• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karigaiyin kanavu -14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
கலையரசியின் திருமணம் நெருங்கிக்கொண்டிருக்க,இரண்டு நாள் முன்பு சங்கீத் பங்க்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டது..காலையில் ஸ்நானம் முடித்துவிட்டு மெஹந்தி டிசைனரை வரவழைத்து பெண்கள் கூட்டம் அவர் முன்பு அமர்ந்து கைகளை நீட்ட ஒவ்வொருவருக்கும் மெஹந்தி வைக்கவே மணி பத்து தாண்டியது. இரண்டு மணி நேரம் கழித்து கைகளை அலம்பிட்டு சாப்பிட்டு முடிக்கவே மதியம் இரண்டு ஆனது. சாயந்திரம் எல்லோரும் தயாராகி வீட்டு முற்றத்தில் சுற்றி அமர்ந்து ஆண்கள் பெண்கள் என்ற இரு அணிகளாக பிரிந்து பாடலுக்கு நடமாடினர். உறவினர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள.. அமுதன் மட்டும் இன்னும் வரவில்லை என்ற கவலை தமிழுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஆடிப்பாடி சுற்றி தாரிந்தாள்.

"உன் காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா" என்ற ஒரு தாண்டியா பாடலில் வரும் வரிகள் தமிழ்ச்செல்வியை ஏதோ செய்ய சட்டென்று நடனத்தை நிப்பாட்டி ஓரமாக போய் அழத்துவங்கினாள். அவள் பின்னால் இருந்து யாரோ இழுக்க திரும்பி பார்த்த அவளுக்கு அதிர்ச்சி...
"என்னங்க.. என்று அவனை அணைத்து முத்தமிட்டாள்"...அவள் முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் அவளை இருக அணைத்துக்கொண்டான். அவனுடைய அணைப்பில் ,அந்த இருகமான பிடியிலிருந்து வெளியே வர மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருக்க....

சுற்றி இருப்பவர்கள் பார்க்க போகிறார்கள் என்ற பதற்றத்தில் அமுதன் தானே அவளை விலக்கி விட்டு...
"அம்முலு நான் எங்க வராமல் போயிடுவேனோனு பயந்துட்டியா. கலையோட கல்யாணத்துக்கு நான் எப்படி வராமல் போயிடுவேன்"என்று புன்னகையிக்க...

"ஐ.வி.எப் தோல்விக்கு பிறகு நம்ப வாழ்க்கையே தலைகீழாக ஆயிடுச்சு போங்க...இதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் போகாமயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது" என்று கூற அவள் கைகளை பற்றியவன்.

"அம்முலு... நம்மளோட பிரச்சினை இந்த குழந்தை மட்டும் கிடையாது அதை தாண்டி ஏதோ ஒரு புரிதல் நமக்குள் இல்லைனு தோனுது..கல்யாணம் ஆன நாளில் இருந்து நீ சதா வீட்டுவேலை என்ற கதியில் இருப்ப..நானும் வேலை முடிச்சிட்டு வந்து என்னோட பொழுதை போக்க டி.வி ,கம்ப்யூட்டர் என்று இருப்பேன். இப்படியெல்லாம் இருந்தால் நல்லாயிருக்கும் என்று நிறையா ஆசைப்பட்டுருக்கேன். ஆனால் உன் மனசு பூரா குழந்தை பற்றிய நினைப்பு மட்டுமே இருந்திருக்கு..இப்படி முரன்பாடான நினைப்பு இதெல்லாம் ஏதோ நமக்குள் ஓர் வெறுப்பு அது இந்த ஐ.வி.எப் தோல்வி மூலம் வெளிப்பட்டுருக்கு. சரி விடு கூடிய சீக்கிரம் உன்னை மும்பை கூட்டிட்டு போயிடுறன்"என்று அவன் கூறிய மறுகணமே அவனை நிமிர்ந்து பார்க்க கண்களிலிருந்து நீர் உருண்டோடியது.

இடையில் கலையரசி குறுக்கிட "ஹலோ மாமா...கல்யாணம் எனக்கு ஆனால் ஏதோ உங்களுக்கு கல்யாணம் ஆகப்போற மாதிரி ஒரே சென்டிமென்ட் ரொமான்ஸ்..ம்ம்ம்"என்று கலாய்க்க

"ஹாஹா" என்று கோரஸா இருவரும் சிரித்து விட்டனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் உள்ள மனபோராட்டம் அவளுக்கு புரிந்தும் கலையரசி அதை காட்டிக்கொள்ளாமல் அவர்கள் மனசை எப்படி தேற்றுவது என்ற முயற்சியை கையாண்டாள். இந்த மனப்போராட்டம் தனக்கும் ரவிக்குமாரிற்கும் இடையே வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

...
திருமணம் இனிதே நடைப்பெற்றது. மங்கையவள் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறியது. நினைத்தவளை திருமணம் முடித்த சந்தோஷம் ரவிக்குமாரின் முகத்தில் தெரிந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தமிழ்ச்செல்வி வீட்டின் மேல் போர்ஷனுக்கு குடிவந்தனர்.

