Sri Sathya
நாட்டாமை
பாத்ரூம் கதவை திறந்த மகேஷ் அங்கே ஓர் இளைஞன் தலை மண்டை ஓடு பிளக்கப்பட்டு தன் மூச்சை நிறுத்தியிருந்தான்!
அவன் தலையிலிருந்து வடிந்த இரத்தம் ஷவரிலிருந்து கொட்டிய நீருடன் கலந்து ஓடி ட்ரைனேஜில் கலந்துக் கொண்டிருந்தது!
மகேசின் கை கால்கள் தன்னிச்சையாய் ஆட்டம் கண்டது!
'மகா... மகாவுக்கு என்னாச்சி...
அடக் கடவுளே எனக்கு ஏன் நிமிர கூட அவகாசம் கொடுக்காம அடிக்கு மேல அடியா அடிச்சி கொல்லுற... '
அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை மகேசால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது!
மகாவுக்கு..... ரூபாவுக்கு தெரிஞ்சவன்தான் இவன்...
ரூபானு நினைச்சிக்கிட்டு இவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருப்பான்...
ஆனா மகா... என் மகா அப்படிப்பட்ட பொண்ணு நான் இல்லடானு சொல்லி தன் கற்பை காப்பாத்திக்க கொலை பண்ணிருப்பா....
இப்போ மகா எங்கே???
மகாவுக்கு தான் மகா இல்லை ரூபானு தெரிஞ்சிப் போச்சோ...
அப்போ என் காதல்???"
ஆயிரம் கேள்விகள் மகேசை துளைத்தெடுத்தன!
'இப்போ என்ன செய்யப் போகிறேன் நான்???
மகாவை எங்கேப் போய் தேடுவேன்???
இந்த பிணத்தை என்ன செய்வேன்???
மகா ஒருவேளை போலீஸ் ஸ்டேசனுக்கு போய் சரண்டர் ஆகிட்டாளா???
போலிஸ் ஸ்டேசனுக்கு போய் பார்ப்போமா???
மகா அங்கே இல்லையென்றால் அவளை காணவில்லை என புகார் எழுதி கொடுத்துட்டு வந்துடலமா???
அவ போட்டோ கேட்பாங்களே..
அவ போட்டோ... அவ போட்டோ.. சட்டென தன் மொபைலில் அவளுடன் தான் எடுத்துக் கொண்ட 'செல்பி' நினைவிற்கு வர அதை எடுத்துப் பார்த்தான் மகேஷ்!
மகா மகேசின் தோளில் சாய்ந்தபடி அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்!
கதவை இழுத்து மூடி பூட்டிவிட்டு போலிஸ் ஸ்டேசன் நோக்கி நடந்தான் மகேஷ்!
போலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க மகேசின் இதயம் நெஞ்சை பிளந்துக்கொண்டு வெளியே குதித்து விடுவதைப் போல் துடித்தது!
'இப்போ நாம செய்றது சரியா???
போலிஸ் ஸ்டேசன்ல மகா போட்டோ பார்த்தவுடனே இவ ரூபாதான்னு கண்டுபிடிச்சிடுவாங்க....
அதுவும் இல்லாம கொலை விசயத்தை நாமே ஏன் போய் சொல்லனும்...
மகா எதாச்சும் போலிஸ் ஸ்டேசன்ல சரண்டர் ஆகியிருந்தா போலிஸ் இந்நேரம் ஹோட்டல் ரூமுக்கு வந்திருக்கணுமே...
போலிஸ் ஸ்டேசன் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் ஹோட்டலை நோக்கி நடந்தான் மகேஷ்!
மகேசின் மனம் அவனை கேள்விக் கணைகளால் தாக்கியது!
"ஒரு விபச்சாரிக்காக நீ இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கனுமா???
யார் எக்கேடு கெட்டுபோனா உனக்கென்ன... நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் உனக்கு... மலரை கட்டிக்கிட்டு சந்தோசமாயிரு... இவளை பார்த்ததிலிருந்தே பிரச்சனைதான் உனக்கு... "
மகேசின் மனம் கேட்ட கேள்விக்கு பதில் கூற மறுத்தது மகேசின் காதல்.
'என் மகா விபச்சாரி இல்லை...
என் மகா விபச்சாரி இல்லை...
அந்த ரூபா செத்துட்டா...
இவ என் மகா... கற்பை காப்பாத்திக்க கொலையும் பண்ற பத்தினி என் மகா!
