ஆமா நீங்க சொல்வது சரிதான்..Hi mam
வெண்பா தனக்கு நிச்சயமானவனை மதி ஆர்வமாக பார்க்கும்போது உண்மையை சொல்லியிருக்கணும் ,எனக்கு அவர்கூட நிச்சயம் நடந்து விட்டது எனக்கு அவரைப்பிடிக்கலை,உனக்கு வேண்டுமென்றால் நீ முயற்சித்துப்பாரென்று,அதை விட்டு உண்மையை மறைத்து மதியின் மனதில் ஆசையை தூண்டியிருக்கக்கூடாது,விழியன் இப்போ செய்ததும் தப்புத்தான் நிச்சயம் நடந்தாலும் வெண்பாவுக்கான விருப்பமில்லையெனும் பட்சத்தில் வரை முத்தமிட்டிருக்கக்கூடாது.
நன்றி
enna kodumai sirஅவள் கைகளில் தன் கைகுட்டையை திணிக்க முறைத்தபடி அறையை விட்டு வெளிவந்தவளை சந்தித்தாள் அறை வாசலில் நின்றிருந்த மதி! இருவரின் சம்பாஷனைகளை கேட்டுவிட்டாள். அவன் தெளிவாய் தான் இருந்திருக்கிறான்.. குட்டையை குழப்பியது வெண்பா தான் என்பது உறுதியாயிற்று!
வெண்பா அவளை நெருங்க, அவளை காண பிடிக்காததை போல் மடமடவென்று படி இறங்கி சென்றுவிட்டாள்.அங்கு வந்த விழியனிடம் , “விழியன் நீ மாறவே மாட்டியா? நீ செஞ்ச காரியத்தில் எங்க ப்ரெண்ட்ஷிப் கெட்டு போச்சு பாரு” என்று தன் கோப முகத்தை வெண்பா காட்ட,
“என்ன சொன்னே? கேட்கலை ! கிட்ட வந்து சொல்லு பார்ப்போம்” என்று மேலும் சீண்டினான் அவன்!
செய்வதையெல்லாம் செய்துவிட்டு நல்லவன் போல் அன்று மதியை அவனே வீட்டில் கொண்டு போய் விட்டான், ரேணுகாவையும் உடன் அழைத்துக் கொண்டு!
வெண்பா தோழி சென்றதும் அறைக்குள் அடைந்தவள் தான். எவர் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை!
அடுத்த இரண்டு நாள் மதி ஆபிஸ் வரவில்லை.இவள் போன் செய்ய எடுக்கவுமில்லை…ரதி கூட இவளிடம் தான் மதி வராததை பற்றிக் கேட்டாள்,
“எனக்கும் தெரியலை” என்று சொன்னதை நம்ப முடியாமல் பார்த்து சென்றாள்.
விழியன் வெண்பாவுக்கு பத்தாவது முறையாய் அவளுக்கு போன் செய்தான்!
பல முறை கட் செய்தாலும் மறுபடியும் அழைத்து தொல்லைப்படுத்த பேசித் தொலைக்கலாம் என்று எடுத்தவளிடம்,
“புருஷன் கூப்பிட்டா உடனே எடுக்க வேண்டாமா என் கன்னுக்குட்டி?”
பதில் சொல்லமாட்டேன் என்றிருந்தவளிடம்,
“என் மதி டார்லிங் இன்னைக்கு ஆபிஸ் வந்தாளா?”
எத்தனை கொழுப்பு!
அவ டார்லிங் நான் கன்னுக்குட்டியா?
நீ எருமை மாடு டா!
“வரலை!”
“ஆமா வரமாட்டேன்னு நேத்து எனக்கு வாட்ஸப்ல மெசேஜ் பண்ணுனா! நைட் நீ நம்ம ரூமுக்கு வந்தா சொல்லலாம்னு நினைச்சேன்,ஆனா நீ வரவேயில்லை…ஏன் ?”
‘நான் போன் பண்ணுனா எடுக்கலை, அவனுக்கு மட்டும் மெசேஜா!’
துரோகி!
“வச்சிடவா!” என எரிச்சலாய் கேட்டவளிடம் எப்போதும் போல் நிதானமாய்,
“வெண்பா நீ மதி வீட்டுக்கு போ. நான் அங்க வந்து உன்னைக்
கூப்பிட்டுக்குறேன்” என்றான் திடீரென!
“என்னால உங்க ப்ரெண்ட்ஷிப் கெட்டு போக வேணாம்.போய் அவளை சமாதானப்படுத்து”
‘சரிங்க நாட்டு ஆமை’
அவனை பிடிக்கவில்லை என்றாலும் அவன் இப்போது சொன்னது பிடித்தது. அதன் படி செய்தாள்!