Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
இதயம் நழுவியது
ஷிவானியின் மனமெல்லாம் படக் படகென துடித்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண் நண்பர்களோடு நெருக்கமாய் பேசி பழகிய போதும் அவர்கள் எல்லாம் காதலிப்பதாக வழிந்து கொண்டு நிற்கும் போதும் கூட இத்தகைய உணர்வு தோன்றியதில்லை.
எல்லாவற்றிற்கும் காரணம் அவள் தந்தைதான். அவளை பத்துவயது பெண் போலவே அவர் நடத்தி நடத்தி அவளுக்கு பருவ வயதென்பதே மறந்து போனது. வேதாவிற்கு அவள் அவ்விதம் சிறுபிள்ளைத்தனமாய் இருப்பது மனதிற்குள் ஒருவித கலக்கத்தை உண்டாக்கியிருந்தது.
மகளிடம் அவள் நடை உடை பாவனை மற்றும் எப்படி யாரிடம் பழக வேண்டுமென்பதில் கட்டுப்பாடு விதித்தாலும்,
சபரி அதையெல்லாம் உடைத்தெறிந்து அவளுக்கு அதீத சுதந்திரத்தை கொடுத்தே பழகியிருந்தார். அதே நேரம் ஷிவானியும் அவளை சுற்றி நடக்கும் சிறுசிறு விஷயங்களை கூட தந்தையிடம் சொல்ல தவறியதில்லை.
இத்தகைய பிணைப்பு லேசாய் உடைப்பட்டது மோகனின் அதிகபிரசங்கிதனத்தால்தான்.
ஆனால் அந்த பயம் அர்த்தமற்றது என்பதை அவள் மறுவார்த்தையின்றி மோகனை நிச்சயம் செய்து கொள்ள சம்மதிக்கும் போதே அவருக்கு புரிந்து போனது. தன் மகள் தன் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டாள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இங்கே மகளை தைரியமாய் விட்டுச்சென்றார்.
ஆனால் விதியின் எண்ணம் வேறுவிதமாய் இருந்ததே.
ஏணி மேலிருந்து தவறி சிவகுரு மீது விழந்த போது கூட அவள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் சட்டென்று அவள் எதிர்பாரா வண்ணம் அவன் அவளை கட்டிக்கொண்டு புரள மூச்சு ஒரு நொடி நின்று மேலெழும்பியது.
கள்ளங்கபடமில்லாத அவள் மனதை சலனப்படுத்த இதை விடவும் ஒரு காட்சி அரங்கேறவேண்டுமா? உண்மையிலேயே அத்தகைய உணர்வை எப்படி சமாளிப்பதென்று புரியாமல் விடுவிடுவென எழுந்தவள் அவனை ஏறிட்டும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
'இப்ப என்ன ஆச்சுதுன்னு இந்த சலம்பு சலம்பிட்டு போறா... நாம ஒண்ணுமே பண்ணலயே... இவளாதானே வந்து மேல விழுந்தா' என்று சில நொடிகள் ஸ்தம்பித்தவன்,
பின் தான் கோழி பிடிக்கும் வேலையை நினைவுப்படுத்தி கொண்டு அவளை மறந்து அந்த வேலையில் ஈடுப்பட்டான்.
அதற்குள் ஷிவானி நேராய் வேதாவின் அருகில் மௌன சிலையாய் அமர்ந்து கொள்ள,
மகளின் முகப்பாவனையை பார்த்து அவர் துணுக்குற்றார்.
"எதுக்கு இப்படி மூஞ்சி தூக்கி வைச்சிட்டிருக்க?"
"......."
"உங்க அப்பா ஞாபகம் வந்திருச்சா?"
"......."
"வேணா ஒரு போஃன் பண்ணி பேசுடி"
"......."
"ஏன்டி இப்படி ஊமைக்கொட்டான் மாறி உட்கார்ந்திட்டிருக்க?" என்று பொறுமையிழுந்து அவள் தலையில் தட்ட,
"எதுக்கு மீ அடிச்ச" என்று தலையை தேய்த்தாள் ஷிவானி.
"பின்ன... அடிக்காம... கேட்டுட்டே இருக்கேன் இல்ல... வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்க" என்றதும்,
"இப்ப என்ன உனக்கு தெரியனும்" என்று ஷிவானி சீறினாள்.
அந்த சமயம் குரு கோழியை உரித்து எடுத்து கொண்டு அடுக்களை நோக்கி போக,
அந்த சமயம் அவன் இவளை பார்க்க இவன் அவளை பார்த்தான்.
