Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
வேண்டுதல்
ஷிவானி யோசனைகுறியோடு வீட்டின் வாயிலை தாண்டி உள்ளே நுழைய, முகப்பு அறையில் எல்லோரும் அவளை எதிர்பார்த்துதான் காத்திருந்தனர்.
அதுவும் ஒரு மயான அமைதி அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
வாசலில் நின்றபடியே தன் பார்வையை சுற்றி சுழற்றினாள் ஷிவானி.
அரவிந்தன் முகவாயை தடவியபடி சோபாவில் அமர்ந்திருக்க, நளினி கோபமே உருவமாய் நின்றிருந்தார்.
சபரியோ பதட்டம் கோபம் என இரண்டும் கலந்த நிலையில் அந்த அறைக்குள்ளேயெ நடை பயின்று கொண்டிருக்க,
ரஞ்சனும் சங்கீதாவும் அவர்களுக்குள்ளேயே ரகசிய மாநாடு நடத்தி கொண்டிருந்தனர்.
இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவான மோகன் நகமா விரலா என்று தெரியாமல் இரண்டையும் சேர்த்தே கடித்து கொண்டிருந்தான்.
'பத்த வைச்சிட்டியேடா பரட்டைனு' கவுண்டமனி பாணியில்தான் மோகன் செய்த காரியத்தை சொல்லலாம்.
இவர்களுக்கிடையில் வேதாவின் முகம் மட்டும் கொஞ்சம் தெளிவாய் தென்பட்டது. ஷிவானி நுழைந்ததை வேதாதான் முதலில் கவனித்தார்.
வேதா பார்வையாலேயே அவள் தந்தை கோபமாய் இருப்பதையும்,
மோகன் சொன்னவற்றையும் உரைத்தவர், 'ஏன் அங்கே போனே?' என்று சமிஞ்சையால் கேட்டு கொண்டிருக்க,
அந்த சமயம் மோகன் வாசலில் தயங்கி நிற்பவளை பார்த்துவிட்டான்.
அவன் விழியெல்லாம் கோபத்தில் சிவக்க, "வாங்க மேடம்... உள்ளே வாங்க" என்று அழைக்க,
அவள் அடிமேல் அடிவைத்து எல்லோரையும் பார்த்தபடி வந்தாள். எல்லோரும் அவளையே வெறித்து பார்க்க,
தான் அப்படியென்ன செய்ய கூடாததை செய்துவிட்டோம் என்றிருந்தது அவளுக்கு.
மோகன் மேலும், "மேடம் நல்லா சாப்பிட்டீங்களா?" என்றவன் எகத்தாளமாய் கேட்க,
"ஷட் அப் மோக்" என்று கோபமாய் பொங்கினாள்.
"செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஏன் அவன்கிட்ட எகிற?" என்று சபரி அவளை அதட்ட,
அவளோ விழி எடுக்காமல் மோகனை எரிப்பது போல் பார்த்திருந்தாள்.
"எதுக்கு நீ அங்க போன?... பெரியவங்க நாங்கெல்லாம் இருக்கும் போது உனக்கென்ன அதிகபிரசங்கிதனம்" என்று நளினி இப்போது அவள் மீது பாய,
அவள் மௌனமாய் தலைகவிழ்ந்து கொண்டாள். எப்படி அவர்களிடம் சொல்லி புரிய வைப்பதென்று அவள் யோசித்திருக்க,
மோகன் அப்போது, "கேட்கிறாங்க இல்ல... பதில் சொல்லு" என்று முறைத்தான்.
"நீ பேசாதாடா ராஸ்கல்... உன்னை கொன்றுவன்" என்றவள் சீற,
"அவன்கிட்ட ஏறாம இங்க நாங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு" என்று சபரி அவளை தீயாய் பார்த்தார்.
"முதல்ல அவன் செஞ்சது சரியான்னு கேளுங்க டேட்" என்று அவள் மோகனிடம் திரும்பினாள்.
"அப்படி என்ன செஞ்சிட்டாங்க?" என்று மோகன் பதிலுக்கு அவளை முறைத்தபடி நின்றான்.
"ஏன்டா என்னை விட்டுட்டு வந்த?"
"ஏன்... உனக்கு சாப்பிட கொடுத்த உங்க மாமா... உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடலயோ?" என்றவன் சொல்லி எகத்தாளமாய் சிரிக்க,
"ஏன் விடாம... அவர்தான் என்னை டிராப் பண்ணாரு" என்றவள் பெருமிதமாக சொன்னாள்.
