Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
சூறாவளி வீசியது
குரு தன் கன்னத்தில் அவன் கரத்தை வைத்திருப்பதை உணர்ந்தும் உணராமலும் இரண்டாம் கட்ட நிலையில் இருந்த ஷிவானியை சற்று நிலைப்படுத்தி நிறுத்தியது ஜஸ்வர்யாவின் குரல்.
அவள் அந்த நொடியே குருவை விட்டு அவசரமாய் விலகி நிற்க, குருவிற்கு ஏமாற்றமும் ஐஸ்வர்யாவின் செய்கையால் அவள் மீது எரிச்சலும் மூண்டது.
ஐஸ்வர்யாவின் அலறல் அந்த வீட்டில் உள்ள எல்லோருக்குமே கேட்டுவிட்டது. ஏன் வாசலில் திண்ணை மீது அமர்ந்திருந்த வள்ளியம்மை காதுக்கும் எட்டி, "யாருல சத்தம் போடறது?" என்று வினவினார்.
ஆனால் வீட்டில் உள்ள யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுள் வேதா மட்டும்தான், "ஐஸுக்கு என்னாச்சு?" என்று பதற,
"அதெல்லாம் ஒரு மண்ணும் ஆயிருக்காதுக்கா... அவ சும்மாவே அப்படிதான் கிழிப்பா" என்று அமிர்தா அலட்டிக் கொள்ளாமல் சொல்ல,
"ஆமாஆமா... அவளுக்கு இதே பொழுப்புதான்" என்று தங்கமும் அலத்து கொண்டார்.
அவளின் பிரச்சனை என்னவென்று யாரும் கேட்க கூட வரவில்லை.
ஐஸ்வர்யா அந்த நொடி தன் மொத்த கோபத்தையும் பார்வையாலேயே ஷிவானி மீது காட்ட, அவள் ஏதும் அறியாதவளாய் நின்றிருந்தாள்.
குரு கோபம் பொங்க, "இப்ப எதுக்கடி கத்தின?" என்று ஜஸ்வர்யா மீது பாய,
"ஏன்? இடைஞ்சல் பண்ணிட்டனோ?!" என்று எகத்தாளமாய் கேட்டாள்.
"அறைஞ்சன்னா கன்னம் பழுத்திரும்" என்று அவன் தன் கரத்தை ஓங்க,
ஷிவானி பதறி துடித்து, "சின்ன பொண்ணுக்கிட்ட போய் ஏன் இப்படி கோப்படிறீங்க?" என்றவள் சொல்ல அந்த வார்த்தையில் ஷிவானி அங்கே நிற்பதை மனதில் கொண்டு அவன் அமைதிபெற்றான்.
ஆனால் ஐஸ்வர்யா ஆத்திரத்தோடு, "யாரு இங்க சின்ன பொண்ணு? ஒசரத்தில கொஞ்சம் கம்மியா இருந்தா சின்ன பொண்ணுன்னு சொல்லிடுவீகளோ?" என்றவள் எகிற, குரு தலையிலடித்து கொண்டான்.
ஷிவானி இயல்பாய் புன்னகையித்து, "நீ ட்வல்த்து படிக்கிறதாதானே சித்தி சொன்னாங்க" என்றவள் கேட்க,
"ஆமா... படிக்குதேன்... அதனால எல்லாம் நீங்க என்னை சுலபமா ஏமாத்திட முடியாது... மாமாவை நான்தான் கட்டிக்கிடுவேன்" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவள் பின்மண்டையில் அடித்தான் குரு.
"மாமா" என்று அவள் கோபமாய் திரும்ப,
அவன் எரிச்சலான பார்வையோடு, "நான் உன்னை கட்டிக்கிட மாட்டேன்னு பலதடவை படிச்சி படிச்சி சொல்லுதேன்... அது ஏன்வே உனக்கு புரியவே மாட்டேங்குது" என்றவன் அழுத்தமாய் சொன்ன நொடி,
"அப்படின்னா இந்த மலேசியா காரகளதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டு வைக்க ஷிவானி அதிர்ந்தாள்.
ஆமா என்று தொண்டை வரை வந்த வார்த்தையை குரு விழுங்கி கொண்டு மௌனமாய் நிற்க, ஐஸ்வர்யாவிற்கு அவன் சொல்லவிட்டாலும் அவன் எண்ணம் புரிந்து போனது.
