Sri Sathya
நாட்டாமை
கருப்பு ரோஜாக்கள்... (part_9)
மகேசின் மனம் கலவரப்பட்டது...
'என்ன விசயமா இருக்கும்???
எதாச்சும் சீரியஸ் விசயமா இருக்குமோ???
எதுவானாலும் ஹாஸ்பிட்டலேயே வெச்சி சொல்லியிருக்கலாமே??? "
மகாவிடம் வெளியில் செல்வதாய் பொய் சொல்லிவிட்டு மகேஷ் ஹோட்டல் மெரிடியனை அடையும்பொழுது மணி ஐந்தை தொட்டிருந்தது!
டாக்டர் கோபால் கூறிய அறையை நோக்கி மகேஷ் நடக்க நடக்க அவன் இதயத் துடிப்பின் ஒலி வழக்கத்தைவிட அதிகமாய் ஒலித்தது!
ரூம் நம்பர் 120 என்று பித்தளை தகடை தாங்கி நின்றது கதவு!
மகேஷ் அழைப்புமணியை அழுத்த அது திறக்கப்படவில்லை!
மகேஷ் மீண்டும் மீண்டும் அழுத்த கதவின் பிடியை திருகி திறந்தார் டாக்டர் கோபால்!
"குட் ஈவ்னிங் டாக்டர்... "
" குட் ஈவ்னிங் மிஸ்டர்.....??? "
அவர் இழுக்க
" மகேஷ் டாக்டர்! " என்று முடித்து வைத்தான் மகேஷ்!
"ம்ம்ம் மகேஷ்... Come inside..." என்று கூறி அவர் விலகி வழிவிட அதுவரை அவர் மறைத்து வைத்திருந்த ஏசியின் குளுமை மகேசை ஆட்கொண்டது!
உள்ளே நுழைந்த மகேஷ் அறையை சுற்றி ஓர் பார்வை பார்த்தான்!
பாதி குடித்து மிச்சம் வைத்த விஸ்கி டீப்பாயின் மேல் இருக்க அருகில் ஹாஸ்ட்ரேயில் பாதி உயிரை தொலைத்திருந்த சிகரெட் தன் முழு உயிரையும் துறக்கும் முனைப்பில் மும்முரமாய் புகைந்துக் கொண்டிருந்தது!
"என்ன மகேஷ் அப்படி பார்க்குறீங்க??? இதெல்லாம் ஜஸ்ட் ரிலாக்ஸ்சேசன்.. . கேன் யூ ஜாயின் வித் மீ??? "
" நோ சார்... எனக்கு பழக்கமில்ல... "
" ஓகே மகேஷ் பழக்கம் இல்லாதவங்களை நான் கட்டாயப் படுத்தறதில்லை... "
" நன்றி சார்... என்னவோ விசயம் பேசணும்னு சொன்னிங்களே என்ன விசயம் சார்???
"ம்ம்ம்... உங்க பிசினஸ்லாம் எப்படி போகுது மிஸ்டர் மகேஷ்??? "
'ஏன் இவர் சம்மந்தமே இல்லாத விசயத்தை பத்தியெல்லாம் கேட்கிறார் '
" உங்ககிட்டதான் கேட்டேன் மகேஷ்... உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போகுது??? "
" சார் நான் பிசினஸ் எல்லாம் பண்ணல... சென்னைல ஒரு கம்பெனியில ஓர்க் பண்றேன்... "
" ஹாஹாஹா... அது ஊர் உலகத்துக்காக நீங்க போட்டுகிட்ட வேஷம் மகேஷ்... நான் உண்மையில நீங்க பண்ணிகிட்டிருக்க பிசினஸ் பத்தி கேட்டேன்... "
" சார் எனக்கு ஒண்ணும் புரியல நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு சத்தியமா எனக்கு தெரியல சார்... "
" ஓகே பைன் நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன்... ரூபா இப்போ ஒரு நைட்க்கு எவ்ளோ வாங்குறா??? "
" சார் யார் சார் ரூபா??? ஆர் யூ நார்மல் நவ்??? "
" நான் போதையில ஆள் தெரியாம பேசறேன்னு சொல்றீங்களா மகேஷ்... ரூபாக்கு பேரு மாத்தியாச்சில... பைன் மகா... மகா வுக்கு என்ன ரேட் மகேஷ்... "
மகேஷ் அதிர்ச்சியில் டாக்டரின் சட்டையை பிடித்தான்... சட்டென்று சுதாகரித்துக் கொண்டவன் அவர் சட்டையிலிருந்து மெல்ல தன் கையை எடுத்து...