'மகா எனக்கு வேணும்...
என் மகா வேணும்... '
மகேசின் சிந்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப அதனை மகாவின் காதல் அழித்து மகேசின் மனம் முழுக்க மகா நிறைந்தாள்!
ஹோட்டலை நோக்கி நடந்த மகேசின் செல்போன் சிணுங்க அதை உயிர்பித்து காதில் வைத்தான் மகேஷ்...
"ஹலோ... " எதிர் முனையில் மகாவின் குரல் கேட்க பரபரப்பானான் மகேஷ்...
" மகா... மகா நீ எங்க இருக்க மகா... ஏன்டி இப்படி பண்ண? "
" ஹலோ மகேஷ் நீங்க எப்படியிருக்கிங
்க... இப்போ எங்க இருக்கிங்க??? "
" நான்... நான்... ஹோட்டலுக்கு போய்கிட்டு இருக்கேன் மகா... நீ சீக்கிரம் இங்க வா மகா எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம்... "
" மகேஷ் உங்களுக்கு ஒண்ணும் இல்லையே... "
மகாவின் குரல் வெடித்து அழுதது!
" எனக்... எனக்கு ஒண்ணுமில்லடி...நீ அழாதே மகா... என்னாச்சி மகா??? "
" மகேஷ் நீ வெளியே போனதும் ரிசப்ஷன்ல இருந்து வந்து கதவை தட்டினாங்க... உங்களுக்கு போன் வந்திருக்குனு சொன்னாங்க... நான் போய் பேசினேன் உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி காவேரி ஹாஸ்பிட்டல்ல இருக்கிங்கனு சொன்னாங்க... நீங்கதான் எனக்கு தகவல் கொடுக்க சொன்னதாகவும் உடனே வர சொல்லியும் சொன்னாங்க....
நான் காவேரி ஹாஸ்பிட்டல் வந்து பார்த்தேன் இங்க அப்படி யாரும் அட்மிட் ஆகலனு சொன்னாங்க மகேஷ்... அதான் உங்களுக்கே போன் பண்ணி பார்ப்போம்னு பண்ணேன்... உங்களுக்கொன்னும் ஆகலையே மகேஷ்... " மகாவின் குரல் தழுதழுக்க மகேஷ் அதிர்ச்சியில் செல்போனை தரையில் தவழ விட்டான்!
_(தொடரும்)
அவன் தலையிலிருந்து வடிந்த இரத்தம் ஷவரிலிருந்து கொட்டிய நீருடன் கலந்து ஓடி ட்ரைனேஜில் கலந்துக் கொண்டிருந்தது!
மகேசின் கை கால்கள் தன்னிச்சையாய் ஆட்டம் கண்டது!
'மகா... மகாவுக்கு என்னாச்சி...
அடக் கடவுளே எனக்கு ஏன் நிமிர கூட அவகாசம் கொடுக்காம அடிக்கு மேல அடியா அடிச்சி கொல்லுற... '
அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை மகேசால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது!
மகாவுக்கு..... ரூபாவுக்கு தெரிஞ்சவன்தான் இவன்...
ரூபானு நினைச்சிக்கிட்டு இவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருப்பான்...
ஆனா மகா... என் மகா அப்படிப்பட்ட பொண்ணு நான் இல்லடானு சொல்லி தன் கற்பை காப்பாத்திக்க கொலை பண்ணிருப்பா....
இப்போ மகா எங்கே???
மகாவுக்கு தான் மகா இல்லை ரூபானு தெரிஞ்சிப் போச்சோ...
அப்போ என் காதல்???"
ஆயிரம் கேள்விகள் மகேசை துளைத்தெடுத்தன!
'இப்போ என்ன செய்யப் போகிறேன் நான்???
மகாவை எங்கேப் போய் தேடுவேன்???
இந்த பிணத்தை என்ன செய்வேன்???
மகா ஒருவேளை போலீஸ் ஸ்டேசனுக்கு போய் சரண்டர் ஆகிட்டாளா???
போலிஸ் ஸ்டேசனுக்கு போய் பார்ப்போமா???
மகா அங்கே இல்லையென்றால் அவளை காணவில்லை என புகார் எழுதி கொடுத்துட்டு வந்துடலமா???
அவ போட்டோ கேட்பாங்களே..
அவ போட்டோ... அவ போட்டோ.. சட்டென தன் மொபைலில் அவளுடன் தான் எடுத்துக் கொண்ட 'செல்பி' நினைவிற்கு வர அதை எடுத்துப் பார்த்தான் மகேஷ்!
