• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
My father is the best man in my life
 




Akila

நாட்டாமை
Joined
May 7, 2018
Messages
50
Reaction score
187
Location
Singapore
வேதாவிற்கு அப்பா மகளின் பிணைப்பைப் பார்க்க, ஆனந்தமாகவும் அதே நேரம் ஏக்கமாகவும் இருந்தது. தன் விழியோரம் கசிந்த நீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார்.

அன்று இரவு படுக்கைமீது தலைசாய்த்திருந்த கணவனிடம்,
"நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?" என்று ஆரம்பிக்க,
"என்ன?" என்றார்.


அவர் தயக்கத்தோடு, "ஏன் வாணி லவ் பன்றானதும் அவ்வளவு டென்ஷனானீங்க... நாம கூட லவ் மேரேஜ்தானே" என்றவர் கேட்ட நொடி சபரி எழுந்தமர்ந்து,

"வாய மூடு வேதா... உன் பொண்ணு காதில விழ போகுது" என்று சொல்லி திறந்திருந்த கதவை எட்டிபார்த்தார். அவர்கள் காதல் திருமணம் என்ற விஷயத்தை சொன்னால் மகளும் காதலித்து விடுவாளோ, அதுவும் சைனா மலேசியன் என்று எவனையாவது காதலித்து விட்டால் எனில்,

அந்த அச்சத்தில்தான் அந்த உண்மையை இன்று வரையில் மகளிடம் இருவரும் மறைத்து வைத்திருந்தனர்.
வேதா தன் கணவரின் பயம் புரிந்து, "அவ எப்பவோ போய் படுத்துட்டா" என்று சொல்ல,


சபரி பெரூமுச்செறிந்தார்.
அப்போது வேதா தன் கணவனிடம், "ஏன் இவ்வளவு பயம் உங்களுக்கு ?... என்னை நீங்க என் அப்பாகிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு வந்த மாதிரி... உங்க பொண்ணும் காதலிச்சா பிரிஞ்சி போயிடுவாளோன்னுதானே பயப்படிறீங்க" என்றவர் கேட்டுக் கூர்மையாக பார்க்க,


அவருக்கு கோபம் பொங்கியது.

வேகமாய் கதவைத் தாளிட்டவர், "நானாடி உங்க அப்பன்கிட்ட இருந்து உன்னை பிரிச்சி கூட்டிட்டு வந்தேன்... உன் மனசை தொட்டு சொல்லு" என்க,

"ஆமாம்... இதை வேற மனசை வேற தொட்டு சொல்லனுமாக்கும்" என்று வேதா வாய்குள்ளேயே முனகினார்.
அவர் எரிச்சலோடு, "வேண்டா வேதா... பழசையெல்லாம் கிளறாதே" என்று எச்சரிக்க,



"நானும் அதேதான் சொல்றேன்... ஏன் இன்னும் நீங்க பழசையே பேசிட்டிருக்கீங்க... பதினேழு பதினெட்டு வருஷமாச்சு... இன்னமும் அப்படியே இருந்தா எப்படி ? ஒரே ஒருதரம் ஷிவானியை கூட்டிட்டு நாம போய் அவங்கள பார்த்துட்டு வந்திரலாமே" என்று இறங்கிய தொனியில் கண்ணீர் மல்க அவர் கேட்க,

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான்... என்னை அவமானப்படுத்தின அந்த வீட்டுக்கு நான் எந்த காலத்திலயும் வர மாட்டேன்... உனக்கு வேணா டிக்கெட் புக் பண்ணி தர்றேன்... நீ போய்ப் பார்த்துட்டு வா" என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டார்.

"இப்படியே பேசினா எப்படிதாங்க?"

"உன்னைதான் போய்ப் பார்த்துட்டு வான்னு சொல்லிட்டேன் இல்ல... அப்புறம் என்ன?"

வேதவள்ளி ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட்டு, "அப்படின்னா நான் ஷிவானியை கூட்டிட்டுபோய் பார்த்துட்டு வர்றேன்" என்றார்.