சபரிக்கு ஷாக்கடித்த உணர்வு. வேதா தன் மகள் சொன்னதை கேட்டு பூரிப்படைந்து புன்னகையிக்கும் போது தன் கணவனின் முறைப்பை பார்த்து தன் சிரிப்பை உள்ளூர அடக்கி கொண்டார்.
எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ஷிவானியே மேலும், "உன்னை நம்பி வந்ததுக்கு என்னை நடுத்தெருவில நிறுத்திட்ட இல்ல" என்றவள் வெறுப்பாய் பார்க்க,
அரவிந்தன் அப்போது எழுந்துநின்று, "தப்பு மோகன்... என்ன நடந்திருந்தாலும் நீ ஷிவானியை அப்படி விட்டுவிட்டு வந்திருக்க கூடாது" என்று தன் மகனிடம் கடிந்து கொண்டார்.
"அவ என்ன சின்ன பாப்பாவா... போஃன் இல்ல... பர்ஸ்ல காசில்ல..." என்றதும்,
"எருமை... என் போஃன் கார்லதான் இருந்துச்சு" என்றாள் அதீத கோபத்தோடு!
"அதுக்காக நீ அவன் கூட ஜோடி போட்டுக்கிட்டு வந்திருவியோ?" என்று மோகன் கேட்டு வைக்க,
சபரி அந்த கேள்வியில் அதிர்ச்சியானார்.
வேதாவிற்கோ இவன் வயசுக்கு தன் தம்பியை மரியாதையில்லாம பேசுகிறானே என்று உள்ளூர பொறும,
ஷிவானி முந்திக் கொண்டு, "கொஞ்சம் மரியாதையா பேசு மோக்" என்று சொல்ல,
"பார்த்தீங்களா மாமா... அவனை சொன்னதுக்கு இவளுக்கு கோபம் வருது" என்று சபரியை ஏற்றிவிட்டான் மோகன்.
அவரும் அதே யோசனையில்தான் மகளை ஆச்சர்யமாய் பார்த்திருக்க,
ஷிவானி அந்த நொடி ஆவேசமாய் மோகனின் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
"திரும்பியும் அவன் இவன்னு சொல்ற வேலை வைச்சுக்காதே" என்றவனை ஷிவானி அழுத்தமாய் எச்சரிக்க,
வேதாவிற்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.
சபரிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. தன் மனைவியின் குடும்பத்தை விட்டு அவளை தான் என்னதான் விலக்கி வைத்தாலும் அந்த பாசமும் ஒட்டுதலும் அவளுக்கு இருப்பதை நம்ப முடியவில்லை.
நளினி அதற்குள், "ஆம்பிள பையனை அடிக்கிறளவுக்கு நெஞ்சழுத்தமாயிடுச்சா... அதுவும் உனக்கு புருஷனா வரப் போறவனை போய்" என்று சொல்ல மோகனோ அவளை வெறியாய் பார்த்திருந்தான்.
ரஞ்சன் தன் தம்பி அருகில் சென்று அவனை சமாதானப்படுத்த,
அப்போது வேதாவும் தன் மகளிடம், "நீ செஞ்சது தப்பு வாணிம்மா" என்று உரைத்தார்.
"நடிக்காதே வேதா... எல்லா நீ சொல்லி கொடுத்துதானே நடக்குது" என்று நளினி பழியை தூக்கி அவர் மீது போட்டார்.
அதோடு நிறுத்தாமல் தன் தம்பியை பார்த்து, "என்னடா மரம் மாறி நிற்கிற... உன் பொண்ணு செஞ்ச காரியத்தை என்னன்னு கேட்க மாட்டியா?" என்று சொல்ல
அப்போது அரவிந்தன் தன் மனைவியிடம், "அமைதியா இரு நளினி... கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்" என்க,
"அவ நம்ம பிள்ளையை கையை நீட்டி அடிச்சிருக்கா... நீங்க என்னவோ பொறுமையா பேசிக்கிலாங்கிறீங்க" என்று கணவனை வேறு ஒரு முறை முறைத்தார்.
அப்போது ஷிவானி இடைபுகுந்து நளினியிடம், "ஸாரி அத்தை தப்புதான்... ஆனா நான் ஒண்ணும் அவனை வேணும்டே அடிக்கல... அவன் அப்படி பேசினதாலதான் அடிச்சேன்" என்று சொல்ல அந்த சமயத்தில் சபரி ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தார்.
