Pavom ajay pilla knjm pathu seiyurathuஅபிஷேகப்பட்டியில், ஆதி கபடி ஆடிக் கொண்டு இருந்தாள் சிறுவர்களோடு. அவளுக்கு பிடித்த விளையாட்டு இது, அதுவும் சிறுவர்களோடு அவள் சிறு பிள்ளையாகவே மாறி போவாள்.
அப்பொழுது அங்கே வந்த அஜய், அவள் ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்து சிரித்தான். அவளை வம்பு வளர்க்க, ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவன் விடுவானா? களத்தில் குதித்து விட்டான்.
“கேசரி! என்ன கபடி விளையாடுறியா?” என்று அவன் கேட்கவும், பதிலுக்கு அவள் நக்கலாக இல்லை தாயகட்டு விளையாடுதேன் என்றாள்.
“சரி! நானும் கபடி விளையாட வரேன், பெட் வச்சுக்கலாம் என்ன” என்றவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
“நண்டு! இடத்தை காலி பண்ணுல, சும்மா என்னை வம்பு வளர்க்க வருவியால எப்போவும்” என்று விரல் நீட்டி மிரட்டி அவனை சதா ஸ்டைலில், போ யா போ என்றாள்.
“தோற்று போவோம் அப்படினு உனக்கு பயம், நான் கபடி பிளேயர் மா” என்று அவளை உசுப்பேற்றி விடவும் அவளும் அதில் சிலிர்த்து விட்டாள்.
“வா டா வா, உன்னை ஓட ஓட விரட்டுறேன்” என்று மனதில் கறுவிக் கொண்டு, அவனுக்கு விதிமுறைகளை கூற தொடங்கினாள்.
“நண்டு! அப்போ இதேன் விளையாட்டு முறை” என்று அவள் வகுத்த விதிமுறைகளை கூறவும், அவன் அதிர்ந்து விட்டான்.
“கேசரி! இது ஒன்னும் விளையாட்டு முறை இல்லை, கேம் ருல்ஸ் எல்லாம் மாத்துற” என்று அவளுக்கு தெரியவில்லை என்று அதை பற்றி விளக்கி கூற எத்தனித்தான்.
“எலேய் நண்டு! அது தெரியும்ல எங்களுக்கு, என் முறைதேன் இங்க , விளையாட சரின்னா வா” என்று அழுத்தமாக அவள் கூறவும், அவன் சற்று யோசித்தான்.
“பார்டா! இவ என் தோள் வரை கூட இல்லை, ஆனா இம்புட்டு சிலிர்துகிட்டு இருக்கா. மவளே, ரூல்ஸ் போடுறியா ரூல்ஸ் இரு டி உனக்கு மாமன் ஆப்பு வைக்கிறேன்” என்று எண்ணிக் கொண்டு களத்தில் இறங்கினான்.
“கேசரி! முதல பெட் என்ன? நான் ஜெய்ச்சா நான் சொல்லுறது நீ கேட்கணும், நீ ஜெய்ச்சா நான் நீ சொல்லுறது கேட்பேன். இந்த டீல் உனக்கு ஓகே வா, இல்லையா?” என்று கேட்டான் அஜய் ஆட தயாராகும் முன்.
அவளும் சரி என்றாள், எப்படியும் ஜெய்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில். பாவம் அவளுக்கு தெரியவில்லை, அவன் கபடி சாம்பியன் என்றும், அவன் ஒன்றை முடிவு செய்து விட்டால் அதை நடத்தி காட்டிடுவான் என்று தெரியவில்லை.
அந்த பக்கம் நான்கு பேர், இந்த பக்கம் நான்கு பேர் இருக்க. இரு பக்கமும் மூன்று சிறுவர்கள், அவர்களை தலைமை தாங்கும் பொறுப்பு பெரியவர்களுக்கு.
“டேய் பசங்களா! நாம தான் ஜெய்க்கணும், என்னை ஜெய்க்க வச்சா, உங்க அம்புட்டு பேரையும் அழகா போட்டோ பிடிச்சு எடுத்து தாரேன் சரியா” என்று அஜய் அவர்களிடம் பேரம் பேசிக் கொண்டு இருந்தான்.
அதில் ஒரு சிறுவன் ஆசையாக சரி என்று கூற வரும் பொழுது, மற்றொரு சிறுவன் அவனை தடுத்து முறைத்தான்.
