• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வேலை பார்க்காமல் சில காலம் வீட்டில் தான் இருந்தாள் அவள். அவளின் நிலையை கண்டு பெற்றவருக்கே பல சந்தர்ப்பங்களில் மனம் கனத்துப் போயிருக்கிறது .எப்படி எல்லாம் ஆசையாய் வளர்த்த ஒற்றை மகள்! தன் மகள் ஒன்று ஆசைபட்டு விட்டால் அதை எப்படியாவது வாங்கித் தர வேண்டும் என்று தான் எண்ணி செயல்படுத்தியது தவறோ! தாய் இல்லாத பிள்ளை என்று எல்லா விஷயத்திலும் அவளை நம்பியது வினையாய் போனதே.
ஆனால் அவளும் அப்படி தானே இருந்தாள், சின்ன வயதிலிருந்து கண்ணும் கருத்துமாய் உடன் வைத்து வளர்த்திருக்கிறாரே. எந்த விதமான வேண்டாத பழக்கமும் தந்தையாய் அவர் அவளிடத்தில் கண்டதில்லையே!
‘உங்க பொண்ணு ரொம்ப அமைதி’
‘நல்ல வளர்த்து இருக்கீங்க!’ எத்தனை எத்தனை பாராட்டுக்களில் மனம் குளிர்ந்திருக்கிறார்!
இப்படி எல்லாம் இருந்ததில் கண்மூடித்தனமான அவளை நம்பி விட்டேனோ!
இனியாவது அவளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு நல்லவன் கையில் சீக்கிரம் பிடித்துக் கொடுக்க வேண்டும்! கடவுளே நீயே எனக்கு துணை! என் மகளுக்கு ஒரு நல்ல வழியை காட்டு!
சங்கர நாராயணன் இப்படியான சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்!
கோவையில் ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைக்கு முயற்சிக்கலாம் என்றால், அதை ஒத்துக் கொள்ளாது சென்னையில் போய் தங்கியிருக்கிறாள்.
மகளை பற்றிய எண்ணத்திலிருந்தவர் அவளுக்கு போன் செய்ய எடுத்தாளில்லை.
“மதி போன் அடிக்கிது பாரு டீ”
வெண்பா தன் பக்கம் இருந்தவளை உலுக்கவும், நினைவுக்கு வந்தவள் அதை எடுக்க,
“என்ன பா? அச்சச்சோ! சரி போயிட்டு வாங்க. ஆனா நான் தனியா எப்படி இருப்பேன்? வெண்பா வீட்டுக்கா? என்னப்பா.. சரி கேட்டு பார்க்குறேன்! என் டிரஸ்ஸை அங்க கொடுத்திட்டு போயிடுங்க! பத்திரமா போயிட்டு வாங்க பா. வச்சிடுறேன்!”
வெண்பாவும் ரதியும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“என்ன ஆச்சு?”
“அம்மாவோட தங்கைக்கு ஆக்சிடெண்டாம், ஊருக்கு போறாங்க. என்னை வெண்பா வீட்டில் இருக்க சொல்லிட்டாங்க!”
“வாயேன் டீ , ஏன் யோசிக்கிறே?”
“வரலாம் , ஆனா மை ஸ்மால் ஹார்ட் எதை எல்லாம் தாங்கும்!?” என்றாள் பொய்யாக!
வெண்பா அவளை முறைக்க , ரதி புரியாமல் விழித்தாள்.
“ஏன் என்ன ஆச்சு மதி?”
“என் சோக கதையை நான் உங்க கிட்ட சொல்லாம விட்டுட்டேனா? என்னோட எக்ஸ், அங்கே தான் இருக்கார்! ம்ம்..அவர் நல்லவர் தான், ஆனா என்னை தேவை இல்லாம அந்த வலையில் சிக்க வைத்த பொல்லாதவ இவ தான்”
தோழியின் தலையில் நச்சென்று கொட்டினாள்…
“நான் சொன்னா உனக்கு புத்தி இல்லை?” வெண்பாவும் விடவில்லை!
இருவரும் சற்று நேரம் அடித்துக் கொண்டனர்.அவர்கள் செயலில் ரதி சிரித்தாலும்!
“காதலின் வலி எனக்கும் தெரியும் மதி! அந்த ஆளை மறுபடியும் பார்க்குறது ரொம்ப கஷ்டமான காரியம். மனசக்தி நிறைய வேணும் அதற்கு!”
இத்தனை நாளில் ரதி இது போலெல்லாம் பேசியதில்லை, இவர்களிடத்தில்!
