்படி இருக்கிறான் என்று. அப்பொழுது, வெளியே ஒரு முகம், உள்ளே வேறு முகமா? என்று எண்ணி குழம்பி போனாள்.
இங்கே ஆதிக், புன்னகை முகமாக சேரில் அமர்ந்து இருந்தான். அவன் என்ன நினைக்கிறான், ஏன் இதை செய்தான் என்று அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.