எப்படி மைதிலியுடன் பேசுவது?
மனம் ஒரு மாயாவி. ஒன்று வேண்டும் என்று போராட்டமாய் போராடும், அது கிடைத்தால் அதை வைத்துத் திருப்தியடையாமல் அடுத்த ஆசைக்குத் தாவிவிடும். அதே நிலை முகிலுக்கும் இப்போது.
மைதிலியுடன் அடிக்கடி பேச என்ன செய்யலாம் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. இதற்கெல்லாம் ஐடியா தருவதற்கு கார்த்தி தான் சரியான ஆள், ஆனால் இப்போது அவனிடம் பேசும் நிலை இல்லை.
தன் விஷயத்தை அன்று மாலை ஜெய்யிடம் சொல்ல மகிழ்ந்து போனான் அவன்.
“என்னண்னே இப்படி சொல்லாம கொள்ளாம நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டீங்க?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவனிடம்,
“எனக்கே அங்கே போன பிறகு தான் தெரியும் ஜெய். ஆனா என் மாமனார் கடைசியில், மைதிலி கூட கல்யாணம் வரைக்கும் ஃபோனில் பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு...” என்றான் வருத்தமாய்.
“அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிசு. இடத்தை கொடுத்தா மடத்தை கேப்பீங்களே. நம்ம சந்தோஷத்துக்கு தேவையான சாவியை யார்கிட்டையும் கொடுத்து வைக்காதேன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கண்ணே...”
“அட போடா, உனக்கு என் கஷ்டம் புரியாது...”
‘எனக்கா? நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்..' என்று அவன் எண்ணிக்கொண்டது முகிலுக்கு கேட்க வாய்ப்பில்லை. அதன் பின் திருமண பேச்சு வந்தது.
“ஜப்பான் விசா சீக்கிரம் கிடைச்சிடுமா, மைதிலி அக்காவுக்கு?” ஜெய் தன் சந்தேகத்தை ஆரம்பித்தான்.
“ம்ம், ஒரு வாரத்தில் கிடைச்சிடும்...”
“அந்த விஷயத்தை மறைச்சிடுங்க..”
“எதுக்கு? ஏன்?”
“அட, இப்ப தானே மைதிலி அக்காக்கிட்ட பேசணும்னு சொன்னீங்க. அதுக்கு தான்.”
முகிலுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “என்ன ஜெய் சொல்றே?” என்றான் புரியாது.
“விசா கிடைக்க நாளாகும்னு சொல்லி, ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிடுங்க. அஃபிசியலா பொண்டாட்டின்னு ஆயிடும்ல, அதுக்கப்புறம் எவர் தடுப்பது உங்களை...”
அவன் யோசனை நல்லதாகவே பட்டது. ஆனால் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா தெரியாதே...
“எப்படி இதெல்லாம் சரியா யோசிக்கிறே?” என்று அப்போதும் ஆச்சர்யமாய் கேட்க,
“இப்ப அதுவா முக்கியம், காரியத்தை பாருங்கண்ணே. யாராவது ரொம்ப கேள்வி கேட்டா, ஜப்பான் விசாவுக்கு ரொம்ப டைம் எடுக்கும்னு சொல்லிடுங்க. இப்ப எல்லாம் நிறைய தடவை சொன்னா மட்டும் தான் உண்மைன்னு ஒத்துக்குறாங்க.” என்றான் அசால்ட்டாய்.
“நல்ல ஐடியாவா இருக்கு, முயற்சி பண்றேன். என் ஹெட்மாஸ்டர் மாமனார்க்கிட்ட இதெல்லாம் செல்லுபடியாகுமான்னு தெரியலை.”
“இப்படி செஞ்சா, மாமனார் ஃபோனில் பேச விடுவார்னு தான் நினைக்கிறேன். அப்படியே அதை சாக்கா வச்சி மைதிலி அக்காவையும் நீங்க அடிக்கடி பார்க்கலாம்...”
“ஆமாம் ஜெய்...” உற்சாகமாய் துள்ளியவன், ஜெய்யை கட்டிக் கொண்டான்.
“அடச்சே ஒரு ஆம்பளையை போய், என்ன வேலை செய்றீங்க? இதுக்கு மேல நிக்கிறது எனக்குப் பாதுகாப்பில்லை” என்றபடி ஓடியவனை இவன் துரத்திக் கொண்டு கீழே ஓட, வீட்டு வாசலில் அவன் ஓட்டம் நின்றது. வளர்மதி, அவன் அக்கா வந்தாள் அவர்கள் வீட்டினுள்.