அந்த சூழ்நிலையை சகஜமாக்குவது போல்,
“ஐய்யோ ரதி..ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க.ஐயம் ஓகே நவ்.ஒருத்தர் பிடிக்கலைன்னு சொன்னா விட்டிடணும், அதுக்கு மேல் அதை பிடிச்சு தொல்லை படுத்த கூடாது என்பது தான் என் பாலிஸி! இப்ப நான் சொன்னது காமெடிக்கு . அதை சீரியஸா எடுத்து ஃபீல் பண்ணாதிங்க”
அந்த பேச்சை விட்டாள். ரதியால் அவள் சொல்வதை ஒத்துக் கொள்ள முயவில்லை! அப்படி எப்படி விட முடியும்? அப்படி விட்டால் அது உண்மைக் காதலாகுமோ? இந்த சூழ்நிலையில் அதை பற்றி மேலும் கிளறாமல்,
“யாரது வெண்பாவோட ஹீரோ , எனக்கும் காட்டுங்க” ஆவலாக கேட்டாள் ரதி! இத்தனை நாள் விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறாளே!
அவள் சொன்னவுடன் மதி வெண்பாவின் போனை எடுத்து தேட,
“இவ போட்டோ மட்டும் தான் இருக்கு!” நீண்ட தேடலுக்கு பிறகு “ஹாங் ஒன்னே ஒன்னு அதுவும் முகம் தெரியலை” என்று ரதியிடம் தந்தாள்..
கண்டதும் புரிந்து விட்டது யாரவனென்று! முகம் தெரியவில்லை என்றால் ரதியால் கண்டுபிடிக்க முடியாதா? அவள் தான் அவனை இன்ச் பை இன்ச் ரசித்திருக்கிறாளே!
அது விழியன்!
இதயத் துடிப்பு எக்குத் தப்பாய் எகிற ஆரம்பித்து விட்டது அவளுக்கு!
‘நீ என்னை நிஜமாவே மறந்துட்டே இல்ல விழியன்?’
நீண்ட நேரமாய் அதை வெறித்து கொண்டு அவள் நின்றதை, தோழிகள் இருவரும் கவனிக்கவில்லை..
அந்த இடத்தில் அவர்களின் மேனேஜர் வரும் வரை போனில் அவன் மேல் பார்வையை தொடுத்திருந்தாள்.
அவர் வரவும் சட்டென்று அனைவரும் வேலை பார்ப்பதை போல் அவரவர் கணிணி பக்கம் திரும்பி விட , ரதி மட்டும் வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“ரதிமீனா” அவள் முழு பெயரை சொல்லி அழைத்தான் பிரகாஷ்.
“யெஸ் பிரகாஷ்” என்றவள் முகத்தில் ஜீவனே இல்லை.
அவளிடம் பிராஜெக்ட் சம்மந்தமாய் பேசியபடி தனியே சற்று தள்ளி அழைத்துக் கொண்டுப் போனவன் , ஆள் இல்லா இடம் வந்ததும்,
“இன்னிக்கு என்னோட லன்சுக்கு வரியா ரதி?” என்றான்.
இப்படி அவன் அழைப்பது எத்தனையாவது முறை என்பது தெரியாது இருவருக்குமே! பிரகாஷ் சில மாதங்களாய் ரதியிடம் ஒரு தோழனாய் பழக முயன்று கொண்டிருக்கிறான். மிகவும் அமைதியான பெண். வேலையில் படு தீவிரமாய் இருப்பாள். எந்த வித வம்புத் தும்புக்கும் போவதில்லை..
தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவள்.யாரிடமும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதும் இல்லை. அவள் சுபாவம் அவனைக் கவர்ந்தது! பல மாதங்களாய் அவளிடம் பழக முயல்கிறவனை ஒதுக்கியே வைத்திருக்கிறாள்.
“ஸாரி பிரகாஷ் , ஐ ஹேவ் ஸம் வர்க். வேற எதுவும் விஷயம் இல்லைன்ன நான் கிளம்புறேன்!”
“ஓகே கேரி ஆன்” விலகிக் கொண்டான்!
அவனுக்கு அவள் பதிலில் கோவமில்லை, போகிறவளை பார்த்துக் கொண்டு நின்றான்!
பிரகாஷிடம் இருந்து தப்பித்து லிப்ட் பக்கம் வந்தவள் , திக்கே இல்லாத வானத்தை அங்கிருந்த கண்ணாடி வழியே வெறித்தாள்.
‘விழியன் விழியன்’ என்று மனம் ஜபிக்க ஆரம்பித்திருந்தது!
யோகா மையம் , தியானம் , கவுன்சலிங் என்று தந்தை அவளை சரி கட்டிய எல்லா வித்தைகளும் சுக்குனூறானது சில நிமிடங்களுக்கு முன்! அவன் இல்லாத வாழ்க்கை தன்னால் வாழ முடியாது என்று மீண்டும் முதல் புள்ளியில் வந்து நின்றுக் கொண்டது அவளின் மனம்!
‘வெண்பாவுடன் விழியனுக்கு திருமணமா? முடியாது, நடக்காது, அவன் எனக்குத் தான். நான் மட்டுமே அவன் மனைவி!’
சூழுரைத்துக் கொண்டவள் , தன் அடுத்த பணியை பார்க்க போய்விட்டாள்.
அட நீ வேற மா நிலைமை புரியாம! அதுகளே கல்யாணம் வேண்டாம் என்ற நினைப்பில் தான் இருக்குதுங்க என்று விதி சிரித்துக் கொண்டது!!
ennama nadakkuthu inga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top