Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
அவமானம்
அந்த காட்சியை பார்த்த ஷிவானிக்கு நெருப்பில்லாமல் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது.
கனலேறி பார்வையோடு அவள் பார்த்து கொண்டிருந்த திசையில் குரு நின்றிருக்க, கால் தரையில் படாமல் அவன் கரத்திலிருந்தால் ஒரு பெண்.
அவள் யாரென்ற அறிமுகம் தேவையா என்ன? ஷிவானியின் சிறுமூளை அவளை ராகினி என்று கணித்து கொண்டது.
சற்று முன்பு குரு மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருக்க, அவனை தேடி கொண்டு வந்த ராகினி அவன் கழுத்தை பிடித்து கொண்டு முதுகில் சாய்ந்தாள்.
நிலைத்தடுமாறி விழ போனவன் சற்று சுதாரித்து கொண்டு அவளை தள்ளி விட்டு,
"மலைமாடு மாறி வளர்ந்திருக்கியே... கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்" என்று கடிந்து கொள்ள,
"இருந்தா நீங்கதான் கொஞ்சம் கொடுக்கிறது" என்று எகத்தாளமாய் சொல்லி சிரித்தாள் ராகினி.
"இந்த வாய் மட்டும் இல்லன்னா உன்னைய எல்லாம் நாய் கூட மதிக்காது" என்றவன் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த திரும்பினான்.
"என்ன மாமா?... எவ்வளவு தூரத்தில இருந்து உன்னை பார்க்க வந்திருக்கேன்... இப்படி முகத்தை திருப்பிக்கிறியே"
"என்னடி பெரிய தூரம்... இதோ இருக்கு சென்னை... நைட்டு ட்ரெயினை பிடிச்சி காலையில வந்து இறங்கிட்டீங்க"
"ஆமாஆமா சென்னை பக்கம்தான்... மலேசியாவோட கம்பேர் பண்ணும்தான்... சென்னை பக்கம்தான்" அவள் குத்தலான பார்வையோடு சொல்ல,
அவளை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு பதில்பேசாமல் மீண்டும் அவன் வேலையை தொடர்ந்தான்.
"மலேசியா பார்ட்டிக்கிட்ட ரொம்ப குழையறீங்களாமே?!"
அவள் இப்படி சொன்னதுதான் தாமதம்.
விருட்டென நிமிர்ந்தவன், "பார்ட்டிக் கீர்ட்டின்ன பல்லு பேந்திரும்... அவ உனக்கு அக்கால" என்றவன் சீற்றத்தோடு உரைக்க ராகினியும் பதிலுக்கு முறைத்தாள்.
"அக்காவா? இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க இந்த அக்கா சொக்கா எல்லாம்"
"என்னல... வார்த்தை தடிக்குது ? பார்த்து பேசு"
"அந்த மூஞ்சியெல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம்... நான் உங்களைதான் பார்க்க வந்தேன்"
"ராகினி... அவக உனக்கு பெரிம்மா பொண்ணு... இப்படியெல்லாம் எடக்குமுடக்கா பேசிக்கிட்டு இல்லாம அவககிட்ட சகஜமா பேசி பழகுங்க... ஏதாவது ஏடாகூடாமா சண்டை கிண்டை போட்டிங்கன்னு தெரிஞ்சுது" என்றவன் சொல்லி அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்க்க அவளோ அலட்சியமான பார்வையோடு,
"என் வழில குறுக்கிடாத வரைக்கும் நான் சண்டைலாம் போடமாட்டேன் மாமா... ஆனா குறுக்கிட்டான்னு வைச்சுக்கோங்க" அவள் மேலே சொல்லாமல் நிறுத்தி குரூரமாய் பார்த்தாள்.