"அவனை பத்தி சொன்னா உனக்கே ஏன் இவ்வளவு கோபம் வருது?" என்றவர் நிறுத்தி நிதானமாய் கேட்க,
"ஏன் கோபம் வர கூடாது?" என்று பதில் கேள்வி கேட்டாள் ஷிவானி.
"ஏன் கோபம் வரனும்? வூ இஸ் ஹீ?" என்று சபரி மகளை முறைத்தபடி கேள்விஎழுப்ப, வேதாவிற்கு பதில் சொல்ல வேண்டும் என்று உதடு துடித்தாலும் அவர் தன் நாவை பிராயத்தனப்பட்டு அடக்கி கொண்டிருந்தார்.
ஷிவானியே முன்வந்து,
"தெரியாத மாதிரி கேட்கிறீங்க... அவர் மீ யோட பிரதர்... எனக்கு மாம்ஸ்" என்றவள் பதிலுரைக்க சபரிக்கு பிபி எகிறி கொண்டிருந்தது.
அவர் பார்வையாலயே தன் மனைவியிடம் 'இதெல்லாம் நீ சொல்லி கொடுக்கிறியா' என்று கேட்க, அவர் இல்லையென்பது போல் தோள்களை குலுக்கினார்.
சபரி அப்போது தலையை பிடித்து கொண்டு, "என்ன திடீர்னு... மாமா அது இதுன்னு ஓவரா உறவு கொண்டாடிற" என்றவர் மகளிடம் கோபப்பட முடியாமல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு கேட்க,
மோகன் முந்திக் கொண்டு, "சாப்பிட கொடுத்தாரு இல்ல... அதான் மேடம் சமாதான புறாவை பறக்க விட்டுட்டாங்க" என்றான்.
"வேண்டாம் மோக்... இன்னொரு கன்னமும் சிவந்திரும்" என்றவள் கடுப்பாகிட,
நளினி அப்போது "என்னடி சொன்ன?" ஷிவானியை கை ஓங்கி கொண்டு வர சபரி அவர் கரத்தை பிடித்து கொண்டு தடுத்தார்.
"அவ சின்ன புள்ளை க்கா ஏதோ தெரியாம பேசிறா?" என்று சபரி பரிந்து பேச,
"இப்படியே நீ அவளுக்கு இடம் கொடுத்து கொடுத்துதான்... அவ திமிரு பிடிச்சி எல்லோரையும் ஏறி மேய்ச்சிட்டிருக்கா?" என்று சொல்ல, வேதாவிற்கு கோபம் பீறிட்டு கொண்டு வந்தது.
"போதும் மதினி... இதுக்கு மேல பேசாதீங்க... அவ சொந்த தாய் மாமனை பார்த்துட்டு வந்ததுக்கு அவளை என்னவோ குத்தவாளி மாறி நிக்க வைச்சி பேசிட்டிருக்கீங்களே" என்றவர்,
"நீ உள்ளே வா வாணிம்மா" என்று மேலே பேச்சை வளர்க்காமல் தன் மகள் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
அப்போது நளினி தன் தம்பியிடம், "உன் பொண்டாட்டிக்கு இவ்வளவு ஆகாதுடா" என்க,
"நீங்களும் வாணியை பத்தி அப்படி பேசியிருக்க கூடாது க்கா" என்று சபரி சொல்ல நளினி அதிர்ச்சியோடு,
"உன் பொண்ணு மட்டும் என் பிள்ளையை அடிக்கலாமா?" என்று கேட்டார்.
"எல்லாத்துக்கும் இவன்தான் காரணம்... இவ தேவையில்லாம அவளை அங்கே கூட்டிட்டு போயிருக்க கூடாது"
"இல்ல மாமா... அவதான் அடம்பிடிச்சா" மோகன் சொல்ல
"அவ அடம்பிடிச்சா" என்று சபரி கோபமாய் பார்க்க, மோகன் பதில் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டான்.
சபரி மேலும், "சரி கூட்டிட்டு போனே... திரும்பி அவளை பத்திரமா கூட்டிட்டு வர வேணாமா?" என்றவனை முறைக்க மோகனால் அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அரவிந்தன் சபரியின் தோள்மீது கை போட்டு,"விடு மச்சான்... அவன் அப்படிதான் அவசர குடுக்கை" என்றவர் மேலும்,
ஷிவானி யோசனைகுறியோடு வீட்டின் வாயிலை தாண்டி உள்ளே நுழைய, முகப்பு அறையில் எல்லோரும் அவளை எதிர்பார்த்துதான் காத்திருந்தனர்.
