24
வெண்பா தன் டிராலியை தள்ளிக் கொண்டு வர வரவே காத்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே விழியனை அவள் கண்கள் தேடியது.பார்த்தவரையில் எங்குமே அவன் தென்படவில்லை! மதன் மட்டும் வந்திருந்தான்.இவளிடம் வாங்க என்றதோடு மனைவி மதிவதனியுடன் பிஸியாக பேச ஆரம்பித்து விட்டான். வெண்பாவிடம் ‘ஏர்போர்ட் வருகிறேன்’ என்றிருந்த விழியனை காணவில்லை. ஒரு வழியாய் மதன், மதி , வெண்பா வெளியில் வந்து டேக்ஸிக்கு வெயிட் செய்ய எங்கிருந்தோ ஓடி அவர்களிடம் வந்தான் விழியன்!
வெண்பாவை நேசமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நல்லாயிருக்கியா வெண்பா , ஏன் முகம் சோர்ந்து போய் இருக்கு” என்க,
“நீங்க லேட்டா வந்த கோவமா இருக்கும் விழியன் !” இத்தனை நேரமும் தோழி பட்ட அவஸ்தையை கண்கூடாக பார்த்த மதி அவனிடம் சொல்லிவிட்டு,
“ஏய் இங்க இருக்க போறதே மூணு வாரம் , கோவத்தில் அதையும் வேஸ்ட் பண்ணிடாதே டீ” என்று வெண்பாவின் தோளை தட்டி விட்டாள்.
வெவ்வேறு டாக்ஸ்யில் பயணமானார்கள் இரு ஜோடிகளும் .அவள் கையை இறுக்கமாக பிடித்திருந்தவனின் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் இவளும்! என்னதான் போனிலும் , வீடியோ கால்களிலும் பேசியிருந்தாலும், நேரில் இத்தனை மாதங்களுக்கு பிறகு பார்ப்பது சுகம் தானே!
வீடு வந்து சேர்ந்து கதவடைத்தவன் அவளை நகர விடாது கட்டிக் கொண்டான்! பல நாள் பிரிவை இன்றே சரிசெய்துவிடுவது போல் அத்தனை முத்த மழையில் மனைவியை திக்குமுக்காட வைத்தான்!!
“விடுங்க விழியன்! லேட்டா வந்திட்டு, ரொம்ப தான்!”
“அதான் வந்தாச்சே, அப்புறமென்ன? மெலிஞ்சி போயிட்டியா வெண்பா?”
அவளை கட்டிக்கொண்டிருந்தவன், இப்போது இடுப்பை அளந்தான்.
“அதெல்லாம் இல்லை, எனக்கு குளிக்கணும். என்னை விடுங்க முதலில்”
“குளிக்கணுமா, வா” அவளை ஒரு குழந்தையை தூக்குவதை போல் தூக்கி கொண்டு போனான், அந்த குளியலறை வரை…கதவருகில் இறக்கி விட்டவன்,
“நான் வேணா உதவிக்கு வரவா…”அசடு வழிந்தவன் முன் சிரித்துவிடுவோமோ என்று தோன்றியது அவளுக்கு…
“ஒண்ணும் வேணாம்.நீங்க போய் பெட்டியிலிருந்து சாமான் எல்லாம் எடுங்க. அத்தை உங்களுக்கு பால்கோவா செஞ்சி தந்திருக்காங்க”
“எனக்கு காரச்சேவு தான் டீ பிடிக்கும்” அவள் கன்னத்தை கிள்ளியவன் கையில் கிள்ளியவள், விரைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.
சாரதி மறுபடியும் போனில் அழைத்தார்.
“என்னப்பா அட்ரஸ் அனுப்புறேன்னு சொல்லிட்டு மறந்துட்டியா?”
என்னவென்று அவரிடம் சொல்லமுடியும்? முகவரி அனுப்பி வைத்தான், நடப்பது நடக்கட்டும் என்பது போல்!