வளர்மதிக்கு, சாரதா நடந்த விஷயங்களைப் ஃபோனில் சொல்லிவிட்டார். அப்போதே தாயிடம் குதித்தவள் இப்போது தம்பியை நேரில் பார்க்கவும், அதே வெறித்தப் பார்வை பார்த்து வைத்தாள். முகிலுக்குத் தெரியும், வளர்மதி வந்தது நல்ல மனநிலையில் இல்லை என்பது.
“வாக்கா...” என்றவன் அவள் பையை வாங்கிய படி உள்ளே அழைத்துச் சென்றான்.
“அக்கா ஞாபகம் உனக்கு இருக்கு, அம்மா அப்பா தான் மறந்துட்டாங்க போலிருக்கு. சொந்த தம்பியோட நிச்சயத்துக்குக் கூட என்னை அழைக்கலை...”
உள்ளே அவள் பெற்றவர்களைப் பார்த்தபடி அவள் சொல்ல, சாரதாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மங்கம்மா ராணி வந்துட்டா, என்னவெல்லாம் பேச்சு பேசுவாளோ.?
அவள் நினைத்ததற்குச் சற்றும் மாறாமல், முகிலின் செயலையும் அதன் விளைவாய் பெற்றவர்கள் தன்னை நிராகரித்து நிச்சயத்தை நடத்தியதையும் சொல்லி ஆட்டமாய் ஆடினாள்.
முகில் தன் அறையில் ஒதுங்கிக் கொண்டாலும், ஹாலில் வளர்மதி பேசியது எல்லாம் நன்றாகவே கேட்டது. அவளும் இவன் கேட்க வேண்டும் என்றுதானே, பொரிந்து கொண்டிருந்தாள்.
வளர்மதி அவள் நாத்தனாரை இவன் தலையில் கட்டிவிட எண்ணியிருந்தது இப்போது நடக்காமல் போனதாம். அதில் அவளுக்கு ஏக வருத்தமாம்.
“அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்னு எவ்வளோ நினைச்சிருந்தேன், என் கனவெல்லாம் வீணா போச்சு...”
அவள் என்ன நல்ல நினைப்பிலா அப்படிச் செய்ய நினைக்கிறாள். தன் மாமியார் தன்னைப் படுத்துவதற்குப் பழிவாங்கும் விதமாய் அந்தப் பெண்ணை இவளும் செய்யலாம், தன் அன்னையுடன் கூட்டு சேர்ந்து என்ற நல்லெண்ணம்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி, எத்தனை உண்மை. இவளை ஒரு வீட்டில் கொடுமைப்படுத்துவதே அவர்கள் செய்யும் பாவம் என்று முகில் எண்ணிக் கொண்டிருக்க அதே போல் ஒரு பாவத்தை அவனை வைத்துச் செய்துவிட எண்ணியிருந்தாளே வளர்மதி.
எத்தனை கீழ்தரமான எண்ணம்? சுயநலமும் கூட. எவன் வாழ்க்கை எப்படியானாலும் பரவாயில்லை, தனக்குப் பழிவாங்கிவிட வேண்டும். ஆனால் வளர்மதி கொடுக்கும் எக்ஸ்ட்ரா பில்டப் எல்லாம் முகிலிடமும், பத்மநாதனிடமும் எப்போதும் போல் இப்போதும் செல்லு படியாகவில்லை.
அவர்களுக்குத் தெரிந்தது, இவள் முரணாய் பேசுகிறாள் என்று. முகில் சற்று நேரம் அமைதியாய் இருந்து பார்த்தான், ஆனால் இப்போது வளர்மதியின் பேச்சு ஜாஸ்தியாகவும் அவள் அருகில் வந்தவன்,
“அக்கா நீயா ஒரு விஷயத்தைக் கற்பனை பண்ணிக்கிட்டு அது நடக்கலைன்னு வந்து புலம்பாதே. அப்படி வருத்தப்பட்டு என் கல்யாணத்துக்கும் நீ வரவும் தேவையில்லை... மாமா மட்டும் வந்து என்னை ஆசீர்வாதம் பண்ணா போதும்.” என்றான்..
“என்னடா தம்பி, இப்...” அவள் பதில் பேச ஆரம்பிக்கையில்,
“எத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்தக் கல்யாணம் முடிவாகியிருக்குன்னு உனக்குத் தெரியுமா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேச கூடாது...” என்றான் எரிச்சலாய்.