"அதெல்லாம் என் பொண்ணு வரமாட்டா" என்றவர் திட்டவட்டமாய் சொல்ல,

"அதென்ன உங்க பொண்ணு... அவ எனக்கும் பொண்ணுதான்"
"ஓ... சரி... அவ உங்க அப்பா வீட்டுக்கு வரன்னு சொன்னா கூட்டிட்டு போ... ஆனா அவ வரமாட்டா வேதா... என்னை அவமானப்படுத்தின அந்த வீட்டுக்கு நிச்சயம் வரமாட்டா" என்றவர் அழுத்திச் சொல்ல வேதாவிற்கு கோபம் பெருகியது.
"நீங்களும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அப்பா... அதை மனசில வைச்சிட்டு பேசுங்க" என்று சொல்லிவிட,


"என்னடி சாபம் விடிறியா?" என்றவர் முகத்தில் லேசான பதட்டம் தெரிய,

"சாபம் எல்லாம் விடல.. சொன்னேன்" என்று முகத்தை திருப்பி கொண்டார்.

"என் பொண்ணை எப்படி என் கூடவே வைச்சுக்கனும்னு எனக்கு தெரியும்... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காது" என்று சபரி அழுத்தமான நம்பிக்கையோடு சொல்லிவிட்டு சற்று நேரத்தில் கண்ணயர்ந்துவிட வேதாவிற்கு ஒரு பொட்டு தூக்கம் கூட வரவில்லை.

அவர் மனதளவில் ரொம்பவும் நொறுங்கிப் போயிருந்தார். பழகிப் போன விஷயம்தான் எனினும் ஒவ்வொரு முறையும் அதன் வலி ஆழமாய் மனதை ரணப்படுத்தியதே!

சபரி அவருக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்திருக்கிறார். கணவனாய் எந்தக் குறையும் வைக்கவில்லைதான் எனினும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் இறங்கி வர தயாராகில்லை.

அருகிலேயே இருந்தாலாவது இந்தப் பூசல் சமாதானமாகி இருக்கும். இப்படி வெவ்வேறு நாட்டில் இருக்க, அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

ஷிவாணிக்கோ அப்பாதான் எல்லாம். அவர் வார்த்தைக்கு இன்றுவரையில் மறுபேச்சே கிடையாது. அதே போல அவளின் தேவை எதற்கும் சபரி மறுப்பு தெரிவித்ததில்லை. அந்தளவுக்கு மகளுக்குச் செல்லம் கொடுத்து அவர் வசம் வைத்திருக்க, வேதாவின் பேச்சிற்கு அந்த வீட்டில் கொஞ்சம் மதிப்பு குறைவுதான்.

அதுவும் அல்லாது ஆரம்பத்திலிருந்தே ஷிவானியிடம் சபரி அவள் தாத்தாவினை பற்றிய குறைகளை மட்டுமே சொல்லியிருக்க அவள் மனதிலும் அவையெல்லாம் ஆழப் பதிந்து போனது. அதற்கு மறுப்பாய் வேதா எது சொன்னாலும் அது எடுபடுவதுமில்லை.

இதற்கிடையில் வேதாவிற்கு அவர் பிறந்தவீட்டாரை பார்க்க வேண்டுமென்ற ஆசை இன்றளவிலும் வெறும் கானல் நீர்தான்.
*******************************************************************************
ஹாய் ப்ரண்ட்ஸ்,
ஒரு லைவ்லியான எக்ஸ்ப்ரீய்ன்ஸ் சொல்றேன். நான் முதல் முதல்ல ரசம் தான் வைச்சேன். அது கொஞ்ம் இல்ல நிறைய தீஞ்சி போச்சு .நானே அதை சாப்பிடல. ஆனா எங்கப்பா மட்டும் அதை நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டாரு. அப்பானால கிரேட்தான்.
ஏன் சூப்புன்னதுன்னு இப்படி பதறீங்க. அவ்வ்வ்ளவு மோசமா எல்லாம் இருக்காது.
சரி அதை பத்தி விடுங்க. நாம நெக்ஸ்ட் எபில நெல்லை புஃல் மீல்ஸ் சாப்பிடுவோம். வாங்க
 




Akila

நாட்டாமை
Joined
May 7, 2018
Messages
50
Reaction score
187
Location
Singapore
nan ellam enga daddy kku potato la payasam senju kuduthu avanga kanne verkka vachurikken. Hehe. Athaiyum nalla irukkunu sonna manasu irukkae.. Thangam
 




Selvy

புதிய முகம்
Joined
Oct 21, 2018
Messages
10
Reaction score
4
Location
Srilanka
அப்பான்னா அப்படிதான் அக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top