ஐஸ்வர்யா கண்ணீரை உகுத்தபடி, "என் குடியை கெடுக்கத்தான் மலேசியாவில இருந்து வந்தீகளோ?! அப்படி என்னக்கா சொக்கு பொடி போட்டீக என் மாமனுக்கு" என்று விம்மியபடி கேட்டதும் ஷிவானியின் மனம் கலக்கமுற்றது.
"என்னடி பேச்சு பேசிட்டிருக்க?... அடி பின்னிடுவேன்... சொல்லிட்டேன்" என்று குரு எச்சரிக்க அவள் சற்றும் அசராமல்,
"அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டா அடிங்க... அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடிங்க" என்க, அவன் கடுப்பாக அவள் மேலே தொடர்ந்தாள்.
"அப்படி என்ன ராகினிகிட்டயும் என்கிட்டயும் இல்லாததை இவககிட்ட கண்டிட்டீக... இத்தனைக்கும் வெளுப்பு தோளெல்லாம் கூட இல்லையே... பந்தாவா போட்டிருக்கிற உடுப்பில மயங்கிட்டீங்களோ?!" என்று ஐஸ்வர்யா சொல்லியபடி ஷிவானியை அருவருக்கத்தக்க பார்வை பார்க்க அவள் கூனிகுருகி போனாள். இந்த மாதிரியான பேச்சுக்கள் அவளுக்கு ரொம்பவும் புதிது.
அவள் அழுது கொண்டே கொள்ளை புற வாசலின் வழியே வெளியேறிவிட அத்தனை நேரம் அந்த பிரச்சனையை எப்படி சுமுகமாய் சமாளிப்பதென்று அமைதி காத்தவன், ஷிவானியின் அழுகையை கண்ட நொடி ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்துவிட்டான்.
அவள் அதிர்ச்சியில், "அவகளுக்காக என்னை அடிச்சிட்டீக இல்ல" என்று கேட்டு அழுதவள் விடுவிடுவென நடந்து முகத்தை தூக்கி வைத்து கொண்டு வாசல்புறம் நடந்து செல்ல, குரு தான் என்ன செய்துவிட்டோம் என்று தலையை பிடித்து கொண்டுநின்றான்.
யாரை சமாதானம் செய்வதென்றே அவனுக்கு புரியவில்லை. சற்று யோசித்தவன், பின்னர் ஐஸ்வர்யா பின்னோடு செல்ல அவளோ வீட்டில் உள்ள யார் அழைப்பிற்கும் செவி சாய்க்காமல் நேராய் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.
அவனும் அவளை தேடி கொண்டு வந்து அவள் அருகில் அமர அவள் கோபித்து கொண்டு எழுந்து நின்று கொண்டாள்.
"ஏ ஐஸு" என்றவன் அழைக்க,
"என்னை அடிச்சிபுட்டீக இல்ல... போங்க பேசாதீக" என்று கண்ணீரும் கம்பளையுமாக உரைக்க, "மாமா உன்னை அடிக்க கூடாதோ? எனக்கு அந்த உரிமை இல்லையாவே" என்று கேட்டதும் அவள் முகம் லேசாய் தெளிவுபெற்றது.
அவன் அவள் கரத்தை பிடித்து அருகில் நிறுத்தியவன், "அடிச்சிருக்க கூடாதுதான்... தப்புதேன்... ஆனா நீ பேசினதும் தப்புதேனே... இத்தனை வருசம் கழிச்சி வந்திருக்காக... அவங்க கிட்ட போய் நீ அப்படி வரைமுறையில பேசியிருக்க கூடாது... அந்த கோபத்திலதான் கூறுகெட்ட தனமா கை நீட்டுப்புட்டேன்" என்றவன் பொறுமையாய் விளக்க,
அவன் பேசுவதை அவள் மௌனமாக கேட்டு கொண்டிருந்தாள்.
"வேணா நீ பதிலுக்கு மாமனை ஒண்ணுக்கு இரண்டடி அடிச்சிக்கிடு" என்று சொல்ல அவள் மனம் மொத்தமாய் இளகியது.