நம் கதாநாயகன் அமுதன் மும்பை சென்றுவிட்ட நிலையில் மீண்டும் தமிழுக்கு வழக்கம் போலான வாழ்க்கை தான். கதை எழுதுவதிலும் சற்று ஆர்வம் குறைய துவங்கியது. இன்னொரு சீரியலுக்கு வசனம் எழுத சேனல் அவளை அணுகியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இன்ஜினியரிங் படிப்பை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தாள். திருமணம் ஆனதிலிருந்து உதயன் இன்ஜினியரிங் படிப்பை கைவிட்டான். இனி அந்த பகுதிநேர வகுப்பில் தமிழுக்கு நட்பு என்று கூட யாரும் இல்லாமல் போக மனதிற்குள் குமைந்தாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் தங்கை கலையை சந்திக்க மேலே செல்வதுண்டு ஆனால் புதுமண தம்பதிகள் என்பதால் அவர்கள் சுதந்திரத்திற்கு இடையூறு இருக்க கூடாது என்று அடிக்கடி விலகியே போவாள்.
அன்று..
"அம்மாடி இந்த வீட்டையும் வாடகைக்கு விட்டுட்டு ஊருக்கு போயிடலாமா தமிழு" என்று ரங்கநாயகி கேட்க..

"அத்தை...ஊரோட போயிட்டா என்னோட பகுதிநேர படிப்பு வீணாக போயிடும்..வேண்டாம் நீங்க வேணும்னா போங்க நான் தனியாக கூட இருந்துப்பேன்" என்று எளிமையான பதிலை அளிக்க ரங்கநாயகி அமைதியானாள்.

விரைவில் உன்னை மும்பை அழைச்சிட்டு போயிடுறேன் என்று அவன் கூறிய அந்த வார்த்தை மட்டுமே அவள் காதுகளில் தேனாக சிந்திக்கொண்டு இருந்தது. "ராமன் இருக்கும் இடம் தானே சீதைக்கு அயோதி" இதில் நம் தமிழ்ச்செல்வி மட்டும் விதிவிலக்கா என்ன? பாவம் அவளுடைய தற்போதைய எதிர்பார்ப்பு அது மட்டுமே.

...
மும்பை வந்த அமுதன் தன் மைத்துனியின் கல்யாணம் புகைப்படங்கள் எல்லாம் மேகாவிற்கு காட்டிக்கொண்டு இருந்தான். எதார்த்தமாக அவன் தோளில் சாய்ந்தபடி அதை பார்த்து கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று எழுந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்.

"என்ன ஆச்சு மேகா" என்ற அமுதனின் கேள்விக்கு பதில் கூறாமலே சென்றுவிட்டாள். என்னதான் நட்பாக இருந்தாலும் அடுத்தவள் கணவனின் தோளில் சாய்வது எவ்வளவு பெரிய தவறு என்று எண்ணியவள் "சை நான் ஏன் இப்படி ஆயிட்டேன்." என்று தனக்குள் முனவிக்கொண்டே தன் அறையில் புகுந்து கொண்டாள்.

"உள்ள வரலாமா.." என்றான் அமுதன்.

"வா...வாங்க மிஸ்டர் அமுதன்" என்று புன்னகையிக்க..

"என்ன ஆச்சு ஏன் திடிரென அமைதியாகிட்ட." என்று அவன் கேட்க..

"இல்லை போட்டோஸ் பார்த்துட்டு இருந்தப்ப எதர்ச்சையாக உங்கள் தோளில் சாய்ந்தது தப்பு என்று தோன்றியது அதான்"..

"ஹாஹா... இதுக்காகவா என்னவோ போல் ஆயிட்ட..இங்கே பாரு மேகா உனக்கும் எனக்கும் குறைந்தது ஒன்பது வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது...உன்னை பார்க்கிறப்ப எனக்கு ஒருதுளி கூட தவறாக தோன்றியதே இல்லை.. உன்மேல எனக்கு இருக்கிறது வெறும் நட்பு மட்டும் தான். எனக்கு ஒரு தங்கை இருந்தா எப்படி பழகுவாளோ அப்படித்தான் நீ என்கிட்ட பழகுற இதுல நீ சங்கடபடுறதுக்கு என்ன இருக்கிறது சொல்லு? " என்று அவன் வினவ அவளோ ஒருகணம் அவனை பார்த்து..

"அமுதன் நீங்க சொல்றது சரிதான். ஆனால் இதுவரை எந்த ஆண்களிடமும் இவ்வளவு நட்பாக நான் பழகியதே இல்லை. அது என்னவோ தெரியல உங்கள் கிட்ட நான் க்ளோஸா பழகுற மாதிரி தோன்றுது." என்று வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போக அமுதனிற்கு எல்லாம் புரிந்தது.

தொடரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
பாக்யா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாக்யாசிவக்குமார் டியர்
 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இந்த உறவை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top