மனம் ஒரு மாயாவி. ஒன்று வேண்டும் என்று போராட்டமாய் போராடும், அது கிடைத்தால் அதை வைத்துத் திருப்தியடையாமல் அடுத்த ஆசைக்குத் தாவிவிடும். அதே நிலை முகிலுக்கும் இப்போது.
மைதிலியுடன் அடிக்கடி பேச என்ன செய்யலாம் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. இதற்கெல்லாம் ஐடியா தருவதற்கு கார்த்தி தான் சரியான ஆள், ஆனால் இப்போது அவனிடம் பேசும் நிலை இல்லை.
தன் விஷயத்தை அன்று மாலை ஜெய்யிடம் சொல்ல மகிழ்ந்து போனான் அவன்.
“என்னண்னே இப்படி சொல்லாம கொள்ளாம நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டீங்க?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவனிடம்,
“எனக்கே அங்கே போன பிறகு தான் தெரியும் ஜெய். ஆனா என் மாமனார் கடைசியில், மைதிலி கூட கல்யாணம் வரைக்கும் ஃபோனில் பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு...” என்றான் வருத்தமாய்.
“அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிசு. இடத்தை கொடுத்தா மடத்தை கேப்பீங்களே. நம்ம சந்தோஷத்துக்கு தேவையான சாவியை யார்கிட்டையும் கொடுத்து வைக்காதேன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கண்ணே...”
“அட போடா, உனக்கு என் கஷ்டம் புரியாது...”
‘எனக்கா? நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்..' என்று அவன் எண்ணிக்கொண்டது முகிலுக்கு கேட்க வாய்ப்பில்லை. அதன் பின் திருமண பேச்சு வந்தது.
“ஜப்பான் விசா சீக்கிரம் கிடைச்சிடுமா, மைதிலி அக்காவுக்கு?” ஜெய் தன் சந்தேகத்தை ஆரம்பித்தான்.
“ம்ம், ஒரு வாரத்தில் கிடைச்சிடும்...”
“அந்த விஷயத்தை மறைச்சிடுங்க..”
“எதுக்கு? ஏன்?”
“அட, இப்ப தானே மைதிலி அக்காக்கிட்ட பேசணும்னு சொன்னீங்க. அதுக்கு தான்.”
முகிலுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “என்ன ஜெய் சொல்றே?” என்றான் புரியாது.
“விசா கிடைக்க நாளாகும்னு சொல்லி, ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிடுங்க. அஃபிசியலா பொண்டாட்டின்னு ஆயிடும்ல, அதுக்கப்புறம் எவர் தடுப்பது உங்களை...”
அவன் யோசனை நல்லதாகவே பட்டது. ஆனால் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா தெரியாதே...
“எப்படி இதெல்லாம் சரியா யோசிக்கிறே?” என்று அப்போதும் ஆச்சர்யமாய் கேட்க,
“இப்ப அதுவா முக்கியம், காரியத்தை பாருங்கண்ணே. யாராவது ரொம்ப கேள்வி கேட்டா, ஜப்பான் விசாவுக்கு ரொம்ப டைம் எடுக்கும்னு சொல்லிடுங்க. இப்ப எல்லாம் நிறைய தடவை சொன்னா மட்டும் தான் உண்மைன்னு ஒத்துக்குறாங்க.” என்றான் அசால்ட்டாய்.
“நல்ல ஐடியாவா இருக்கு, முயற்சி பண்றேன். என் ஹெட்மாஸ்டர் மாமனார்க்கிட்ட இதெல்லாம் செல்லுபடியாகுமான்னு தெரியலை.”
“இப்படி செஞ்சா, மாமனார் ஃபோனில் பேச விடுவார்னு தான் நினைக்கிறேன். அப்படியே அதை சாக்கா வச்சி மைதிலி அக்காவையும் நீங்க அடிக்கடி பார்க்கலாம்...”
“ஆமாம் ஜெய்...” உற்சாகமாய் துள்ளியவன், ஜெய்யை கட்டிக் கொண்டான்.
“அடச்சே ஒரு ஆம்பளையை போய், என்ன வேலை செய்றீங்க? இதுக்கு மேல நிக்கிறது எனக்குப் பாதுகாப்பில்லை” என்றபடி ஓடியவனை இவன் துரத்திக் கொண்டு கீழே ஓட, வீட்டு வாசலில் அவன் ஓட்டம் நின்றது. வளர்மதி, அவன் அக்கா வந்தாள் அவர்கள் வீட்டினுள்.