“டேய்! அக்கா சொல்லி விட்டதை மறந்துட்டியால. இந்த அண்ணா, இன்னும் கொஞ்ச நாள் தான் இங்கின இருக்குமாம், அப்புறம் வெளிநாடு போய்டும்”.
“சும்மா ஜெய்க்க வைக்க அத்தனை ஆசை காட்டும், அதை நம்பாதீங்க அப்படின்னு அக்கா சொல்லுச்சுல” என்று நியாபகப்படுத்தவும் உடனே அவன் பின் வாங்கினான்.
போட்டி ஆரம்பமாகவும், அஜயின் டீமில் இருந்த சிறுவர்கள் தோற்று வெளியேறவும், தானே களத்தில் இனி இறங்கி ஜெய்த்தால் தான் உண்டு, என்று அவனுக்கு விளங்கி விட்டது.
இந்த பக்கம் அவளும், மற்ற சிறுவர்களும் அவனை தோற்க யுக்திகளை கையாள நினைக்க, அவனோ சர்வ சாதாரணமாக அந்த மூன்று சிறுவர்களையும், வெளியேற செய்தான்.
“ஆத்தி! ஆதி இவனை தப்பா எடை போட்டுட்ட போலல, சரி இவனை வேற மாதிரிதேன் தோற்க வைக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு அவளை இவன் நெருங்கும் பொழுது, இவள் சட்டென்று பயம் கொள்ளுவது போல் செய்து, அவன் தடுமாறும் சமயம் இவள் தப்பித்து விடுவாள்.
இப்படி சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில், ஒரு கட்டத்தில் அவனுக்கு மூச்சு வாங்கவும், உடனே சுதாரித்தான். அவளின் திட்டமும் புரியவும், இனி இவளை விட கூடாது என்று எண்ணி, அடுத்து அவள் சுதாரிக்கும் முன் அவன் அவளை தூக்கி வெளியே விட்டான்.
அவனின் இந்த செயலை எதிர்பாராதவள், ஒரு நிமிடம் தடுமாறி தான் போனாள். அதில் அவனும் தடுமாறினாலும், அதை எல்லாம் முகத்தில் காட்டாமல் ஹுரே ஜெய்த்து விட்டேன் என்று கத்தி ஆர்பரித்தான்.
“இது போங்காட்டம், நாங்க ஒத்துகிட மாட்டோம்ல” என்று சண்டை பிடித்தாள்.
“அடி பின்னிடுவென்! ரூல்ஸ் எல்லாம் மாத்தி நீ விளையாடிட்டு, இதுல நான் போங்காட்டாம் ஆடுறேனா. ஒழுங்கா எல்லோரும், இப்போ இந்த நிமிஷத்துல இருந்து என் பேச்சை கேட்கணும்” என்று கூறியதோடு நில்லாமல், யாரையும் அங்கு இருந்து நகர விடவில்லை அவன்.
“ஆதி பிள்ளை! நீ எப்படியாவது இங்க இருந்து ஒடிடு ல. இல்லை, இவன் கண்ணுல விரல் விட்டு ஆட்டிபுடுவான்” என்று மனம் எச்சரிக்கை செய்ய, அவன் கண்ணில் மண்ணை தூவி விட்டு, அங்கு இருந்து ஓட்டம் பிடித்தாள்.
அவனோ, கொகுக்கு ஒன்றே மதி போல அவளை மட்டுமே குறி வைத்து துரத்தினான். அதற்குள் அங்கு இருந்த மற்ற வாண்டுகள், தங்கள் அக்காவை காப்பாற்ற அவனை பிடிக்க துரத்திக் கொண்டு வந்தனர்.
இதுவரை ஊருக்கு சற்றே தள்ளி உள்ள ஆற்று பக்கம் விளையாடியவர்கள், இப்பொழுது ஊருக்கு உள்ளே ஓட தொடங்கவும், எல்லோரின் கண்ணும் இவர்கள் மீது தான்.
அப்பொழுது இதை பார்த்த, அஜய்யின் தந்தை முகம் கோபத்தில் சிவந்தது. அதே கோபத்துடன் வீட்டிற்கு சென்றவர், மகன் வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தார்.
தொடரும்..