மகா மகேசின் தோளில் சாய்ந்தபடி அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்!
கதவை இழுத்து மூடி பூட்டிவிட்டு போலிஸ் ஸ்டேசன் நோக்கி நடந்தான் மகேஷ்!
போலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க மகேசின் இதயம் நெஞ்சை பிளந்துக்கொண்டு வெளியே குதித்து விடுவதைப் போல் துடித்தது!
'இப்போ நாம செய்றது சரியா???
போலிஸ் ஸ்டேசன்ல மகா போட்டோ பார்த்தவுடனே இவ ரூபாதான்னு கண்டுபிடிச்சிடுவாங்க....
அதுவும் இல்லாம கொலை விசயத்தை நாமே ஏன் போய் சொல்லனும்...
மகா எதாச்சும் போலிஸ் ஸ்டேசன்ல சரண்டர் ஆகியிருந்தா போலிஸ் இந்நேரம் ஹோட்டல் ரூமுக்கு வந்திருக்கணுமே...
போலிஸ் ஸ்டேசன் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் ஹோட்டலை நோக்கி நடந்தான் மகேஷ்!
மகேசின் மனம் அவனை கேள்விக் கணைகளால் தாக்கியது!
"ஒரு விபச்சாரிக்காக நீ இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கனுமா???
யார் எக்கேடு கெட்டுபோனா உனக்கென்ன... நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் உனக்கு... மலரை கட்டிக்கிட்டு சந்தோசமாயிரு... இவளை பார்த்ததிலிருந்தே பிரச்சனைதான் உனக்கு... "
மகேசின் மனம் கேட்ட கேள்விக்கு பதில் கூற மறுத்தது மகேசின் காதல்.
'என் மகா விபச்சாரி இல்லை...
என் மகா விபச்சாரி இல்லை...
அந்த ரூபா செத்துட்டா...
இவ என் மகா... கற்பை காப்பாத்திக்க கொலையும் பண்ற பத்தினி என் மகா!
'மகா எனக்கு வேணும்...
என் மகா வேணும்... '
மகேசின் சிந்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப அதனை மகாவின் காதல் அழித்து மகேசின் மனம் முழுக்க மகா நிறைந்தாள்!
ஹோட்டலை நோக்கி நடந்த மகேசின் செல்போன் சிணுங்க அதை உயிர்பித்து காதில் வைத்தான் மகேஷ்...
"ஹலோ... " எதிர் முனையில் மகாவின் குரல் கேட்க பரபரப்பானான் மகேஷ்...
" மகா... மகா நீ எங்க இருக்க மகா... ஏன்டி இப்படி பண்ண? "
" ஹலோ மகேஷ் நீங்க எப்படியிருக்கிங
்க... இப்போ எங்க இருக்கிங்க??? "
" நான்... நான்... ஹோட்டலுக்கு போய்கிட்டு இருக்கேன் மகா... நீ சீக்கிரம் இங்க வா மகா எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம்... "
" மகேஷ் உங்களுக்கு ஒண்ணும் இல்லையே... "
மகாவின் குரல் வெடித்து அழுதது!
" எனக்... எனக்கு ஒண்ணுமில்லடி...நீ அழாதே மகா... என்னாச்சி மகா??? "
" மகேஷ் நீ வெளியே போனதும் ரிசப்ஷன்ல இருந்து வந்து கதவை தட்டினாங்க... உங்களுக்கு போன் வந்திருக்குனு சொன்னாங்க... நான் போய் பேசினேன் உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி காவேரி ஹாஸ்பிட்டல்ல இருக்கிங்கனு சொன்னாங்க... நீங்கதான் எனக்கு தகவல் கொடுக்க சொன்னதாகவும் உடனே வர சொல்லியும் சொன்னாங்க....
நான் காவேரி ஹாஸ்பிட்டல் வந்து பார்த்தேன் இங்க அப்படி யாரும் அட்மிட் ஆகலனு சொன்னாங்க மகேஷ்... அதான் உங்களுக்கே போன் பண்ணி பார்ப்போம்னு பண்ணேன்... உங்களுக்கொன்னும் ஆகலையே மகேஷ்... " மகாவின் குரல் தழுதழுக்க மகேஷ் அதிர்ச்சியில் செல்போனை தரையில் தவழ விட்டான்!
_(தொடரும்)