"என்னடி ரவுடி கணக்கா பேசிட்டிருக்க... உம்ஹும்... உன்னைய சொல்லி குத்தமில்லடி... உன்னைய இப்படி வளர்த்து வைச்சிருக்காக பாரு... எங்க அக்கா அவகளை சொல்லனும்"
"அதெல்லாம் பேசாதீங்க... எனக்கு கரெக்டா சொல்லுங்க... உங்களுக்கும் அந்த மலேசியாகாரிக்கும் இடையில என்ன போயிட்டிருக்கு?!"
"என்னவோ போயிட்டிருக்கு... உனக்கென்னடி... போய் வேற ஸோலியிருந்தா பாருவே"
"அப்போ நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?!"
"என்னடி கேள்விப்பட்ட?"
"நீங்க அந்த மலேசியாகாரிக்கு அல்வா வாங்கி தந்தீகளாம்... பைக்ல வேற கூட்டிட்டு ஊரை சுத்தினாங்களாம்... எல்லாத்துக்கும் மேல... அவங்களை கட்டிக்க போறன்னு சபதமெல்லாம் போட்டீங்களாம்"
அவன் ஆச்சர்ய பார்வையோடு, "யாருடி உனக்கு இதெல்லாம் சொன்னது?" என்றவன் குழப்பமுற,
"எல்லா அந்த குள்ள கத்திரிக்காய் ஐஸ்தான்" என்றாள் ராகினி.
அவன் வியப்பான பார்வையோடு,
"நீங்க இரண்டு பேரும் தென்துருவமும் வடதுருவமாச்சே... எப்படிறி பேசிக்கிட்டீங்க?" என்றவன் கேட்க,
"அய்... நாங்க பாட்டுக்கு இங்க சண்டை போட்டிட்டிருந்தா... நீங்க பாட்டுக்கு எவளாயாச்சும் அந்தபக்கம் கரெக்ட் பண்ணிட்டு போயிட்டீங்கன்னா" என்றாள் ராகினி.
"எனக்குன்னு எங்கிருந்து வந்து வாச்சீங்க... நல்லா ஏர்ல பூட்டின எருமையாட்டும்"
"எருமை கிருமைன்னா எனக்கு செம கோபம் வரும்"
"அதேதான் நானும் சொல்லுதேன்... என்னை டென்ஷன் படுத்தாம ஓடி போயிரு"
ராகினி அவன் அருகில் வந்து, "போயிடுறேன்... ஆனா அந்த மலேசியாகாரிக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்லன்னு சொல்லுங்க... பிரச்சனை இப்பவே ஸால்வட்... இல்லன்னா"
"இல்லன்னா என்னடி பண்ணுவ?"
"அந்த மலேசியாகாரியை தெறிக்க விடுவோம்... இந்த தடவை ஐஸும் எங்க கூட்டணிதான்... பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்"
அவன் தன் புருவத்தை ஏற்றி, "அம்புட்டு தைரியமால உனக்கு... யார் யாரை தெறிக்க விடுறான்னு இப்ப பாரு" என்று தன் கை முஷ்டியை மடக்கியவன் அவளை அலேக்காய் தன் கரத்தில் தூக்கி கொள்ள,
"என்ன மாமா?" என்று அதிர்ந்தாள் ராகினி.
"தவிடும் புண்ணாக்கும் கலந்து வைச்சிருக்கேன்... இதுல உன்னைய போட்டு முங்கி எடுக்க போறேன்" என்க, அவள் பதறிக் கொண்டு
"வேணா மாமா... வேணா மாமா... ப்ளீஸ் மாமா... அதை பார்க்கவே நல்லா இல்ல... உவேக்" என்றாள்.
"பார்க்கதான் செல்லம் நல்லா இருக்காது... டேஸ்ட்... ஹ்ம்ம்... நம்ம துளிசியை கேட்டு பாரு" என்றதும், "யாரு துளசி?" என்று ராகினி புரியாமல் கேட்க,
"என் செல்ல குட்டில... அதோ பாரு" என்றவன் கண்காண்பிக்க, "ம்மாமா" என்று குரல் கொடுத்தாள் துளசி.
"என்னை வைச்சி காமெடி பன்றீங்களா?"