" சாரி டாக்டர்... அவ என் ஓய்ப்.... "
" மகேஷ் நான் விசயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்... நாளைக்கு காலையில எனக்கு ப்ளைட் நீ இன்னைக்கு நைட் மட்டும் ரூபாவை.... சாரி மகாவை அனுப்பி வை நான் என்ன அமவுண்ட் ஆகுதோ அதை செட்டில் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கேன்... "
" டாக்டர் அவ என் ஓய்ப்னு சொல்லிகிட்டே இருக்கேன் இப்படி பேசிக்கிட்டே போறீங்க "என்று ஆத்திரத்தில் டாக்டரின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விட டாக்டர் நிலைகுலைந்து கீழே சரிந்தார்...
சுதாரித்து எழுந்து நிற்க முயன்று தோற்ற டாக்டர் கோபால் தோற்றுப்போனார்...
" டேய் அவ உன்னை ஏமாத்தினாலா இல்லை நீ என்னை ஏமாத்துறயானு தெரியல... ஆனா அவ ஓரு விபச்சாரி இது மட்டும் உண்மைடா... அவ உடம்புல எங்க எங்க மச்சம் இருக்குனு சரியா சொல்வேன்டா நான்... சரியா சொ... ல்... வேன்.... டா " போதையில் வார்த்தைகள் தவணை முறையில் வந்து விழ போதையின் மயக்கத்தில் சரிந்தார் டாக்டர் கோபால்!
மகேசின் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது!
'அவ விபச்சாரிடா... '
(தொடரும்)
மகேசின் மனம் கலவரப்பட்டது...
'என்ன விசயமா இருக்கும்???
எதாச்சும் சீரியஸ் விசயமா இருக்குமோ???
எதுவானாலும் ஹாஸ்பிட்டலேயே வெச்சி சொல்லியிருக்கலாமே??? "
மகாவிடம் வெளியில் செல்வதாய் பொய் சொல்லிவிட்டு மகேஷ் ஹோட்டல் மெரிடியனை அடையும்பொழுது மணி ஐந்தை தொட்டிருந்தது!
டாக்டர் கோபால் கூறிய அறையை நோக்கி மகேஷ் நடக்க நடக்க அவன் இதயத் துடிப்பின் ஒலி வழக்கத்தைவிட அதிகமாய் ஒலித்தது!
ரூம் நம்பர் 120 என்று பித்தளை தகடை தாங்கி நின்றது கதவு!
மகேஷ் அழைப்புமணியை அழுத்த அது திறக்கப்படவில்லை!
மகேஷ் மீண்டும் மீண்டும் அழுத்த கதவின் பிடியை திருகி திறந்தார் டாக்டர் கோபால்!
"குட் ஈவ்னிங் டாக்டர்... "
" குட் ஈவ்னிங் மிஸ்டர்.....??? "
அவர் இழுக்க
" மகேஷ் டாக்டர்! " என்று முடித்து வைத்தான் மகேஷ்!
"ம்ம்ம் மகேஷ்... Come inside..." என்று கூறி அவர் விலகி வழிவிட அதுவரை அவர் மறைத்து வைத்திருந்த ஏசியின் குளுமை மகேசை ஆட்கொண்டது!
உள்ளே நுழைந்த மகேஷ் அறையை சுற்றி ஓர் பார்வை பார்த்தான்!
