Sri Sathya
நாட்டாமை
கருப்பு ரோஜாக்கள் (part_2)
மகாவின் மனதில் அந்த கேள்வி மீண்டும் மீண்டும் வர அவள் தூக்கமின்றி தவித்தாள்!
'இந்த வாழ்க்கைக்கு தான் தகுதியானவளா??? '
' நேற்றுவரை நான் யார் ' அவள் சிந்தனைகள் அவளை பின்னோக்கி இழுத்து சென்றது!
*********************************************
***********
சுகம் மருத்துவமனை...
சில மனித முகங்களில் சிரிப்பும், சில மனித முகங்களில் தவிப்பும் கலந்த கலவையாய் இருந்தது!
மகேஷ் சட்டை முழுக்க இரத்தம் நிறைந்து அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையை சிவப்பாக மாற்றியிருந்தது!
அவசர பிரிவு அறையிலிருந்து வெளிப்பட்ட நர்ஸ்ஸிடம் ஓடினான் மகேஷ்!
"மேடம் அந்த பொண்ணு எப்படியிருக்கா??? "
" நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேணும் சார்... தலையில அடி பலமா பட்டிருக்கு... ஸ்கல் ஹெவியா டேமேஜ் ஆகியிருக்கு உடனடியா ஆபரேசன் பண்ணனும்... டாக்டர் அந்த பெண்ணுக்கு நெருங்கிய சொந்தக்காரங்ககிட்ட கையெழுத்து வாங்க சொன்னார்...
நீங்க அவங்களுக்கு என்ன வேணும் சார்... "
'அய்யோ சென்னைல இருந்து ஆபிஸ் விஷயமா கோயம்பத்துர் வந்த இடத்துல வந்த வேலை சக்சஸ்புல்லா முடிஞ்சிடுச்சினு சந்தோசப்படுறதா இல்ல அந்த சந்தோசத்துல காரை வேகமா ஓட்டிகிட்டு வந்து இந்த பொண்ணு மேல இடிச்சு இப்படி சாகப் பொழைக்க கிடக்குறாளேனு நினைச்சு வருத்தப்படுறதா??? யார் இவ??? இவ சொந்தக்காரங்களை நான் எங்கப் போய் தேடுறது??? கடவுளே... "
" சார் உங்களத்தான் கேக்குறேன் நீங்க அவங்களுக்கு யாரு??? லேட் பண்ற ஒவ்வொரு நிமிடமும் அந்த பொண்ணு உயிருக்கு ஆபத்து... "
" நான்... நான் அவ ஹஸ்பண்ட்... "
" ஓகே பைன் சார்... சீக்கிரம் இந்த பார்ம்ல சைன் பண்ணுங்க...
கேஷ் கவுண்டர்ல போய் பணத்தை கட்டிடுங்க... "
" எவ்வளோ செலவாகும் மேடம்??? "
" சரியா தெரியல சார்... நாலு லட்சத்துல இருந்து ஐந்து லட்சம் வரை ஆகலாம் சார்... பணத்தை கட்டிடுங்க... பேஷண்ட் நேம் என்ன சார்??? "
" நேம்... நேம்.... ம... மகா... "
_(தொடரும்)
மகாவின் மனதில் அந்த கேள்வி மீண்டும் மீண்டும் வர அவள் தூக்கமின்றி தவித்தாள்!
'இந்த வாழ்க்கைக்கு தான் தகுதியானவளா??? '
' நேற்றுவரை நான் யார் ' அவள் சிந்தனைகள் அவளை பின்னோக்கி இழுத்து சென்றது!
*********************************************
***********
சுகம் மருத்துவமனை...
சில மனித முகங்களில் சிரிப்பும், சில மனித முகங்களில் தவிப்பும் கலந்த கலவையாய் இருந்தது!
மகேஷ் சட்டை முழுக்க இரத்தம் நிறைந்து அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையை சிவப்பாக மாற்றியிருந்தது!
அவசர பிரிவு அறையிலிருந்து வெளிப்பட்ட நர்ஸ்ஸிடம் ஓடினான் மகேஷ்!
"மேடம் அந்த பொண்ணு எப்படியிருக்கா??? "
" நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேணும் சார்... தலையில அடி பலமா பட்டிருக்கு... ஸ்கல் ஹெவியா டேமேஜ் ஆகியிருக்கு உடனடியா ஆபரேசன் பண்ணனும்... டாக்டர் அந்த பெண்ணுக்கு நெருங்கிய சொந்தக்காரங்ககிட்ட கையெழுத்து வாங்க சொன்னார்...
நீங்க அவங்களுக்கு என்ன வேணும் சார்... "
'அய்யோ சென்னைல இருந்து ஆபிஸ் விஷயமா கோயம்பத்துர் வந்த இடத்துல வந்த வேலை சக்சஸ்புல்லா முடிஞ்சிடுச்சினு சந்தோசப்படுறதா இல்ல அந்த சந்தோசத்துல காரை வேகமா ஓட்டிகிட்டு வந்து இந்த பொண்ணு மேல இடிச்சு இப்படி சாகப் பொழைக்க கிடக்குறாளேனு நினைச்சு வருத்தப்படுறதா??? யார் இவ??? இவ சொந்தக்காரங்களை நான் எங்கப் போய் தேடுறது??? கடவுளே... "
" சார் உங்களத்தான் கேக்குறேன் நீங்க அவங்களுக்கு யாரு??? லேட் பண்ற ஒவ்வொரு நிமிடமும் அந்த பொண்ணு உயிருக்கு ஆபத்து... "
" நான்... நான் அவ ஹஸ்பண்ட்... "
" ஓகே பைன் சார்... சீக்கிரம் இந்த பார்ம்ல சைன் பண்ணுங்க...
கேஷ் கவுண்டர்ல போய் பணத்தை கட்டிடுங்க... "
" எவ்வளோ செலவாகும் மேடம்??? "
" சரியா தெரியல சார்... நாலு லட்சத்துல இருந்து ஐந்து லட்சம் வரை ஆகலாம் சார்... பணத்தை கட்டிடுங்க... பேஷண்ட் நேம் என்ன சார்??? "
" நேம்... நேம்.... ம... மகா... "
_(தொடரும்)