அவர் கேட்பதற்கு எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் பதில் சொல்லிவிட வேண்டும்! இனியும் ரதியை நம் வழியில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். பலவற்றை சிந்தித்தபடி நடைபயின்று கொண்டிருந்தவன் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.அவர் தான் என்று போய் கதவு திறந்தான், ஆனால் அவன் எதிரில் நின்றது ரதி!
ஆச்சரியத்தில் அவளை பார்த்தவன் அப்படியே நிற்க,
“ கொஞ்சம் வழிவிடு பிரகாஷ் “ என்றபடி உள்ளே நுழைந்தாள்.கையுடன் கொண்டு வந்திருந்த பெரிய பையிலிருந்து மற்றுமொரு ஜோடி செருப்பை வாசலில் போட்டாள்.பிரகாஷ் அவள் செய்கையை பார்த்தபடி நிற்க , தன் சின்ன சின்ன சாமான்களை வீடு முழுவதற்கும் பரப்பினாள் சீப்பு , பிரஷ் , ஹேண்ட்பேக் , துப்பட்டா எல்லாம் ஒவ்வொரு இடத்தில் வைத்தவள் கிட்சனினுள் நுழைய தலையே சுற்றிவிட்டது அவளுக்கு!
அவள் பாட்டுக்கு வீட்டினுள் வந்தாள், என்ன தான் செய்கிறாள், என்றபடி அவள் பின்னோடு வந்தவன் அவள் அதிர்ந்த பார்வையை பார்த்தபடி நின்றான். நிலைமை என்னவென்று அறிந்திருந்தான்!
‘முழு நேரம் ஆபிஸில் வேலையே கதின்னு இருப்பவன் , வீட்டை வச்சியிருக்கான் பாரு’அந்த சமையலறை லட்சணத்தை பார்த்து நொந்து போனாள் ரதி. ஆனால் ஆரம்பித்த வேலையை முழுதாய் முடிக்க வேண்டுமே. அந்த ஆள் வந்து பார்த்தாள் நான் தான் இப்படி வைத்திருக்கிறேன் என்று நினைத்து தொலைப்பார்..
நொந்தபடி அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்த வேளையில் , அவனும் உதவிக்கு வந்தான். இருவருமாய் எந்த பேச்சும் இராது அந்த சமையலறையை சுத்தம் செய்ய , சற்று நேரத்துக்கெல்லாம் சாரதி வந்துவிட்டார்! பிரகாஷுடன் இணைந்து வாசல் வரை சென்று வரவேற்றாள்.
“வாங்க மாமா! நல்லா இருக்கீங்களா?”
வந்தவர் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து நோட்டம் விட்டபடி வந்து சோபாவில் அமர்ந்தார். அவரை யோசிக்க விட கூடாது! இன்னும் கொஞ்சம் ஊன்றி கவனித்தாரானால் விரைவில் உண்மை நிலையை கண்டுபிடித்து விடுவார். உண்மை தான் ! சாரதிக்கு ரதியின் செய்கை அத்தனையும் நடிப்பு என்பதை கண்டு கொண்டார். அது அவளை அந்த வீட்டில் பார்த்ததினால் மட்டும் இல்லை! அவளிடம் தன் கவனத்தை கொண்டிருப்பது போல் காட்டினாலும், அவர் எண்ணத்தில் இருந்ததெல்லாம் வேறு!
நீ தான் ரொம்ப திறமையானவன்னு உனக்கு நினைப்பா ரதி? உனக்கு அப்பன்னு ஒருத்தன் இருந்தான்.அவன் உன்னை விட திறமையானவன். அவனுக்கு பிரண்டுன்னு நான் ஒருத்தன் இருக்கேன் இப்ப! யார்கிட்ட ! யாரு கிட்ட வச்சியிருக்க உன் குறுக்கு வேலை எல்லாத்தையும்?
இங்கு வரும் முன்பே பிரகாஷ் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் ஹாஸ்டலுக்கு போன் செய்து விசாரித்து விட்டார். ரதியின் கார்டியன் என்பதால் வார்டனிடம் நேரிடையாக பேச முடிந்தது! அவள் இன்னமும் அங்கு தான் இருக்கிறாள் என்பதை அறிந்தும் கொண்டார்.