"பின்ன... நீங்க ஹீரோயின் ரோல் பண்ணலான்னு பார்த்தீகளா?"
"நான் தாத்தாவை கூப்பிடிறேன்... " என்றவள் அவனை மிரட்டிவிட்டு சத்தமாய், "தாத்தா" என்று கத்த,
"கத்தின சாணில முங்கிடுவேனாக்கும்" என்றவன் சொன்ன நொடி தூக்கி வாரி போட்டது ராகினிக்கு!
"இல்ல இல்ல கத்த மாட்டேன்... விட்டிரு மாமா... நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்...ஹேர்ரெல்லாம் பழாயிடும்... அப்புறம் ஒரே ஸெமலடிக்கும்... இந்த வாரம்தான் பேஸியல் பண்ணேன்... இத்தோட நெக்ஸ்ட் மந்த்தான் உன் கஞ்ச பிசானாரி க்கா காசு கொடுப்பாக" என்றவள் தொடர்ச்சியாய் அவளின் பெரும் கவலைகளை விவரிக்க சிரிப்பாய் கேட்டு கொண்டு வந்தவன்,
"ஓவரா கவலை படாதடி... இதுவும் ப்யூர் ஹெர்பல்தான்... நாட்டு மாட்டு சாணமாக்கும்... இன்னும் பொலிவாயிடுவீக" என்றவன் அதன் பெருமை புகழை எல்லாம் உரைக்க ராகினிக்கு வியர்த்து போனது.
"மாமா சாணம் வேணாம்... பிண்ணாக்கு தண்ணியே பெட்டர்" என்றளவுக்கு இறங்கி வர,
"இல்லடி... அதுதான் உடம்புக்கு நல்லது" என்று அவர்கள் இரண்டில் எது என வாதம் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஷிவானி அங்கே வந்து நின்றாள்.
தூரத்தில் நின்று பார்ப்பவளுக்கு அந்த காட்சி எப்படி போய் சேர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
எதற்கு ஏன் என்று புரியாமல் உள்ளூர அவள் மனம் நொறுங்கி கொண்டிருக்க, அந்த நொடி சிவகுரு மீது கொண்ட மதிப்பெல்லாம் சுக்குநூறானது.
ஆனால் அந்த காட்சியின் மூலதாரம் என்னவென்று ஆராய அவள் மூளைக்கு பொறுமையில்லை. அவள் விழி அணைக்குள் கண்ணீர் மெல்ல தன் அளவுகோலை அதிகப்படுத்தி கொண்டிருந்தது.
அவள் கரமெல்லாம் எதையாவது தூக்கி போட்டு உடைக்கலாமா என பரபரக்க, அப்போதைக்கு அவள் கண்ணில் எதுவும் அகப்படவில்லை.
அல்லாடியபடி தன் பார்வையை சுழற்றியவள், இறுதியாய் அவள் நின்றிருந்த இடத்தில் அறைகுறையாய் உடைப்பட்ட பழைய பானையை பார்த்தாள்.
அதனை கோபத்தில் ஒரு எத்துவிட, அது உருண்டு சென்று விழுந்த சத்தம் கேட்டு சிவகுரு திரும்பி பார்த்தான்.
அங்கே ஷிவானி நின்றிருப்பதை பார்த்து அவன் துணுக்குற்ற சமயம் ராகினி தரையிறங்கினாள்.
ஷிவானியோ அவனை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் குளியலறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொள்ள,
ராகினி குருவின் காதோரம் நெருங்கி, "அவங்கதான் மிஸ். மலேசியாவா?" என்று கிண்டலாய் கேட்டு வைக்க குரு கோபமாய் தன் கரத்தை மடக்கினான்.
"சாரி சாரி அ..க்..கா" என்று மிரண்டபடி சொல்ல,
"அந்த பயம்" என்றவன் அவளை பார்வையாலேயே மிரட்டிவிட்டு கிணற்றடியில் சென்று தன் கைகால்களை அலம்ப ஆரம்பித்தான்.
