அத்தியாயம் 12
அந்த முதியவன் முகில் நினைத்திருந்ததை விட, வலிமையுடவனாக இருந்தான். சுற்றி இருந்த மக்கள் சண்டையை வேடிக்கை பார்த்தனரே ஒழிய, யாரும் முகிலின் உதவிக்கு வரவில்லை.
கண்மணியை அவனிடமிருந்து பிரிக்க முகில் போராடிக் கொண்டிருக்கையில், எங்கிருந்தோ அங்கு வந்தார் குணசீலன், முகிலின் மாமனார்.
“டேய் யாரடா நீ? என் மாப்பிள்ளை மேல் கையை வைக்கிறது...” என்று முகிலிடம் இருந்து அந்த ஆசாமியை கீழே தள்ளினார்.
அவர் சொன்ன ஒற்றைச் சொல்லுக்கு, அவருடன் வந்தவர்களும் மற்றவர்களும் சேர்ந்து அந்த முதியவனை நையப்புடைந்தனர். முகிலின் பின்னால் வந்தப் பெண்ணை பார்த்தபடி குணசீலன்,
“மாப்பிள்ளை நீங்க ஊரில் இருந்து வந்த விஷயமே எனக்குத் தெரியாது. எப்போ வந்தீங்க?”
“நேற்று தான்...”
குணசீலனுக்கு யார் இந்தப் பெண் என்று தெரிய வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து முகிலிடம் பேசியபடி அவனின் வாகனம் நின்ற இடம் வரை வந்துவிட்டார்.
சாரதா கண்மணியை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்க, குணசீலனைக் கண்டுவிட்டு பத்மநாதனும் இறங்கினார்.
“என்ன சம்மந்தி, இந்தப் பக்கம்...?” என்று பத்மநாதன் கேட்க,
“நம்ம பையன் மாதவன், சென்னை போறான், அதான் வழியனுப்பி விட வந்தேன். இங்க பார்த்தா பஸ் ஸ்டாண்டில் மாப்பிள்ளையோட எவனோ மல்லுக்கு இருக்கான்... யார் மாப்பிள்ளை அது?” என்றார் காரியமாய்.
பத்மநாதனும் பதறியபடி, “என்னப்பா ஆச்சு, யார் அது?” என்று கேட்க,
“எனக்கும் தெரியாது..” என்றவன் கண்மணியை பார்த்து வைத்தான், அவளிடம் மட்டும் பதில் உண்டு என்பது போல்.
கண்மணி சாரதாவை பார்த்தபடி, “அவர் என் மாமா. என் அக்கா கணவரோட அண்ணன். அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தொந்தரவு செஞ்சவர் கிட்ட இருந்து தப்பித்து தான் இங்க வந்தேன்...”
குணசீலனிடம் பத்மநாதன் இதுவரை நடந்தவற்றைச் சொல்ல, கேட்டு முடித்தவர், “இந்த பார் ம்மா கண்மணி, இந்த நிலையில் நீ தனியே எங்கயும் போறது சரியில்லை...” என்றுசொல்ல,
சாரதாவும் உடன்சேர்ந்து, “ஆமாங்க நீங்க சொன்னது சரிதான். பிரச்சனை சரியாகும் வரை எங்க வீட்டில் அவளை வச்சிக்கிறோம்...” என்றார் வேகமாய்.
குணசீலன் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டார். வீடு போனதும் அவளை ஒரு அறையில் தங்கவைத்துவிட்டு முகிலும் அவன் தந்தையும் இருந்த இடத்துக்கு வந்த சாரதாவை,
“அம்மா நீங்க யோசிக்காம என்ன காரியம் பண்றீங்க? யாரோ ஒரு பொண்ணை வீட்டுக்குள்ள சேர்க்குறது நல்லாவா இருக்கு? அதுலயும் நான் வேற இருக்கேன். இது சரியில்லைம்மா...” என்று கடிய,
தந்தை அவனுக்கு ஒத்து ஊதுவார் என்று எண்ணியிருக்க, அவரோ சாரதாவை கேள்வியாகப் பார்த்தபடி இருந்தார். அவரோ அவன் கொடுத்த அத்தனை திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு,
“இதை பார், அந்த பெண்ணோட செர்ட்டிபிகேட்ஸ். கட்டாய கல்யாணத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கா. கொஞ்ச நாள் அடைக்கலம் கொடுப்போம். நமக்கு அவளால ஒரு கஷ்டமும் வராது. நான் உறுதியா சொல்றேன்...” என்று ஒரு முடிவோடு சொல்ல,
“அம்மா நீங்க என்ன சொன்னாலும் நம்ம வீட்டில் அந்த பொண்ணு தங்குறது எனக்கு சரியா படலை...” என்றான் பார்வையை எங்கோ பதித்து.