பிரகாஷ் என்ன தான் சொல்கிறான் என்று சோதிக்க அவனிடம் இதை பற்றி கேட்க ,அவன் அவர்களுக்குள் எல்லாம் இயல்பாய் இருப்பது போல் நாடகம் ஆடினான். ஒன்றாக இருப்பதாக சொன்னான்! ரதியை பற்றி தெரிந்தது தானே. நேரில் போய் கையும் களவுமாய் பிடிப்போம் என்று இவர் இங்கு வர,இந்த சேட்டை செய்வது இருவரும் என்று கண்டு கொண்டார்! இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டதான் இப்போது வந்ததே! அவள் இங்கிருக்க மாட்டாள் என்று நினைத்து வந்தவருக்கு அவள் இங்கிருப்பது முதல் ஆச்சரியம்!
ஆனால் இது எல்லாமே திட்டம் என்பதை உடனேயே புரிந்தவர் , ரதியை போலவே எதுவும் நடக்காததை போல் பார்த்துக் கொண்டார்! பிராஷிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர் , ரதி சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்ப ஆயுத்தமானவர். போகிற போக்கில்,
“ஹாஸ்டல் காலி பண்ணிட்டியா ரதி?”
“ம்ம்…ஆமா மாமா…அப்பவே”
“அப்படியா? அந்த வார்டன் ரொம்ப நல்ல மாதிரி . அவங்களை நேரில் பார்த்து சொல்லணும்.நாளைக்கு அதுதான் என் முதல் வேலை!” என்றபடி போக , பிரகாஷும் ரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.அழகு சுந்தரி எல்லாவற்றையும் சொல்லிவிடுவாளே!
இரவு வெகுநேரம் வரையிலும் ரதி அங்கிருந்து கிளம்புவது போல் தெரியவில்லை.பிரகாஷும் அதை பற்றி எதுவும் கேட்காமல் தன் ஆபிஸ் பணியில் மூழ்கியிருந்தான். அவளாகவே,
“சாரதி மாமா நாளைக்கு அங்க வந்து விசாரிப்பார் போல் தெரியுது, நான் அங்க இப்ப போக முடியாது பிரகாஷ்”
இத்தனை நேரமும் ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை. இப்போது தன் காரியத்திற்காக வாயைத் திறந்தாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது! அமைதியை அவன் தொடர அவள் தொடர்ந்தாள்.
“இன்னிக்கு மட்டும் இங்க தங்கிகட்டுமா பிரகாஷ், எனக்கு வேற எங்கையும் போய் இருக்க முடியாது! நாளைக்கே வேற ஹாஸ்டல் பார்த்து போயிடுறேன்…”
இப்போது தன் லாப்டாப்பில் இருந்து நிமிர்ந்தவன்,அவளை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்து,
“நீ லீகலி என்னோட வைஃப் ரதி. அதை அடிக்கடி நான் உனக்கு நியாபக படுத்த வேண்டியிருக்கு!”
தலை குனிந்து கொண்டாள். இந்த வாக்கியம் பிடிக்கவில்லை.அவன் வீட்டில் வைத்து இந்த பேச்சை தொடர அவளுக்கு இஷ்டமுமில்லை. அன்று போல் அவனிடம் கோவப்படாமல், நிதானமாய்,
“பிரகாஷ் நான் மறுபடியும் சொல்றேன். உன் வாழ்க்கையை என் கிட்ட வீணாக்காதே. வேற யாரையும் கல்யாணம் செய்துக்…”
“நீ ஹாலில் படுத்துக்கோ, குட் நைட் ரதி”
அவளின் பேச்சு தனக்கு பிடித்தமில்லை என்பது போல் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டான். சற்று நேரத்தில் அவளுக்கு தலையணையும் போர்வையும் மட்டும் போடப்பட்டது, அவள் அமர்ந்திருந்த சோபாவின் மேல்…ரதிக்கு பிரகாஷிடம் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம் என்றிருந்தது தான். ஆனால் சூழ்நிலை அப்படி! என்ன செய்ய முடியும்!
