அவன் சொன்ன தொணியில் தலை குனிந்தாள்.அவளுக்கு இதையெல்லாம் இப்படி வெளிப்படையாய் விழியனின் வாயால் கேட்க நிஜமாலுமே அசிங்கமாய் இருந்தது. அவன் கையை தன்னிடமிருந்து பிரித்தவள்,
“நீ…நீ முதலில் போ விழியன். நான் அப்புறமா வரேன்”
அவள் கால்கள் நகர மறுத்தன. என்னவோ எதுவோ அவளை தடுத்தது.
அவன் நினைத்தது போல் இப்போது எல்லாமே நடந்தாலும் அதை தாமதபடுத்திக் கொண்டிருந்தாள். விழியனை இப்படி அழ வைக்க வேண்டுமா? நான் மனதார காதலித்தவன் இப்படி வருத்தப்பட்டு தான் ஆக வேண்டுமா?’
முதல் முறையாய் தப்பு செய்கிறேனோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது! ரதிக்கு எல்லா பக்கமும் நெருக்கி விட்டது போல் இருந்தது…இத்தனை நாளும் இல்லாத ஏதோ…தன்னை குற்றவாளி போல் உணர்ந்தாள்.
அந்த இடத்தில் மயான அமைதி, அதை கலைப்பதை போல்,
“விழியன் நீ கிளம்பு” என்றாள்.
“நீ இல்லாம நான் போறதா இல்லை ரதி”
பிரகாஷை நிமிர்ந்து இவள் பார்க்க , அவன் இதில் எந்த சமந்தமும் இல்லை என்பதாக மறுபார்வை பார்த்தான்.
“விழியன் நீ போ, நான் வரேன். எனக்கு உன் வீடு தெரியும்”
அவள் குழப்ப முகத்தை பார்த்தவன்.
“எப்போ வேணும்னாலும் வா ரதி. உனக்காக என் வீட்டுக் கதவு எப்போதும் திறந்து இருக்கும்”
முகத்தை அத்தனை உக்கிரமாக வைத்துக் கொண்டு இவ்வாறாக சொல்லிவிட்டு எழுந்தவன் மட மடவென்று அந்த இடத்தை விட்டு போய்விட்டான்.
போகிறவனை சற்று நேரம் பார்த்திருந்தவள் திரும்பி பிரகாஷின் பார்வையை சந்திக்க, அத்தனை கேவலமாக அவளை ஒரு அற்ப புழு போல் பார்த்தான்!பிரகாஷின் பார்வையில் முன்பு அவள் எப்போதும் பார்த்திருக்கும் கனிவோ காதலோ எதுவும் இப்போது அந்த கண்ணில் இல்லை.
சட்டென்று என்ன தோன்றியதொ, அவள் அறைக்குள் திரும்பி போய் கதவடைத்துக் கொண்டாள் ரதிமீனா. அவளுக்கு இப்போது தனிமை தேவைப்பட்டது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அலச வேண்டியிருந்தது!