அதுவும் ஒரு மயான அமைதி அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
வாசலில் நின்றபடியே தன் பார்வையை சுற்றி சுழற்றினாள் ஷிவானி.
அரவிந்தன் முகவாயை தடவியபடி சோபாவில் அமர்ந்திருக்க, நளினி கோபமே உருவமாய் நின்றிருந்தார்.
சபரியோ பதட்டம் கோபம் என இரண்டும் கலந்த நிலையில் அந்த அறைக்குள்ளேயெ நடை பயின்று கொண்டிருக்க,
ரஞ்சனும் சங்கீதாவும் அவர்களுக்குள்ளேயே ரகசிய மாநாடு நடத்தி கொண்டிருந்தனர்.
இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவான மோகன் நகமா விரலா என்று தெரியாமல் இரண்டையும் சேர்த்தே கடித்து கொண்டிருந்தான்.
'பத்த வைச்சிட்டியேடா பரட்டைனு' கவுண்டமனி பாணியில்தான் மோகன் செய்த காரியத்தை சொல்லலாம்.
இவர்களுக்கிடையில் வேதாவின் முகம் மட்டும் கொஞ்சம் தெளிவாய் தென்பட்டது. ஷிவானி நுழைந்ததை வேதாதான் முதலில் கவனித்தார்.
வேதா பார்வையாலேயே அவள் தந்தை கோபமாய் இருப்பதையும்,
மோகன் சொன்னவற்றையும் உரைத்தவர், 'ஏன் அங்கே போனே?' என்று சமிஞ்சையால் கேட்டு கொண்டிருக்க,
அந்த சமயம் மோகன் வாசலில் தயங்கி நிற்பவளை பார்த்துவிட்டான்.
அவன் விழியெல்லாம் கோபத்தில் சிவக்க, "வாங்க மேடம்... உள்ளே வாங்க" என்று அழைக்க,
அவள் அடிமேல் அடிவைத்து எல்லோரையும் பார்த்தபடி வந்தாள். எல்லோரும் அவளையே வெறித்து பார்க்க,
தான் அப்படியென்ன செய்ய கூடாததை செய்துவிட்டோம் என்றிருந்தது அவளுக்கு.
மோகன் மேலும், "மேடம் நல்லா சாப்பிட்டீங்களா?" என்றவன் எகத்தாளமாய் கேட்க,
"ஷட் அப் மோக்" என்று கோபமாய் பொங்கினாள்.
"செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஏன் அவன்கிட்ட எகிற?" என்று சபரி அவளை அதட்ட,
அவளோ விழி எடுக்காமல் மோகனை எரிப்பது போல் பார்த்திருந்தாள்.
"எதுக்கு நீ அங்க போன?... பெரியவங்க நாங்கெல்லாம் இருக்கும் போது உனக்கென்ன அதிகபிரசங்கிதனம்" என்று நளினி இப்போது அவள் மீது பாய,
அவள் மௌனமாய் தலைகவிழ்ந்து கொண்டாள். எப்படி அவர்களிடம் சொல்லி புரிய வைப்பதென்று அவள் யோசித்திருக்க,
மோகன் அப்போது, "கேட்கிறாங்க இல்ல... பதில் சொல்லு" என்று முறைத்தான்.
"நீ பேசாதாடா ராஸ்கல்... உன்னை கொன்றுவன்" என்றவள் சீற,
"அவன்கிட்ட ஏறாம இங்க நாங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு" என்று சபரி அவளை தீயாய் பார்த்தார்.
"முதல்ல அவன் செஞ்சது சரியான்னு கேளுங்க டேட்" என்று அவள் மோகனிடம் திரும்பினாள்.
"அப்படி என்ன செஞ்சிட்டாங்க?" என்று மோகன் பதிலுக்கு அவளை முறைத்தபடி நின்றான்.
"ஏன்டா என்னை விட்டுட்டு வந்த?"
"ஏன்... உனக்கு சாப்பிட கொடுத்த உங்க மாமா... உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடலயோ?" என்றவன் சொல்லி எகத்தாளமாய் சிரிக்க,
"ஏன் விடாம... அவர்தான் என்னை டிராப் பண்ணாரு" என்றவள் பெருமிதமாக சொன்னாள்.
