• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kayam Kakkum Kasayangal - Inji saaru/Kasaayam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காயம் காக்கும் காசாயங்கள் - இஞ்சிச் சாறு/ காசாயம்

இஞ்சி என்றாலே ஒரு சிலர் அலறுவார்கள். அதன் காரம் அப்படி. ஆனால் உடலுக்கு எந்தத்தீங்கும் செய்யாத காரம் அது. செரிமானத்துக்கு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் கெட்ட நீரையும், டாக்சிக் எனப்படும் நச்சுப் பொருட்களையும் வெளியற்றும் தன்மை கொண்டது இஞ்சி. இதனை உணவில் துவையல், பச்சடி என சேர்த்துக்கொள்ளலாம். பிரசவம் ஆன பெண்களுக்கு 11 நாள் கழித்து காலை வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு அல்லது இஞ்சிக் கசாயம் தொடர்ந்து 40 நாட்கள் கொடுப்பது நல்லது. வயிற்றிலிருக்கும் கழிவுகளை வெளியேற்றி செரிமானத்தைத் தூண்டி பித்தத்தைக் கட்டுப்படுத்தும் இந்தக் கசாயம். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைககுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம். 8 வயதிலிருந்து அரை கிளாஸ் கொடுக்கலாம். பெரியவர்கள் தாராளமாக ஒரு கிளாஸ் அருந்தலாம். அதிகாலை வெறும் வயிற்றில் இதனை அருந்துவது நல்லது. இயலாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இதனைக் கொடுத்து வர துரித உணவுகள் உண்டதால் ஏற்பட்ட மந்தம், செரியாமை ஆகியவை நீங்கும், பித்த மாற்றத்தால் வரும் மயக்கம், தலை சுற்றல், சுரம் இவை நீங்கும். வளரும் குழந்தைகளுக்கு நல்ல பசியைத் தூண்டும். இஞ்சிச்சாறு அருந்தும் அன்று அசைவ உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மறு நாளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

இஞ்சிச் சாறு/ இஞ்சிக் காசாயம்

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 100 கிராம்
மிளகு - 10 எண்ணிக்கை
வெல்லம் அல்லது தேன் - தேவையான அளவு
சுத்தமான தண்ணீர் - 3 கிளாச்

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறு தூண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனை மிக்சியில் மிளகோடு சேர்த்துப் போட்டு அரை கிளாஸ் நீர் ஊற்றி நன்றாக அரைக்கவும். இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அதே போல மீதமுள்ள சக்கையை சிறிது நீர் ஊற்றி அடிக்கவும். இதே போல மூன்று முறை செய்யலாம். சக்கையை தூற எறிந்து விட்டு சாறை ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றவும். வெல்லத்தை பொடி செய்து சிறிது நீர் ஊற்றி அடுப்பில் சிம்மில் வைத்து சூடு செய்யவும்.அதிக நீர் விட வேண்டாம். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டவும். வெல்ல நீரை இஞ்சிச் சாற்றில் சூடோடு ஊற்றவும். ஒரு இரும்புக் கரண்டியின் காம்புப் பகுதியை அடுப்பில் வைத்து காய்ச்சவும். சூடு ஏறியதும் அந்தக் காம்பை அப்படியே இஞ்சி+வெல்லக் கரைசலில் வைக்கவும். சொர்ரென சத்தம் கேட்கும். இத்ற்கு சொரசம் செய்தல் என்று பெயர். இப்போது சாற்றில் இரும்புச் சத்தும் சேர்ந்து விடும். தேன் சேர்ப்பவர்கள் தேனை சுத்தமான இளம் சூடான வெந்நீரில் கலந்து கரைசலில் ஊற்றவும். கரைசலை நன்றாகக் கலக்கி அருந்தலாம். வாரம் ஒரு முறை இதனைச் செய்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் எடை குறையும். உடம்பில் கொழுப்பு சேராது.

இஞ்சிச் சாற்றை செய்து அருந்தி பயன் பெறுங்கள் அன்பு நண்பர்களே!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அருமையான மருந்து ரெசிப்பி,
ஸ்ரீஜா டியர்
ஒரு கூடுதல் தகவல்
அரைத்து எடுத்து வடிகட்டிய இஞ்சி சாறை அப்படியே சற்று நேரம் வைத்திருந்தால் தெளிந்து அடியில் சுண்ணாம்பு நிற்கும்
அது தேவையில்லை
சாறை மட்டும் எடுத்து கொதிக்க
வைத்து யூஸ் பண்ணலாம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
டியர் இஞ்சி சாறை கொதிக்க விட வேண்டாமா??
இஞ்சி சாறு கொதிக்க வேண்டும்
அப்புறம்தான் வெல்லம் தேன் கலக்கணும்ப்பா
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
டியர் இஞ்சி சாறை கொதிக்க விட வேண்டாமா??
நிச்சயம் கூடாது டியர். கொதிக்க வைத்தால் அதன் தன்மை போய் விடும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top