வளர்மதிக்கு, சாரதா நடந்த விஷயங்களைப் ஃபோனில் சொல்லிவிட்டார். அப்போதே தாயிடம் குதித்தவள் இப்போது தம்பியை நேரில் பார்க்கவும், அதே வெறித்தப் பார்வை பார்த்து வைத்தாள். முகிலுக்குத் தெரியும், வளர்மதி வந்தது நல்ல மனநிலையில் இல்லை என்பது.
“வாக்கா...” என்றவன் அவள் பையை வாங்கிய படி உள்ளே அழைத்துச் சென்றான்.
“அக்கா ஞாபகம் உனக்கு இருக்கு, அம்மா அப்பா தான் மறந்துட்டாங்க போலிருக்கு. சொந்த தம்பியோட நிச்சயத்துக்குக் கூட என்னை அழைக்கலை...”
உள்ளே அவள் பெற்றவர்களைப் பார்த்தபடி அவள் சொல்ல, சாரதாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மங்கம்மா ராணி வந்துட்டா, என்னவெல்லாம் பேச்சு பேசுவாளோ.?
அவள் நினைத்ததற்குச் சற்றும் மாறாமல், முகிலின் செயலையும் அதன் விளைவாய் பெற்றவர்கள் தன்னை நிராகரித்து நிச்சயத்தை நடத்தியதையும் சொல்லி ஆட்டமாய் ஆடினாள்.
முகில் தன் அறையில் ஒதுங்கிக் கொண்டாலும், ஹாலில் வளர்மதி பேசியது எல்லாம் நன்றாகவே கேட்டது. அவளும் இவன் கேட்க வேண்டும் என்றுதானே, பொரிந்து கொண்டிருந்தாள்.
வளர்மதி அவள் நாத்தனாரை இவன் தலையில் கட்டிவிட எண்ணியிருந்தது இப்போது நடக்காமல் போனதாம். அதில் அவளுக்கு ஏக வருத்தமாம்.
“அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்னு எவ்வளோ நினைச்சிருந்தேன், என் கனவெல்லாம் வீணா போச்சு...”
அவள் என்ன நல்ல நினைப்பிலா அப்படிச் செய்ய நினைக்கிறாள். தன் மாமியார் தன்னைப் படுத்துவதற்குப் பழிவாங்கும் விதமாய் அந்தப் பெண்ணை இவளும் செய்யலாம், தன் அன்னையுடன் கூட்டு சேர்ந்து என்ற நல்லெண்ணம்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி, எத்தனை உண்மை. இவளை ஒரு வீட்டில் கொடுமைப்படுத்துவதே அவர்கள் செய்யும் பாவம் என்று முகில் எண்ணிக் கொண்டிருக்க அதே போல் ஒரு பாவத்தை அவனை வைத்துச் செய்துவிட எண்ணியிருந்தாளே வளர்மதி.
எத்தனை கீழ்தரமான எண்ணம்? சுயநலமும் கூட. எவன் வாழ்க்கை எப்படியானாலும் பரவாயில்லை, தனக்குப் பழிவாங்கிவிட வேண்டும். ஆனால் வளர்மதி கொடுக்கும் எக்ஸ்ட்ரா பில்டப் எல்லாம் முகிலிடமும், பத்மநாதனிடமும் எப்போதும் போல் இப்போதும் செல்லு படியாகவில்லை.
அவர்களுக்குத் தெரிந்தது, இவள் முரணாய் பேசுகிறாள் என்று. முகில் சற்று நேரம் அமைதியாய் இருந்து பார்த்தான், ஆனால் இப்போது வளர்மதியின் பேச்சு ஜாஸ்தியாகவும் அவள் அருகில் வந்தவன்,
“அக்கா நீயா ஒரு விஷயத்தைக் கற்பனை பண்ணிக்கிட்டு அது நடக்கலைன்னு வந்து புலம்பாதே. அப்படி வருத்தப்பட்டு என் கல்யாணத்துக்கும் நீ வரவும் தேவையில்லை... மாமா மட்டும் வந்து என்னை ஆசீர்வாதம் பண்ணா போதும்.” என்றான்..
“என்னடா தம்பி, இப்...” அவள் பதில் பேச ஆரம்பிக்கையில்,
“எத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்தக் கல்யாணம் முடிவாகியிருக்குன்னு உனக்குத் தெரியுமா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேச கூடாது...” என்றான் எரிச்சலாய்.