"உம்ஹும்" என்றவள் தலையாட்ட குரு அவளிடம், "போய் ஷிவானி அக்காகிட்ட பேசு ஐஸ்... அவக மனசு ரொம்ப கஷ்டப்படிறாக" என்று சொன்ன நொடி கோபம் தலைக்கேற ஐஸ்வர்யா சடாரென அவன் பிடித்திருந்த அவள் கரத்தை உருவி கொண்டாள்.
"இதான் சேதியா? அவகள நான் சமாதானப்படுத்த நீங்க என்னை வந்து சமாதானப்படுத்திறீகளோ... நல்லா கதையாம்ல இருக்கு" என்றவள் மூச்சிறைக்க அவனை முறைக்க,
"அப்படி எல்லா இல்லவே" என்று குரு சொல்ல, "வேற எப்படிதாம்" என்று கேட்டு எகத்தாளமாய் பார்த்தாள்.
"சின்ன புள்ளன்னு உன்கிட்ட போய் இறங்கி வந்து பேசினேன் பாரு... என்னைய" என்றவன் எரிச்சல் மிகுதியால் சொல்லி கொண்டிருக்கும் போதே,
"சரி நான் அவககிட்ட பேசுதேன்" என்றாள் ஐஸ்வர்யா.
"ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும்... அப்பதான் பேசுவேன்" என்று சொன்னவளை அவன் குறுகுறுவென பார்க்க,
"என்னைய கல்யாணம் கட்டிக்கிறேன்னு சத்தியம் பண்ணுங்க" என்று தன் கரத்தை நீட்டினாள்.
'இவ அடங்க மாட்டா போல இருக்கே' என்று இவன் வாய்க்குள்ளேயே முனகியபடி அமர்ந்திருக்க,
"சத்தியம் பண்ணுங்க" என்று மீண்டும் அவள் கேட்க, வள்ளியம்மையின் கொம்பு அவள் கரத்தில் பாய்ந்தது.
இத்தனை நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அத்தனை ஆழமாய் ஒட்டுகேட்டு கொண்டிருந்த வள்ளியம்மைக்கு கடைசியாய் ஐஸ்வர்யா பேசியதுதான் பளிச்சென்று புரிந்துவிட்டது.
"அம்மாட்சி" என்றவள் கையை உதற,
"வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை முள்ளு கொத்தோட ஏறுக்கிச்சாம்... அந்த மாதிரி கதையாம்ல இருக்கு...
என் பேரன் உசரத்துக்கும் உடம்புக்கும் சீக்காளி கோழி மாறி இருந்துக்கிட்டு உனக்கு அவனை கட்டிக்கிடனுமா... வகுந்துபுடுவேன் வகுந்து... சிவகுருவுக்கு சிவாணிதான்னு நான் எப்பவோ முடிவு பண்ணிடுதேன்... இவ யாருடி நடுவில சத்தியம் கேட்குதா?" என்றவர்
குருவின் புறமும் திரும்பி,
"அவதான் ரொம்ப சலம்புதான்னா... நீ என்னவோ பார்த்துக்கிட்டு நிக்குதே... செவுலயே இரண்டு விட வேணாமா?!" என்று சொல்ல குருவிற்கு பைத்தியமே பிடித்தது.
ஜஸ்வர்யாவுக்கு கோபம் கனலாய் ஏறியது.
"நான் சீக்காளி கோழியாட்டும் இருக்கேன்... அவக மட்டும் சீமை பசுவாட்டும் இருக்காகளோ... எங்கனயோ இருந்துவந்த அவங்க உங்க இரண்டு பேருக்கும் முக்கியமா போயிட்டாக இல்ல... நான் வேண்டாதவளா போயிட்டேன்" என்க,
"அப்படி எல்லாம் இல்ல ஐஸு" என்று குரு அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய,
அவள் அமைதியடைவதாக இல்லை.
"அப்படிதேன்... எனக்கு நல்ல புரிஞ்சி போச்சு... நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கூட்டு சதி செய்தீகளோ... பாத்துக்கிடுதேன்... எப்படி அந்த மலேசியாக்காரியை நீங்க கட்டிக்கிடுவீங்கன்னு" என்று சவாலாய் சொல்லிவிட்டு வாசலை கடந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.