இதை கவனித்த வேதா, 'என்னடா நடக்குது இங்கே... ஏதாச்சும் ஏடாகூடாம நடந்துச்சுன்னா அந்த மனிஷன் என்னை குழி தோண்டி புதைச்சிருவாரே' என்று அச்சமுற்றவர், மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார்.
ஏதோ அவருக்கு தப்பாய் தோன்ற
தன் மகளை அவசரமாய் திருப்பி,
"சிவா உன்கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணுச்சா?" என்று கேட்டு வைக்க அவள் அதை எப்படி சொல்வதென்று பேந்த பேந்த விழித்தாள்.
"சொல்லி தொலையேன்டி" என்று வேதா அவளை உலுக்க,
"அங்கன ஏன் கேட்கிறீக... என்கிட்ட கேளும்... நான் சொல்லுதேன்" என்று குரு அவள் முன்னாடி வந்து நின்றான்.
இப்போது வரை குரு வேதாவிடம் சுமுகமாக பேசவில்லை. அவன் தீடீரென்று அப்படி வந்து அவர் முன்னே நிற்கவும் குழப்பமானவர்,
தன் தம்பியை பார்த்து, "நீங்கதான் ரொம்ப ரோஷாக்காராக... என்கிட்ட பேச மாட்டீகளே... இப்ப மட்டும் என்ன?" என்று சொல்லி பார்வையை எங்கோ வெறித்தார்.
"நான் ஏதோ பண்ணிட்டேன்னு உங்க சீமந்த புத்திரிகிட்ட விசாரிச்சிக்கிட்டிருந்தீகளே... அதனாலதான் பேசினனாக்கும்... இல்லாட்டி உங்ககிட்ட பேச எனக்கென்ன கிடக்கு" என்றவன் அலட்சியமாய் உரைக்க,
அவன் பேசியதை கேட்டு வேதா வருத்தமுற, இந்த சம்பாஷணையை பார்த்து கொண்டிருந்த ஷிவானிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அதற்குள் குரு ஷிவானியை பார்த்து, "நான் என்னவே பண்ண உன்னை... உங்க அம்மா என்னை சந்தேகம் படுதாக... ஒழுங்கா பதில் சொல்லுவே" என்று அவன் மிரட்டலாய் கேட்க,
"அது... நான் மாடிக்கு போக ஏணி மேல ஏறி" என்றவள் ஆரம்பிக்க அவன் பதட்டமடைந்தான். இவள் எல்லாவற்றையும் சொல்லி தன்னை வம்பில் சிக்க வைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாளோ என்று எண்ணியவன்,
அவள் பேச்சை இடைமறித்து "உங்க பொண்ணுதான் நான் சொல்ல சொல்ல கேட்காம ஏணி மேல ஏறி விழுந்திட்டாக... அதுக்கு நான் அவளை வைஞ்சிட்டான்... அதுக்காகதான் மூஞ்சை தூக்கி வைச்சிட்டிருக்காக... அம்புட்டுதான்" என்றவன் ஷிவானியிடம்,
"அம்புட்டுதானே?!" என்று அழுத்தி கேட்க,
"எஸ் எஸ்... தட்ஸ் இட் மீ" என்று அவன் சொன்னதை ஆமோதித்ததை போல தலையசைத்தாள்.
குரு உள்ளிருந்து மூச்சை வெளிவிட்டவன் அதற்குள் அங்கே நிற்காமல் நகர்ந்து செல்ல வேதா அவன் பின்னோடு ஓடி "சிவா" என்றழைத்தார்.
அவன் திரும்பி பாராமலே நிற்க வேதா இறங்கிய தொனியில், "தப்பா எடுத்துக்காதே சிவா... நீயும் ஷிவானியும் பழகிற விஷயம் தெரிஞ்சா அவரை என்னை கொன்னே போட்டிருவாரு... அதுவும் என்கிட்ட அவர் சொல்லியே அனுப்பினாரு... எந்த ஜென்மத்திலயும் உன்னை மருமகனா அவரு ஏத்துக்க மாட்டாராம்" என்க,
சட்டென்று திரும்பியவன் எகத்தாளமான பார்வையோடு, "இப்படின்னு அவகளே சொன்னாகளா?" என்று வினவினான்.
"ஹ்ம்ம்" என்று முகத்தை தொங்க போட்டு கொண்டார் வேதா.