பாதி குடித்து மிச்சம் வைத்த விஸ்கி டீப்பாயின் மேல் இருக்க அருகில் ஹாஸ்ட்ரேயில் பாதி உயிரை தொலைத்திருந்த சிகரெட் தன் முழு உயிரையும் துறக்கும் முனைப்பில் மும்முரமாய் புகைந்துக் கொண்டிருந்தது!
"என்ன மகேஷ் அப்படி பார்க்குறீங்க??? இதெல்லாம் ஜஸ்ட் ரிலாக்ஸ்சேசன்.. . கேன் யூ ஜாயின் வித் மீ??? "
" நோ சார்... எனக்கு பழக்கமில்ல... "
" ஓகே மகேஷ் பழக்கம் இல்லாதவங்களை நான் கட்டாயப் படுத்தறதில்லை... "
" நன்றி சார்... என்னவோ விசயம் பேசணும்னு சொன்னிங்களே என்ன விசயம் சார்???
"ம்ம்ம்... உங்க பிசினஸ்லாம் எப்படி போகுது மிஸ்டர் மகேஷ்??? "
'ஏன் இவர் சம்மந்தமே இல்லாத விசயத்தை பத்தியெல்லாம் கேட்கிறார் '
" உங்ககிட்டதான் கேட்டேன் மகேஷ்... உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போகுது??? "
" சார் நான் பிசினஸ் எல்லாம் பண்ணல... சென்னைல ஒரு கம்பெனியில ஓர்க் பண்றேன்... "
" ஹாஹாஹா... அது ஊர் உலகத்துக்காக நீங்க போட்டுகிட்ட வேஷம் மகேஷ்... நான் உண்மையில நீங்க பண்ணிகிட்டிருக்க பிசினஸ் பத்தி கேட்டேன்... "
" சார் எனக்கு ஒண்ணும் புரியல நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு சத்தியமா எனக்கு தெரியல சார்... "
" ஓகே பைன் நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன்... ரூபா இப்போ ஒரு நைட்க்கு எவ்ளோ வாங்குறா??? "
" சார் யார் சார் ரூபா??? ஆர் யூ நார்மல் நவ்??? "
" நான் போதையில ஆள் தெரியாம பேசறேன்னு சொல்றீங்களா மகேஷ்... ரூபாக்கு பேரு மாத்தியாச்சில... பைன் மகா... மகா வுக்கு என்ன ரேட் மகேஷ்... "
மகேஷ் அதிர்ச்சியில் டாக்டரின் சட்டையை பிடித்தான்... சட்டென்று சுதாகரித்துக் கொண்டவன் அவர் சட்டையிலிருந்து மெல்ல தன் கையை எடுத்து...
" சாரி டாக்டர்... அவ என் ஓய்ப்.... "
" மகேஷ் நான் விசயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்... நாளைக்கு காலையில எனக்கு ப்ளைட் நீ இன்னைக்கு நைட் மட்டும் ரூபாவை.... சாரி மகாவை அனுப்பி வை நான் என்ன அமவுண்ட் ஆகுதோ அதை செட்டில் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கேன்... "
" டாக்டர் அவ என் ஓய்ப்னு சொல்லிகிட்டே இருக்கேன் இப்படி பேசிக்கிட்டே போறீங்க "என்று ஆத்திரத்தில் டாக்டரின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விட டாக்டர் நிலைகுலைந்து கீழே சரிந்தார்...
சுதாரித்து எழுந்து நிற்க முயன்று தோற்ற டாக்டர் கோபால் தோற்றுப்போனார்...
" டேய் அவ உன்னை ஏமாத்தினாலா இல்லை நீ என்னை ஏமாத்துறயானு தெரியல... ஆனா அவ ஓரு விபச்சாரி இது மட்டும் உண்மைடா... அவ உடம்புல எங்க எங்க மச்சம் இருக்குனு சரியா சொல்வேன்டா நான்... சரியா சொ... ல்... வேன்.... டா " போதையில் வார்த்தைகள் தவணை முறையில் வந்து விழ போதையின் மயக்கத்தில் சரிந்தார் டாக்டர் கோபால்!
மகேசின் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது!
'அவ விபச்சாரிடா... '
(தொடரும்)