குரு தன் கன்னத்தில் அவன் கரத்தை வைத்திருப்பதை உணர்ந்தும் உணராமலும் இரண்டாம் கட்ட நிலையில் இருந்த ஷிவானியை சற்று நிலைப்படுத்தி நிறுத்தியது ஜஸ்வர்யாவின் குரல்.
அவள் அந்த நொடியே குருவை விட்டு அவசரமாய் விலகி நிற்க, குருவிற்கு ஏமாற்றமும் ஐஸ்வர்யாவின் செய்கையால் அவள் மீது எரிச்சலும் மூண்டது.
ஐஸ்வர்யாவின் அலறல் அந்த வீட்டில் உள்ள எல்லோருக்குமே கேட்டுவிட்டது. ஏன் வாசலில் திண்ணை மீது அமர்ந்திருந்த வள்ளியம்மை காதுக்கும் எட்டி, "யாருல சத்தம் போடறது?" என்று வினவினார்.
ஆனால் வீட்டில் உள்ள யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுள் வேதா மட்டும்தான், "ஐஸுக்கு என்னாச்சு?" என்று பதற,
"அதெல்லாம் ஒரு மண்ணும் ஆயிருக்காதுக்கா... அவ சும்மாவே அப்படிதான் கிழிப்பா" என்று அமிர்தா அலட்டிக் கொள்ளாமல் சொல்ல,
"ஆமாஆமா... அவளுக்கு இதே பொழுப்புதான்" என்று தங்கமும் அலத்து கொண்டார்.
அவளின் பிரச்சனை என்னவென்று யாரும் கேட்க கூட வரவில்லை.
ஐஸ்வர்யா அந்த நொடி தன் மொத்த கோபத்தையும் பார்வையாலேயே ஷிவானி மீது காட்ட, அவள் ஏதும் அறியாதவளாய் நின்றிருந்தாள்.
குரு கோபம் பொங்க, "இப்ப எதுக்கடி கத்தின?" என்று ஜஸ்வர்யா மீது பாய,
"ஏன்? இடைஞ்சல் பண்ணிட்டனோ?!" என்று எகத்தாளமாய் கேட்டாள்.
"அறைஞ்சன்னா கன்னம் பழுத்திரும்" என்று அவன் தன் கரத்தை ஓங்க,
ஷிவானி பதறி துடித்து, "சின்ன பொண்ணுக்கிட்ட போய் ஏன் இப்படி கோப்படிறீங்க?" என்றவள் சொல்ல அந்த வார்த்தையில் ஷிவானி அங்கே நிற்பதை மனதில் கொண்டு அவன் அமைதிபெற்றான்.
ஆனால் ஐஸ்வர்யா ஆத்திரத்தோடு, "யாரு இங்க சின்ன பொண்ணு? ஒசரத்தில கொஞ்சம் கம்மியா இருந்தா சின்ன பொண்ணுன்னு சொல்லிடுவீகளோ?" என்றவள் எகிற, குரு தலையிலடித்து கொண்டான்.
ஷிவானி இயல்பாய் புன்னகையித்து, "நீ ட்வல்த்து படிக்கிறதாதானே சித்தி சொன்னாங்க" என்றவள் கேட்க,
"ஆமா... படிக்குதேன்... அதனால எல்லாம் நீங்க என்னை சுலபமா ஏமாத்திட முடியாது... மாமாவை நான்தான் கட்டிக்கிடுவேன்" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவள் பின்மண்டையில் அடித்தான் குரு.
"மாமா" என்று அவள் கோபமாய் திரும்ப,
அவன் எரிச்சலான பார்வையோடு, "நான் உன்னை கட்டிக்கிட மாட்டேன்னு பலதடவை படிச்சி படிச்சி சொல்லுதேன்... அது ஏன்வே உனக்கு புரியவே மாட்டேங்குது" என்றவன் அழுத்தமாய் சொன்ன நொடி,
"அப்படின்னா இந்த மலேசியா காரகளதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டு வைக்க ஷிவானி அதிர்ந்தாள்.
ஆமா என்று தொண்டை வரை வந்த வார்த்தையை குரு விழுங்கி கொண்டு மௌனமாய் நிற்க, ஐஸ்வர்யாவிற்கு அவன் சொல்லவிட்டாலும் அவன் எண்ணம் புரிந்து போனது.