"அப்படின்னா இந்த ஜென்மத்தில உம்மை வூட்டுக்காருக்கு நான்தைன் மருமவன்... உம்மை மவளுக்கு நான்தான் புருஷன்" என்றதும் வேதா அதிர்ச்சியில், "என்ன சொல்ற சிவா நீ?" என்றார்.
"தினை விதைச்சவன் தினை அறுப்பான்... வினை விதைச்சவன் வினை அறுப்பான்... உம்மை வூட்டுக்காரு எதை விதைச்சாகளோ அதை அறுப்பாக" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் அகல வேதா தலையை பிடித்து கொண்டார்.
இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிக்க போவது தானா அல்லது தன் மகள் ஷிவானியா என்று அவருக்கு புரியவில்லை. அதே நேரம் இத்தனை வருடத்திற்கு பிறகு பிறந்த வீட்டிற்கு வந்தும் அந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் இதென்ன புது பிரச்சனை என்று அவஸ்த்தைப்பட்டார்.
இது ஒன்று புதிதில்லவே. எல்லா பெண்களுக்கும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது பழகிய விஷயம்தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல.
வேதா தவிப்பான மனநிலையை இருக்க, அப்போது அவரின் மூன்றாவது தங்கை அமிர்த வள்ளியின் வருகை அந்த சிந்தனையை மாற்றியிருந்தது.
அவரின் கணவன் வெங்கடாச்சலம் வேதாவையும் ஷிவானியையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு புறப்பட,
"உங்க அக்கா கோழி அடிச்சி குழம்பு வைச்சிருக்காக... சாப்பிட்டு போவே" என்றார் முருகவேல்.
"கடையில வேலை கிடக்கு மாமா... விரசா முடிச்சிட்டு வந்திடுதேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
வெங்கடாச்சலம் தங்கத்தின் சொந்த தம்பி. ஆதலால் அந்த மருமகனிடம் மட்டும் கொஞ்சம் உரிமையாய் பேசுவார் முருகவேல். ஆதலாலயே திருமணமாகி அவர்கள் மட்டும் பக்கத்து தெருவிலயே குடியிருந்தனர்.
அமிர்த வள்ளிக்கும் வெங்கடச்சலத்திற்கும் இரு குழந்தைகள். ஐஸ்வர்யா ஏற்கனவே அறிமுகம். அடுத்து அவளின் தம்பி குமரன். பேசியே ஊரையே விற்றுவிடுவான்.
ஷிவானியின் மனமெல்லாம் படக் படகென துடித்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண் நண்பர்களோடு நெருக்கமாய் பேசி பழகிய போதும் அவர்கள் எல்லாம் காதலிப்பதாக வழிந்து கொண்டு நிற்கும் போதும் கூட இத்தகைய உணர்வு தோன்றியதில்லை.
எல்லாவற்றிற்கும் காரணம் அவள் தந்தைதான். அவளை பத்துவயது பெண் போலவே அவர் நடத்தி நடத்தி அவளுக்கு பருவ வயதென்பதே மறந்து போனது. வேதாவிற்கு அவள் அவ்விதம் சிறுபிள்ளைத்தனமாய் இருப்பது மனதிற்குள் ஒருவித கலக்கத்தை உண்டாக்கியிருந்தது.
மகளிடம் அவள் நடை உடை பாவனை மற்றும் எப்படி யாரிடம் பழக வேண்டுமென்பதில் கட்டுப்பாடு விதித்தாலும்,
சபரி அதையெல்லாம் உடைத்தெறிந்து அவளுக்கு அதீத சுதந்திரத்தை கொடுத்தே பழகியிருந்தார். அதே நேரம் ஷிவானியும் அவளை சுற்றி நடக்கும் சிறுசிறு விஷயங்களை கூட தந்தையிடம் சொல்ல தவறியதில்லை.
இத்தகைய பிணைப்பு லேசாய் உடைப்பட்டது மோகனின் அதிகபிரசங்கிதனத்தால்தான்.
ஆனால் அந்த பயம் அர்த்தமற்றது என்பதை அவள் மறுவார்த்தையின்றி மோகனை நிச்சயம் செய்து கொள்ள சம்மதிக்கும் போதே அவருக்கு புரிந்து போனது. தன் மகள் தன் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டாள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இங்கே மகளை தைரியமாய் விட்டுச்சென்றார்.
ஆனால் விதியின் எண்ணம் வேறுவிதமாய் இருந்ததே.
ஏணி மேலிருந்து தவறி சிவகுரு மீது விழந்த போது கூட அவள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் சட்டென்று அவள் எதிர்பாரா வண்ணம் அவன் அவளை கட்டிக்கொண்டு புரள மூச்சு ஒரு நொடி நின்று மேலெழும்பியது.
