• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kaadhale thunai 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஆதியின் அன்னைக்கு, கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால், மனைவியின் விருப்பத்திற்கு இணங்க அஜயின் தந்தை அங்கே தாய் மாமன் ஸ்தானம் எடுத்து, எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்.

அவள் அமர்ந்து இருந்த இடத்தில், குடிசை கட்ட அப்பொழுது அஜய் வந்தான். புதிதாய் உடுத்திய தாவணி, அந்த வயதுக்கே உரிய வெட்கம், தன்னை ஒருவன் பார்க்கிறான் தீவிரமாக என்று தெரிந்த பின்னர்,

வெட்கத்துடன் தலை நிமிர்த்தி பார்க்கவும், அவன் அவளை பார்த்து புன்முறுவல் பூத்தான்.

அந்த புன்னகையில் தொலைத்தவள் தான், அவளின் இதயத்தை. இப்பொழுது வரை அதை அவனிடத்தில் தேடிக் கொண்டு இருக்கிறாளே தவிர, அது அவனிடம் பத்திரமாக இருக்கிறது என்பதை அறியவில்லை.

“ட்ரீம் லேண்ட் போனது போதும், விஷயத்துக்கு வா இன்னும் நீ என்ன சொல்லி தடுக்க போற என்னை. உண்மையை சொல்லு இப்போ, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா, இல்லையா?” என்று அவளிடம் அழுத்தமாக கேட்டுக் கொண்டு இருந்தான் அஜய்.

“போடா நண்டு! இந்த போட்டோ பார்த்த பிறகும், உமக்கு இன்னும் சந்தேகம் போவலையோ” என்று கூறிவிட்டு, செல்ல பார்த்தவளை பிடித்து இழுத்து, இன்னும் மறைவிடத்தில் பதுங்கி நின்றான் அவளுடன்.

“பாவி! அப்போ இத்தனை நாள் என்னை சுத்தல் ல விட்டு இருக்க. இதுல ஆஞ்சநேயர் துணை அப்படினு, ஆஞ்நேயரை வேற துணைக்கு கூப்பிட்டு இருக்க. இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு, உனக்கு நான் தண்டனை தாரேன் இரு” என்றவணை தள்ளி விட்டு ஓட்டம் எடுத்தவள், திரும்பி அவனை பார்த்து கல்யாணம் முடிஞ்சு தா வாங்கிக்கிரேன் என்று சிரித்துக் கொண்டே ஓடிய அவளை பார்த்து வசீகரமாக புன்னகைத்தான்.

அடுத்து திருவிழா முடிந்து, அடுத்த மாதத்தில் இரு ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் சென்னையில் வைத்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மேடையில் ஆதிக், பிரீத்தியிடம் நோ சொன்னா நீ ஏன் எஸ் சொன்ன? என்று கேள்வி கேட்டு அவளை சீண்டிக் கொண்டு இருந்தான்.

அதுவா, நீங்க உங்க பாஷையில் நோ சொன்னா, எஸ் அப்படினு அர்த்தமாம், பாட்டி சொன்னாங்க எனவும், அவன் பார்வை பாட்டி மீது சடாரென்று பாய்ந்தது.

“எனக்கு வில்லி உள்ளே தான் இருந்து இருக்கு, பாட்டியை அப்புறம் கவனிக்கிறேன், முதல நீ என்னை கவனி” என்று அஜய் சரசமாடவும், அவளும் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

“போதும் ஆதிக், ஸ்டேஜ் ல இருக்கோம், எல்லோரும் நம்மள தான் பார்ப்பாங்க” என்று கூறி அவனை அமைதியாக இருக்கும்படி கூறினாள்.

அவனோ பக்கத்து ஸ்டேஜ் காட்டி, அங்கே அவன் தம்பி செய்யும் சேட்டைகளை காட்டினான்.

“செல்லம்! மாமாவை ஒரு தடவை நந்து அப்படினு அழகா கூப்பிடு டா தங்கம்” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான்.

அங்கே அவனின் தொழில் நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என அனைவரும் வந்து இருக்க, அவர்களின் முன் அவள் அவனை நந்து என்று அழைத்து அவனை சந்தோஷ கடலில் ஆழ்த்தி இருந்தாள்.

அதை திரும்ப கேட்க எண்ணி, அவன் அவளை சொல்ல சொல்ல, அவளோ நண்டு நண்டு என்று அவனை வெருபெற்றிக் கொண்டு இருந்தாள்.

“கேசரி! இது ஓவர் டி, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை பார்த்துக்கோ” என்று மிரட்டியும் அவள் எண்ணமும் செய்து கொள் என்பது போல் நின்று இருந்தாள்.

அவனோ, எல்லோரும் பார்த்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் முதல் முறையாக அவளின் கன்னத்தில் அழுத்தமாக தன் முதல் முத்தத்தை பதித்தான்.

அதில் அவள் முகம் சிவந்து, அவன் பின்னேயே முகத்தை மறைத்துக் கொண்டு நின்றாள்.

“முகம் சிவக்கிற அர்த்தம் புரிஞ்சதா ஆதி உனக்கு” என்று பிரீத்தி கேட்கவும் அங்கே எல்லோருக்கும் ஆதியின் முகசிவப்பு சிரிப்பை கொடுத்து, அங்கே மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்தது.

காதல் துணை கொண்டு, இரு ஜோடிகளும் தங்கள் இணையோடு அளவில்லா காதல் செய்து, பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்.

முற்றும்..
Super ka short and sweet story
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Cute and kutty love story . ?????
Super akka. ???
Thank you very much for lovely novel??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top