வெண்பா தன் டிராலியை தள்ளிக் கொண்டு வர வரவே காத்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே விழியனை அவள் கண்கள் தேடியது.பார்த்தவரையில் எங்குமே அவன் தென்படவில்லை! மதன் மட்டும் வந்திருந்தான்.இவளிடம் வாங்க என்றதோடு மனைவி மதிவதனியுடன் பிஸியாக பேச ஆரம்பித்து விட்டான். வெண்பாவிடம் ‘ஏர்போர்ட் வருகிறேன்’ என்றிருந்த விழியனை காணவில்லை. ஒரு வழியாய் மதன், மதி , வெண்பா வெளியில் வந்து டேக்ஸிக்கு வெயிட் செய்ய எங்கிருந்தோ ஓடி அவர்களிடம் வந்தான் விழியன்!
வெண்பாவை நேசமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நல்லாயிருக்கியா வெண்பா , ஏன் முகம் சோர்ந்து போய் இருக்கு” என்க,
“நீங்க லேட்டா வந்த கோவமா இருக்கும் விழியன் !” இத்தனை நேரமும் தோழி பட்ட அவஸ்தையை கண்கூடாக பார்த்த மதி அவனிடம் சொல்லிவிட்டு,
“ஏய் இங்க இருக்க போறதே மூணு வாரம் , கோவத்தில் அதையும் வேஸ்ட் பண்ணிடாதே டீ” என்று வெண்பாவின் தோளை தட்டி விட்டாள்.
வெவ்வேறு டாக்ஸ்யில் பயணமானார்கள் இரு ஜோடிகளும் .அவள் கையை இறுக்கமாக பிடித்திருந்தவனின் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் இவளும்! என்னதான் போனிலும் , வீடியோ கால்களிலும் பேசியிருந்தாலும், நேரில் இத்தனை மாதங்களுக்கு பிறகு பார்ப்பது சுகம் தானே!
வீடு வந்து சேர்ந்து கதவடைத்தவன் அவளை நகர விடாது கட்டிக் கொண்டான்! பல நாள் பிரிவை இன்றே சரிசெய்துவிடுவது போல் அத்தனை முத்த மழையில் மனைவியை திக்குமுக்காட வைத்தான்!!
“விடுங்க விழியன்! லேட்டா வந்திட்டு, ரொம்ப தான்!”
“அதான் வந்தாச்சே, அப்புறமென்ன? மெலிஞ்சி போயிட்டியா வெண்பா?”
அவளை கட்டிக்கொண்டிருந்தவன், இப்போது இடுப்பை அளந்தான்.
“அதெல்லாம் இல்லை, எனக்கு குளிக்கணும். என்னை விடுங்க முதலில்”
“குளிக்கணுமா, வா” அவளை ஒரு குழந்தையை தூக்குவதை போல் தூக்கி கொண்டு போனான், அந்த குளியலறை வரை…கதவருகில் இறக்கி விட்டவன்,
“நான் வேணா உதவிக்கு வரவா…”அசடு வழிந்தவன் முன் சிரித்துவிடுவோமோ என்று தோன்றியது அவளுக்கு…
“ஒண்ணும் வேணாம்.நீங்க போய் பெட்டியிலிருந்து சாமான் எல்லாம் எடுங்க. அத்தை உங்களுக்கு பால்கோவா செஞ்சி தந்திருக்காங்க”
“எனக்கு காரச்சேவு தான் டீ பிடிக்கும்” அவள் கன்னத்தை கிள்ளியவன் கையில் கிள்ளியவள், விரைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.
சாரதி மறுபடியும் போனில் அழைத்தார்.
“என்னப்பா அட்ரஸ் அனுப்புறேன்னு சொல்லிட்டு மறந்துட்டியா?”
என்னவென்று அவரிடம் சொல்லமுடியும்? முகவரி அனுப்பி வைத்தான், நடப்பது நடக்கட்டும் என்பது போல்!