சபரிக்கு ஷாக்கடித்த உணர்வு. வேதா தன் மகள் சொன்னதை கேட்டு பூரிப்படைந்து புன்னகையிக்கும் போது தன் கணவனின் முறைப்பை பார்த்து தன் சிரிப்பை உள்ளூர அடக்கி கொண்டார்.
எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ஷிவானியே மேலும், "உன்னை நம்பி வந்ததுக்கு என்னை நடுத்தெருவில நிறுத்திட்ட இல்ல" என்றவள் வெறுப்பாய் பார்க்க,
அரவிந்தன் அப்போது எழுந்துநின்று, "தப்பு மோகன்... என்ன நடந்திருந்தாலும் நீ ஷிவானியை அப்படி விட்டுவிட்டு வந்திருக்க கூடாது" என்று தன் மகனிடம் கடிந்து கொண்டார்.
"அவ என்ன சின்ன பாப்பாவா... போஃன் இல்ல... பர்ஸ்ல காசில்ல..." என்றதும்,
"எருமை... என் போஃன் கார்லதான் இருந்துச்சு" என்றாள் அதீத கோபத்தோடு!
"அதுக்காக நீ அவன் கூட ஜோடி போட்டுக்கிட்டு வந்திருவியோ?" என்று மோகன் கேட்டு வைக்க,
சபரி அந்த கேள்வியில் அதிர்ச்சியானார்.
வேதாவிற்கோ இவன் வயசுக்கு தன் தம்பியை மரியாதையில்லாம பேசுகிறானே என்று உள்ளூர பொறும,
ஷிவானி முந்திக் கொண்டு, "கொஞ்சம் மரியாதையா பேசு மோக்" என்று சொல்ல,
"பார்த்தீங்களா மாமா... அவனை சொன்னதுக்கு இவளுக்கு கோபம் வருது" என்று சபரியை ஏற்றிவிட்டான் மோகன்.
அவரும் அதே யோசனையில்தான் மகளை ஆச்சர்யமாய் பார்த்திருக்க,
ஷிவானி அந்த நொடி ஆவேசமாய் மோகனின் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
"திரும்பியும் அவன் இவன்னு சொல்ற வேலை வைச்சுக்காதே" என்றவனை ஷிவானி அழுத்தமாய் எச்சரிக்க,
வேதாவிற்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.
சபரிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. தன் மனைவியின் குடும்பத்தை விட்டு அவளை தான் என்னதான் விலக்கி வைத்தாலும் அந்த பாசமும் ஒட்டுதலும் அவளுக்கு இருப்பதை நம்ப முடியவில்லை.
நளினி அதற்குள், "ஆம்பிள பையனை அடிக்கிறளவுக்கு நெஞ்சழுத்தமாயிடுச்சா... அதுவும் உனக்கு புருஷனா வரப் போறவனை போய்" என்று சொல்ல மோகனோ அவளை வெறியாய் பார்த்திருந்தான்.
ரஞ்சன் தன் தம்பி அருகில் சென்று அவனை சமாதானப்படுத்த,
அப்போது வேதாவும் தன் மகளிடம், "நீ செஞ்சது தப்பு வாணிம்மா" என்று உரைத்தார்.
"நடிக்காதே வேதா... எல்லா நீ சொல்லி கொடுத்துதானே நடக்குது" என்று நளினி பழியை தூக்கி அவர் மீது போட்டார்.
அதோடு நிறுத்தாமல் தன் தம்பியை பார்த்து, "என்னடா மரம் மாறி நிற்கிற... உன் பொண்ணு செஞ்ச காரியத்தை என்னன்னு கேட்க மாட்டியா?" என்று சொல்ல
அப்போது அரவிந்தன் தன் மனைவியிடம், "அமைதியா இரு நளினி... கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்" என்க,
"அவ நம்ம பிள்ளையை கையை நீட்டி அடிச்சிருக்கா... நீங்க என்னவோ பொறுமையா பேசிக்கிலாங்கிறீங்க" என்று கணவனை வேறு ஒரு முறை முறைத்தார்.
அப்போது ஷிவானி இடைபுகுந்து நளினியிடம், "ஸாரி அத்தை தப்புதான்... ஆனா நான் ஒண்ணும் அவனை வேணும்டே அடிக்கல... அவன் அப்படி பேசினதாலதான் அடிச்சேன்" என்று சொல்ல அந்த சமயத்தில் சபரி ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தார்.