ராகினி மனதிலிருந்த தீ இப்பொழுதுதான் இன்னும் அதிக உக்கிரமாய் எரிய ஆரம்பித்தது.
குரு ஷிவானிக்கு பரிந்து பேசுவதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டியபடி அவள் அங்கிருந்து அகன்றுவிட,
ஷிவானிக்கும் உள்ளூர கோபத் தீ கனலாய் எரிந்து கொண்டிருந்தது.
குளியலறைக்குள் சென்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் பெருகியது. குருவை இன்னொரு பெண்ணோடு பார்த்ததினால் உண்டான கலவரமா? நிச்சயமாய் அவளுக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் மனம் வேதனையில் உழன்றது.
தன்னால் இயன்றுவரை அழுதுமுடித்தவள் பின்னர் முகத்தை நன்றாய் நீரில் அலம்பி கொண்டு வெளியே வந்தாள்.
ஆனால் அவள் கண்ணீர் சுவட்டை அவள் முகம் காட்டி கொடுத்ததே. அதை குருவின் பார்வையும் ஒருவாறு குறித்து கொண்டது.
அவனை முறைத்தபடியே அவள் கடந்து செல்ல அவள் நடந்து செல்லும் பாதையை கவனித்தவன்,
"அங்கன ஒரே பாசியா இருக்கு... வழக்கி விட்டிர போது... இந்த பக்கம் வா" என்றவன் நல்லெண்ணத்திலேயே சொன்னாலும் அதனை கேட்டு கொள்ளும் மனநிலையில் அவள் இல்லையே!
"எனக்கு தெரியும்... உங்க வேலையை பாருங்க" என்று முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டவள் அவன் சொன்னதுக்கேற்றாற் போல் கால் வழுக்கிவிட தரையில் சரிந்தாள்.
"ம்மா" என்றவள் அலறிய சமயம் குரு அந்த காட்சியை பார்த்து தன்னையறியாமல் சிரித்துவிட்டான்.
'ஷிவானி உனக்கு டைமே சரியில்ல' என்றவள் சுயபச்சாதாபம் கொள்ளும் போது
குரு அவளை நெருங்கி உதவ வர, "ப்ளீஸ் டோன்ட்... நானே எழுந்திருச்சிப்பேன்" என்று கைகாண்பித்துவிட்டு சிரமப்பட்டு எழுந்து கொள்ள முயற்சி செய்தாள்.
அவளை எகத்தாளமாய் பார்த்தவன், "நல்லது சொன்னா கேட்டுக்கிடனும்... இல்லன்னா இப்படிதான்" என்க,
"வேணாம்... நான் செம காண்டல இருக்கேன்" என்று சொன்னவள் எழுந்து கொள்ள முடியாமல் அவதிப்பட .
"இருங்க நான் தூக்கி விடறேன்" என்று மீண்டும் அவளை நெருங்கினான்.
"வேண்டாம்... என்னை தொடாதீங்க" என்று தீர்க்கமாய் உரைத்தவள் அந்த வலியையும் மீறி கொண்டு எழுந்து நின்றாள். அவன் அதிர்ந்த பார்வையோடு
"தொடக்கூடாதா... அம்புட்டு கோபமா என் மேல?!" என்று கேட்க
"ஆமா... உங்க முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கல... ஐ ஹேட் யூ" என்று சொல்லிவிட்டு முன்னேறி நடக்க,
"சும்மா கதை விடாதீக... என்னையும் ராகினியும் சேர்த்து பார்த்துட்டு உங்க கண்ணு கலங்கினதை நான் பார்த்தேனே" என்று அவள் காதில் விழும்படி சொன்னான்.
"எனக்கு ஏன் கலங்குது?... அப்படி எல்லாம் இல்ல" என்றவள் அவனிடம் திட்டவட்டமாய் மறுக்க,
அவன் சிரித்தபடி, "உன் முகத்தை போய் கண்ணாடில பாருவே... தெரியும்" என்று சொல்ல அவள் மௌனமானாள்.