அவர் கேட்பதற்கு எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் பதில் சொல்லிவிட வேண்டும்! இனியும் ரதியை நம் வழியில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். பலவற்றை சிந்தித்தபடி நடைபயின்று கொண்டிருந்தவன் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.அவர் தான் என்று போய் கதவு திறந்தான், ஆனால் அவன் எதிரில் நின்றது ரதி!
ஆச்சரியத்தில் அவளை பார்த்தவன் அப்படியே நிற்க,
“ கொஞ்சம் வழிவிடு பிரகாஷ் “ என்றபடி உள்ளே நுழைந்தாள்.கையுடன் கொண்டு வந்திருந்த பெரிய பையிலிருந்து மற்றுமொரு ஜோடி செருப்பை வாசலில் போட்டாள்.பிரகாஷ் அவள் செய்கையை பார்த்தபடி நிற்க , தன் சின்ன சின்ன சாமான்களை வீடு முழுவதற்கும் பரப்பினாள் சீப்பு , பிரஷ் , ஹேண்ட்பேக் , துப்பட்டா எல்லாம் ஒவ்வொரு இடத்தில் வைத்தவள் கிட்சனினுள் நுழைய தலையே சுற்றிவிட்டது அவளுக்கு!
அவள் பாட்டுக்கு வீட்டினுள் வந்தாள், என்ன தான் செய்கிறாள், என்றபடி அவள் பின்னோடு வந்தவன் அவள் அதிர்ந்த பார்வையை பார்த்தபடி நின்றான். நிலைமை என்னவென்று அறிந்திருந்தான்!
‘முழு நேரம் ஆபிஸில் வேலையே கதின்னு இருப்பவன் , வீட்டை வச்சியிருக்கான் பாரு’அந்த சமையலறை லட்சணத்தை பார்த்து நொந்து போனாள் ரதி. ஆனால் ஆரம்பித்த வேலையை முழுதாய் முடிக்க வேண்டுமே. அந்த ஆள் வந்து பார்த்தாள் நான் தான் இப்படி வைத்திருக்கிறேன் என்று நினைத்து தொலைப்பார்..
நொந்தபடி அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்த வேளையில் , அவனும் உதவிக்கு வந்தான். இருவருமாய் எந்த பேச்சும் இராது அந்த சமையலறையை சுத்தம் செய்ய , சற்று நேரத்துக்கெல்லாம் சாரதி வந்துவிட்டார்! பிரகாஷுடன் இணைந்து வாசல் வரை சென்று வரவேற்றாள்.
“வாங்க மாமா! நல்லா இருக்கீங்களா?”
வந்தவர் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து நோட்டம் விட்டபடி வந்து சோபாவில் அமர்ந்தார். அவரை யோசிக்க விட கூடாது! இன்னும் கொஞ்சம் ஊன்றி கவனித்தாரானால் விரைவில் உண்மை நிலையை கண்டுபிடித்து விடுவார். உண்மை தான் ! சாரதிக்கு ரதியின் செய்கை அத்தனையும் நடிப்பு என்பதை கண்டு கொண்டார். அது அவளை அந்த வீட்டில் பார்த்ததினால் மட்டும் இல்லை! அவளிடம் தன் கவனத்தை கொண்டிருப்பது போல் காட்டினாலும், அவர் எண்ணத்தில் இருந்ததெல்லாம் வேறு!
நீ தான் ரொம்ப திறமையானவன்னு உனக்கு நினைப்பா ரதி? உனக்கு அப்பன்னு ஒருத்தன் இருந்தான்.அவன் உன்னை விட திறமையானவன். அவனுக்கு பிரண்டுன்னு நான் ஒருத்தன் இருக்கேன் இப்ப! யார்கிட்ட ! யாரு கிட்ட வச்சியிருக்க உன் குறுக்கு வேலை எல்லாத்தையும்?
இங்கு வரும் முன்பே பிரகாஷ் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் ஹாஸ்டலுக்கு போன் செய்து விசாரித்து விட்டார். ரதியின் கார்டியன் என்பதால் வார்டனிடம் நேரிடையாக பேச முடிந்தது! அவள் இன்னமும் அங்கு தான் இருக்கிறாள் என்பதை அறிந்தும் கொண்டார்.