“இரண்டு நாள் இருக்கட்டும் முகில், அப்புறம் ஏதாவது வழி செய்வோம்...”
இரண்டு நாளும் கடந்தது. அவன் வீடே அவனுக்கு அன்னியமாகப் பட்டது. சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை வீட்டினுள் விட்டிருந்தனர். அவனால் நிம்மதியாக நடமாடக் கூட முடியவில்லை.
“அம்மா ஆபிஸ் வேலையா சென்னை போறேன், வர இரண்டு நாள் ஆகும்...”
“இத்தனை நாள் இல்லாத ஆபிஸ் வேலை என்ன திடீர்னு...?” என்று பத்மநாதன் சரியாய் கேட்க,
“இருக்குப்பா, அது சொன்னா உங்களுக்குப் புரியாது. நான் திரும்பி வரும் போது அந்த பொண்ணு இங்க இருக்க கூடாது...” என்று சொல்லி, அவர்கள் அவனைத் தடுக்கும் முன் வெளியேறிவிட்டான்.
அவன் சொன்னது போல் ஆபிஸ் வேலையெல்லாம் இல்லை. அவனுக்கு இடமாற்றம் வேண்டியிருந்தது. வெளியூரில் இருந்து ஃபோன் செய்தவன் சாரதாவிடம் மறுபடியும் கறாராக சொல்லி விட்டான்.
‘நான் வரும் போது அந்த பொண்ணு அங்க இருக்கக் கூடாது. ’ என்று.
சாரதா கேட்பாரா?
இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஒரு மதியம் ஊருக்குத் திரும்பினான். அம்மா அப்பா அந்தப் பெண்ணை அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்தபடி அவன் வர,
ஹாலில் நடுநாயகமாய் அவன் மாமனார் மாமியார் இருக்க, ‘வாங்க...’ என்று சொன்னதோடு அவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
எதற்காக வந்திருக்கிறார்கள்? மைதிலி விஷயம் எதையும் நினைவுபடுத்தி விடுவார்களோ என்று தான் அவன் ஒதுங்கிக்கொண்டதே. சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பப் போவதாக சாரதா வந்து அழைக்க, அங்கு அவர்களிடம் சென்றான்.
குணசீலன் அவன் கைபற்றி, “போனவளையே நினைச்சு உங்க வாழ்க்கையை தொலைக்காதீங்க மாப்பிள்ளை. உங்க பிள்ளைக்காகவாது நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்...” என்று அழுதார்.
அவரைத் தொடர்ந்து லட்சுமியும். இவர்களின் செய்கையால் அவனுக்கும் கண்ணில் நீர் எட்டி பார்த்தது.
“நாங்க எங்க மகனோட போய் கொஞ்ச நாள் இருக்கலாம்னு இருக்கோம். இனி உங்க குழந்தையை நாங்க பார்த்துகிறது கொஞ்சம் சிரமம். அதுவுமில்லாம அப்பாக் கூட இருக்கிறது தான் அவளுக்கு நல்லது.”
இவர்கள் பேசியிருந்த சமயம் பத்மநாபன் அவனின் பிள்ளையைத் தூக்கி வைத்திருந்ததைப் பார்த்தான். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“மாமா என்னால அவளை வளர்க்க முடியாது...” என்று சொல்லி முடிக்கையில் அவனருகில் வந்த சாரதா அப்பேச்சை இடைமறித்தார்.
“என்னடா பேசுற நீ? நாம தான் வளர்க்கணும். அவங்க இவ்வளவு நாளும் பார்த்துக்கிட்டதே பெரிய விஷயம்.”