ஐஸ்வர்யா கண்ணீரை உகுத்தபடி, "என் குடியை கெடுக்கத்தான் மலேசியாவில இருந்து வந்தீகளோ?! அப்படி என்னக்கா சொக்கு பொடி போட்டீக என் மாமனுக்கு" என்று விம்மியபடி கேட்டதும் ஷிவானியின் மனம் கலக்கமுற்றது.
"என்னடி பேச்சு பேசிட்டிருக்க?... அடி பின்னிடுவேன்... சொல்லிட்டேன்" என்று குரு எச்சரிக்க அவள் சற்றும் அசராமல்,
"அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டா அடிங்க... அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடிங்க" என்க, அவன் கடுப்பாக அவள் மேலே தொடர்ந்தாள்.
"அப்படி என்ன ராகினிகிட்டயும் என்கிட்டயும் இல்லாததை இவககிட்ட கண்டிட்டீக... இத்தனைக்கும் வெளுப்பு தோளெல்லாம் கூட இல்லையே... பந்தாவா போட்டிருக்கிற உடுப்பில மயங்கிட்டீங்களோ?!" என்று ஐஸ்வர்யா சொல்லியபடி ஷிவானியை அருவருக்கத்தக்க பார்வை பார்க்க அவள் கூனிகுருகி போனாள். இந்த மாதிரியான பேச்சுக்கள் அவளுக்கு ரொம்பவும் புதிது.
அவள் அழுது கொண்டே கொள்ளை புற வாசலின் வழியே வெளியேறிவிட அத்தனை நேரம் அந்த பிரச்சனையை எப்படி சுமுகமாய் சமாளிப்பதென்று அமைதி காத்தவன், ஷிவானியின் அழுகையை கண்ட நொடி ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்துவிட்டான்.
அவள் அதிர்ச்சியில், "அவகளுக்காக என்னை அடிச்சிட்டீக இல்ல" என்று கேட்டு அழுதவள் விடுவிடுவென நடந்து முகத்தை தூக்கி வைத்து கொண்டு வாசல்புறம் நடந்து செல்ல, குரு தான் என்ன செய்துவிட்டோம் என்று தலையை பிடித்து கொண்டுநின்றான்.
யாரை சமாதானம் செய்வதென்றே அவனுக்கு புரியவில்லை. சற்று யோசித்தவன், பின்னர் ஐஸ்வர்யா பின்னோடு செல்ல அவளோ வீட்டில் உள்ள யார் அழைப்பிற்கும் செவி சாய்க்காமல் நேராய் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.
அவனும் அவளை தேடி கொண்டு வந்து அவள் அருகில் அமர அவள் கோபித்து கொண்டு எழுந்து நின்று கொண்டாள்.
"ஏ ஐஸு" என்றவன் அழைக்க,
"என்னை அடிச்சிபுட்டீக இல்ல... போங்க பேசாதீக" என்று கண்ணீரும் கம்பளையுமாக உரைக்க, "மாமா உன்னை அடிக்க கூடாதோ? எனக்கு அந்த உரிமை இல்லையாவே" என்று கேட்டதும் அவள் முகம் லேசாய் தெளிவுபெற்றது.
அவன் அவள் கரத்தை பிடித்து அருகில் நிறுத்தியவன், "அடிச்சிருக்க கூடாதுதான்... தப்புதேன்... ஆனா நீ பேசினதும் தப்புதேனே... இத்தனை வருசம் கழிச்சி வந்திருக்காக... அவங்க கிட்ட போய் நீ அப்படி வரைமுறையில பேசியிருக்க கூடாது... அந்த கோபத்திலதான் கூறுகெட்ட தனமா கை நீட்டுப்புட்டேன்" என்றவன் பொறுமையாய் விளக்க,
அவன் பேசுவதை அவள் மௌனமாக கேட்டு கொண்டிருந்தாள்.
"வேணா நீ பதிலுக்கு மாமனை ஒண்ணுக்கு இரண்டடி அடிச்சிக்கிடு" என்று சொல்ல அவள் மனம் மொத்தமாய் இளகியது.