பிரகாஷ் என்ன தான் சொல்கிறான் என்று சோதிக்க அவனிடம் இதை பற்றி கேட்க ,அவன் அவர்களுக்குள் எல்லாம் இயல்பாய் இருப்பது போல் நாடகம் ஆடினான். ஒன்றாக இருப்பதாக சொன்னான்! ரதியை பற்றி தெரிந்தது தானே. நேரில் போய் கையும் களவுமாய் பிடிப்போம் என்று இவர் இங்கு வர,இந்த சேட்டை செய்வது இருவரும் என்று கண்டு கொண்டார்! இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டதான் இப்போது வந்ததே! அவள் இங்கிருக்க மாட்டாள் என்று நினைத்து வந்தவருக்கு அவள் இங்கிருப்பது முதல் ஆச்சரியம்!
ஆனால் இது எல்லாமே திட்டம் என்பதை உடனேயே புரிந்தவர் , ரதியை போலவே எதுவும் நடக்காததை போல் பார்த்துக் கொண்டார்! பிராஷிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர் , ரதி சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்ப ஆயுத்தமானவர். போகிற போக்கில்,
“ஹாஸ்டல் காலி பண்ணிட்டியா ரதி?”
“ம்ம்…ஆமா மாமா…அப்பவே”
“அப்படியா? அந்த வார்டன் ரொம்ப நல்ல மாதிரி . அவங்களை நேரில் பார்த்து சொல்லணும்.நாளைக்கு அதுதான் என் முதல் வேலை!” என்றபடி போக , பிரகாஷும் ரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.அழகு சுந்தரி எல்லாவற்றையும் சொல்லிவிடுவாளே!
இரவு வெகுநேரம் வரையிலும் ரதி அங்கிருந்து கிளம்புவது போல் தெரியவில்லை.பிரகாஷும் அதை பற்றி எதுவும் கேட்காமல் தன் ஆபிஸ் பணியில் மூழ்கியிருந்தான். அவளாகவே,
“சாரதி மாமா நாளைக்கு அங்க வந்து விசாரிப்பார் போல் தெரியுது, நான் அங்க இப்ப போக முடியாது பிரகாஷ்”
இத்தனை நேரமும் ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை. இப்போது தன் காரியத்திற்காக வாயைத் திறந்தாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது! அமைதியை அவன் தொடர அவள் தொடர்ந்தாள்.
“இன்னிக்கு மட்டும் இங்க தங்கிகட்டுமா பிரகாஷ், எனக்கு வேற எங்கையும் போய் இருக்க முடியாது! நாளைக்கே வேற ஹாஸ்டல் பார்த்து போயிடுறேன்…”
இப்போது தன் லாப்டாப்பில் இருந்து நிமிர்ந்தவன்,அவளை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்து,
“நீ லீகலி என்னோட வைஃப் ரதி. அதை அடிக்கடி நான் உனக்கு நியாபக படுத்த வேண்டியிருக்கு!”
தலை குனிந்து கொண்டாள். இந்த வாக்கியம் பிடிக்கவில்லை.அவன் வீட்டில் வைத்து இந்த பேச்சை தொடர அவளுக்கு இஷ்டமுமில்லை. அன்று போல் அவனிடம் கோவப்படாமல், நிதானமாய்,
“பிரகாஷ் நான் மறுபடியும் சொல்றேன். உன் வாழ்க்கையை என் கிட்ட வீணாக்காதே. வேற யாரையும் கல்யாணம் செய்துக்…”
“நீ ஹாலில் படுத்துக்கோ, குட் நைட் ரதி”
அவளின் பேச்சு தனக்கு பிடித்தமில்லை என்பது போல் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டான். சற்று நேரத்தில் அவளுக்கு தலையணையும் போர்வையும் மட்டும் போடப்பட்டது, அவள் அமர்ந்திருந்த சோபாவின் மேல்…ரதிக்கு பிரகாஷிடம் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம் என்றிருந்தது தான். ஆனால் சூழ்நிலை அப்படி! என்ன செய்ய முடியும்!