அந்த காட்சியை பார்த்த ஷிவானிக்கு நெருப்பில்லாமல் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது.
கனலேறி பார்வையோடு அவள் பார்த்து கொண்டிருந்த திசையில் குரு நின்றிருக்க, கால் தரையில் படாமல் அவன் கரத்திலிருந்தால் ஒரு பெண்.
அவள் யாரென்ற அறிமுகம் தேவையா என்ன? ஷிவானியின் சிறுமூளை அவளை ராகினி என்று கணித்து கொண்டது.
சற்று முன்பு குரு மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருக்க, அவனை தேடி கொண்டு வந்த ராகினி அவன் கழுத்தை பிடித்து கொண்டு முதுகில் சாய்ந்தாள்.
நிலைத்தடுமாறி விழ போனவன் சற்று சுதாரித்து கொண்டு அவளை தள்ளி விட்டு,
"மலைமாடு மாறி வளர்ந்திருக்கியே... கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்" என்று கடிந்து கொள்ள,
"இருந்தா நீங்கதான் கொஞ்சம் கொடுக்கிறது" என்று எகத்தாளமாய் சொல்லி சிரித்தாள் ராகினி.
"இந்த வாய் மட்டும் இல்லன்னா உன்னைய எல்லாம் நாய் கூட மதிக்காது" என்றவன் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த திரும்பினான்.
"என்ன மாமா?... எவ்வளவு தூரத்தில இருந்து உன்னை பார்க்க வந்திருக்கேன்... இப்படி முகத்தை திருப்பிக்கிறியே"
"என்னடி பெரிய தூரம்... இதோ இருக்கு சென்னை... நைட்டு ட்ரெயினை பிடிச்சி காலையில வந்து இறங்கிட்டீங்க"
"ஆமாஆமா சென்னை பக்கம்தான்... மலேசியாவோட கம்பேர் பண்ணும்தான்... சென்னை பக்கம்தான்" அவள் குத்தலான பார்வையோடு சொல்ல,
அவளை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு பதில்பேசாமல் மீண்டும் அவன் வேலையை தொடர்ந்தான்.
"மலேசியா பார்ட்டிக்கிட்ட ரொம்ப குழையறீங்களாமே?!"
அவள் இப்படி சொன்னதுதான் தாமதம்.
விருட்டென நிமிர்ந்தவன், "பார்ட்டிக் கீர்ட்டின்ன பல்லு பேந்திரும்... அவ உனக்கு அக்கால" என்றவன் சீற்றத்தோடு உரைக்க ராகினியும் பதிலுக்கு முறைத்தாள்.
"அக்காவா? இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க இந்த அக்கா சொக்கா எல்லாம்"
"என்னல... வார்த்தை தடிக்குது ? பார்த்து பேசு"
"அந்த மூஞ்சியெல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம்... நான் உங்களைதான் பார்க்க வந்தேன்"
"ராகினி... அவக உனக்கு பெரிம்மா பொண்ணு... இப்படியெல்லாம் எடக்குமுடக்கா பேசிக்கிட்டு இல்லாம அவககிட்ட சகஜமா பேசி பழகுங்க... ஏதாவது ஏடாகூடாமா சண்டை கிண்டை போட்டிங்கன்னு தெரிஞ்சுது" என்றவன் சொல்லி அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்க்க அவளோ அலட்சியமான பார்வையோடு,
"என் வழில குறுக்கிடாத வரைக்கும் நான் சண்டைலாம் போடமாட்டேன் மாமா... ஆனா குறுக்கிட்டான்னு வைச்சுக்கோங்க" அவள் மேலே சொல்லாமல் நிறுத்தி குரூரமாய் பார்த்தாள்.