"அவனை பத்தி சொன்னா உனக்கே ஏன் இவ்வளவு கோபம் வருது?" என்றவர் நிறுத்தி நிதானமாய் கேட்க,
"ஏன் கோபம் வர கூடாது?" என்று பதில் கேள்வி கேட்டாள் ஷிவானி.
"ஏன் கோபம் வரனும்? வூ இஸ் ஹீ?" என்று சபரி மகளை முறைத்தபடி கேள்விஎழுப்ப, வேதாவிற்கு பதில் சொல்ல வேண்டும் என்று உதடு துடித்தாலும் அவர் தன் நாவை பிராயத்தனப்பட்டு அடக்கி கொண்டிருந்தார்.
ஷிவானியே முன்வந்து,
"தெரியாத மாதிரி கேட்கிறீங்க... அவர் மீ யோட பிரதர்... எனக்கு மாம்ஸ்" என்றவள் பதிலுரைக்க சபரிக்கு பிபி எகிறி கொண்டிருந்தது.
அவர் பார்வையாலயே தன் மனைவியிடம் 'இதெல்லாம் நீ சொல்லி கொடுக்கிறியா' என்று கேட்க, அவர் இல்லையென்பது போல் தோள்களை குலுக்கினார்.
சபரி அப்போது தலையை பிடித்து கொண்டு, "என்ன திடீர்னு... மாமா அது இதுன்னு ஓவரா உறவு கொண்டாடிற" என்றவர் மகளிடம் கோபப்பட முடியாமல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு கேட்க,
மோகன் முந்திக் கொண்டு, "சாப்பிட கொடுத்தாரு இல்ல... அதான் மேடம் சமாதான புறாவை பறக்க விட்டுட்டாங்க" என்றான்.
"வேண்டாம் மோக்... இன்னொரு கன்னமும் சிவந்திரும்" என்றவள் கடுப்பாகிட,
நளினி அப்போது "என்னடி சொன்ன?" ஷிவானியை கை ஓங்கி கொண்டு வர சபரி அவர் கரத்தை பிடித்து கொண்டு தடுத்தார்.
"அவ சின்ன புள்ளை க்கா ஏதோ தெரியாம பேசிறா?" என்று சபரி பரிந்து பேச,
"இப்படியே நீ அவளுக்கு இடம் கொடுத்து கொடுத்துதான்... அவ திமிரு பிடிச்சி எல்லோரையும் ஏறி மேய்ச்சிட்டிருக்கா?" என்று சொல்ல, வேதாவிற்கு கோபம் பீறிட்டு கொண்டு வந்தது.
"போதும் மதினி... இதுக்கு மேல பேசாதீங்க... அவ சொந்த தாய் மாமனை பார்த்துட்டு வந்ததுக்கு அவளை என்னவோ குத்தவாளி மாறி நிக்க வைச்சி பேசிட்டிருக்கீங்களே" என்றவர்,
"நீ உள்ளே வா வாணிம்மா" என்று மேலே பேச்சை வளர்க்காமல் தன் மகள் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
அப்போது நளினி தன் தம்பியிடம், "உன் பொண்டாட்டிக்கு இவ்வளவு ஆகாதுடா" என்க,
"நீங்களும் வாணியை பத்தி அப்படி பேசியிருக்க கூடாது க்கா" என்று சபரி சொல்ல நளினி அதிர்ச்சியோடு,
"உன் பொண்ணு மட்டும் என் பிள்ளையை அடிக்கலாமா?" என்று கேட்டார்.
"எல்லாத்துக்கும் இவன்தான் காரணம்... இவ தேவையில்லாம அவளை அங்கே கூட்டிட்டு போயிருக்க கூடாது"
"இல்ல மாமா... அவதான் அடம்பிடிச்சா" மோகன் சொல்ல
"அவ அடம்பிடிச்சா" என்று சபரி கோபமாய் பார்க்க, மோகன் பதில் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டான்.
சபரி மேலும், "சரி கூட்டிட்டு போனே... திரும்பி அவளை பத்திரமா கூட்டிட்டு வர வேணாமா?" என்றவனை முறைக்க மோகனால் அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அரவிந்தன் சபரியின் தோள்மீது கை போட்டு,"விடு மச்சான்... அவன் அப்படிதான் அவசர குடுக்கை" என்றவர் மேலும்,