கள்ளங்கபடமில்லாத அவள் மனதை சலனப்படுத்த இதை விடவும் ஒரு காட்சி அரங்கேறவேண்டுமா? உண்மையிலேயே அத்தகைய உணர்வை எப்படி சமாளிப்பதென்று புரியாமல் விடுவிடுவென எழுந்தவள் அவனை ஏறிட்டும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
'இப்ப என்ன ஆச்சுதுன்னு இந்த சலம்பு சலம்பிட்டு போறா... நாம ஒண்ணுமே பண்ணலயே... இவளாதானே வந்து மேல விழுந்தா' என்று சில நொடிகள் ஸ்தம்பித்தவன்,
பின் தான் கோழி பிடிக்கும் வேலையை நினைவுப்படுத்தி கொண்டு அவளை மறந்து அந்த வேலையில் ஈடுப்பட்டான்.
அதற்குள் ஷிவானி நேராய் வேதாவின் அருகில் மௌன சிலையாய் அமர்ந்து கொள்ள,
மகளின் முகப்பாவனையை பார்த்து அவர் துணுக்குற்றார்.
"எதுக்கு இப்படி மூஞ்சி தூக்கி வைச்சிட்டிருக்க?"
"......."
"உங்க அப்பா ஞாபகம் வந்திருச்சா?"
"......."
"வேணா ஒரு போஃன் பண்ணி பேசுடி"
"......."
"ஏன்டி இப்படி ஊமைக்கொட்டான் மாறி உட்கார்ந்திட்டிருக்க?" என்று பொறுமையிழுந்து அவள் தலையில் தட்ட,
"எதுக்கு மீ அடிச்ச" என்று தலையை தேய்த்தாள் ஷிவானி.
"பின்ன... அடிக்காம... கேட்டுட்டே இருக்கேன் இல்ல... வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்க" என்றதும்,
"இப்ப என்ன உனக்கு தெரியனும்" என்று ஷிவானி சீறினாள்.
அந்த சமயம் குரு கோழியை உரித்து எடுத்து கொண்டு அடுக்களை நோக்கி போக,
அந்த சமயம் அவன் இவளை பார்க்க இவன் அவளை பார்த்தான்.
இதை கவனித்த வேதா, 'என்னடா நடக்குது இங்கே... ஏதாச்சும் ஏடாகூடாம நடந்துச்சுன்னா அந்த மனிஷன் என்னை குழி தோண்டி புதைச்சிருவாரே' என்று அச்சமுற்றவர், மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார்.
ஏதோ அவருக்கு தப்பாய் தோன்ற
தன் மகளை அவசரமாய் திருப்பி,
"சிவா உன்கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணுச்சா?" என்று கேட்டு வைக்க அவள் அதை எப்படி சொல்வதென்று பேந்த பேந்த விழித்தாள்.
"சொல்லி தொலையேன்டி" என்று வேதா அவளை உலுக்க,
"அங்கன ஏன் கேட்கிறீக... என்கிட்ட கேளும்... நான் சொல்லுதேன்" என்று குரு அவள் முன்னாடி வந்து நின்றான்.
இப்போது வரை குரு வேதாவிடம் சுமுகமாக பேசவில்லை. அவன் தீடீரென்று அப்படி வந்து அவர் முன்னே நிற்கவும் குழப்பமானவர்,
தன் தம்பியை பார்த்து, "நீங்கதான் ரொம்ப ரோஷாக்காராக... என்கிட்ட பேச மாட்டீகளே... இப்ப மட்டும் என்ன?" என்று சொல்லி பார்வையை எங்கோ வெறித்தார்.