"உம்ஹும்" என்றவள் தலையாட்ட குரு அவளிடம், "போய் ஷிவானி அக்காகிட்ட பேசு ஐஸ்... அவக மனசு ரொம்ப கஷ்டப்படிறாக" என்று சொன்ன நொடி கோபம் தலைக்கேற ஐஸ்வர்யா சடாரென அவன் பிடித்திருந்த அவள் கரத்தை உருவி கொண்டாள்.
"இதான் சேதியா? அவகள நான் சமாதானப்படுத்த நீங்க என்னை வந்து சமாதானப்படுத்திறீகளோ... நல்லா கதையாம்ல இருக்கு" என்றவள் மூச்சிறைக்க அவனை முறைக்க,
"அப்படி எல்லா இல்லவே" என்று குரு சொல்ல, "வேற எப்படிதாம்" என்று கேட்டு எகத்தாளமாய் பார்த்தாள்.
"சின்ன புள்ளன்னு உன்கிட்ட போய் இறங்கி வந்து பேசினேன் பாரு... என்னைய" என்றவன் எரிச்சல் மிகுதியால் சொல்லி கொண்டிருக்கும் போதே,
"சரி நான் அவககிட்ட பேசுதேன்" என்றாள் ஐஸ்வர்யா.
"ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும்... அப்பதான் பேசுவேன்" என்று சொன்னவளை அவன் குறுகுறுவென பார்க்க,
"என்னைய கல்யாணம் கட்டிக்கிறேன்னு சத்தியம் பண்ணுங்க" என்று தன் கரத்தை நீட்டினாள்.
'இவ அடங்க மாட்டா போல இருக்கே' என்று இவன் வாய்க்குள்ளேயே முனகியபடி அமர்ந்திருக்க,
"சத்தியம் பண்ணுங்க" என்று மீண்டும் அவள் கேட்க, வள்ளியம்மையின் கொம்பு அவள் கரத்தில் பாய்ந்தது.
இத்தனை நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அத்தனை ஆழமாய் ஒட்டுகேட்டு கொண்டிருந்த வள்ளியம்மைக்கு கடைசியாய் ஐஸ்வர்யா பேசியதுதான் பளிச்சென்று புரிந்துவிட்டது.
"அம்மாட்சி" என்றவள் கையை உதற,
"வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை முள்ளு கொத்தோட ஏறுக்கிச்சாம்... அந்த மாதிரி கதையாம்ல இருக்கு...
என் பேரன் உசரத்துக்கும் உடம்புக்கும் சீக்காளி கோழி மாறி இருந்துக்கிட்டு உனக்கு அவனை கட்டிக்கிடனுமா... வகுந்துபுடுவேன் வகுந்து... சிவகுருவுக்கு சிவாணிதான்னு நான் எப்பவோ முடிவு பண்ணிடுதேன்... இவ யாருடி நடுவில சத்தியம் கேட்குதா?" என்றவர்
குருவின் புறமும் திரும்பி,
"அவதான் ரொம்ப சலம்புதான்னா... நீ என்னவோ பார்த்துக்கிட்டு நிக்குதே... செவுலயே இரண்டு விட வேணாமா?!" என்று சொல்ல குருவிற்கு பைத்தியமே பிடித்தது.
ஜஸ்வர்யாவுக்கு கோபம் கனலாய் ஏறியது.
"நான் சீக்காளி கோழியாட்டும் இருக்கேன்... அவக மட்டும் சீமை பசுவாட்டும் இருக்காகளோ... எங்கனயோ இருந்துவந்த அவங்க உங்க இரண்டு பேருக்கும் முக்கியமா போயிட்டாக இல்ல... நான் வேண்டாதவளா போயிட்டேன்" என்க,
"அப்படி எல்லாம் இல்ல ஐஸு" என்று குரு அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய,
அவள் அமைதியடைவதாக இல்லை.
"அப்படிதேன்... எனக்கு நல்ல புரிஞ்சி போச்சு... நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கூட்டு சதி செய்தீகளோ... பாத்துக்கிடுதேன்... எப்படி அந்த மலேசியாக்காரியை நீங்க கட்டிக்கிடுவீங்கன்னு" என்று சவாலாய் சொல்லிவிட்டு வாசலை கடந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.