அத்தியாயம் 8
வேலையில் மனம் லயிக்கவில்லை. இந்தச் சமுதாயக் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டி தன் காதலையும் பிரித்து விடுவார்களோ என்ற ஐயமே அவனை பாடாய் படுத்தியது. மைதிலியிடம் பேச எண்ணி, அவள் எண்ணிற்கு அழைக்க வழக்கம்போல் எடுக்கவில்லை. இந்தக் களேபரங்கள் நடந்த சமயத்தில் கார்த்தியும் ஜப்பானில் தான் இருந்தான். அவனுக்கு மைதிலி விஷயம் எதுவும் சொல்லியிருக்கவில்லை இதுவரை.
முகிலுக்கு மைதிலியிடம் பேசுவது இயலாத ஒன்றாய் ஆகிப்போனது. அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்பது அவளாகப் ஃபோன் செய்யும் சமயங்களில் மட்டுமே அறிந்து கொண்டான். தன் தந்தை தனக்கு ஆதரவளிப்பார் என்று இருந்தவனுக்கு அவர் பேசியது நம்ப முடியவில்லை. ஒரு நாள் போனில் பிடித்தான் மைதிலியை.
“முகில் அப்பா சம்மதிக்கலைன்னா என்ன பண்ணட்டும்..?”
“மைதிலி அவசரப்படாதே, இன்னும் கொஞ்ச நாள் பொறு..”
“உங்களுக்குப் புரியுதா இல்லையா? எங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்குறாங்க...” என்று அவள் சொன்னதற்கு,
“ம்ம், நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன்...” என்றான், எதுவும் தோன்றாமல்.
“யோசிக்க எல்லாம் அவகாசம் இல்லை...நான் சொல்றதை கேளுங்க, எப்படியாவது சென்னை வரை வந்திடுறேன், அங்க இருந்து என்னைக் கூப்பிட்டு போங்க”
“என்ன டி பேசுறே? சென்னை என்ன ஜப்பானுக்குப் பக்கத்திலா இருக்கு?”
“நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்...”
“மைதிலி கிவ் மீ சம் டைம்...”
அதன்பின் அவள் சொல்லை மீற வழி இல்லாமல் சில திட்டங்கள் போட்டுவைத்து, சென்னை வரை வந்து அவளை அழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவெடுத்தான்.
என்ன யோசித்து என்ன, அவள் கிளம்பிய சமயம் சரியாக தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலேயே தன் தந்தையிடம் வசமாக மாட்டினாள் மைதிலி. குணசீலன் என்ன இதை எல்லாம் அறியாதவரா? அவரைத் தாண்டி மைதிலி செல்ல முடியாதே.
இதுவரை தன் மகளை அடித்திடாதவர் அவளின் இந்தச் செய்கையால் ஆத்திரமாகி கை நீட்டிவிட்டார். கன்னம் பழுத்திடும் என்ற வாசகம் கேள்விப்பட்டிருக்கிறான் மாதவன் ஆனால் இம்முறை அக்காள் தம்பி இருவருக்குமே அது நடந்தது.
அவள் சென்னை கிளம்பிவிட்டாளா என்று அறிந்து கொள்ள அவள் எண்ணிற்கு அழைக்க, முகில் பேசியது சாட்சாத் குணசீலனோடு தான்.
“ஹலோ மைதிலி...” என்று ஆரம்பித்தவனை,
“ஒழுங்கா உயிர் பிழைக்கிற வழியைப் பார்...” என்று கோபமாய் பேசிவிட்டு அவன் பதில் பேசுவதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.
முகில் தன் காதலியின் பிரச்சனையில் ஏற்கனவே உழன்று கொண்டிருக்கும் சமயம், கார்த்தியின் போக்கும் சரி இல்லாமல் போனது. சதாசர்வ காலமும் கொண்டாட்டங்களில் ஊறிப் போயிருந்தவனை கண்டிக்காமலிருக்க அவனால் முடியவில்லை. இதன் காரணமாய் கார்த்தியிடம் தன் எரிச்சலைக் காட்ட, அது பிடிக்காமல் கார்த்தி முகிலிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்தான்.
நண்பர்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தையும் நின்றுவிட்ட நிலையில்,
“முகில் நான் என் மத்த பிரண்ட்ஸோட போய்த் தங்கிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...” என்று தன் துணிகளை எடுத்து வைத்தபடி சொன்னான்.
தனக்கென்று இருந்த ஒற்றை நண்பன், அவனும் செல்கிறான். ‘நீ தானே வேறு வீடு பார்த்து போ என்றாய்?’ மனசாட்சி அழகாய் ஞாபகப்படுத்தியது. நன்மைக்குச் சொன்னதை தவறாக எண்ணிக்கொண்டானே. எல்லாப் பக்கமும் சோதனையாக இருந்தது முகிலுக்கு.
விட்டு விலகவேண்டும் என்று எண்ணிவிட்டவனைப் பிடித்து வைக்கவா முடியும்?
“ஓகே கார்த்தி...” என்றவன், தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போல் தான் செய்துகொண்டிருந்தப் பணியைத் தொடர்ந்தான்.
தன் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்க, கார்த்தி விஷயத்தை மேலும் ஆராயவில்லை.