அவர்கள் முன் வைத்து அன்னையிடம் வாதிட அவன் விரும்பவில்லை. ஆக மௌனமாய் நிற்க, மற்றவர்கள் மேலும் சற்று நேரம் பேசியிருந்துவிட்டு,
“போயிட்டு வரேன் ராஜாத்தி, இந்தத் தாத்தனை மறந்துடாதே...” என்று தன் பேத்தியை கடைசி முறை போல் கன்னம் கிள்ளிவிட்டு சென்றார் குணசீலன்.
வாசல் வரை உடன் சென்ற சாரதாவிடம், லட்சுமி எதையோ சொல்ல, இவரும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார். பத்மநாதன் குழந்தையுடன் அவன் அருகில் வந்து,
“அப்பா பாரு குட்டி, அப்பா சொல்லு...” என்று, இவனை காட்டி சொல்ல அத்தனை எரிச்சலான முகத்தைக் காட்டினான் முகில்.
‘எல்லாம் இவளால் தான்’ தேவையில்லாமல் அந்தப் பிஞ்சின் மேல் அவன் ஆத்திரம் பாய்ந்தது.
முகம் இறுக, எவ்வித பதிலும் கூறாமல் இருந்தான். இவன் அறைக்குச் செல்லும் முன் பார்த்த கடைசி விஷயம், அம்மாவும் அப்பாவும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருந்ததை.
முகில் அறையில் சென்று கதவடைத்துக் கொண்டான். எங்கெங்கோ சென்று சுற்றிவிட்டுச் சரி செய்த அவன் மனம் இப்போது குழந்தையைக் கண்டதும் அதே பழைய நிலைக்குச் சென்றது.
மைதிலியின் நினைவுகள் மறுபடியும் சுழல ஆரம்பித்தது. அவளை மறக்க முடியவில்லை.
‘ஏன் டி, இந்தப் பிள்ளைக்காக என்னை விட்டிட்டு போனே?’ என்று எண்ணியவனை,
“முகில் முகில்...” என்று சாரதா அழைத்தக் குரலுக்கு அங்குச் செல்ல,
அந்த முதியவன் முகில் நினைத்திருந்ததை விட, வலிமையுடவனாக இருந்தான். சுற்றி இருந்த மக்கள் சண்டையை வேடிக்கை பார்த்தனரே ஒழிய, யாரும் முகிலின் உதவிக்கு வரவில்லை.
கண்மணியை அவனிடமிருந்து பிரிக்க முகில் போராடிக் கொண்டிருக்கையில், எங்கிருந்தோ அங்கு வந்தார் குணசீலன், முகிலின் மாமனார்.
“டேய் யாரடா நீ? என் மாப்பிள்ளை மேல் கையை வைக்கிறது...” என்று முகிலிடம் இருந்து அந்த ஆசாமியை கீழே தள்ளினார்.
அவர் சொன்ன ஒற்றைச் சொல்லுக்கு, அவருடன் வந்தவர்களும் மற்றவர்களும் சேர்ந்து அந்த முதியவனை நையப்புடைந்தனர். முகிலின் பின்னால் வந்தப் பெண்ணை பார்த்தபடி குணசீலன்,
“மாப்பிள்ளை நீங்க ஊரில் இருந்து வந்த விஷயமே எனக்குத் தெரியாது. எப்போ வந்தீங்க?”
“நேற்று தான்...”
குணசீலனுக்கு யார் இந்தப் பெண் என்று தெரிய வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து முகிலிடம் பேசியபடி அவனின் வாகனம் நின்ற இடம் வரை வந்துவிட்டார்.
சாரதா கண்மணியை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்க, குணசீலனைக் கண்டுவிட்டு பத்மநாதனும் இறங்கினார்.
“என்ன சம்மந்தி, இந்தப் பக்கம்...?” என்று பத்மநாதன் கேட்க,
“நம்ம பையன் மாதவன், சென்னை போறான், அதான் வழியனுப்பி விட வந்தேன். இங்க பார்த்தா பஸ் ஸ்டாண்டில் மாப்பிள்ளையோட எவனோ மல்லுக்கு இருக்கான்... யார் மாப்பிள்ளை அது?” என்றார் காரியமாய்.