"என்னடி ரவுடி கணக்கா பேசிட்டிருக்க... உம்ஹும்... உன்னைய சொல்லி குத்தமில்லடி... உன்னைய இப்படி வளர்த்து வைச்சிருக்காக பாரு... எங்க அக்கா அவகளை சொல்லனும்"
"அதெல்லாம் பேசாதீங்க... எனக்கு கரெக்டா சொல்லுங்க... உங்களுக்கும் அந்த மலேசியாகாரிக்கும் இடையில என்ன போயிட்டிருக்கு?!"
"என்னவோ போயிட்டிருக்கு... உனக்கென்னடி... போய் வேற ஸோலியிருந்தா பாருவே"
"அப்போ நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?!"
"என்னடி கேள்விப்பட்ட?"
"நீங்க அந்த மலேசியாகாரிக்கு அல்வா வாங்கி தந்தீகளாம்... பைக்ல வேற கூட்டிட்டு ஊரை சுத்தினாங்களாம்... எல்லாத்துக்கும் மேல... அவங்களை கட்டிக்க போறன்னு சபதமெல்லாம் போட்டீங்களாம்"
அவன் ஆச்சர்ய பார்வையோடு, "யாருடி உனக்கு இதெல்லாம் சொன்னது?" என்றவன் குழப்பமுற,
"எல்லா அந்த குள்ள கத்திரிக்காய் ஐஸ்தான்" என்றாள் ராகினி.
அவன் வியப்பான பார்வையோடு,
"நீங்க இரண்டு பேரும் தென்துருவமும் வடதுருவமாச்சே... எப்படிறி பேசிக்கிட்டீங்க?" என்றவன் கேட்க,
"அய்... நாங்க பாட்டுக்கு இங்க சண்டை போட்டிட்டிருந்தா... நீங்க பாட்டுக்கு எவளாயாச்சும் அந்தபக்கம் கரெக்ட் பண்ணிட்டு போயிட்டீங்கன்னா" என்றாள் ராகினி.
"எனக்குன்னு எங்கிருந்து வந்து வாச்சீங்க... நல்லா ஏர்ல பூட்டின எருமையாட்டும்"
"எருமை கிருமைன்னா எனக்கு செம கோபம் வரும்"
"அதேதான் நானும் சொல்லுதேன்... என்னை டென்ஷன் படுத்தாம ஓடி போயிரு"
ராகினி அவன் அருகில் வந்து, "போயிடுறேன்... ஆனா அந்த மலேசியாகாரிக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்லன்னு சொல்லுங்க... பிரச்சனை இப்பவே ஸால்வட்... இல்லன்னா"
"இல்லன்னா என்னடி பண்ணுவ?"
"அந்த மலேசியாகாரியை தெறிக்க விடுவோம்... இந்த தடவை ஐஸும் எங்க கூட்டணிதான்... பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்"
அவன் தன் புருவத்தை ஏற்றி, "அம்புட்டு தைரியமால உனக்கு... யார் யாரை தெறிக்க விடுறான்னு இப்ப பாரு" என்று தன் கை முஷ்டியை மடக்கியவன் அவளை அலேக்காய் தன் கரத்தில் தூக்கி கொள்ள,
"என்ன மாமா?" என்று அதிர்ந்தாள் ராகினி.
"தவிடும் புண்ணாக்கும் கலந்து வைச்சிருக்கேன்... இதுல உன்னைய போட்டு முங்கி எடுக்க போறேன்" என்க, அவள் பதறிக் கொண்டு
"வேணா மாமா... வேணா மாமா... ப்ளீஸ் மாமா... அதை பார்க்கவே நல்லா இல்ல... உவேக்" என்றாள்.
"பார்க்கதான் செல்லம் நல்லா இருக்காது... டேஸ்ட்... ஹ்ம்ம்... நம்ம துளிசியை கேட்டு பாரு" என்றதும், "யாரு துளசி?" என்று ராகினி புரியாமல் கேட்க,
"என் செல்ல குட்டில... அதோ பாரு" என்றவன் கண்காண்பிக்க, "ம்மாமா" என்று குரல் கொடுத்தாள் துளசி.
"என்னை வைச்சி காமெடி பன்றீங்களா?"