"நான் ஏதோ பண்ணிட்டேன்னு உங்க சீமந்த புத்திரிகிட்ட விசாரிச்சிக்கிட்டிருந்தீகளே... அதனாலதான் பேசினனாக்கும்... இல்லாட்டி உங்ககிட்ட பேச எனக்கென்ன கிடக்கு" என்றவன் அலட்சியமாய் உரைக்க,
அவன் பேசியதை கேட்டு வேதா வருத்தமுற, இந்த சம்பாஷணையை பார்த்து கொண்டிருந்த ஷிவானிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அதற்குள் குரு ஷிவானியை பார்த்து, "நான் என்னவே பண்ண உன்னை... உங்க அம்மா என்னை சந்தேகம் படுதாக... ஒழுங்கா பதில் சொல்லுவே" என்று அவன் மிரட்டலாய் கேட்க,
"அது... நான் மாடிக்கு போக ஏணி மேல ஏறி" என்றவள் ஆரம்பிக்க அவன் பதட்டமடைந்தான். இவள் எல்லாவற்றையும் சொல்லி தன்னை வம்பில் சிக்க வைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாளோ என்று எண்ணியவன்,
அவள் பேச்சை இடைமறித்து "உங்க பொண்ணுதான் நான் சொல்ல சொல்ல கேட்காம ஏணி மேல ஏறி விழுந்திட்டாக... அதுக்கு நான் அவளை வைஞ்சிட்டான்... அதுக்காகதான் மூஞ்சை தூக்கி வைச்சிட்டிருக்காக... அம்புட்டுதான்" என்றவன் ஷிவானியிடம்,
"அம்புட்டுதானே?!" என்று அழுத்தி கேட்க,
"எஸ் எஸ்... தட்ஸ் இட் மீ" என்று அவன் சொன்னதை ஆமோதித்ததை போல தலையசைத்தாள்.
குரு உள்ளிருந்து மூச்சை வெளிவிட்டவன் அதற்குள் அங்கே நிற்காமல் நகர்ந்து செல்ல வேதா அவன் பின்னோடு ஓடி "சிவா" என்றழைத்தார்.
அவன் திரும்பி பாராமலே நிற்க வேதா இறங்கிய தொனியில், "தப்பா எடுத்துக்காதே சிவா... நீயும் ஷிவானியும் பழகிற விஷயம் தெரிஞ்சா அவரை என்னை கொன்னே போட்டிருவாரு... அதுவும் என்கிட்ட அவர் சொல்லியே அனுப்பினாரு... எந்த ஜென்மத்திலயும் உன்னை மருமகனா அவரு ஏத்துக்க மாட்டாராம்" என்க,
சட்டென்று திரும்பியவன் எகத்தாளமான பார்வையோடு, "இப்படின்னு அவகளே சொன்னாகளா?" என்று வினவினான்.
"ஹ்ம்ம்" என்று முகத்தை தொங்க போட்டு கொண்டார் வேதா.
"அப்படின்னா இந்த ஜென்மத்தில உம்மை வூட்டுக்காருக்கு நான்தைன் மருமவன்... உம்மை மவளுக்கு நான்தான் புருஷன்" என்றதும் வேதா அதிர்ச்சியில், "என்ன சொல்ற சிவா நீ?" என்றார்.
"தினை விதைச்சவன் தினை அறுப்பான்... வினை விதைச்சவன் வினை அறுப்பான்... உம்மை வூட்டுக்காரு எதை விதைச்சாகளோ அதை அறுப்பாக" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் அகல வேதா தலையை பிடித்து கொண்டார்.
இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிக்க போவது தானா அல்லது தன் மகள் ஷிவானியா என்று அவருக்கு புரியவில்லை. அதே நேரம் இத்தனை வருடத்திற்கு பிறகு பிறந்த வீட்டிற்கு வந்தும் அந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் இதென்ன புது பிரச்சனை என்று அவஸ்த்தைப்பட்டார்.
இது ஒன்று புதிதில்லவே. எல்லா பெண்களுக்கும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது பழகிய விஷயம்தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல.
வேதா தவிப்பான மனநிலையை இருக்க, அப்போது அவரின் மூன்றாவது தங்கை அமிர்த வள்ளியின் வருகை அந்த சிந்தனையை மாற்றியிருந்தது.
அவரின் கணவன் வெங்கடாச்சலம் வேதாவையும் ஷிவானியையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு புறப்பட,
"உங்க அக்கா கோழி அடிச்சி குழம்பு வைச்சிருக்காக... சாப்பிட்டு போவே" என்றார் முருகவேல்.
"கடையில வேலை கிடக்கு மாமா... விரசா முடிச்சிட்டு வந்திடுதேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
வெங்கடாச்சலம் தங்கத்தின் சொந்த தம்பி. ஆதலால் அந்த மருமகனிடம் மட்டும் கொஞ்சம் உரிமையாய் பேசுவார் முருகவேல். ஆதலாலயே திருமணமாகி அவர்கள் மட்டும் பக்கத்து தெருவிலயே குடியிருந்தனர்.
அமிர்த வள்ளிக்கும் வெங்கடச்சலத்திற்கும் இரு குழந்தைகள். ஐஸ்வர்யா ஏற்கனவே அறிமுகம். அடுத்து அவளின் தம்பி குமரன். பேசியே ஊரையே விற்றுவிடுவான்.