பத்மநாதனும் பதறியபடி, “என்னப்பா ஆச்சு, யார் அது?” என்று கேட்க,
“எனக்கும் தெரியாது..” என்றவன் கண்மணியை பார்த்து வைத்தான், அவளிடம் மட்டும் பதில் உண்டு என்பது போல்.
கண்மணி சாரதாவை பார்த்தபடி, “அவர் என் மாமா. என் அக்கா கணவரோட அண்ணன். அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தொந்தரவு செஞ்சவர் கிட்ட இருந்து தப்பித்து தான் இங்க வந்தேன்...”
குணசீலனிடம் பத்மநாதன் இதுவரை நடந்தவற்றைச் சொல்ல, கேட்டு முடித்தவர், “இந்த பார் ம்மா கண்மணி, இந்த நிலையில் நீ தனியே எங்கயும் போறது சரியில்லை...” என்றுசொல்ல,
சாரதாவும் உடன்சேர்ந்து, “ஆமாங்க நீங்க சொன்னது சரிதான். பிரச்சனை சரியாகும் வரை எங்க வீட்டில் அவளை வச்சிக்கிறோம்...” என்றார் வேகமாய்.
குணசீலன் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டார். வீடு போனதும் அவளை ஒரு அறையில் தங்கவைத்துவிட்டு முகிலும் அவன் தந்தையும் இருந்த இடத்துக்கு வந்த சாரதாவை,
“அம்மா நீங்க யோசிக்காம என்ன காரியம் பண்றீங்க? யாரோ ஒரு பொண்ணை வீட்டுக்குள்ள சேர்க்குறது நல்லாவா இருக்கு? அதுலயும் நான் வேற இருக்கேன். இது சரியில்லைம்மா...” என்று கடிய,
தந்தை அவனுக்கு ஒத்து ஊதுவார் என்று எண்ணியிருக்க, அவரோ சாரதாவை கேள்வியாகப் பார்த்தபடி இருந்தார். அவரோ அவன் கொடுத்த அத்தனை திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு,
“இதை பார், அந்த பெண்ணோட செர்ட்டிபிகேட்ஸ். கட்டாய கல்யாணத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கா. கொஞ்ச நாள் அடைக்கலம் கொடுப்போம். நமக்கு அவளால ஒரு கஷ்டமும் வராது. நான் உறுதியா சொல்றேன்...” என்று ஒரு முடிவோடு சொல்ல,
“அம்மா நீங்க என்ன சொன்னாலும் நம்ம வீட்டில் அந்த பொண்ணு தங்குறது எனக்கு சரியா படலை...” என்றான் பார்வையை எங்கோ பதித்து.
“இரண்டு நாள் இருக்கட்டும் முகில், அப்புறம் ஏதாவது வழி செய்வோம்...”
இரண்டு நாளும் கடந்தது. அவன் வீடே அவனுக்கு அன்னியமாகப் பட்டது. சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை வீட்டினுள் விட்டிருந்தனர். அவனால் நிம்மதியாக நடமாடக் கூட முடியவில்லை.
“அம்மா ஆபிஸ் வேலையா சென்னை போறேன், வர இரண்டு நாள் ஆகும்...”
“இத்தனை நாள் இல்லாத ஆபிஸ் வேலை என்ன திடீர்னு...?” என்று பத்மநாதன் சரியாய் கேட்க,
“இருக்குப்பா, அது சொன்னா உங்களுக்குப் புரியாது. நான் திரும்பி வரும் போது அந்த பொண்ணு இங்க இருக்க கூடாது...” என்று சொல்லி, அவர்கள் அவனைத் தடுக்கும் முன் வெளியேறிவிட்டான்.
அவன் சொன்னது போல் ஆபிஸ் வேலையெல்லாம் இல்லை. அவனுக்கு இடமாற்றம் வேண்டியிருந்தது. வெளியூரில் இருந்து ஃபோன் செய்தவன் சாரதாவிடம் மறுபடியும் கறாராக சொல்லி விட்டான்.
‘நான் வரும் போது அந்த பொண்ணு அங்க இருக்கக் கூடாது. ’ என்று.
சாரதா கேட்பாரா?
இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஒரு மதியம் ஊருக்குத் திரும்பினான். அம்மா அப்பா அந்தப் பெண்ணை அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்தபடி அவன் வர,
ஹாலில் நடுநாயகமாய் அவன் மாமனார் மாமியார் இருக்க, ‘வாங்க...’ என்று சொன்னதோடு அவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
எதற்காக வந்திருக்கிறார்கள்? மைதிலி விஷயம் எதையும் நினைவுபடுத்தி விடுவார்களோ என்று தான் அவன் ஒதுங்கிக்கொண்டதே. சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பப் போவதாக சாரதா வந்து அழைக்க, அங்கு அவர்களிடம் சென்றான்.
குணசீலன் அவன் கைபற்றி, “போனவளையே நினைச்சு உங்க வாழ்க்கையை தொலைக்காதீங்க மாப்பிள்ளை. உங்க பிள்ளைக்காகவாது நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்...” என்று அழுதார்.
அவரைத் தொடர்ந்து லட்சுமியும். இவர்களின் செய்கையால் அவனுக்கும் கண்ணில் நீர் எட்டி பார்த்தது.
“நாங்க எங்க மகனோட போய் கொஞ்ச நாள் இருக்கலாம்னு இருக்கோம். இனி உங்க குழந்தையை நாங்க பார்த்துகிறது கொஞ்சம் சிரமம். அதுவுமில்லாம அப்பாக் கூட இருக்கிறது தான் அவளுக்கு நல்லது.”
இவர்கள் பேசியிருந்த சமயம் பத்மநாபன் அவனின் பிள்ளையைத் தூக்கி வைத்திருந்ததைப் பார்த்தான். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“மாமா என்னால அவளை வளர்க்க முடியாது...” என்று சொல்லி முடிக்கையில் அவனருகில் வந்த சாரதா அப்பேச்சை இடைமறித்தார்.
“என்னடா பேசுற நீ? நாம தான் வளர்க்கணும். அவங்க இவ்வளவு நாளும் பார்த்துக்கிட்டதே பெரிய விஷயம்.”
அவர்கள் முன் வைத்து அன்னையிடம் வாதிட அவன் விரும்பவில்லை. ஆக மௌனமாய் நிற்க, மற்றவர்கள் மேலும் சற்று நேரம் பேசியிருந்துவிட்டு,
“போயிட்டு வரேன் ராஜாத்தி, இந்தத் தாத்தனை மறந்துடாதே...” என்று தன் பேத்தியை கடைசி முறை போல் கன்னம் கிள்ளிவிட்டு சென்றார் குணசீலன்.
வாசல் வரை உடன் சென்ற சாரதாவிடம், லட்சுமி எதையோ சொல்ல, இவரும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார். பத்மநாதன் குழந்தையுடன் அவன் அருகில் வந்து,
“அப்பா பாரு குட்டி, அப்பா சொல்லு...” என்று, இவனை காட்டி சொல்ல அத்தனை எரிச்சலான முகத்தைக் காட்டினான் முகில்.
‘எல்லாம் இவளால் தான்’ தேவையில்லாமல் அந்தப் பிஞ்சின் மேல் அவன் ஆத்திரம் பாய்ந்தது.
முகம் இறுக, எவ்வித பதிலும் கூறாமல் இருந்தான். இவன் அறைக்குச் செல்லும் முன் பார்த்த கடைசி விஷயம், அம்மாவும் அப்பாவும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருந்ததை.
முகில் அறையில் சென்று கதவடைத்துக் கொண்டான். எங்கெங்கோ சென்று சுற்றிவிட்டுச் சரி செய்த அவன் மனம் இப்போது குழந்தையைக் கண்டதும் அதே பழைய நிலைக்குச் சென்றது.
மைதிலியின் நினைவுகள் மறுபடியும் சுழல ஆரம்பித்தது. அவளை மறக்க முடியவில்லை.
‘ஏன் டி, இந்தப் பிள்ளைக்காக என்னை விட்டிட்டு போனே?’ என்று எண்ணியவனை,
“முகில் முகில்...” என்று சாரதா அழைத்தக் குரலுக்கு அங்குச் செல்ல,