"பின்ன... நீங்க ஹீரோயின் ரோல் பண்ணலான்னு பார்த்தீகளா?"
"நான் தாத்தாவை கூப்பிடிறேன்... " என்றவள் அவனை மிரட்டிவிட்டு சத்தமாய், "தாத்தா" என்று கத்த,
"கத்தின சாணில முங்கிடுவேனாக்கும்" என்றவன் சொன்ன நொடி தூக்கி வாரி போட்டது ராகினிக்கு!
"இல்ல இல்ல கத்த மாட்டேன்... விட்டிரு மாமா... நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்...ஹேர்ரெல்லாம் பழாயிடும்... அப்புறம் ஒரே ஸெமலடிக்கும்... இந்த வாரம்தான் பேஸியல் பண்ணேன்... இத்தோட நெக்ஸ்ட் மந்த்தான் உன் கஞ்ச பிசானாரி க்கா காசு கொடுப்பாக" என்றவள் தொடர்ச்சியாய் அவளின் பெரும் கவலைகளை விவரிக்க சிரிப்பாய் கேட்டு கொண்டு வந்தவன்,
"ஓவரா கவலை படாதடி... இதுவும் ப்யூர் ஹெர்பல்தான்... நாட்டு மாட்டு சாணமாக்கும்... இன்னும் பொலிவாயிடுவீக" என்றவன் அதன் பெருமை புகழை எல்லாம் உரைக்க ராகினிக்கு வியர்த்து போனது.
"மாமா சாணம் வேணாம்... பிண்ணாக்கு தண்ணியே பெட்டர்" என்றளவுக்கு இறங்கி வர,
"இல்லடி... அதுதான் உடம்புக்கு நல்லது" என்று அவர்கள் இரண்டில் எது என வாதம் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஷிவானி அங்கே வந்து நின்றாள்.
தூரத்தில் நின்று பார்ப்பவளுக்கு அந்த காட்சி எப்படி போய் சேர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
எதற்கு ஏன் என்று புரியாமல் உள்ளூர அவள் மனம் நொறுங்கி கொண்டிருக்க, அந்த நொடி சிவகுரு மீது கொண்ட மதிப்பெல்லாம் சுக்குநூறானது.
ஆனால் அந்த காட்சியின் மூலதாரம் என்னவென்று ஆராய அவள் மூளைக்கு பொறுமையில்லை. அவள் விழி அணைக்குள் கண்ணீர் மெல்ல தன் அளவுகோலை அதிகப்படுத்தி கொண்டிருந்தது.
அவள் கரமெல்லாம் எதையாவது தூக்கி போட்டு உடைக்கலாமா என பரபரக்க, அப்போதைக்கு அவள் கண்ணில் எதுவும் அகப்படவில்லை.
அல்லாடியபடி தன் பார்வையை சுழற்றியவள், இறுதியாய் அவள் நின்றிருந்த இடத்தில் அறைகுறையாய் உடைப்பட்ட பழைய பானையை பார்த்தாள்.
அதனை கோபத்தில் ஒரு எத்துவிட, அது உருண்டு சென்று விழுந்த சத்தம் கேட்டு சிவகுரு திரும்பி பார்த்தான்.
அங்கே ஷிவானி நின்றிருப்பதை பார்த்து அவன் துணுக்குற்ற சமயம் ராகினி தரையிறங்கினாள்.
ஷிவானியோ அவனை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் குளியலறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொள்ள,
ராகினி குருவின் காதோரம் நெருங்கி, "அவங்கதான் மிஸ். மலேசியாவா?" என்று கிண்டலாய் கேட்டு வைக்க குரு கோபமாய் தன் கரத்தை மடக்கினான்.
"சாரி சாரி அ..க்..கா" என்று மிரண்டபடி சொல்ல,
"அந்த பயம்" என்றவன் அவளை பார்வையாலேயே மிரட்டிவிட்டு கிணற்றடியில் சென்று தன் கைகால்களை அலம்ப ஆரம்பித்தான்.