வேலையில் மனம் லயிக்கவில்லை. இந்தச் சமுதாயக் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டி தன் காதலையும் பிரித்து விடுவார்களோ என்ற ஐயமே அவனை பாடாய் படுத்தியது. மைதிலியிடம் பேச எண்ணி, அவள் எண்ணிற்கு அழைக்க வழக்கம்போல் எடுக்கவில்லை. இந்தக் களேபரங்கள் நடந்த சமயத்தில் கார்த்தியும் ஜப்பானில் தான் இருந்தான். அவனுக்கு மைதிலி விஷயம் எதுவும் சொல்லியிருக்கவில்லை இதுவரை.
முகிலுக்கு மைதிலியிடம் பேசுவது இயலாத ஒன்றாய் ஆகிப்போனது. அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்பது அவளாகப் ஃபோன் செய்யும் சமயங்களில் மட்டுமே அறிந்து கொண்டான். தன் தந்தை தனக்கு ஆதரவளிப்பார் என்று இருந்தவனுக்கு அவர் பேசியது நம்ப முடியவில்லை. ஒரு நாள் போனில் பிடித்தான் மைதிலியை.
“முகில் அப்பா சம்மதிக்கலைன்னா என்ன பண்ணட்டும்..?”
“மைதிலி அவசரப்படாதே, இன்னும் கொஞ்ச நாள் பொறு..”
“உங்களுக்குப் புரியுதா இல்லையா? எங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்குறாங்க...” என்று அவள் சொன்னதற்கு,
“ம்ம், நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன்...” என்றான், எதுவும் தோன்றாமல்.
“யோசிக்க எல்லாம் அவகாசம் இல்லை...நான் சொல்றதை கேளுங்க, எப்படியாவது சென்னை வரை வந்திடுறேன், அங்க இருந்து என்னைக் கூப்பிட்டு போங்க”
“என்ன டி பேசுறே? சென்னை என்ன ஜப்பானுக்குப் பக்கத்திலா இருக்கு?”
“நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்...”
“மைதிலி கிவ் மீ சம் டைம்...”
அதன்பின் அவள் சொல்லை மீற வழி இல்லாமல் சில திட்டங்கள் போட்டுவைத்து, சென்னை வரை வந்து அவளை அழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவெடுத்தான்.
என்ன யோசித்து என்ன, அவள் கிளம்பிய சமயம் சரியாக தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலேயே தன் தந்தையிடம் வசமாக மாட்டினாள் மைதிலி. குணசீலன் என்ன இதை எல்லாம் அறியாதவரா? அவரைத் தாண்டி மைதிலி செல்ல முடியாதே.
இதுவரை தன் மகளை அடித்திடாதவர் அவளின் இந்தச் செய்கையால் ஆத்திரமாகி கை நீட்டிவிட்டார். கன்னம் பழுத்திடும் என்ற வாசகம் கேள்விப்பட்டிருக்கிறான் மாதவன் ஆனால் இம்முறை அக்காள் தம்பி இருவருக்குமே அது நடந்தது.
அவள் சென்னை கிளம்பிவிட்டாளா என்று அறிந்து கொள்ள அவள் எண்ணிற்கு அழைக்க, முகில் பேசியது சாட்சாத் குணசீலனோடு தான்.
“ஹலோ மைதிலி...” என்று ஆரம்பித்தவனை,
“ஒழுங்கா உயிர் பிழைக்கிற வழியைப் பார்...” என்று கோபமாய் பேசிவிட்டு அவன் பதில் பேசுவதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.
முகில் தன் காதலியின் பிரச்சனையில் ஏற்கனவே உழன்று கொண்டிருக்கும் சமயம், கார்த்தியின் போக்கும் சரி இல்லாமல் போனது. சதாசர்வ காலமும் கொண்டாட்டங்களில் ஊறிப் போயிருந்தவனை கண்டிக்காமலிருக்க அவனால் முடியவில்லை. இதன் காரணமாய் கார்த்தியிடம் தன் எரிச்சலைக் காட்ட, அது பிடிக்காமல் கார்த்தி முகிலிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்தான்.
நண்பர்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தையும் நின்றுவிட்ட நிலையில்,
“முகில் நான் என் மத்த பிரண்ட்ஸோட போய்த் தங்கிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...” என்று தன் துணிகளை எடுத்து வைத்தபடி சொன்னான்.
தனக்கென்று இருந்த ஒற்றை நண்பன், அவனும் செல்கிறான். ‘நீ தானே வேறு வீடு பார்த்து போ என்றாய்?’ மனசாட்சி அழகாய் ஞாபகப்படுத்தியது. நன்மைக்குச் சொன்னதை தவறாக எண்ணிக்கொண்டானே. எல்லாப் பக்கமும் சோதனையாக இருந்தது முகிலுக்கு.
விட்டு விலகவேண்டும் என்று எண்ணிவிட்டவனைப் பிடித்து வைக்கவா முடியும்?
“ஓகே கார்த்தி...” என்றவன், தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போல் தான் செய்துகொண்டிருந்தப் பணியைத் தொடர்ந்தான்.
தன் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்க, கார்த்தி விஷயத்தை மேலும் ஆராயவில்லை.