ராகினி மனதிலிருந்த தீ இப்பொழுதுதான் இன்னும் அதிக உக்கிரமாய் எரிய ஆரம்பித்தது.
குரு ஷிவானிக்கு பரிந்து பேசுவதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டியபடி அவள் அங்கிருந்து அகன்றுவிட,
ஷிவானிக்கும் உள்ளூர கோபத் தீ கனலாய் எரிந்து கொண்டிருந்தது.
குளியலறைக்குள் சென்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் பெருகியது. குருவை இன்னொரு பெண்ணோடு பார்த்ததினால் உண்டான கலவரமா? நிச்சயமாய் அவளுக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் மனம் வேதனையில் உழன்றது.
தன்னால் இயன்றுவரை அழுதுமுடித்தவள் பின்னர் முகத்தை நன்றாய் நீரில் அலம்பி கொண்டு வெளியே வந்தாள்.
ஆனால் அவள் கண்ணீர் சுவட்டை அவள் முகம் காட்டி கொடுத்ததே. அதை குருவின் பார்வையும் ஒருவாறு குறித்து கொண்டது.
அவனை முறைத்தபடியே அவள் கடந்து செல்ல அவள் நடந்து செல்லும் பாதையை கவனித்தவன்,
"அங்கன ஒரே பாசியா இருக்கு... வழக்கி விட்டிர போது... இந்த பக்கம் வா" என்றவன் நல்லெண்ணத்திலேயே சொன்னாலும் அதனை கேட்டு கொள்ளும் மனநிலையில் அவள் இல்லையே!
"எனக்கு தெரியும்... உங்க வேலையை பாருங்க" என்று முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டவள் அவன் சொன்னதுக்கேற்றாற் போல் கால் வழுக்கிவிட தரையில் சரிந்தாள்.
"ம்மா" என்றவள் அலறிய சமயம் குரு அந்த காட்சியை பார்த்து தன்னையறியாமல் சிரித்துவிட்டான்.
'ஷிவானி உனக்கு டைமே சரியில்ல' என்றவள் சுயபச்சாதாபம் கொள்ளும் போது
குரு அவளை நெருங்கி உதவ வர, "ப்ளீஸ் டோன்ட்... நானே எழுந்திருச்சிப்பேன்" என்று கைகாண்பித்துவிட்டு சிரமப்பட்டு எழுந்து கொள்ள முயற்சி செய்தாள்.
அவளை எகத்தாளமாய் பார்த்தவன், "நல்லது சொன்னா கேட்டுக்கிடனும்... இல்லன்னா இப்படிதான்" என்க,
"வேணாம்... நான் செம காண்டல இருக்கேன்" என்று சொன்னவள் எழுந்து கொள்ள முடியாமல் அவதிப்பட .
"இருங்க நான் தூக்கி விடறேன்" என்று மீண்டும் அவளை நெருங்கினான்.
"வேண்டாம்... என்னை தொடாதீங்க" என்று தீர்க்கமாய் உரைத்தவள் அந்த வலியையும் மீறி கொண்டு எழுந்து நின்றாள். அவன் அதிர்ந்த பார்வையோடு
"தொடக்கூடாதா... அம்புட்டு கோபமா என் மேல?!" என்று கேட்க
"ஆமா... உங்க முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கல... ஐ ஹேட் யூ" என்று சொல்லிவிட்டு முன்னேறி நடக்க,
"சும்மா கதை விடாதீக... என்னையும் ராகினியும் சேர்த்து பார்த்துட்டு உங்க கண்ணு கலங்கினதை நான் பார்த்தேனே" என்று அவள் காதில் விழும்படி சொன்னான்.
"எனக்கு ஏன் கலங்குது?... அப்படி எல்லாம் இல்ல" என்றவள் அவனிடம் திட்டவட்டமாய் மறுக்க,
அவன் சிரித்தபடி, "உன் முகத்தை போய் கண்ணாடில பாருவே... தெரியும்" என்று சொல்ல அவள் மௌனமானாள்.